Skip to main content

அருள்வெளி சித்தர்

போற்றுவோர் அருள் பொன் பொருள் பெறுக..!
தூற்றுவோர் தூய உள்ளம் பெறுக..!
பரம்பொருள் அருட்பெரும் ஜோதி ஓம் ஸ்ரீ அருள்வெளி சித்தர்
அருள் வழங்கும் ஓம் ஸ்ரீ அருள்வெளி சித்தர் என்ற லிங்கச்செட்டி பாபா பல மகான்கள் வலம் வந்த இடமே இந்த பாரிமுனை பார்போற்றும் பாரிமுனையில் உள்ள மண்ணடிப் பகுதியில் சாமி ஐயப்பன் போன்ற ஆசனத்தில் அமர்ந்திருந்த லிங்கச்செட்டி பாபா என்று அழைக்கப்பட்ட அருள்வெளி சித்தராவார் இவரை மண்ணடி பாபா என்று அழைப்பதும் உண்டு. இன்றும் அருள்வெளி சித்தர் பாபாவின் ஜீவசமாதியில் நல்ல ஆன்ம அன்பர்கள் சென்றால் அவர்கள் பார்வைக்கு சித்தர் கண்சிமிட்டி பார்க்கும் அதிசயம் அங்கே நிகழ்ந்து கொண்டுதான் இருப்பதாக சொல்கிறார்கள்.
அருள்வெளி சித்தர் பாபா பல்லாயிரம் மகிமைகள் செய்து மக்கள் சேவையில் சிறந்து விளங்கினார். சுவாமிகளின் பூர்வீகம் மதுரை இப்போதும் மதுரையில் இருந்து ஏராளமான பக்தர்கள் ஒவ்வொரு வருடமும் பாபாவின் குரு பூஜையில் கலந்து கொண்டு அருள் பெற்று வருகிறார்கள். கேட்டதையெல்லாம் கொட்டிக் கொடுக்கும் சக்தி படைத்தவன் கடவுள் என நம்பும் மனிதன் எதை எப்போது எப்படி தர வேண்டும் என்று புத்தி படைத்தவன் கடவுள் என்பதை நம்ப மறுக்கிறான். இந்த உண்மையை தம்மை நாடி வரும் அன்பர்களுக்கு அறிவுறுத்தியவர் அருள்வெளி சித்தர் பாபா வடபழனியில் பலரும் பௌர்ணமி அமாவாசை தினங்களில் நடக்கும் சிறப்பு பூஜைகளில் கலந்துகொண்டு சித்தர் சமாதி கோயிலில் பலன் பெற்று வருகின்றனர்.
சுவாமிகள் எப்போதும் தலையில் முண்டாசுடன் வலது கையில் ஒரு கருப்பு கயிற்றை காப்புக் கயிறு போல கையில் கட்டிக் கொண்டிருப்பார். மற்றுமொரு அதிசயம் மழை பொழியும் சமயங்களில் சாமிகள் அமர்ந்திருக்கும் இடத்தை தவிர மற்ற இடங்களில் மழை பெய்யும் அதிசயத்தை கண்டவர்கள் பல பேர்கள் உண்டு. சுவாமிகளின் தவம் ஞானம் யோகம் சித்தம் இவையாவும் அங்கு வந்து ஆசி பெற்ற மக்களுக்கு அமிர்தமாய் கிடைத்தது.
ஒரு காலகட்டத்தில் சாமிகள் சமாதி அடைவதற்கு முன்பாக அவரது புகழ் சென்னை நகரம் முழுவதும் பரவியது அவரை தரிசிக்க பலர் வருவதுண்டு நீதியரசர்கள் காவல்துறை உயர் அதிகாரிகள் அரசியல் பிரமுகர்கள் தொழிலதிபர்கள் என கூட்டம் பெருகியது. ஆனால் சாமிகள் எல்லோரையும் சரி சமமாக பாவித்து அவர்களுக்கு அருள் மழை பொழிந்தார்.
அவ்வாறு இருந்த சாமிகள் 13/03/1988ஆம் ஆண்டு ஞாயிற்றுக்கிழமை மாசி மாதம் பூர நட்சத்திரத்தன்று இறைவனுடன் இரண்டறக் கலந்தார். சித்தர்பெருமானின் சமாதியில் பல அற்புதங்கள் இன்னமும் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன அங்கு சென்று அவரது அருளை பெற்று வரும் அன்பர்கள் வாழ்வில் பல வளங்களும் நலங்களும் பெற்று வருவது யாவரும் அறிந்த உண்மை.
இவரின் ஜீவசமாதி ஆனது சென்னை ஸ்ரீபெரும்புதூர் வடமங்கலம் விஜிபி என்கிளேவ் நோக்கியா நிறுவனம் எதிரில் உள்ளது. இவருக்கு பாரிமுனையில் தனியாக ஒரு கோயில் அமைத்தும் வழிபட்டு வருகிறார்கள் அவர் வாழ்ந்த இடத்தில் சின்னதாக கோவில் உள்ளது பாரிமுனை லிங்குச்செட்டி தெரு அருகே உள்ளது.
ஓம் ஸ்ரீ அருள் மாரிமுத்து சித்தர் ஆஸ்ரமம்
EB ரோடு, குமுளி லோயர் கேம்ப், கூடலூர் அஞ்சல், தேனி மாவட்டம் - 625518, தமிழ்நாடு.
ஓம் ஸ்ரீ அருள்வெளி சித்தர் பக்த சபை
121, அருள்வெளிசித்தர் இல்லம், திருவள்ளுவர் நகர், மதுரை—625006.
ஓம் ஸ்ரீ அருள்வெளி சித்தர் ஜீவ சமாதி
பூதேரிபண்டை கிராமம், வடமங்கலம் சாலை, ஸ்ரீ பெரும்புதூர் - 602105.

