Skip to main content

பஞ்சாட்சரம் - நமசிவாய !!!

பஞ்சாட்சரம் இருவகைப்படும். அவை தூல பஞ்சாட்சரம், சூட்சும பஞ்சாட்சரம்.


‘ந’ காரத்தை ஆரம்பமாகக் கொண்டு அமையும் ‘நம சிவாய’ என்பது ‘தூல பஞ்சாட்சரம்.’

அதைப் போன்று ‘சி’காரத்தை ஆரம்பமாகக் கொண்டு அமையும் ‘சிவாய நம’ என்பது ‘சூட்சும பஞ்சாட்சரம்’ எனப்படும்.


தூல பஞ்சாட்சரம்மான ‘நம சிவாய’ என்பது பொதுவாக இகபரஇன்பங்களை வேண்டி வழிபடுபவர்களுக்கு பொருத்தமானது. இது ‘சிவனுக்கு வணக்கம்’ எனப் பொருள்படும்.


சரியை நெறியில் நிற்போர் தூல பஞ்சாட்சரத்தையும்,

கிரியை யோக நெறியில் நிற்போர் சூட்சும பஞ்சாட்சரமான ‘சிவாய நம’ என்பதையும்,

ஞானநிலையில் நிற்போர் முத்தி பஞ்சாட்சரமான ‘ம’காரம் ‘ந’காரம் ஆகிய இரண்டும் நீக்கிய ‘சிவாய’ என்ற மூன்று அட்சரங்களைக் கொண்ட ‘முத்தி பஞ்சாட்சரம்’; உட்சரிப்பதற்கு உகந்தது.


அதாவது நிருவான திக்கை பெற்றவர்கள், பஞ்சாட்சரத்தை உச்சாடணம் செய்யும் போது மூன்று முறையாக பின்பற்றுவர் அவை மானதம், மந்தம், உரை என்பனவாகும்.

இதில் வெளியில் ஒலி எழுப்பாது மனத்தினுள் தியானித்தலைக் குறிக்கும் இது உத்தம மாகும் இதனை ‘மானதம்’ என்பர்.

தானது காதுகளுக்கு மட்டும் கேட்கக் கூடியதாக உச்சரித்தல் ‘மந்தம்’ எனப்படும்.

பிறர் கேட்க்கக் கூடியதாக சத்தமாக உச்சரித்தல் ‘உரை’ எனப்படும்.

‘மானதம’ கோடி மடங்கு பலனும், ‘மந்தம்’ பத்தாயிரம் மடங்கு பலனும். ‘உரை’ யில் நூறு மடங்கு பலனும் கிடைக்கும் என ஸ்மிருதிகள் கூறுகின்றன்.


திருவைந்தெழுத்தின் பொருமையை திருமந்திரம் குறிக்கையில்

‘அஞ்ந்தெழத் தாலைந்து பூதம் படைத்தனன்

அஞ்ந்தெழத் தாற்பல யோனி படைத்தனன்

அஞ்ந்தெழத் தாலிவ் வகலிடந் தாங்கினன்

அஞ்ந்தெழத் தாலே மெர்ந்துநின் றானே’

குறிப்பிடுகின்றார்.


திருவைந்தெழுத்தின் ‘ம’காரத்தினால் உலக படைக்கப்பட்டது. ‘ய’காரத்தால் உடலும் உயிரும் இணைந்து விளங்குகின்றது. யோனியான உயிர் நகர அடையாளத்தால் விரிந்த உலகத்தை இயைந்து யாக்கிக் காக்கும் நடுநிலைமை விளங்கும் ‘சி’காரம் ‘வ’கார அடையாளங்களால் எல்லாமாய் அமர்ந்தமை விளங்கும் என குறிப்பிட்டுள்ளார்.

அஞ்தெழுத்து உலகத்தை ஆக்க வல்லது என்பது புலணாகும்.


