Skip to main content

அருள்வெளி சித்தர்

போற்றுவோர் அருள் பொன் பொருள் பெறுக..!
தூற்றுவோர் தூய உள்ளம் பெறுக..!
பரம்பொருள் அருட்பெரும் ஜோதி ஓம் ஸ்ரீ அருள்வெளி சித்தர்
அருள் வழங்கும் ஓம் ஸ்ரீ அருள்வெளி சித்தர் என்ற லிங்கச்செட்டி பாபா பல மகான்கள் வலம் வந்த இடமே இந்த பாரிமுனை பார்போற்றும் பாரிமுனையில் உள்ள மண்ணடிப் பகுதியில் சாமி ஐயப்பன் போன்ற ஆசனத்தில் அமர்ந்திருந்த லிங்கச்செட்டி பாபா என்று அழைக்கப்பட்ட அருள்வெளி சித்தராவார் இவரை மண்ணடி பாபா என்று அழைப்பதும் உண்டு. இன்றும் அருள்வெளி சித்தர் பாபாவின் ஜீவசமாதியில் நல்ல ஆன்ம அன்பர்கள் சென்றால் அவர்கள் பார்வைக்கு சித்தர் கண்சிமிட்டி பார்க்கும் அதிசயம் அங்கே நிகழ்ந்து கொண்டுதான் இருப்பதாக சொல்கிறார்கள்.
அருள்வெளி சித்தர் பாபா பல்லாயிரம் மகிமைகள் செய்து மக்கள் சேவையில் சிறந்து விளங்கினார். சுவாமிகளின் பூர்வீகம் மதுரை இப்போதும் மதுரையில் இருந்து ஏராளமான பக்தர்கள் ஒவ்வொரு வருடமும் பாபாவின் குரு பூஜையில் கலந்து கொண்டு அருள் பெற்று வருகிறார்கள். கேட்டதையெல்லாம் கொட்டிக் கொடுக்கும் சக்தி படைத்தவன் கடவுள் என நம்பும் மனிதன் எதை எப்போது எப்படி தர வேண்டும் என்று புத்தி படைத்தவன் கடவுள் என்பதை நம்ப மறுக்கிறான். இந்த உண்மையை தம்மை நாடி வரும் அன்பர்களுக்கு அறிவுறுத்தியவர் அருள்வெளி சித்தர் பாபா வடபழனியில் பலரும் பௌர்ணமி அமாவாசை தினங்களில் நடக்கும் சிறப்பு பூஜைகளில் கலந்துகொண்டு சித்தர் சமாதி கோயிலில் பலன் பெற்று வருகின்றனர்.
சுவாமிகள் எப்போதும் தலையில் முண்டாசுடன் வலது கையில் ஒரு கருப்பு கயிற்றை காப்புக் கயிறு போல கையில் கட்டிக் கொண்டிருப்பார். மற்றுமொரு அதிசயம் மழை பொழியும் சமயங்களில் சாமிகள் அமர்ந்திருக்கும் இடத்தை தவிர மற்ற இடங்களில் மழை பெய்யும் அதிசயத்தை கண்டவர்கள் பல பேர்கள் உண்டு. சுவாமிகளின் தவம் ஞானம் யோகம் சித்தம் இவையாவும் அங்கு வந்து ஆசி பெற்ற மக்களுக்கு அமிர்தமாய் கிடைத்தது.
ஒரு காலகட்டத்தில் சாமிகள் சமாதி அடைவதற்கு முன்பாக அவரது புகழ் சென்னை நகரம் முழுவதும் பரவியது அவரை தரிசிக்க பலர் வருவதுண்டு நீதியரசர்கள் காவல்துறை உயர் அதிகாரிகள் அரசியல் பிரமுகர்கள் தொழிலதிபர்கள் என கூட்டம் பெருகியது. ஆனால் சாமிகள் எல்லோரையும் சரி சமமாக பாவித்து அவர்களுக்கு அருள் மழை பொழிந்தார்.
அவ்வாறு இருந்த சாமிகள் 13/03/1988ஆம் ஆண்டு ஞாயிற்றுக்கிழமை மாசி மாதம் பூர நட்சத்திரத்தன்று இறைவனுடன் இரண்டறக் கலந்தார். சித்தர்பெருமானின் சமாதியில் பல அற்புதங்கள் இன்னமும் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன அங்கு சென்று அவரது அருளை பெற்று வரும் அன்பர்கள் வாழ்வில் பல வளங்களும் நலங்களும் பெற்று வருவது யாவரும் அறிந்த உண்மை.
இவரின் ஜீவசமாதி ஆனது சென்னை ஸ்ரீபெரும்புதூர் வடமங்கலம் விஜிபி என்கிளேவ் நோக்கியா நிறுவனம் எதிரில் உள்ளது. இவருக்கு பாரிமுனையில் தனியாக ஒரு கோயில் அமைத்தும் வழிபட்டு வருகிறார்கள் அவர் வாழ்ந்த இடத்தில் சின்னதாக கோவில் உள்ளது பாரிமுனை லிங்குச்செட்டி தெரு அருகே உள்ளது.
ஓம் ஸ்ரீ அருள் மாரிமுத்து சித்தர் ஆஸ்ரமம்
EB ரோடு, குமுளி லோயர் கேம்ப், கூடலூர் அஞ்சல், தேனி மாவட்டம் - 625518, தமிழ்நாடு.
ஓம் ஸ்ரீ அருள்வெளி சித்தர் பக்த சபை
121, அருள்வெளிசித்தர் இல்லம், திருவள்ளுவர் நகர், மதுரை—625006.
ஓம் ஸ்ரீ அருள்வெளி சித்தர் ஜீவ சமாதி
பூதேரிபண்டை கிராமம், வடமங்கலம் சாலை, ஸ்ரீ பெரும்புதூர் - 602105.

