போற்றுவோர் அருள் பொன் பொருள் பெறுக..!
தூற்றுவோர் தூய உள்ளம் பெறுக..!
பரம்பொருள் அருட்பெரும் ஜோதி ஓம் ஸ்ரீ அருள்வெளி சித்தர் |
அருள் வழங்கும் ஓம் ஸ்ரீ அருள்வெளி
சித்தர் என்ற லிங்கச்செட்டி பாபா பல மகான்கள் வலம் வந்த இடமே இந்த
பாரிமுனை பார்போற்றும் பாரிமுனையில் உள்ள மண்ணடிப் பகுதியில் சாமி ஐயப்பன்
போன்ற ஆசனத்தில் அமர்ந்திருந்த லிங்கச்செட்டி பாபா என்று அழைக்கப்பட்ட
அருள்வெளி சித்தராவார் இவரை மண்ணடி பாபா என்று அழைப்பதும் உண்டு. இன்றும் அருள்வெளி சித்தர் பாபாவின் ஜீவசமாதியில் நல்ல ஆன்ம அன்பர்கள்
சென்றால் அவர்கள் பார்வைக்கு சித்தர் கண்சிமிட்டி பார்க்கும் அதிசயம் அங்கே
நிகழ்ந்து கொண்டுதான் இருப்பதாக சொல்கிறார்கள்.
அருள்வெளி சித்தர் பாபா பல்லாயிரம்
மகிமைகள் செய்து மக்கள் சேவையில் சிறந்து விளங்கினார். சுவாமிகளின்
பூர்வீகம் மதுரை இப்போதும் மதுரையில் இருந்து ஏராளமான பக்தர்கள் ஒவ்வொரு
வருடமும் பாபாவின் குரு பூஜையில் கலந்து கொண்டு அருள் பெற்று வருகிறார்கள். கேட்டதையெல்லாம் கொட்டிக் கொடுக்கும் சக்தி படைத்தவன் கடவுள் என நம்பும்
மனிதன் எதை எப்போது எப்படி தர வேண்டும் என்று புத்தி படைத்தவன் கடவுள்
என்பதை நம்ப மறுக்கிறான். இந்த உண்மையை தம்மை நாடி வரும் அன்பர்களுக்கு
அறிவுறுத்தியவர் அருள்வெளி சித்தர் பாபா வடபழனியில் பலரும் பௌர்ணமி அமாவாசை
தினங்களில் நடக்கும் சிறப்பு பூஜைகளில் கலந்துகொண்டு சித்தர் சமாதி
கோயிலில் பலன் பெற்று வருகின்றனர்.
சுவாமிகள் எப்போதும் தலையில் முண்டாசுடன் வலது கையில் ஒரு கருப்பு
கயிற்றை காப்புக் கயிறு போல கையில் கட்டிக் கொண்டிருப்பார். மற்றுமொரு
அதிசயம் மழை பொழியும் சமயங்களில் சாமிகள் அமர்ந்திருக்கும்
இடத்தை தவிர மற்ற இடங்களில் மழை பெய்யும் அதிசயத்தை கண்டவர்கள் பல பேர்கள்
உண்டு. சுவாமிகளின் தவம் ஞானம் யோகம் சித்தம் இவையாவும் அங்கு வந்து ஆசி
பெற்ற மக்களுக்கு அமிர்தமாய் கிடைத்தது.
அவ்வாறு இருந்த சாமிகள் 13/03/1988ஆம் ஆண்டு ஞாயிற்றுக்கிழமை மாசி மாதம் பூர நட்சத்திரத்தன்று இறைவனுடன் இரண்டறக் கலந்தார். சித்தர்பெருமானின் சமாதியில் பல அற்புதங்கள் இன்னமும் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன அங்கு சென்று அவரது அருளை பெற்று வரும் அன்பர்கள் வாழ்வில் பல வளங்களும் நலங்களும் பெற்று வருவது யாவரும் அறிந்த உண்மை.
இவரின் ஜீவசமாதி ஆனது சென்னை ஸ்ரீபெரும்புதூர் வடமங்கலம் விஜிபி என்கிளேவ்
நோக்கியா நிறுவனம் எதிரில் உள்ளது. இவருக்கு பாரிமுனையில் தனியாக ஒரு
கோயில் அமைத்தும் வழிபட்டு வருகிறார்கள் அவர் வாழ்ந்த இடத்தில் சின்னதாக
கோவில் உள்ளது பாரிமுனை லிங்குச்செட்டி தெரு அருகே உள்ளது.
ஓம் ஸ்ரீ அருள் மாரிமுத்து சித்தர் ஆஸ்ரமம்
EB ரோடு, குமுளி லோயர் கேம்ப், கூடலூர் அஞ்சல், தேனி மாவட்டம் - 625518, தமிழ்நாடு.
ஓம் ஸ்ரீ அருள்வெளி சித்தர் பக்த சபை
121, அருள்வெளிசித்தர் இல்லம், திருவள்ளுவர் நகர், மதுரை—625006.
ஓம் ஸ்ரீ அருள்வெளி சித்தர் ஜீவ சமாதி
பூதேரிபண்டை கிராமம், வடமங்கலம் சாலை, ஸ்ரீ பெரும்புதூர் - 602105.
121, அருள்வெளிசித்தர் இல்லம், திருவள்ளுவர் நகர், மதுரை—625006.
ஓம் ஸ்ரீ அருள்வெளி சித்தர் ஜீவ சமாதி
பூதேரிபண்டை கிராமம், வடமங்கலம் சாலை, ஸ்ரீ பெரும்புதூர் - 602105.