அஞ்செழுத்து பந்தத்திலிருந்து விடுலையளிக்கும் என்பதை

‘வீழ்ந்தெழ லாம்விகிர் தன்திரு நாமத்தைச்

சோர்ந்தொழி யாமல் தொடங்கும் ஒருவர்ற்குச்

சார்ந்த வினைத்துயார் போகத் தலைவனும்’

போந்திடும் என்னும் புரிசடை யோனே‘


திருவருட் துணையால் திருவைந்தெழுத்தை முறையாக ஒதுவதனால் உலகியல் நுகர்வுடன் அதன் கண் தொடக்கின்றி வாழ்தலுமாகும். புறவிப் பெருந்துயர் நீங்கத் தம் முதல் முருவுமாய் வந்தருலுவான். புரிகடையோன் என்னும் போது புரி சடையோன் என்பது திருவாதிரை நாளை விரும்புபவன் என்றும் ஒன்றாய் வேறாய் உடனாய் விரும்பி உறையும் பண்பினேன். என்பது பொருள்.


திருவைந்தெழுத்தால் எல்லாவுலகமும் ஒழுங்காக நடைபெறுகின்றது. என்பதை

‘ஐந்தின் பெருமையே அகலிட மாவது

ஐந்தின் பெருமையே ஆலய மாவது

ஐந்தின் பெருமையே யறவோன் வழக்கமும்

ஐந்தின் வகைசெயப் பாலனு மாமே’


திருவைந் தெழுத்தின் சிறந்த திருக்குறிப்பே திருக்கோயிலாகும். அதில் ‘சி’காரம்; சிவலிங்கமாகும். ‘வ’காரம் அடுத்த மண்டபமாகிய மனோன்மணி நிலை. ஆனேற்று நிலை ‘ய’காரம். அம்பலவாணர் நிலை ‘ந’காரம். பலிபீடம் ‘ம’காரம் அவ்வாறு பெருமை பெற்றது திருவைந் தெழுத்து.


ஓர்எழுத்தான ஓமிலிருந்து பஞ்சபூதங்களானான் ஐந்தெழுத்தில் என்பதை திருமந்திரம்

‘வேரெழுத் தாய்விண்ணாய் அப்புற மாய்நிற்கும்

நீரேழுத் தாயநில ந்தங்கியும் அங்குளன்

சீரெழுத் தாய்அங்கி யாயுயி ராமெழுத்து

ஓரெழுத் தீசனும் ஒண்சுட ராமே’

விண் ‘வ’காரமாயும்

நீர் ‘ம’ காரமாயும்

நிலம் ‘ந’ காரமாயும்

தீ ‘சி’ காரமாயும்

காற்றாகி உயிரெழுந்து ‘ய’ காரமாயும் உள்ளவன் சிவன் ‘வமநசிய’ என்பதில் அடங்கும்.


திருவைந்தெழுத்தல் ‘ந’காரமே உலகை உருவாக்கும் என்கின்றது திருமந்திரம்

‘நாலாம் எழுத்தோசை ஞாலம் உருவது

நாலாம் எழுத்தினுள் ஞாலம் அடங்கிற்று

நாலாம் எழுத்தே நவிலவல் லார்கட்கு

நாலாம் எழுத்தது நன்னெறி தானே’


உலகம் அடங்கி அதன் ஆணைப்படி நடக்கும் ‘நமசிவாய’ என ஓதுவார்க்கு நன்நெறி செல்லும் வெல்வர்களாவர்.

‘அகாரம் உயிரே உகாரம் பரமெ

முகாரம் மலமாய் வருமுப் பதத்திற்

சிகாரம் சிவமாய் வகாரம் வடிவமாய்

யகாரம் உயிரென் றறையலு மாமே’

உயிரெனக் குறிக்கும் உடல் மெய் இருபத்திநான்கும் அகாரமாகும்.

புரமென குறித்து உணர்ந்து மெய் ஐந்தும் உகாரம் மாகும்.

முலமெனக் கூறிய உணர்வு மெய் ஏழும் மகாரமாகும்.

இம் முப்பத்தாறும் மெய்களுள் சிகாரம் கிவமாய் உயிருக்குயிராய் வகாரம் சிவனின் திருமேனியாய் யகாரம் திருவருளாகும். ஏனக் குறிப்பிட்டுள்ளார்.