Video's :











Popular Posts

லக்னமும் தொழில் அமைப்பும்

என்ன லக்னம் எந்த தொழில் செய்யலாம் மேஷம் லக்னமும் தொழில் அமைப்பும் மேஷ லக்னத்தில் பிறந்தவர்களுக்கு ஜீவன ஸ்தானாதிபதி சனி பகவானாவார். பொதுவாக, தொழில் காரகன் என வர்ணிக்கப்படக்கூடிய சனி பகவான் இந்த லக்னத்திற்கு 10ம் அதிபதி என்பதால் அவர் சுக்கிரன், புதன், குரு போன்றகிரகங்களின் சேர்க்கை பெற்று பலமாக அமையப் பெற்றால்,சொந்தத் தொழில்  செய்து அதன் மூலம் சம்பாதிக்கக்கூடிய யோகம் உண்டாகும். மேஷ லக்னத்தில் பிறந்தவர்களுக்கு ஜீவனாதிபதி சனியே பாதகாதிபதியாகவும் இருப்பதால், வேலையாட்களிடமும் ஸ்பெகுலேஷன் சார்ந்த தொழில்  விஷயங்களிலும் முதலீடு செய்கின்ற போது முன்னெச்சரிக்கையுடன் இருந்து நிலையான விஷயங்களில் மட்டும் முதலீடு செய்தால், லாபங்களை அடைய முடியும். 10ம் அதிபதி சனி பலமாக அமையப் பெற்று சுபர் பார்வையுடனிருந்தால் இரும்பு, எந்திரங்கள், வண்டி,வாகனங்களில்  மூலம் அனுகூலங்கள், பழைய பொருட்களை விற்பனை செய்யும் தொழில், கடின உடல் உழைப்பு சார்ந்த தொழில்கள் போன்றவற்றை செய்ய நேரிடும். சனி சுக்கிரனுடன் புதனும் இருந்தால் ஒன்றுக்கும் மேற்பட்ட தொழில் யோகம், பலரை நிர்வாகம் செய்து சொந்த தொழில் செய்யக்கூடிய யோகம் உண்டாகும். அ

