Skip to main content

அருள்வெளி சித்தர் 108 போற்றி

பரம்பொருள் அருட்பெரும் ஜோதி ஓம் ஸ்ரீ அருள்வெளி சித்தர்
பரம்பொருள் அருட்பெரும் ஜோதி ஓம் ஸ்ரீ அருள்வெளி சித்தர்

ஓம் ஸ்ரீ அருள்வெளி சித்தர் 108 போற்றி

1. அன்பே உருவான அருள்வேளிக் சித்தனே போற்றி !
2. அகர முதலாய் அமர்ந்தாய் போற்றி !
3. அறிவிற் கறிவான ஆதுவிதனே போற்றி !
4. அறத்தின் வடிவே ஐயனே போற்றி !
5. அடிமை எமைக் காக்கும் அத்தா போற்றி !
6. அனாதிப் பரம்பொருள் ஆயினே போற்றி !
7. அமரர் வணங்கும் அரியே போற்றி !
8. அண்டினோர்க் காதரவு அளிப்பாய் போற்றி !
9. அன்பே சிவமேன் றறிந்தாய் போற்றி !
10. அன்பே சிவமாய் அமர்ந்தாய் போற்றி !
11. அடக்கம் ஆன  சிவமே போற்றி !
12. ஆனந்த வடிவச் சித்தனே போற்றி !
13. ஆகாயம் எல்லாம் அளந்தாய் போற்றி !
14. ஆதியே போற்றி சோதியே போற்றி !
15. ஆலத்தை அமுதாய் ஆக்குவை போற்றி !
16. ஆருரிச் சிவமே அழகா போற்றி !
17. ஆசை வித்த அரனே போற்றி !
18. ஆணவ மாயை அழித்தாய் போற்றி !
19. ஆவியில் உறையும் ஐயா போற்றி !
20. ஆத்தும தத்துவம் அறிவிப்பாய் போற்றி !
21. ஆலமர் செல்வ அரசே போற்றி !
22. இகர மாகி எழுந்தாய் போற்றி !
23. இறைவி இறைவன் வடிவே போற்றி !
24. இகபர சுகங்கள் தருவாய் போற்றி !
25. இன்பே போற்றி ஈசா போற்றி !
26. இடுக்கண் களைந்திடும் துணையே போற்றி !
27. இருவினை தடுக்கும் குருவே போற்றி !
28. இடர்கள் விலக்கும் தடமே போற்றி !
29. ஈனப் பிறவி தவிர்ப்பாய் போற்றி !
30. ஈகைக் குணமிகும் வள்ளால் போற்றி !
31. ஈன்ற தாயினும் சான்றோய் போற்றி !
32. ஈட்டிய ஞானப் பெருக்கே போற்றி !
33. ஈசர் போற்றும் நேசா போற்றி !
34. உண்மைப் பொருளே ஒமே போற்றி !
35. உகர வடிவாய் உயர்ந்தாய் போற்றி !
36. உலகோர் போற்றும் உத்தம போற்றி !
37. உறுதுயர் களையும் அறிவே போற்றி !
38. உமையின் வடிவாய் அமைந்தாய் போற்றி !
39. உணர்வே பிரம்மமா யமர்ந்தாய் போற்றி !
40. ஊனம் தவிர்க்கும் ஞானம் போற்றி !
41. ஊழ்வினை யருக்கும் மருந்தே போற்றி !
42. ஊக்கம் அருளும் ஆக்கம் போற்றி !
43. என்றும் இருக்கும் ஒன்றே போற்றி !
44. எளியர்க்கும் அருளும் ஆக்கம் போற்றி !
45. எந்தாய் போற்றி யாயே போற்றி !
46. எமபயம் தவிர்க்கும் ஏந்தல் போற்றி !
47. ஏழை பங்ககாளா சித்தா போற்றி !
48. ஏற்றம் அருள்செய் எந்தாய் போற்றி !
49. எமனைக் காலால் எற்றியோய் போற்றி !
50. ஒன்றாகக் காட்சி கண்டாய் போற்றி !
51. ஒருவன் உருவில் வந்தாய் போற்றி !
