Skip to main content

About us

போற்றுவோர் அருள் பொன் பொருள் பெறுக..! 
தூற்றுவோர் தூய உள்ளம் பெறுக..!
பரம்பொருள் அருட்பெரும் ஜோதி ஓம் ஸ்ரீ அருள்வெளி சித்தர்
கலியுக மகான் ஓம் ஸ்ரீ மாரிமுத்து சித்தர்
ஓம் ஸ்ரீ அருள்வெளி சித்தர் பக்த சபை
121, அருள்வெளிசித்தர் இல்லம், திருவள்ளுவர் நகர், மதுரை—625006.







ஓம் ஸ்ரீ அருள் மாரிமுத்து சித்தர் ஆஸ்ரமம்
EB ரோடு, குமுளி லோயர் கேம்ப், கூடலூர் அஞ்சல்,  தேனி மாவட்டம் - 625518, தமிழ்நாடு.

பரம்பொருள் அருட்பெரும் ஜோதி ஓம் ஸ்ரீ அருள்வெளி சித்தர் 13/03/1988 ஐீவசமாதிக்கு பின் மாரிமுத்து சுவாமிகள் 1988 ஐப்பசி மாதம் பக்த சபையை மதுரையில் தொடங்கினார். அன்று முதல் இன்று வரை பௌர்ணமி தோரும் சபை கூடுகின்றது.
நோக்கம் மற்றும் இலக்கு
  1. "ஆதி அந்தம் இல்லாத ஸநாதன தர்மம்" அதன்படி பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தழைத்த சித்தரியலை மனித சமூகம் வளம்பெற, உடல் நலம்பெற, ஆன்மிகம் தளைத்தோங்க, மருத்துவ இயல், வானவியல், மானுடவியல் கோட்பாடுகள் போன்ற பல்வேறு துறைகளில் ஆராய்ந்த உண்மைகளை பண்பாடு மாறாமல் பிற்கால சந்ததியினருக்கு பயன் பெரும் வகையில் கொண்டு செல்வது.
  2. பரம்பொருள் அருட்பெரும் ஜோதி ஓம் ஸ்ரீ அருள்வெளி சித்தர் கோவில் அமைத்து அவர்களின் எளிய வாழ்க்கை முறை, கலியுக சேவைகள், மற்றும் நிகழ்த்திய அற்புதங்களை சொற்பொழிவாற்றுவது.
  3. முகாம்கள் அமைத்து இயற்க்கை  உணவு மற்றும் இயற்க்கை மருத்துவப் முக்கியதுவத்தை மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது.
  4. ப்ராணயாமம் மற்றும் யோகாசன பயிற்சி அளிப்பது, அதில் தேர்ந்தவர்களுக்கு வர்மம் மற்றும் சித்த மருத்துவ பயிற்சி அளிப்பது.
  5. இயற்க்கை  சார்ந்த சமூகநலத்திட்டங்கள் - இயற்கையை பாதுகாத்தல், மரம் நடுதல், நீராதாரங்களை பாதுகாத்தல், குறித்து விழிப்புணர்வு மற்றும் களபணி மேற்கொள்வது.
  6. சாதி, மத, இன, மொழி, அரசியல் வேறுபாடு அகற்றி சகோதரத்துவம், மனித நேயம் தழைக்கச் செய்தல், நீதி, நேர்மை, ஒழுக்கம், தேச ஒற்றுமை, தெய்வீக வழிபாடு, சித்தர்கள் வழிபாடு ஆகியவற்றின் முக்கியத்துவத்தைப் பரப்புதல்.
  7. பாரம்பரிய நூல்கள், ஓலைச்சுவடிகள், ஏடுகளை புதுப்பித்தல் மற்றும் பிற்கால சந்ததியினருக்கு பயன் பெரும் வகையில் கொண்டு செல்வது.
  8. வலியார்கள் மூலம் எளியார்க்கு ஆசிரமம் அமைத்து உயர் கல்வி உதவி, தாய் தந்தையர் இல்லம், சித்தமருத்துவ சிகிச்சை, சித்தமருந்து, சிகிச்சை பயனாளர்க்கு விடுதி, மூன்று வேளை அன்னதானம் மேலும் பல திட்டங்களை செயல்படுத்துவது.

