Skip to main content

அருள்வெளி சித்தர் 108 போற்றி

பரம்பொருள் அருட்பெரும் ஜோதி ஓம் ஸ்ரீ அருள்வெளி சித்தர்
பரம்பொருள் அருட்பெரும் ஜோதி ஓம் ஸ்ரீ அருள்வெளி சித்தர்

ஓம் ஸ்ரீ அருள்வெளி சித்தர் 108 போற்றி

1. அன்பே உருவான அருள்வேளிக் சித்தனே போற்றி !
2. அகர முதலாய் அமர்ந்தாய் போற்றி !
3. அறிவிற் கறிவான ஆதுவிதனே போற்றி !
4. அறத்தின் வடிவே ஐயனே போற்றி !
5. அடிமை எமைக் காக்கும் அத்தா போற்றி !
6. அனாதிப் பரம்பொருள் ஆயினே போற்றி !
7. அமரர் வணங்கும் அரியே போற்றி !
8. அண்டினோர்க் காதரவு அளிப்பாய் போற்றி !
9. அன்பே சிவமேன் றறிந்தாய் போற்றி !
10. அன்பே சிவமாய் அமர்ந்தாய் போற்றி !
11. அடக்கம் ஆன  சிவமே போற்றி !
12. ஆனந்த வடிவச் சித்தனே போற்றி !
13. ஆகாயம் எல்லாம் அளந்தாய் போற்றி !
14. ஆதியே போற்றி சோதியே போற்றி !
15. ஆலத்தை அமுதாய் ஆக்குவை போற்றி !
16. ஆருரிச் சிவமே அழகா போற்றி !
17. ஆசை வித்த அரனே போற்றி !
18. ஆணவ மாயை அழித்தாய் போற்றி !
19. ஆவியில் உறையும் ஐயா போற்றி !
20. ஆத்தும தத்துவம் அறிவிப்பாய் போற்றி !
21. ஆலமர் செல்வ அரசே போற்றி !
22. இகர மாகி எழுந்தாய் போற்றி !
23. இறைவி இறைவன் வடிவே போற்றி !
24. இகபர சுகங்கள் தருவாய் போற்றி !
25. இன்பே போற்றி ஈசா போற்றி !
26. இடுக்கண் களைந்திடும் துணையே போற்றி !
27. இருவினை தடுக்கும் குருவே போற்றி !
28. இடர்கள் விலக்கும் தடமே போற்றி !
29. ஈனப் பிறவி தவிர்ப்பாய் போற்றி !
30. ஈகைக் குணமிகும் வள்ளால் போற்றி !
31. ஈன்ற தாயினும் சான்றோய் போற்றி !
32. ஈட்டிய ஞானப் பெருக்கே போற்றி !
33. ஈசர் போற்றும் நேசா போற்றி !
34. உண்மைப் பொருளே ஒமே போற்றி !
35. உகர வடிவாய் உயர்ந்தாய் போற்றி !
36. உலகோர் போற்றும் உத்தம போற்றி !
37. உறுதுயர் களையும் அறிவே போற்றி !
38. உமையின் வடிவாய் அமைந்தாய் போற்றி !
39. உணர்வே பிரம்மமா யமர்ந்தாய் போற்றி !
40. ஊனம் தவிர்க்கும் ஞானம் போற்றி !
41. ஊழ்வினை யருக்கும் மருந்தே போற்றி !
42. ஊக்கம் அருளும் ஆக்கம் போற்றி !
43. என்றும் இருக்கும் ஒன்றே போற்றி !
44. எளியர்க்கும் அருளும் ஆக்கம் போற்றி !
45. எந்தாய் போற்றி யாயே போற்றி !
46. எமபயம் தவிர்க்கும் ஏந்தல் போற்றி !
47. ஏழை பங்ககாளா சித்தா போற்றி !
48. ஏற்றம் அருள்செய் எந்தாய் போற்றி !
49. எமனைக் காலால் எற்றியோய் போற்றி !
50. ஒன்றாகக் காட்சி கண்டாய் போற்றி !
51. ஒருவன் உருவில் வந்தாய் போற்றி !