Video's :











Popular Posts

அருள்வெளி சித்தர் 108 போற்றி

பரம்பொருள் அருட்பெரும் ஜோதி ஓம் ஸ்ரீ அருள்வெளி சித்தர் பரம்பொருள் அருட்பெரும் ஜோதி ஓம் ஸ்ரீ அருள்வெளி சித்தர் ஓம் ஸ்ரீ அருள்வெளி சித்தர் 108 போற்றி 1. அன்பே உருவான அருள்வேளிக் சித்தனே போற்றி ! 2. அகர முதலாய் அமர்ந்தாய் போற்றி ! 3. அறிவிற் கறிவான ஆதுவிதனே போற்றி ! 4. அறத்தின் வடிவே ஐயனே போற்றி ! 5. அடிமை எமைக் காக்கும் அத்தா போற்றி ! 6. அனாதிப் பரம்பொருள் ஆயினே போற்றி ! 7. அமரர் வணங்கும் அரியே போற்றி ! 8. அண்டினோர்க் காதரவு அளிப்பாய் போற்றி ! 9. அன்பே சிவமேன் றறிந்தாய் போற்றி ! 10. அன்பே சிவமாய் அமர்ந்தாய் போற்றி ! 11. அடக்கம் ஆன  சிவமே போற்றி ! 12. ஆனந்த வடிவச் சித்தனே போற்றி ! 13. ஆகாயம் எல்லாம் அளந்தாய் போற்றி ! 14. ஆதியே போற்றி சோதியே போற்றி ! 15. ஆலத்தை அமுதாய் ஆக்குவை போற்றி ! 16. ஆருரிச் சிவமே அழகா போற்றி ! 17. ஆசை வித்த அரனே போற்றி ! 18. ஆணவ மாயை அழித்தாய் போற்றி ! 19. ஆவியில் உறையும் ஐயா போற்றி ! 20. ஆத்தும தத்துவம் அறிவிப்பாய் போற்றி ! 21. ஆலமர் செல்வ அரசே போற்றி ! 22. இகர மாகி எழுந்தாய் போற்றி ! 23. இறைவி இறைவன் வடிவே போற்றி ! 24. இகபர சுகங்கள் தருவாய் ...