ஓம் ஸ்ரீ மாரிமுத்து சித்தர் சுவாமிகள் மாதம் தோறும் மதுரையில் பரம்பொருள் அருட்பெரும் ஜோதி ஓம் ஸ்ரீ அருள்வெளி சித்தர் அவர்களுக்கு பௌர்ணமி பூஜை நடத்தி சபை மெய்யன்பர்களுக்கு உபதேசம் செய்து ஆசி வழங்கி வருகிறார். ஆண்டு தோறும் பூதேரிபண்டை கிராமம், வடமங்கலம், ஸ்ரீ பெரும்புதூரில் உள்ள பரம்பொருள் அருட்பெரும் ஜோதி ஐீவசமாதி கோயில் குரு பூஐையில் கலந்துகொண்டு அருள்ஆசி வழங்கி வருகிறார்.
 ஓம் ஸ்ரீ அருள்வெளி சித்தர் ஜீவசமாதி
பூதேரிபண்டை கிராமம், வடமங்கலம் சாலை, ஸ்ரீ பெரும்புதூர் - 602105.

Popular Posts

அருள்வெளி சித்தர் 108 போற்றி

பரம்பொருள் அருட்பெரும் ஜோதி ஓம் ஸ்ரீ அருள்வெளி சித்தர் பரம்பொருள் அருட்பெரும் ஜோதி ஓம் ஸ்ரீ அருள்வெளி சித்தர் ஓம் ஸ்ரீ அருள்வெளி சித்தர் 108 போற்றி 1. அன்பே உருவான அருள்வேளிக் சித்தனே போற்றி ! 2. அகர முதலாய் அமர்ந்தாய் போற்றி ! 3. அறிவிற் கறிவான ஆதுவிதனே போற்றி ! 4. அறத்தின் வடிவே ஐயனே போற்றி ! 5. அடிமை எமைக் காக்கும் அத்தா போற்றி ! 6. அனாதிப் பரம்பொருள் ஆயினே போற்றி ! 7. அமரர் வணங்கும் அரியே போற்றி ! 8. அண்டினோர்க் காதரவு அளிப்பாய் போற்றி ! 9. அன்பே சிவமேன் றறிந்தாய் போற்றி ! 10. அன்பே சிவமாய் அமர்ந்தாய் போற்றி ! 11. அடக்கம் ஆன  சிவமே போற்றி ! 12. ஆனந்த வடிவச் சித்தனே போற்றி ! 13. ஆகாயம் எல்லாம் அளந்தாய் போற்றி ! 14. ஆதியே போற்றி சோதியே போற்றி ! 15. ஆலத்தை அமுதாய் ஆக்குவை போற்றி ! 16. ஆருரிச் சிவமே அழகா போற்றி ! 17. ஆசை வித்த அரனே போற்றி ! 18. ஆணவ மாயை அழித்தாய் போற்றி ! 19. ஆவியில் உறையும் ஐயா போற்றி ! 20. ஆத்தும தத்துவம் அறிவிப்பாய் போற்றி ! 21. ஆலமர் செல்வ அரசே போற்றி ! 22. இகர மாகி எழுந்தாய் போற்றி ! 23. இறைவி இறைவன் வடிவே போற்றி ! 24. இகபர சுகங்கள் தருவாய் ...

