போற்றுவோர் அருள் பொன் பொருள் பெறுக..!
தூற்றுவோர் தூய உள்ளம் பெறுக..!
சித்தர் என்று சொன்னவுடன் தாடி வைத்து, சடை முடி தரித்து அழுக்கேறிப் போன கோவண உடையுடன் வானத்தை அண்ணாந்து வெறித்துப் பார்க்கும் ஓர் உருவம் நம் மனக்கண்முன் தோன்றுவது இயற்கை. ஆனால் இவர் எல்லோரிடத்திலும் இயல்பாக பேசி, சிரித்து விஞ்ஞானத்தின் முன்னோடியாக, மெய்ஞானத்தின் விஞ்ஞானியாக, மனிதனும், வீடும், நாடும், உலகமும், நலம் பெற, முன்னேற பல்வேறு அறிவுரைகளை நமக்கு அளித்து, ஜீவகாருண்ய ஒழுக்கத்தை போதித்து நம்முடன் ஓருவராய் வாழ்கிறார்.
"சிந்தை தெளிந்து இருப்பவ ஆர், அவனே சித்தன்"
- அவரே நமது ஓம் ஸ்ரீ மாரிமுத்து சித்தர் -
ஆகமமாகிய இந்த மனித உடம்பிலே தெய்வபக்தி கொண்டு அருட்ஷக்தியை வளர்த்து ஆன்ம
பரிமாணத்தில் மக்களிடையே வானவர்களாகவும், மனித தெய்வங்களாகவும் உலவி அருளை
வழங்கி வருகின்ற மகான், ஓம் ஸ்ரீ மாரிமுத்து சித்தர்.
சுவாமிகள் தன் சிறு வயதிலேயே பரம்பொருள்
அருட்பெரும் ஜோதி ஓம் ஸ்ரீ அருள்வெளி சித்தரிடம் அடியாராக இணைந்து
கொண்டார். சித்தரியியலில் உள்ள அனைத்து குருகுல பயிற்சி, செய்முறைகளை முடித்துக்கோண்டு சித்திகளை பெற்றபின் பரம்பொருள் வாக்குக்கு இணங்க
இல்லறத்தில் இணைத்துக்கொண்டார். இல்லறத்தில் இருந்த பொழுதும் தேடி வரும்
அடியார்க்கு சித்தமருத்துவ முறையில் அற்புதங்கள் நிகழ்த்தி வந்தார். மதுரை
அரசு மருத்துவமனை பணிஓய்வுக்கு பின் இல்லற கடனை முடித்து கொண்டு பிறவி கடனை எதிர்நோக்கி பயணித்து கொண்டிருக்கிறார்.
பரம்பொருள்
அருட்பெரும் ஜோதி ஓம் ஸ்ரீ அருள்வெளி சித்தர் போல் மனிதவடிவில் உள்ள
சுவாமியை தரிசிக்க பல மாவட்டத்தில் இருந்து அடியார்கள், சபை மெய்யன்பர்கள்,
முக்கிய பிரமுகர்கள் வருவதுண்டு. இன்றைய காலகட்டத்தில் தேர்ந்த வர்மக் கலை
ஆசான் மற்றும் நரம்பியல் வைத்தியர்களுக்கே புரியாத அல்லது தெரியாத பல
நுட்பங்களை, பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் சித்தர்கள் செய்த வர்ம
அற்புதங்களை தற்பொழுதும் நிகழ்த்தி கொண்டிருக்கிறார். மருத்துவர்களால்
கைவிடப்பட்ட பல அடியார்களை வர்மம் மற்றும் மூலிகைகளை கொண்டும், ஆதியும்
அந்தமும் ஆன பரம்போருள் அருள்வெளி சித்தர் ஆசியில், வழியில் பெற்ற
சித்திகளை கொண்டும் அடியார் அவர்தம் பிறவிப்பயனை ஏற்றவாறு அற்புதங்களை
நிகழ்த்தி கொண்டிருக்கிறார்.
உலகமக்களுக்கு போகர் சித்தர் அளித்த நவபாஷண முறையை செய்து காட்டியவர்,
சூரியன் கண்ணை கட்டி வருணனை வருடி மழையை கொண்டு வந்தவர், மரணத்தின் பிடியை
அவிழ்தவர், வெளி உலகிற்க்கு தெரிவிக்க முடியாத பற்பல அதிசயங்கள்,
தேவரகசியங்கள், அஷ்டமாசித்துக்கள், அற்புதங்களை நிகழ்த்தியவர்.
சர்வசாதார்ணமாக பரம்பொருள்
அருட்பெரும் ஜோதியிடம் நேரடியாக, இயல்பாக உரையாடுவார், அது மட்டுமல்லாது
குடுப்பணை உள்ளவர்களுக்கு தத்ருபமாக காட்டியும் உள்ளார். "யாதும் ஊரெ
யாவரும் கேளிர்" என்று, "கண் போன போக்கில் கால் போகிறது" என்றும், தற்பொழுது பரம்பொருள் வழியில் சென்று கொண்டிருக்கிறார். சுவாமிகளுக்கு ஜாதி, மதம், மொழி, நாடு, இனம், ஏழை, பணக்காரன் போன்ற வேறுபாடுகள் கிடையாது.