அத்தி

1. மூலிகையின் பெயர் :- அத்தி. 2. வேறு பெயர் :- அதவம் மரம் 3. தாவரப்பெயர் :- FICUS GLOMERATA, FICUS AURICULATE. 4. தாவரக்குடும்பம் :- MORACEAE. 5. பயன்தரும் பாகங்கள் :- இலை, பிஞ்சு, காய், பழம், பால், பட்டை ஆகியன. 6. வளரியல்பு :- அத்தி களிமண் நிலம் மற்றும் ஆற்றுப்படுகைகளில் நன்கு வளரும். மாற்றடுக்கில் அமைந்த முழுமையான இலைகளை உடைய பெரு  (FICUS GLOMERATA , ROXB ; MORACEAE ) மர வகையைச் சேர்ந்தது.நாட்டு அத்தி (COUNTRY FIG), வெள்ளை அத்தி (GULAR FIG), நல்ல அத்தி (FICUS GLOMERATA CLUSTER FIG) என பல வகை அத்தி மரங்கள் உண்டு. அத்தி அளவான உயரமுடைய நடுத்தர மரமாகும். இம்மரம் சுமார் 10 மீட்டர் வரை உயரமாக வளர்கிறது. மரத்தின் பட்டை சாம்பல் மற்றும் சிவப்பு நிறத்தில் காணப்படுகிறது. அத்தி இலைகளில் மூன்று நரம்புகள் இருக்கும். காய்கள் சற்று நீளமான முட்டை வடிவில் தண்டிலும், கிளைகளிலும் அடிமரத்திலும் கொத்துக் கொத்தாகத் தோன்றும். பெரிய நெல்லிக்காய் அளவில் உருண்டையாக சிறிது பச்சை நிறத்துடன் இருக்கும். காய் பழுத்த பின்பு கொய்யாப்பழத்தைப் போல் வெளிறிய மஞ்சள் நிறமாக மாறிவிடும். பழங்கள் தானே கீழே உத...

வர்மம் varmam

வர்மங்களின் வகைகள்..! வர்மக் கலையை அகத்தியர் நான்கு பெரும் பிரிவுகளாய் பிரித்திருக்கிறார். உடலில் உள்ள வர்ம புள்ளிகள் மற்றும், அவற்றை கையாளும் விதத்தினால் இவற்றை வேறு படுத்துகிறார். இவை “படு வர்மம்”, ”தொடு வர்மம்”, ”தட்டு வர்மம்”, ”நோக்கு வர்மம்” படுவர்மம் நான்கு வகை வர்மங்களில் மிகவும் ஆபாயகரமான பிரிவு இதுவேயாகும். உடலிலுள்ள வர்மப் பகுதிகளில் அடியோ அல்லது தாக்குதலோ ஏற்படுமானால் அப்போது ஏற்படும் வர்மமே "படுவர்மம்" என்கிறார். இந்த படுவர்ம தாக்குதலுக்கு உள்ளாகும் நபர்கள் உயிரிழக்கும் வாய்ப்புக்கள் அதிகம் உள்ளதால் இவை மிகவும் ஆபத்தானவை என்று அகத்தியர் குறிப்பிடுகிறார். ஒரு மனிதன் படுவர்மப் புள்ளிகளில் அடிபட்டால் உடனடியாக மயங்கி விழுவான் என்றும், அவன் வாய் பிளந்து நாக்கு வெளியே தள்ளும், வாயில் நுரையும் வெளியேறும் அத்துடன் அந்த அடிபட்ட இடங்களில் கைவைத்து பார்த்தால் அந்த இடம் மிகவும் குளிர்ச்சியாகக் காணப்படும் என்றும் குறிப்பிடுகிறார். எல்லோராலும் இதை செய்திட முடியாது என்றும், மிகுந்த பயிற்சி உள்ள ஒருவரால் மட்டுமே இத்தகைய செயல்களை செய்திட முடியும் என்றும் கூறுகிறார். தொடு...