52. ஒன்பதும் ஒக்க அடைந்தாய் போற்றி !
53. ஒழிவில் ஞான ஒளியே போற்றி !
54. ஓம் கார ஸ்ருதி வடிவே போற்றி !
55. ஓசை உணர்வெல்லாம் வென்றாய் போற்றி !
56. ஊதுதல் இன்றி உணர்ந்தாய் போற்றி !
57. ஓதும் மறையின் பொருளே போற்றி !
58. ஓதற்கு அரிய வேதனே போற்றி !
59. ஓடும் மனப்புலி உரித்தாய் போற்றி !
60. ஓங்கிய கொள்கை உத்தமா போற்றி !
61. ஔடதம் ஆன ஔதாரியன் போற்றி !
62. அக்கர வடிவனே ஐயா போற்றி !
63. ககார ரூபிணி கல்யாணி போற்றி !
64. கண்கண்ட சித்தனே காருண்யா போற்றி !
65. கற்றவர் போற்றும் நற்றவா போற்றி !
66. கள்ள மனத்தை வெல்லுவாய் போற்றி !
67. காட்சியில் ஒன்றே கண்டாய் போற்றி !
68. காட்சியில் தன்னை மறைத்தாய் போற்றி !
69. காலங் கடந்த கற்பகமே போற்றி !
70. காட்சிக்கு எளிதாய் கருணையே போற்றி !
71. கிடைத்தற்கு அரிய மணியே போற்றி !
72. கீழோர்க்கு அருளும் மேலோய் போற்றி !
73. குவலயம் போற்றும் தவமே போற்றி !
74. கூற்றை வென்ற குணமே போற்றி !
75. சத்தே போற்றி சித்தே போற்றி !
76. சச்சிதா னந்தப் பொருளே போற்றி !
77. சார்ந்தோர்க் கருளும் சாந்த சொரூப போற்றி !
78. சினத்தை வென்ற குணனே போற்றி !
79. சித்தத்தை வென்ற அத்தனே போற்றி !
80. ஞான ஒளிமிகு நயனத்தாய் போற்றி !
81. ஞானியர் தேடும் வான்மறை போற்றி !
82. ஞாலம் வென்ற சீலம் போற்றி !
83. ஞாயிறே போற்றி திங்களே போற்றி !
84. தகரா லயத்தின் குருந்தே போற்றி !
85. தத்துவப் பொருளாய் சமைந்தாய் போற்றி !
86. தன்னை யறியும் அறிவே போற்றி !
87. தாயினும் மிக்க தயவே போற்றி !
88. நல்லன வெல்லாம் நல்குவை போற்றி !
89. நாடுவார் துயர்கள் களைவாய் போற்றி !
90. நான்மறைப் பொருளே நயமே போற்றி !
91. பரம ஞானப் பெருக்கே போற்றி !
92. பற்றினை நீத்த நற்றவ போற்றி !
93. பாவம் போக்கும் தேவே போற்றி !
94. பாடும் கவிஞர்க்கு அருள்வோய் போற்றி !
95. புத்தா போற்றி ஆத்தா போற்றி !
96. புண்ணியா போற்றி கண்ணியா போற்றி !
97. பூரணை வாலை வடிவே போற்றி !
98. போதாந்தத் தத்துவப் பொருளே போற்றி !
99. மகா வாக்கியம் அருள்வோய் போற்றி !
100. மதிகரந்து வந்து பதியே போற்றி !
101. மாணிக்கச் சுடரே மதிசூடி போற்றி !
102. மாயையை வென்ற மன்னா போற்றி !
103. வரந்தரு கற்பகத் தருவே போற்றி !
104. வற்றாக் கருணை யுற்றெ போற்றி !
105. வாழ்வின் ஒளியாய் வந்தாய் போற்றி !
106. வாட்டம் தவிர்க்கும் தோட்டம் போற்றி !
107. வேல்கை கொடுக்கும் வேலவா போற்றி !
108. வீடுபே றருளும் அருள்வேளிச்சித்தனே போற்றி போற்றி !