- சுவாமியின் சேவை கலியில் மிக தேவை என்பதனை அறிந்தவர்கள் அனைவரும் சபை மெய்யன்பர்களாக உள்ளனர்.
- தம் கருத்துக்களை மறைபொருளாக பல்வேறு அரிய சொற்களைப் பயன்படுத்திக் கூறிச்செல்வார்.
- தேடி வரும் சபை மெய்யன்பர்களுக்கு சுவாமிகள் தேடி சென்று சித்தமருத்துவம் வழங்குகிறார்.
- சபை மெய்யன்பர்கள் இல்ல விழாக்களுக்கு தலைமை தாங்கியும் இல்லாதோருக்கு பொருள் உதவியும் செய்து நடத்தி வருகிறார்.
- சபை மெய்யன்பர்கள் மூலம் வரும் மருத்துவர்களால் கைவிடப்பட்ட அடியார்கள், பிரமுக்கர்களுக்கு பலருக்கு சிகிச்சை அளித்துள்ளார், மேலும் எங்கெங்கோ சென்று முடியாமல் போன பலருக்கு சித்தமருத்துவ சிகிச்சை அளித்து நலமுடன் வாழ வழிவகை செய்துள்ளார்.
- சபை மெய்யன்பர்களுடன் இணைந்து பல சமூகநலத்திட்ட களபணிகள் ஆற்றியுள்ளார்.
- அரசு உயர் அதிகாரி மற்றும் முக்கிய பிரமுக்கர் சபை மெய்யன்பர்கள் வாயிலாக பல உதவிகளை செய்துள்ளார்.
- சபையில் பௌர்ணமி தோறும் அன்னம் வழங்குகிறார்.
- இருக்கும் இடத்தில் பெற்று தன்னிடம் உள்ளதையும் சேர்த்து இல்லாத இடங்களை சுயநலமற்று சரிசெய்து வருகிறார்.
- இடம் பற்றாக்குறை, அடியார்களின் எண்ணிக்கை அதிகரிப்பு மற்றும் தேவையை பூர்த்தி செய்ய, சபையின் சேவையை விஸ்திகரிக்க ஆசிரமம் அமைக்கும் முயற்ச்சியில் உள்ளார்.
பரம்போருள்
அருட்பெரும் ஜோதிக்கு தனது பிறந்த ஊர் அருகில், கம்பம் கூடலுர் மலை
அடிவாரத்தில் ஆசிரமம் அமைக்கும் முயற்சியில் உள்ளார். ஆசிரமத்திற்க்கு
வரும் அடியார்களுக்கு அன்னம் அளித்து இலவசமாக சித்தமருத்துவ முறையில்
சிகிச்சை வழங்கவுள்ளார். பல ஆயிரக்கணக்கான ஆண்டு பழமை வாய்ந்த யோகாசனம், வர்மம் மற்றும் சித்தமருத்துவ கலையை மாணவர்களுக்கு
கற்றுக்கொடுக்கவும் உள்ளார்.
ஓம் ஸ்ரீ மாரிமுத்து சித்தர் சுவாமிகள் மாதம் தோறும் மதுரையில்
பரம்பொருள்
அருட்பெரும் ஜோதி ஓம் ஸ்ரீ அருள்வெளி சித்தர் அவர்களுக்கு பௌர்ணமி பூஜை
நடத்தி சபை மெய்யன்பர்களுக்கு உபதேசம் செய்து ஆசி வழங்கி வருகிறார். ஆண்டு
தோறும் பூதேரிபண்டை கிராமம், வடமங்கலம், ஸ்ரீ பெரும்புதூரில் உள்ள
பரம்பொருள்
அருட்பெரும் ஜோதி ஐீவசமாதி கோயில் குரு பூஐையில் கலந்துகொண்டு அருள்ஆசி
வழங்கி வருகிறார்.
Videos:
ஓம் ஸ்ரீ அருள்வெளி சித்தர் பக்த சபை
121, அருள்வெளிசித்தர் இல்லம், திருவள்ளுவர் நகர், மதுரை—625006.
ஓம் ஸ்ரீ அருள் மாரிமுத்து சித்தர் ஆஸ்ரமம்
EB ரோடு, குமுளி லோயர் கேம்ப், கூடலூர் அஞ்சல், தேனி மாவட்டம் - 625518, தமிழ்நாடு.
ஓம் ஸ்ரீ அருள்வெளி சித்தர் ஜீவ சமாதி
பூதேரிபண்டை கிராமம், வடமங்கலம் சாலை, ஸ்ரீ பெரும்புதூர் - 602105.