வர்மம் varmam

வர்மங்களின் வகைகள்..! வர்மக் கலையை அகத்தியர் நான்கு பெரும் பிரிவுகளாய் பிரித்திருக்கிறார். உடலில் உள்ள வர்ம புள்ளிகள் மற்றும், அவற்றை கையாளும் விதத்தினால் இவற்றை வேறு படுத்துகிறார். இவை “படு வர்மம்”, ”தொடு வர்மம்”, ”தட்டு வர்மம்”, ”நோக்கு வர்மம்” படுவர்மம் நான்கு வகை வர்மங்களில் மிகவும் ஆபாயகரமான பிரிவு இதுவேயாகும். உடலிலுள்ள வர்மப் பகுதிகளில் அடியோ அல்லது தாக்குதலோ ஏற்படுமானால் அப்போது ஏற்படும் வர்மமே "படுவர்மம்" என்கிறார். இந்த படுவர்ம தாக்குதலுக்கு உள்ளாகும் நபர்கள் உயிரிழக்கும் வாய்ப்புக்கள் அதிகம் உள்ளதால் இவை மிகவும் ஆபத்தானவை என்று அகத்தியர் குறிப்பிடுகிறார். ஒரு மனிதன் படுவர்மப் புள்ளிகளில் அடிபட்டால் உடனடியாக மயங்கி விழுவான் என்றும், அவன் வாய் பிளந்து நாக்கு வெளியே தள்ளும், வாயில் நுரையும் வெளியேறும் அத்துடன் அந்த அடிபட்ட இடங்களில் கைவைத்து பார்த்தால் அந்த இடம் மிகவும் குளிர்ச்சியாகக் காணப்படும் என்றும் குறிப்பிடுகிறார். எல்லோராலும் இதை செய்திட முடியாது என்றும், மிகுந்த பயிற்சி உள்ள ஒருவரால் மட்டுமே இத்தகைய செயல்களை செய்திட முடியும் என்றும் கூறுகிறார். தொடு

அருள்வெளி சித்தர் 108 போற்றி

பரம்பொருள் அருட்பெரும் ஜோதி ஓம் ஸ்ரீ அருள்வெளி சித்தர் பரம்பொருள் அருட்பெரும் ஜோதி ஓம் ஸ்ரீ அருள்வெளி சித்தர் ஓம் ஸ்ரீ அருள்வெளி சித்தர் 108 போற்றி 1. அன்பே உருவான அருள்வேளிக் சித்தனே போற்றி ! 2. அகர முதலாய் அமர்ந்தாய் போற்றி ! 3. அறிவிற் கறிவான ஆதுவிதனே போற்றி ! 4. அறத்தின் வடிவே ஐயனே போற்றி ! 5. அடிமை எமைக் காக்கும் அத்தா போற்றி ! 6. அனாதிப் பரம்பொருள் ஆயினே போற்றி ! 7. அமரர் வணங்கும் அரியே போற்றி ! 8. அண்டினோர்க் காதரவு அளிப்பாய் போற்றி ! 9. அன்பே சிவமேன் றறிந்தாய் போற்றி ! 10. அன்பே சிவமாய் அமர்ந்தாய் போற்றி ! 11. அடக்கம் ஆன  சிவமே போற்றி ! 12. ஆனந்த வடிவச் சித்தனே போற்றி ! 13. ஆகாயம் எல்லாம் அளந்தாய் போற்றி ! 14. ஆதியே போற்றி சோதியே போற்றி ! 15. ஆலத்தை அமுதாய் ஆக்குவை போற்றி ! 16. ஆருரிச் சிவமே அழகா போற்றி ! 17. ஆசை வித்த அரனே போற்றி ! 18. ஆணவ மாயை அழித்தாய் போற்றி ! 19. ஆவியில் உறையும் ஐயா போற்றி ! 20. ஆத்தும தத்துவம் அறிவிப்பாய் போற்றி ! 21. ஆலமர் செல்வ அரசே போற்றி ! 22. இகர மாகி எழுந்தாய் போற்றி ! 23. இறைவி இறைவன் வடிவே போற்றி ! 24. இகபர சுகங்கள் தருவாய் போற்