அருட்பெரும் ஜோதி ஓம் ஸ்ரீ அருள்வெளி சித்தராய நமஹ ..!
கலியுக மகான் ஓம் ஸ்ரீ மாரிமுத்து சித்தர்
ஓம் ஸ்ரீ அருள்வெளி சித்தர் பக்தசபை
121, அருள்வெளிசித்தர் இல்லம், திருவள்ளுவர் நகர், மதுரை—625006.
ஓம் ஸ்ரீ அருள்வெளி சித்தர் ஜீவசமாதி
பூதேரிபண்டை, வடமங்கலம், ஸ்ரீ பெரும்புதூர் - 602105.

Popular Posts

அகத்தியர் கூறும் பீஜ மந்திரங்களும் அவற்றின் பலன்களும்

அகத்தியர் கூறும் பீஜ மந்திரங்களும் அவற்றின் பலன்களும்! அகத்தியர் திருமந்திர விளக்கம் 22 என்னும் பாடலில் திருமந்திரமாகிய பஞ்சாக்ஷர மந்திரத்தைப் பற்றி, தத்புருஷம், அகோரம் ஆகிய முகங்கள் ஒவ்வொன்றிற்கும் இருபத்தைந்து வகைகளையும் வாமதேவ முகத்திற்கு ஒன்பது வகைகளையும், ஆக மொத்தம் 59 வகைகள் பற்றி மட்டுமே பாடலில் அகத்தியர் கூறுகிறார். தவிர ஒவ்வொரு வகை மந்திரத்தை உச்சரிப்பதனால் என்ன பலன் என்றும் கூறப்பட்டுள்ளது. தத்புருஷ முகத்தைச் சார்ந்த 25 வகை மந்திரங்களும் அவற்றை ஓதுவதால் உண்டாகும் பயன்கள் பற்றியும் செய்யுள் 5லிருந்து 11வரை அகத்தியர் பார்த்திடவே தற்புருஷம் இருபத் தஞ்சு பாடுகிறேன் நமசிவய அகோர மாகும். (செய்யுள்.5) என்று கூறுகிறார். அவையாவன: மந்திரம் பலன் 1. நங்-சிவயநம - விரும்பிய புத்திர பாக்கியம் கிடைக்கும். 2. அங்-சிவயநம - இயல்பாகத் தேக நோய் தீரும் 3. வங்-சிவயநம - யோகசித்தி காணலாகும். 4. உங்-சிவயநம - ஆயுள் விருத்தி 5. ஓம்-அங்-சிவயநம - ஐம்பூதங்களின் மேல் கட்டுப்பாடு உண்டாகும். 6. கிலி-நமசிவய - உலக வசியம் உண்டாகும். 7. ஹிரீம்-நமசிவய - நினைத்தது நடக்கும். 8. ஐ-உம்-நமசிவய - புத்தி, வித்தை நல்கும். ...

வர்மம் varmam

வர்மங்களின் வகைகள்..! வர்மக் கலையை அகத்தியர் நான்கு பெரும் பிரிவுகளாய் பிரித்திருக்கிறார். உடலில் உள்ள வர்ம புள்ளிகள் மற்றும், அவற்றை கையாளும் விதத்தினால் இவற்றை வேறு படுத்துகிறார். இவை “படு வர்மம்”, ”தொடு வர்மம்”, ”தட்டு வர்மம்”, ”நோக்கு வர்மம்” படுவர்மம் நான்கு வகை வர்மங்களில் மிகவும் ஆபாயகரமான பிரிவு இதுவேயாகும். உடலிலுள்ள வர்மப் பகுதிகளில் அடியோ அல்லது தாக்குதலோ ஏற்படுமானால் அப்போது ஏற்படும் வர்மமே "படுவர்மம்" என்கிறார். இந்த படுவர்ம தாக்குதலுக்கு உள்ளாகும் நபர்கள் உயிரிழக்கும் வாய்ப்புக்கள் அதிகம் உள்ளதால் இவை மிகவும் ஆபத்தானவை என்று அகத்தியர் குறிப்பிடுகிறார். ஒரு மனிதன் படுவர்மப் புள்ளிகளில் அடிபட்டால் உடனடியாக மயங்கி விழுவான் என்றும், அவன் வாய் பிளந்து நாக்கு வெளியே தள்ளும், வாயில் நுரையும் வெளியேறும் அத்துடன் அந்த அடிபட்ட இடங்களில் கைவைத்து பார்த்தால் அந்த இடம் மிகவும் குளிர்ச்சியாகக் காணப்படும் என்றும் குறிப்பிடுகிறார். எல்லோராலும் இதை செய்திட முடியாது என்றும், மிகுந்த பயிற்சி உள்ள ஒருவரால் மட்டுமே இத்தகைய செயல்களை செய்திட முடியும் என்றும் கூறுகிறார். தொடு...