52. ஒன்பதும் ஒக்க அடைந்தாய் போற்றி !
53. ஒழிவில் ஞான ஒளியே போற்றி !
54. ஓம் கார ஸ்ருதி வடிவே போற்றி !
55. ஓசை உணர்வெல்லாம் வென்றாய் போற்றி !
56. ஊதுதல் இன்றி உணர்ந்தாய் போற்றி !
57. ஓதும் மறையின் பொருளே போற்றி !
58. ஓதற்கு அரிய வேதனே போற்றி !
59. ஓடும் மனப்புலி உரித்தாய் போற்றி !
60. ஓங்கிய கொள்கை உத்தமா போற்றி !
61. ஔடதம் ஆன ஔதாரியன் போற்றி !
62. அக்கர வடிவனே ஐயா போற்றி !
63. ககார ரூபிணி கல்யாணி போற்றி !
64. கண்கண்ட சித்தனே காருண்யா போற்றி !
65. கற்றவர் போற்றும் நற்றவா போற்றி !
66. கள்ள மனத்தை வெல்லுவாய் போற்றி !
67. காட்சியில் ஒன்றே கண்டாய் போற்றி !
68. காட்சியில் தன்னை மறைத்தாய் போற்றி !
69. காலங் கடந்த கற்பகமே போற்றி !
70. காட்சிக்கு எளிதாய் கருணையே போற்றி !
71. கிடைத்தற்கு அரிய மணியே போற்றி !
72. கீழோர்க்கு அருளும் மேலோய் போற்றி !
73. குவலயம் போற்றும் தவமே போற்றி !
74. கூற்றை வென்ற குணமே போற்றி !
75. சத்தே போற்றி சித்தே போற்றி !
76. சச்சிதா னந்தப் பொருளே போற்றி !
77. சார்ந்தோர்க் கருளும் சாந்த சொரூப போற்றி !
78. சினத்தை வென்ற குணனே போற்றி !
79. சித்தத்தை வென்ற அத்தனே போற்றி !
80. ஞான ஒளிமிகு நயனத்தாய் போற்றி !
81. ஞானியர் தேடும் வான்மறை போற்றி !
82. ஞாலம் வென்ற சீலம் போற்றி !
83. ஞாயிறே போற்றி திங்களே போற்றி !
84. தகரா லயத்தின் குருந்தே போற்றி !
85. தத்துவப் பொருளாய் சமைந்தாய் போற்றி !
86. தன்னை யறியும் அறிவே போற்றி !
87. தாயினும் மிக்க தயவே போற்றி !
88. நல்லன வெல்லாம் நல்குவை போற்றி !
89. நாடுவார் துயர்கள் களைவாய் போற்றி !
90. நான்மறைப் பொருளே நயமே போற்றி !
91. பரம ஞானப் பெருக்கே போற்றி !
92. பற்றினை நீத்த நற்றவ போற்றி !
93. பாவம் போக்கும் தேவே போற்றி !
94. பாடும் கவிஞர்க்கு அருள்வோய் போற்றி !
95. புத்தா போற்றி ஆத்தா போற்றி !
96. புண்ணியா போற்றி கண்ணியா போற்றி !
97. பூரணை வாலை வடிவே போற்றி !
98. போதாந்தத் தத்துவப் பொருளே போற்றி !
99. மகா வாக்கியம் அருள்வோய் போற்றி !
100. மதிகரந்து வந்து பதியே போற்றி !
101. மாணிக்கச் சுடரே மதிசூடி போற்றி !
102. மாயையை வென்ற மன்னா போற்றி !
103. வரந்தரு கற்பகத் தருவே போற்றி !
104. வற்றாக் கருணை யுற்றெ போற்றி !
105. வாழ்வின் ஒளியாய் வந்தாய் போற்றி !
106. வாட்டம் தவிர்க்கும் தோட்டம் போற்றி !
107. வேல்கை கொடுக்கும் வேலவா போற்றி !
108. வீடுபே றருளும் அருள்வேளிச்சித்தனே போற்றி போற்றி !