அளவை முறைகள்

சித்தர்களின் பாடல்களில் குறிப்பிட்டிருக்கும் அளவை முறைகள் குறித்து பலருக்கும் சந்தேகம் இருக்கிறது. சித்தர்களின் பாடல்களில் குறிப்பிட்டிருக்கும் அளவை முறைகளுக்கு ஈடான தற்போதைய அளவைகளை குறித்த சந்தேகங்களுடன் தொடர்ந்து நிறைய மின்னஞ்சல்கள் வந்து கொண்டிருக்கிறது. எனவே அனைவரின் சந்தேகங்களை விளக்கும் பொருட்டும், மற்றவர்கள் அறிந்து கொள்ளவும் இந்த பதிவினை உங்கள் பார்வைக்கு வைக்கிறேன். முகத்தல் அளவைகள் ஒரு ஆழாக்கு = நூற்றி அறுபத்தியெட்டு மில்லி லிட்டர். ஒரு உழக்கு = முன்னூற்று முப்பத்தி ஆறு மில்லி லிட்டர். ஒரு கலம் = அறுபத்து நாலரை லிட்டர். ஒரு தூணி = இருபத்தி ஒன்றரை லிட்டர். ஒரு நெய்க் கரண்டி = தேக்கரண்டி அளவு. ஒரு எண்ணெய்க் கரண்டி = இரு நூற்றி நாற்பது மில்லி லிட்டர். ஒரு பாலாடை = முப்பது மில்லி லிட்டர். ஒரு குப்பி = எழுநூறுமில்லி லிட்டர். ஒரு அவுன்ஸ் = முப்பத்தியொரு கிராம். முன்னூற்று அறுபது நெல் = ஒரு சோடு. ஐந்து சோடு = ஒரு அழாக்கு. இரண்டு ஆழாக்கு = ஒரு உழக்கு. இரண்டு உழக்கு = ஒரு உரி. இரண்டு உரி = ஒரு நாழி. எட்டு நாழி = ஒரு குறுணி. இரண்டு குறுணி = ஒரு பதக்கு. இரண்டு

பிண்ணாக்கீசர்

"கோவணமும் இரவல் கொண்ட தூலம் இரவல் தேவமாதா இரவல் - ஞானம்மா தெரியா அலைவாரே.!" "இட்டர்க்கு உபதேசம் எந்நாளும் சொல்லிடலாம் துட்டர்க்கு உபதேசம் - ஞானம்மா சொன்னால் வருமோசம்.!" - பிண்ணாக்கீசர் - இவருக்கு இரட்டை நாக்கு, அதாவது பிளவு பட்ட நாக்கை உடையவர் இதனால் பிண்ணாக்கர் என அழைக்கப்பட்டார். இடைச்சி வயிற்றில் பிறந்த இவர் சிறந்த தமிழ்ப் புலமை பெற்றவர் என்றும், கர்நாடகத்தில் இருந்தவர் என்றும் போகர் சொல்கிறார். பாம்பாட்டிச் சித்தருக்கு சீடராக இருந்த இவாருக்கு மச்ச முனி சீடராக இருந்ததாக சொல்லப் படுகிறது. இவரது பாடல்களில் ஞானம்மா என விளித்துப் பாடிய பாடல்கள் தான் அதிகம். இவர், பிண்ணாக்கர் மெய்ஞானம் பிண்ணாக்கர் ஞானப்பால் பிண்ணாக்கர் முப்பூச் சுண்ணச் செயநீர் ஆகிய நூல்களை எழுதியதாகச் சொல்லப்படுகின்றது. இவர் கேரளத்திலுள்ள நங்குனாசேரி என்னுமிடத்தில் சமாதியடைந்ததாக சொல்லப் படுகிறது.