‘நகார மகார சிகார நடுவாய்

வகாரம இரண்டும் வளியுடன் கூடி

ஒகார முதற்கொண்டு டொருகால் உரைக்க

மகார முதல்வன் மனத்கத் தானே’

நமசிவாய என்பதில் சிகாரம் நடு இரண்டு வளி என்பது இடபால் வலபால் மூச்சு என உயிர் அடையாளமான யகாரத்தைக் குறிக்கின்றது.

ஓம் எனும் மந்திரத்துடன் சேர்த்து நமசிவாய மந்திரத்தை ஓம் நமசிவாய என ஓத சிவப்பரம் பொருள் நெஞ்சகத்தே கோயில் கொள்வான் என்கின்றது திருமந்திரம்.


சிவபெருமானின் மந்திரவுருவை கூறுகையில்

‘சிவாயவொ டவ்வே தெளிந்துளத் தோதச்

சிவாயவொ டவ்வே சிவனுரு வாகுமஞ்

சிவாயவொ டவ்வுந் தெளியவல் லார்கள்

சிவாயவொ டவ்வே தெளிந்திருந் தாரே’

‘சிவய’ என்பதுடன் முதலாக ‘சிவ’ என்பதைச் சேர்த்து ‘சிவயசிவ’ என்பதே சிவபெருமானின் மந்திரவுருவாகும்.


சிவ மந்திரமும்-பலன்களும்


நங்சிவயநம என்று உச்சரிக்க - திருமணம் நிறைவேறும்

அங்சிவயநம என்று உச்சரிக்க - தேகநோய் நீங்கும்

வங்சிவயநம என்று உச்சரிக்க - யோகசித்திகள் பெறலாம்.

அங்சிவயநம என்று உச்சரிக்க - ஆயுள் வளரும், விருத்தியாகம்.

ஓம் அங்சிவாய என்று உச்சரிக்க - எதற்கும் நிவாரணம் கிட்டும்.

கிலி நமசிவய என்று உச்சரிக்க - வசிய சக்தி வந்தடையும்

ஹிரீநமசிவய என்று உச்சரிக்க - விரும்பியது நிறைவேறும்

ஐயும் நமசிவய என்று உச்சரிக்க - புத்தி வித்தை மேம்படும்.

நம சிவய என்று உச்சரிக்க - பேரருள், அமுதம் கிட்டும்.

உங்யுநமசிவய என்று உச்சரிக்க - வியாதிகள் விலகும்.

கிலியுநமசிவய என்று உச்சரிக்க - நாடியது சித்திக்கும்

சிங்வங்நமசிவய என்று உச்சரிக்க - கடன்கள் தீரும்.

நமசிவயவங் என்று உச்சரிக்க - பூமி கிடைக்கும்.

சவ்வுஞ் சிவாய என்று உச்சரிக்க -சந்தான பாக்யம் ஏற்படும்.

சிங்றீங் என்று உச்சரிக்க - வேதானந்த ஞானியாவார் உங்றீம்

சிவயநம என்று உச்சரிக்க - மோட்சத்திற்கு வழி வகுக்கும்.

அங்நங் சிவாய என்று உச்சரிக்க - தேக வளம் ஏற்படும்.

அவ்வுஞ் சிவயநம என்று உச்சரிக்க - சிவன் தரிசனம் காணலாம்.

ஓம் நமசிவாய என்று உச்சரிக்க - காலனை வெல்லலாம்.

லங் ஸ்ரீறியுங் நமசிவாய என்று உச்சரிக்க - தானிய விளைச்சல் மேம்படும்.

ஓம் நமசிவய என்று உச்சரிக்க - வாணிபங்கள் மேன்மையுறும்

ஓம் அங்உங்சிவயநம என்று உச்சரிக்க - வாழ்வு உயரும், வளம் பெருகும்.

ஓம் ஸ்ரீறியும் சிவயநம என்று உச்சரிக்க - அரச போகம் பெறலாம்.

ஓம் நமசிவய என்று உச்சரிக்க - சிரரோகம் நீங்கும்.

ஓங் அங்சிவாய நம என்று உச்சரிக்க - அக்னி குளிர்ச்சியைத் தரும்.


சிவ தீட்சை


அகத்தியர் அருளிய முப்பத்தி இரண்டு சிவ தீட்சைகளில் முதல் எட்டு தீட்சைகளைப் பற்றி காண்போம்.