அருட்பெரும் ஜோதி ஓம் ஸ்ரீ அருள்வெளி சித்தராய நமஹ ..!
கலியுக மகான் ஓம் ஸ்ரீ மாரிமுத்து சித்தர்
ஓம் ஸ்ரீ அருள்வெளி சித்தர் பக்தசபை
121, அருள்வெளிசித்தர் இல்லம், திருவள்ளுவர் நகர், மதுரை—625006.
ஓம் ஸ்ரீ அருள்வெளி சித்தர் ஜீவசமாதி
பூதேரிபண்டை, வடமங்கலம், ஸ்ரீ பெரும்புதூர் - 602105.

Popular Posts

மருந்துகளின்றி ஆரோக்யமாக வாழ

நமது வாழ்க்கை முறையை சரிசெய்வது மூலமாக மட்டுமே ஆரோக்யமாக வாழ்வது சாத்தியமாகும். நம்மிடம் உள்ள ஆரோக்கியத்தை மருத்துவமனையில் தேடினால் கிடைக்காதல்லவா? இதை மக்களுக்கு புரியவைத்து ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்குவதே எனது நோக்கம்.  நம் உடலானது நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் போன்ற பஞ்ச பூதங்களால் தான் இயங்குகின்றது. அவற்றிலுள்ள பிரச்சினைகளை களைந்தாலே நாம் வாழ்நாள் முழுவதும் நோயின்றி ஆரோக்யமாக வாழலாம். உணவு நிலம்  இரைப்பை, மண்ணீரல், கணையம் ஆகிய உறுப்புக்கள் ஒழுங்காக இயங்க கீழே கொடுக்கபட்டுள்ளவற்றை பின்பற்றவும் 1. பசி: பசிக்கும்போது நமக்கு பிடித்த உணவை நிதானமாக உண்ணும்போது நம் உடல் அவற்றை சத்துக்களாக மாற்றிவிடும். உதட்டை பிரிக்காமல் உணவை நன்கு மென்று கூழ் போல் அரைத்துப் பின் விழுங்க வேண்டும். ஏனென்றால் காற்றும் நம் ஜீரணத்திற்கு எதிரி. அப்படி உண்டால் நம் உடலின் அனைத்து உறுப்புக்களும் நன்றாக இயங்கும் அதனால் ஆரோக்கியம் பேணப்படும். பசி இல்லாதபோதோ நமக்கு பிடிக்காத உணவை உண்ணும்போதோ மற்றும் உணவு உண்டவுடன் அதிக நீரை குடிக்கும்போதோ அவை கழிவுகளாக மாறி நமக்கு தொப்பை, வாயு தொந்தரவு, அல்சர், அ...

வர்மம் varmam

வர்மங்களின் வகைகள்..! வர்மக் கலையை அகத்தியர் நான்கு பெரும் பிரிவுகளாய் பிரித்திருக்கிறார். உடலில் உள்ள வர்ம புள்ளிகள் மற்றும், அவற்றை கையாளும் விதத்தினால் இவற்றை வேறு படுத்துகிறார். இவை “படு வர்மம்”, ”தொடு வர்மம்”, ”தட்டு வர்மம்”, ”நோக்கு வர்மம்” படுவர்மம் நான்கு வகை வர்மங்களில் மிகவும் ஆபாயகரமான பிரிவு இதுவேயாகும். உடலிலுள்ள வர்மப் பகுதிகளில் அடியோ அல்லது தாக்குதலோ ஏற்படுமானால் அப்போது ஏற்படும் வர்மமே "படுவர்மம்" என்கிறார். இந்த படுவர்ம தாக்குதலுக்கு உள்ளாகும் நபர்கள் உயிரிழக்கும் வாய்ப்புக்கள் அதிகம் உள்ளதால் இவை மிகவும் ஆபத்தானவை என்று அகத்தியர் குறிப்பிடுகிறார். ஒரு மனிதன் படுவர்மப் புள்ளிகளில் அடிபட்டால் உடனடியாக மயங்கி விழுவான் என்றும், அவன் வாய் பிளந்து நாக்கு வெளியே தள்ளும், வாயில் நுரையும் வெளியேறும் அத்துடன் அந்த அடிபட்ட இடங்களில் கைவைத்து பார்த்தால் அந்த இடம் மிகவும் குளிர்ச்சியாகக் காணப்படும் என்றும் குறிப்பிடுகிறார். எல்லோராலும் இதை செய்திட முடியாது என்றும், மிகுந்த பயிற்சி உள்ள ஒருவரால் மட்டுமே இத்தகைய செயல்களை செய்திட முடியும் என்றும் கூறுகிறார். தொடு...