இயற்பியல் பிரபஞ்சமும் தூய ஆற்றல் குண்டலினி

இயற்பியல், பிரபஞ்சமும்  தூய ஆற்றல், உலகளாவிய வெப்பநிலை மாறுபாடுகள், நீராவியின் மாறுபாடுகள், அதிர்வுகளின் அவதானிப்புகள், நமது சித்தாந்த தியான நிலை குண்டலினி ஆற்றல் தொடர்பும்.  ஒரு மின்காந்த புலம் என்பது காந்த மற்றும் மின்சார ஆற்றலால் நிரப்பப்பட்ட இடத்தின் ஒரு பகுதி. மின்காந்த புலங்கள் எல்லா இடங்களிலும் உள்ளன. எக்ஸ்-கதிர்கள் மற்றும் காமா கதிர்கள் போன்ற உயர் அதிர்வெண் மின்காந்த கதிர்வீச்சு “ அயனியாக்கம் ” மற்றும் மக்களுக்கு தீங்கு விளைவிக்கும், அதே நேரத்தில் குறைந்த அதிர்வெண் கொண்ட மின்காந்த கதிர்வீச்சு அல்லது “ அல்லாத அயனியாக்கம்,” மனிதர்களுக்கு பாதுகாப்பானதாகக் கருதப்படுகிறது, அல்லது சில மனித நோய்களுக்கு கூட ஒரு தீர்வாக கருதப்படுகிறது. பூமியைச் சுற்றியுள்ள மின்காந்த புலம் நம் உடலை அடைந்து அதன் உள்ளே இருக்கும் கட்டணங்களை பாதிக்கிறது. நம் உடல்கள் அதன் சொந்த மின்னியல் புலத்தைக் கொண்டுள்ளன. டி.என்.ஏவின் துகள்கள் கூட மின்காந்த புலங்களை உருவாக்க முடியும். அந்த அலைகள் நம் உடலின் உள் கடிகாரத்தை பிரதானமாக்குகின்றன மற்றும் தூக்க முறைகள் மற்றும் ஹார்மோன் சுரப்பை பாதிக்கின்றன. ஆல்பா மூளை அ...

தமிழில் உள்ள மயங்கொலிச்சொற்கள்

தமிழில் உள்ள மயங்கொலிச்சொற்கள்  அணல் - தாடி, கழுத்து அனல் - நெருப்பு அணி - அழகு அனி - நெற்பொறி அணு - நுண்மை அனு - தாடை, அற்பம் அணுக்கம் - அண்டை, அண்மை. அனுக்கம் - வருத்தம், அச்சம் அணை - படுக்கை, அணைத்துக் கொள்ளுதல் அனை - அன்னை, மீன் அணைய - சேர, அடைய அனைய - அத்தகைய அண்மை - அருகில் அன்மை - தீமை, அல்ல அங்கண் - அவ்விடம் அங்கன் - மகன் அண்ணம் - மேல்வாய் அன்னம் - சோறு, அன்னப்பறவை அண்ணன் - தமையன் அன்னன் - அத்தகையவன் அவண் - அவ்வாறு அவன் - சேய்மைச் சுட்டு, ஆண்மகன் ஆணகம் - சுரை ஆனகம் - துந்துபி ஆணம் - பற்றுக்கோடு ஆனம் - தெப்பம், கள் ஆணி - எழுத்தாணி, இரும்பாணி ஆனி - தமிழ் மாதங்களுள் ஒன்று ஆணேறு -ஆண்மகன் ஆனேறு - காளை, எருது ஆண் - ஆடவன் ஆன் - பசு ஆணை - கட்டளை, ஆட்சி ஆனை - யானை இணை - துணை, இரட்டை இனை - இன்ன, வருத்தம் இணைத்து - சேர்த்து இனைத்து - இத்தன்மையது இவண் - இவ்வாறு இவன் - ஆடவன், (அண்மைச் சுட்டு) ஈணவள் - ஈன்றவள் ஈனவள் - இழிந்தவள் உண் - உண்பாயாக உன் - உன்னுடைய உண்ணல் - உண்ணுதல் உன்னல் - நினைத்தல் உண்ணி - உண்பவன், ஒருவகைப் பூச்சி உன்னி - நினைத்து, குதிரை ஊண் - உணவு ஊன் - மாமிசம் எண்ண - நினைக்...