Skip to main content

Posts

Showing posts from February, 2024

மருந்துகளின்றி ஆரோக்யமாக வாழ

நமது வாழ்க்கை முறையை சரிசெய்வது மூலமாக மட்டுமே ஆரோக்யமாக வாழ்வது சாத்தியமாகும். நம்மிடம் உள்ள ஆரோக்கியத்தை மருத்துவமனையில் தேடினால் கிடைக்காதல்லவா? இதை மக்களுக்கு புரியவைத்து ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்குவதே எனது நோக்கம்.  நம் உடலானது நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் போன்ற பஞ்ச பூதங்களால் தான் இயங்குகின்றது. அவற்றிலுள்ள பிரச்சினைகளை களைந்தாலே நாம் வாழ்நாள் முழுவதும் நோயின்றி ஆரோக்யமாக வாழலாம். உணவு நிலம்  இரைப்பை, மண்ணீரல், கணையம் ஆகிய உறுப்புக்கள் ஒழுங்காக இயங்க கீழே கொடுக்கபட்டுள்ளவற்றை பின்பற்றவும் 1. பசி: பசிக்கும்போது நமக்கு பிடித்த உணவை நிதானமாக உண்ணும்போது நம் உடல் அவற்றை சத்துக்களாக மாற்றிவிடும். உதட்டை பிரிக்காமல் உணவை நன்கு மென்று கூழ் போல் அரைத்துப் பின் விழுங்க வேண்டும். ஏனென்றால் காற்றும் நம் ஜீரணத்திற்கு எதிரி. அப்படி உண்டால் நம் உடலின் அனைத்து உறுப்புக்களும் நன்றாக இயங்கும் அதனால் ஆரோக்கியம் பேணப்படும். பசி இல்லாதபோதோ நமக்கு பிடிக்காத உணவை உண்ணும்போதோ மற்றும் உணவு உண்டவுடன் அதிக நீரை குடிக்கும்போதோ அவை கழிவுகளாக மாறி நமக்கு தொப்பை, வாயு தொந்தரவு, அல்சர், அ...

கற்களின் தரம் அறிவது எப்படி

கற்களின் தரம் அறிவது எப்படி?? முத்து :- நுரையற்ற பாலில் போட்டால் மிதக்கும். மரகதம் :- கையில் வைத்துக்கொண்டு குதிரை அருகே சென்றால் குதிரை தும்மும். பச்சைக்கல் :- குத்து விளக்கு ஒளியின் முன்பு சிவப்பு நிறமாக தோன்றும். வைரம் :- சுத்தமான வைரத்தை ஊசியால் குத்தினால் உடையாது. பவளம் :- உண்மையான பவள மையத்தில் ஊசியால் குத்தினால் மட்டுமே இறங்கும். கோமேதகம் :- பசுவின் நெய்யில் போட்டால் குங்குமப்பூ வாசனை வரும். புஷ்ப ராகம் _ சந்தனம் அரைக்கும் கல்லில் வைத்தால் தாமரை பூ வாசனை வரும். வைடூரியம் :- பச்சிலை சாற்றில் போட்டால் வெள்ளை நிறமாக மாறும். நீலக்கல் :- பச்சிலை சாற்றில் போட்டால் ஒருவித ஒலி வரும். அகத்தியரின் பாடல்களில் இருந்து தொகுக்கப் பட்டுள்ள இந்த விவரங்கள் மிக அரிதானவை, இனி வரும் நாட்களில் நீங்களும் இதை பயன்படுத்தி கற்களின் தரம் அறியலாம்.

பஞ்சாட்சரம் - நமசிவாய !!!

பஞ்சாட்சரம் இருவகைப்படும். அவை தூல பஞ்சாட்சரம், சூட்சும பஞ்சாட்சரம். ‘ந’ காரத்தை ஆரம்பமாகக் கொண்டு அமையும் ‘நம சிவாய’ என்பது ‘தூல பஞ்சாட்சரம்.’ அதைப் போன்று ‘சி’காரத்தை ஆரம்பமாகக் கொண்டு அமையும் ‘சிவாய நம’ என்பது ‘சூட்சும பஞ்சாட்சரம்’ எனப்படும். தூல பஞ்சாட்சரம்மான ‘நம சிவாய’ என்பது பொதுவாக இகபரஇன்பங்களை வேண்டி வழிபடுபவர்களுக்கு பொருத்தமானது. இது ‘சிவனுக்கு வணக்கம்’ எனப் பொருள்படும். சரியை நெறியில் நிற்போர் தூல பஞ்சாட்சரத்தையும், கிரியை யோக நெறியில் நிற்போர் சூட்சும பஞ்சாட்சரமான ‘சிவாய நம’ என்பதையும், ஞானநிலையில் நிற்போர் முத்தி பஞ்சாட்சரமான ‘ம’காரம் ‘ந’காரம் ஆகிய இரண்டும் நீக்கிய ‘சிவாய’ என்ற மூன்று அட்சரங்களைக் கொண்ட ‘முத்தி பஞ்சாட்சரம்’; உட்சரிப்பதற்கு உகந்தது. அதாவது நிருவான திக்கை பெற்றவர்கள், பஞ்சாட்சரத்தை உச்சாடணம் செய்யும் போது மூன்று முறையாக பின்பற்றுவர் அவை மானதம், மந்தம், உரை என்பனவாகும். இதில் வெளியில் ஒலி எழுப்பாது மனத்தினுள் தியானித்தலைக் குறிக்கும் இது உத்தம மாகும் இதனை ‘மானதம்’ என்பர். தானது காதுகளுக்கு மட்டும் கேட்கக் கூடியதாக உச்சரித்தல் ‘மந்தம்’ எனப்படும். பிறர் கேட்க...