இயற்பியல் பிரபஞ்சமும் தூய ஆற்றல் குண்டலினி

இயற்பியல், பிரபஞ்சமும்  தூய ஆற்றல், உலகளாவிய வெப்பநிலை மாறுபாடுகள், நீராவியின் மாறுபாடுகள், அதிர்வுகளின் அவதானிப்புகள், நமது சித்தாந்த தியான நிலை குண்டலினி ஆற்றல் தொடர்பும்.  ஒரு மின்காந்த புலம் என்பது காந்த மற்றும் மின்சார ஆற்றலால் நிரப்பப்பட்ட இடத்தின் ஒரு பகுதி. மின்காந்த புலங்கள் எல்லா இடங்களிலும் உள்ளன. எக்ஸ்-கதிர்கள் மற்றும் காமா கதிர்கள் போன்ற உயர் அதிர்வெண் மின்காந்த கதிர்வீச்சு “ அயனியாக்கம் ” மற்றும் மக்களுக்கு தீங்கு விளைவிக்கும், அதே நேரத்தில் குறைந்த அதிர்வெண் கொண்ட மின்காந்த கதிர்வீச்சு அல்லது “ அல்லாத அயனியாக்கம்,” மனிதர்களுக்கு பாதுகாப்பானதாகக் கருதப்படுகிறது, அல்லது சில மனித நோய்களுக்கு கூட ஒரு தீர்வாக கருதப்படுகிறது. பூமியைச் சுற்றியுள்ள மின்காந்த புலம் நம் உடலை அடைந்து அதன் உள்ளே இருக்கும் கட்டணங்களை பாதிக்கிறது. நம் உடல்கள் அதன் சொந்த மின்னியல் புலத்தைக் கொண்டுள்ளன. டி.என்.ஏவின் துகள்கள் கூட மின்காந்த புலங்களை உருவாக்க முடியும். அந்த அலைகள் நம் உடலின் உள் கடிகாரத்தை பிரதானமாக்குகின்றன மற்றும் தூக்க முறைகள் மற்றும் ஹார்மோன் சுரப்பை பாதிக்கின்றன. ஆல்பா மூளை அ...

பாவங்களுக்கான வியாதிகள்

பாவங்களுக்கான வியாதிகள் - கருட புராணம் !!! 1    யார் மற்றவர்களை ஏளனம் செய்பவர்கள். சத்தியத்தை தவறவிட்டவர்கள், எதற்காவது காக்க வைத்தவர்.    மன அழுத்த நோயால் துன்புறுவர், மன நோயாளியாக இருப்பார் 2   எலி பொந்துக்களை, பாம்பு பொந்துக்களை அடைப்பவர், மீன்களை பிடிப்பவர்களுக்கு    நுரையீரல் மற்றும் சுவாச கோளாரினால் பாதிக்கப்படுவார். 3    விஷம் கலந்து யாரையும் கொலை செய்தால்    தேள் கடி மற்றும் பாம்பு கடியால் துன்பப்படுவார் 4    கருமியாகவும், அதிக வட்டி வசூலிப்பவர், பிறரது பொருளை அபகரிப்பவர்களுக்கு    சுயரோகத்தால் துன்பப்படுவார் 5    விபச்சாரத்தில் ஈடுபடுபவர்கள், சிறுமிகளை பலாத்காரம் செய்பவர் தொழு நோயால் துன்பப்படுவார் 6    தனது உடம்பைக் காட்டி பயமுறுத்துபவர், வீண் சண்டைக்கு இழுப்பவர்    கால், கை வலிப்பு, இழுப்பு நோயால் துன்பப்படுவார் 7    பெண்ணை கெட்ட எண்ணத்துடன் பார்ப்பவர், மற்றவர் பொருள்களையும் பார்த்து பொறாமைப்படுபவர்    நிரந்தர கண் நோயுடன் அவதிப்படுவார் 8  ...