தீட்சைகளில் முதன்மையானது இந்த சிவ தீட்சைகள்தான். இந்த தீட்சைகளை முறையாக குருவின் மூலமாய் பெற்று செபிக்க தீட்சைகள் சித்திக்கும் என்கிறார் அகத்தியர்.


"தீட்சையிலே முதற்தீட்சை சிவதீட்சைதான்

ஸ்ரீம் அம் ஓம் யென் றுலட்சம் ஜெபித்துவோதக்

காட்சிபெறத் தேகமெல்லாம் வியர்வை காணும்

கண்மாய்கை இல்லையடா கண்டுதேறு

ஆச்சுதடா சிவதீட்சை ரெண்டுங்கேளு

ஆம் ஓம் ஹரீம் ரீம் யென்று நீயும்

மூச்சடா உள்ளடங்கும் லட்சமோத

முத்தியுண்டாஞ் சத்தியுண்டாஞ் சித்தியாமே."


"ஸ்ரீம் அம் ஓம்" என்று லட்சம் முறை செபிக்க முதல் தீட்சை சித்தியாகும். அப்போது இறைவனின் திருக்காட்சியைக் காணலாம் என்கிறார். காட்சியைக் காணும் போது தேகமெல்லாம் வேர்த்துப் போகும். ஆனால் இந்தக் காட்சி கண் மாயை அல்ல, இதைக் கண்டு தேறுவதே முதல் தீட்சையாகும் என்கிறார் அகத்தியர்.


"ஆம் ஓம் ஹரீம் ரீம்" என்ற மந்திரத்தினை லட்சம் முறை செபிக்க இரண்டாவது தீட்சை சித்தியாகும். அப்போது மூச்சு உள்ளடங்குவதுடன் , முக்தியும், சக்தியும் சித்தியாகும் என்கிறார் அகத்தியர்.


"சித்தியாஞ் சிவதீட்சை மூன்றுகேளு

செப்புவேன் குறோம் ஸ்ரீம் றீம் றீம் நம் யென்று லட்சம்

பத்தியாய்ச் செய்துவர மோட்சமாகும்

பாணுவைப்போற் தேகமெல்லாம் ஒளியுமாகும்

துத்தியஞ்செய் சிவதீட்சை நாலுகேளு

துடியுடனே ஸ்ரீங் அங் உங் கென்று

முத்திபெற லட்சமுருச் செபித்தாற்சித்தி

மோட்சமய்யா தேவதைகள் பணியுந்தானே."


"குறோம் ஸ்ரீம் றீம் றீம் நம்" என்ற மந்திரத்தினை லட்சம் முறை செபிக்க மூன்றாவது தீட்சை சித்தியாகும். அப்போது சந்திரனை போல தேகம் ஒளிவீசும் என்கிறார்.


"ஸ்ரீங் அங் உங்" என்று லட்சம் முறை செபிக்க நான்காவது தீட்சை சித்தியாகும். அப்போது மோட்சமும், தேவதைகள் உனக்கு பணியும் தன்மையும் ஏற்படும் என்கிறார் அகத்தியர்.


"பணிந்துதான் சிவதீட்சை அஞ்சுங்கேளு

பண்பாக யங் வங் றீங் றுந்தான்

துணிந்தோது லட்சமுருச் செபித்தாற்சித்தி

தொண்டுசெய்வார் தேவதைகள் சட்டைக்கும்

அணிந்துகொள்வாய் சிவதீட்சை ஆறுங்கேளு

அன்புடனே சங் ரங் உம் ஆம் என்றுலட்சம்

குனிந்துநிமிர் தேகமதில் வாசம் வீசும்

குணமாகுந் தெகசித்தி சுருக்குத்தானே."


"யங் வங் றீங்" என்று லட்சம் முறைசெபிக்க ஐந்தாவது தீட்சை சித்தியாகும். அப்போது தேவதைகள் ஒரு சட்டையைத் தரும். அதை அணிந்துகொள் என்கிறார்.