அத்தி

1. மூலிகையின் பெயர் :- அத்தி. 2. வேறு பெயர் :- அதவம் மரம் 3. தாவரப்பெயர் :- FICUS GLOMERATA, FICUS AURICULATE. 4. தாவரக்குடும்பம் :- MORACEAE. 5. பயன்தரும் பாகங்கள் :- இலை, பிஞ்சு, காய், பழம், பால், பட்டை ஆகியன. 6. வளரியல்பு :- அத்தி களிமண் நிலம் மற்றும் ஆற்றுப்படுகைகளில் நன்கு வளரும். மாற்றடுக்கில் அமைந்த முழுமையான இலைகளை உடைய பெரு  (FICUS GLOMERATA , ROXB ; MORACEAE ) மர வகையைச் சேர்ந்தது.நாட்டு அத்தி (COUNTRY FIG), வெள்ளை அத்தி (GULAR FIG), நல்ல அத்தி (FICUS GLOMERATA CLUSTER FIG) என பல வகை அத்தி மரங்கள் உண்டு. அத்தி அளவான உயரமுடைய நடுத்தர மரமாகும். இம்மரம் சுமார் 10 மீட்டர் வரை உயரமாக வளர்கிறது. மரத்தின் பட்டை சாம்பல் மற்றும் சிவப்பு நிறத்தில் காணப்படுகிறது. அத்தி இலைகளில் மூன்று நரம்புகள் இருக்கும். காய்கள் சற்று நீளமான முட்டை வடிவில் தண்டிலும், கிளைகளிலும் அடிமரத்திலும் கொத்துக் கொத்தாகத் தோன்றும். பெரிய நெல்லிக்காய் அளவில் உருண்டையாக சிறிது பச்சை நிறத்துடன் இருக்கும். காய் பழுத்த பின்பு கொய்யாப்பழத்தைப் போல் வெளிறிய மஞ்சள் நிறமாக மாறிவிடும். பழங்கள் தானே கீழே உத...

வர்மம் varmam

வர்மங்களின் வகைகள்..! வர்மக் கலையை அகத்தியர் நான்கு பெரும் பிரிவுகளாய் பிரித்திருக்கிறார். உடலில் உள்ள வர்ம புள்ளிகள் மற்றும், அவற்றை கையாளும் விதத்தினால் இவற்றை வேறு படுத்துகிறார். இவை “படு வர்மம்”, ”தொடு வர்மம்”, ”தட்டு வர்மம்”, ”நோக்கு வர்மம்” படுவர்மம் நான்கு வகை வர்மங்களில் மிகவும் ஆபாயகரமான பிரிவு இதுவேயாகும். உடலிலுள்ள வர்மப் பகுதிகளில் அடியோ அல்லது தாக்குதலோ ஏற்படுமானால் அப்போது ஏற்படும் வர்மமே "படுவர்மம்" என்கிறார். இந்த படுவர்ம தாக்குதலுக்கு உள்ளாகும் நபர்கள் உயிரிழக்கும் வாய்ப்புக்கள் அதிகம் உள்ளதால் இவை மிகவும் ஆபத்தானவை என்று அகத்தியர் குறிப்பிடுகிறார். ஒரு மனிதன் படுவர்மப் புள்ளிகளில் அடிபட்டால் உடனடியாக மயங்கி விழுவான் என்றும், அவன் வாய் பிளந்து நாக்கு வெளியே தள்ளும், வாயில் நுரையும் வெளியேறும் அத்துடன் அந்த அடிபட்ட இடங்களில் கைவைத்து பார்த்தால் அந்த இடம் மிகவும் குளிர்ச்சியாகக் காணப்படும் என்றும் குறிப்பிடுகிறார். எல்லோராலும் இதை செய்திட முடியாது என்றும், மிகுந்த பயிற்சி உள்ள ஒருவரால் மட்டுமே இத்தகைய செயல்களை செய்திட முடியும் என்றும் கூறுகிறார். தொடு...