குண்டலினி ஆற்றல் 3

குண்டலினியை எப்படி எல்லாம் எழுப்பலாம்! மூலாதாரத்தில் புதைந்திருக்கும் குண்டலினியை எழுப்பிட பல்வேறு உத்திகள் கூறப் பட்டிருக்கின்றன. பொதுவில் பிராணாயாமம் எனப்படும் மூச்சுப் பயிற்சி, ஆசனங்கள், முத்திரைகள் இவைகளால் குண்டலினியை எழுப்ப முடியுமாம். இராஜயோகிகள் சலனமற்ற தியானத்தினாலும், மனப் பயிற்சியினாலும் எழுப்புகின்றனர். சாமான்யர்கள் பக்தி அதாவது முழுமையான சரணாகதியின் மூலம் எழுப்புகின்றனர். ஞானிகளோ பிரித்து அறியும் மன உறுதியினால் எழுப்புகின்றனர். இதை விவேக வைராக்கியம் என்கின்றனர். தாந்திரிகர்கள் மந்திர சக்தியால் குண்டலினியை எழுப்புகின்றனர். இவற்றை எல்லாம் விட மிக எளிதான ஒரு முறையும் இருக்கிறது. அதாவது குருவினை பார்த்தல்(தரிசனம்),குருவினால் தொடப் படுதல், ஆசீர்வதித்தல் ஆகியவைகளால் சட்டென குண்டலினி எழும்பும். இத்தகைய தகுதி உடைய குருமார்கள் இப்போது மிகவும் குறைவு. மேலும் அத்தகையவர்கள் இதை எல்லோருக்கும் அருளுவதுமில்லை. ஆக, நம்மில் உறைந்திருக்கும் குண்டலினியை எழுப்பிட இத்தனை வகைகள் இருக்கிறது. எனினும் நமது உடல் மற்றும் மனப் பக்குவத்திற்கு ஏற்ற வகையை தெரிவு செய்ய குருவினால் மட்டுமே முடியும...

குண்டலினி ஆற்றல் 9 விசுத்தி

குண்டலினி - விசுத்தி. மூலாதாரத்திலிருந்து ஐந்தாவது சக்கரமான விசுத்தி பற்றி இன்று பார்ப்போம். இதைப் பற்றி அகத்தியர் பின் வருமாறு விளக்குகிறார். ஆச்சப்பா வனாகததி னொடுக்கஞ்சொன்னோம் அறையுகிறேன் விசுத்தியி னடவைக்கேளு மாச்சப்பா வதற்க்குமேல் பன்னிரெண்டங்குலம் பாச்சப்பா பதினாறு யிதழ்தா னாகும் பாலகனே அட்சரந்தான் வகாரமாகும் வதுநடுவில் சதாசிவனும் சாகினியுமாமே. - அகத்தியர். இந்த சக்தி ஆதார மையமானது நமது தொண்டையின் அடிப்பாகத்தில் சுழுமுனை நாடியில் அமைந்து இருப்பதாக குறிப்பிடுகின்றனர். நமது குரல்வளை, மூச்சுக் குழாய், தையராய்டு சுரப்பிகள், நுரையீரல், கைகள் போன்ற உறுப்புகளுடன் விசுத்தி சக்கரம் தொடர்புடையதாக குறிப்பிடப் படுகிறது. பஞ்சாட்சர எழுத்துக்களான "சிவயநம" என்னும் எழுத்துகளில் ஒன்றான "வ" என்னும் எழுத்தையும், அதன் தத்துவத்தையும் விசுத்தி சக்கரம் விளக்குவதாக அமைகின்றது. இச்சக்கரத்தின் அதிதேவன் சதாசிவன், அதி தேவதை சாகினி. பஞ்ச பூதங்களில் ஒன்றான ஆகாசம் இதன் மூலக்கூறு. இதன் மூல மந்திரம் “ஹம்” எனப்படுகிறது. இந்த சக்கரத்திலிருந்து தாமரை இதழ் போன்ற பதினாறு யோக நாடிகள் கிளம்புகின்றன....