"சங் ரங் உம் ஆம்" என்று லட்சம் முறை செபிக்க ஆறாவது தீட்சை சித்தியாகும். அப்போது தேகத்தில் வாசம் வீசும். அத்துடன் தேகசுத்தியும் சித்திக்கும் என்கிறார் அகத்தியர்.


"தானேசெய் சிவதழுட்சை ஏழுநீயும்

சந்தோஸ மாய்ஓது இங் ரங் அவ்வு மென்றுலட்சம்

மானேந்தும் ஈசுவரனும் அருகில் நிற்பார்

வானவர்கள் மகிழ்வாக வாவென்பார்கள்

நானென்ற தீட்சையெட்டும் உற்றுக்கேளு

நன்றாக மங் றீங் ரா ரா வென் றுலட்சம்

ஆனந்த முண்டாகுந் தேவர்வந்து

அன்பாக உனைச்சேர்ந்து அணைவார்பாரே."


"இங் ரங் அவ்வு" லட்சம் முறை செபிக்க, மானை கையில் ஏந்தி இருக்கும் சிவன் அருகில் இருப்பார். வானவர்கள் மகிழ்ச்சியுடன் வா வா என்று அழைப்பார்கள் என்கிறார் அகத்தியர்.


"மங் றீங் ரா ரா" என்று லட்சம் முறை செபிக்க ஆனந்தம் உண்டாகும்.அத்துடன் தேவர்கள் வந்து உன்னுடன் இணைவார்கள் என்கிறார் அகத்தியர்.


சிவ மந்திரங்கள்


ஓம் ஜகங் என தினமும் 108 முறை ஜபித்தால் கணபதியின் அருள் கிட்டும்.

ஓம் நமசிவாய என்று ஜெபித்தால் காலனை வெல்லலாம்.

ஓம் நமசிவாய நமா என ஜெபித்தால் பூதக்கூட்டங்கள் வசமாகும். துஷ்ட தேவதைகள் அழியும். மன்னர்கள் அருள் கிடைக்கும்.

ஓம் நூம் பயப்யுஞ் சிவாய நமா என்ற மந்திரத்தை ஜபித்தால் துன்பங்கள் விலகும். ஆறு சாஸ்திரங்களையும், நான்கு வேதங்களையும் அறிய உதவும்.

சிவாய ஓம் என்று சொன்னால் திருமாலின் ஆற்றல் கிட்டும். மய நசிவ சுவாகா என ஓதினால் ஆகாயத்தில் பறந்து செல்லும் சித்தர்கள் கீழிறங்கிவந்து சுமனக்குளிகை தருவார்கள்.

இங் சிங் ச்ங் ஓம் என்ற ஈசான மந்திரத்தை தனக்கு ஆபத்தான வேளைகளில் சூரியனுக்கு எதிராக நின்று கைகளை மேலே உயர்த்தி ஜபிப்பவன் எல்லா பாவங்களிலிருந்து முழுமையாக நீங்குவான்.

சிங் சிங் சிவாய ஓம் எனஜபித்துவந்தால் முக்காலமும் அறியும் ஆற்றல் உண்டாகும்.

ஓங்கிறியும் ஓம் நமச்சிவாய என சொன்னால் வியாபாரம் நன்றாக நடக்கும்.

லீங்க்ஷும் சிவாய நம என ஜபித்தால் பெண்கள் வசியம் உண்டாகும்.

சவ்வும் நமசிவாயநமா என ஜபித்தால் அரச போகம் கிட்டும்.மந்திர ஜபம் பற்றி சித்தர்கள் கூறியிருப்பது:

மசிவயந ஜபித்தாலும்,நயவசிம ஜபித்தாலும் மோகனம் உண்டாகும்-

அகத்திய மகரிஷி சிவாயநம ஜபித்தால் மோகனம் உண்டாகும்-


நந்தீசர் மகரிஷி ோதிடம்


சிங் நமசிவய என்று உச்சரிக்க - பயிர்களால் நன்மை.

துங் நமசிவாய என்று உச்சரிக்க - வித்துவான் ஆகலாம்.

ஓங் கங்சிவய என்று உச்சரிக்க - சக்தி அருள் உண்டாம்.