குண்டலினி ஆற்றல் 3

குண்டலினியை எப்படி எல்லாம் எழுப்பலாம்! மூலாதாரத்தில் புதைந்திருக்கும் குண்டலினியை எழுப்பிட பல்வேறு உத்திகள் கூறப் பட்டிருக்கின்றன. பொதுவில் பிராணாயாமம் எனப்படும் மூச்சுப் பயிற்சி, ஆசனங்கள், முத்திரைகள் இவைகளால் குண்டலினியை எழுப்ப முடியுமாம். இராஜயோகிகள் சலனமற்ற தியானத்தினாலும், மனப் பயிற்சியினாலும் எழுப்புகின்றனர். சாமான்யர்கள் பக்தி அதாவது முழுமையான சரணாகதியின் மூலம் எழுப்புகின்றனர். ஞானிகளோ பிரித்து அறியும் மன உறுதியினால் எழுப்புகின்றனர். இதை விவேக வைராக்கியம் என்கின்றனர். தாந்திரிகர்கள் மந்திர சக்தியால் குண்டலினியை எழுப்புகின்றனர். இவற்றை எல்லாம் விட மிக எளிதான ஒரு முறையும் இருக்கிறது. அதாவது குருவினை பார்த்தல்(தரிசனம்),குருவினால் தொடப் படுதல், ஆசீர்வதித்தல் ஆகியவைகளால் சட்டென குண்டலினி எழும்பும். இத்தகைய தகுதி உடைய குருமார்கள் இப்போது மிகவும் குறைவு. மேலும் அத்தகையவர்கள் இதை எல்லோருக்கும் அருளுவதுமில்லை. ஆக, நம்மில் உறைந்திருக்கும் குண்டலினியை எழுப்பிட இத்தனை வகைகள் இருக்கிறது. எனினும் நமது உடல் மற்றும் மனப் பக்குவத்திற்கு ஏற்ற வகையை தெரிவு செய்ய குருவினால் மட்டுமே முடியும...

குண்டலினி ஆற்றல் 9 விசுத்தி

குண்டலினி - விசுத்தி. மூலாதாரத்திலிருந்து ஐந்தாவது சக்கரமான விசுத்தி பற்றி இன்று பார்ப்போம். இதைப் பற்றி அகத்தியர் பின் வருமாறு விளக்குகிறார். ஆச்சப்பா வனாகததி னொடுக்கஞ்சொன்னோம் அறையுகிறேன் விசுத்தியி னடவைக்கேளு மாச்சப்பா வதற்க்குமேல் பன்னிரெண்டங்குலம் பாச்சப்பா பதினாறு யிதழ்தா னாகும் பாலகனே அட்சரந்தான் வகாரமாகும் வதுநடுவில் சதாசிவனும் சாகினியுமாமே. - அகத்தியர். இந்த சக்தி ஆதார மையமானது நமது தொண்டையின் அடிப்பாகத்தில் சுழுமுனை நாடியில் அமைந்து இருப்பதாக குறிப்பிடுகின்றனர். நமது குரல்வளை, மூச்சுக் குழாய், தையராய்டு சுரப்பிகள், நுரையீரல், கைகள் போன்ற உறுப்புகளுடன் விசுத்தி சக்கரம் தொடர்புடையதாக குறிப்பிடப் படுகிறது. பஞ்சாட்சர எழுத்துக்களான "சிவயநம" என்னும் எழுத்துகளில் ஒன்றான "வ" என்னும் எழுத்தையும், அதன் தத்துவத்தையும் விசுத்தி சக்கரம் விளக்குவதாக அமைகின்றது. இச்சக்கரத்தின் அதிதேவன் சதாசிவன், அதி தேவதை சாகினி. பஞ்ச பூதங்களில் ஒன்றான ஆகாசம் இதன் மூலக்கூறு. இதன் மூல மந்திரம் “ஹம்” எனப்படுகிறது. இந்த சக்கரத்திலிருந்து தாமரை இதழ் போன்ற பதினாறு யோக நாடிகள் கிளம்புகின்றன....