ஓம் சிங்சிவாய  நம என்று உச்சரிக்க - நினைப்பது நடக்கும்.

ஓம் பங்சிவாய நம என்று உச்சரிக்க - தடைகள் நீக்கும்.

ஓம் யங்சிவாய நம என்று உச்சரிக்க - துன்பங்கள் விலகும். ஓம் மாங்நமசிவாய என்று உச்சரிக்க - செல்வம் செழித்தோங்கும்.

ஓம் மங்சிவாயநம என்று உச்சரிக்க- கவலைகள் வற்றும் கெங்ஓம் நமசிவாய என்று உச்சரிக்க - வசிய சக்தி மிகும்

ஓம் மங்யங் சிவாய என்று உச்சரிக்க - விஷங்கள் இறங்கும். அங் ரங்ஓம்சிவாய என்று உச்சரிக்க - சாதனை படைக்கலாம். ஓங் அங் சிங் சிவாயநம என்று உச்சரிக்க - சப்த கன்னியர் தரிசனம்.

ஓங் வங்சிங் சிவாயநம என்று உச்சரிக்க - முக்குணத்தையும் வெல்லலாம்.

ஹிரீம் நமசிவாய என்று உச்சரிக்க- அரிய பேறுகள் கிடைக்கும்.

ஐயுஞ் சிவாயநம என்று உச்சரிக்க - ஆறு சாஸ்திரம் அறியலாம்.

வங்சிங் ஓம்சிவாயா என்று உச்சரிக்க - தேவர்கள் தரிசனம் காணலாம்.

சங் சிவய நம என்று உச்சரிக்க - விஷ பாதிப்பு நீக்கும்.

ஓம் துங்சிவாய நம என்று உச்சரிக்க - முத்தொழிலும் சிறக்கும்.

ஸ்ரீலம்ஹரீம் ஓம் நமசிவாய என்று உச்சரிக்க- பெரியபூமிகள் கொடுக்கும்.

சிங் நமசிவய என்று உச்சரிக்க - பயிர்களால் நன்மை.

வங் சிவய நம என்று உச்சரிக்க - மழை நனைக்காது.

சிவாய ஓம்ஸ்ரீ என்று உச்சரிக்க - மழை நிற்கும்.

கலியுங் சிவாய என்று உச்சரிக்க - வெள்ளம் பெருக்கெடுக்கும்.

ஓம் கங்சிவ்வுங்சிவய என்று உச்சரிக்க - பெரியகாரியங்களில் வெற்றி.

சங்யவ் சி மந என்று உச்சரிக்க - தண்ணீரில் நடக்கலாம்.

மங் நங் சிங் சிவய என்று உச்சரிக்க - பிசாசு, பேய் சரணம் செய்யும்.


சிவன்மந்திர உச்சாடணங்கள்


மந்திரங்களை கைளாளும் முறையாவது, அமைதியான காற்றோட்டமுள்ள இடம் அல்லது கோவில் போன்ற இடங்களில் அமர்ந்து மனதை வெறுமையாக்கி, முதலில் தங்கள் குலதெய்வத்தினை வணங்கி, பின் பெற்றோரையும், குருவினையும் மனதால் துதித்து மூலமந்திரத்தை மனதில் உச்சரிக்க வேண்டும்.முதலில் குறைந்தது 108 அல்லது 1008 முறை விடாது உச்சரித்தல் அவசியம்.

அதன் பின் நேரம் கிடைக்கும் போதெல்லாம் மனதினை ஒரு நிலைப்படுத்தி மந்திரங்களை உச்சரிக்கலாமென்கிறார்கள்.

எண்ணிக்கை கணக்கிற்காக ஜெப மாலைகளை உயயோகிக்கலாம்.

இவ்வாறு தொடர்து உச்சரிக்கும் போது அந்தமந்திரங்கள் நமக்கு சித்திக்கின்றன என்கிறார்கள்.


பின் எப்போது தேவையேற்படுகிறதோ அச்சமயத்தில் தேவையான மந்திரங்களை 9 அல்லது 21 தடவை உச்சரிக்க மந்திரம் பலிக்குமாம்.


இனி மந்திரங்கள்....


தத்புருஷ மந்திரம் ... கருவூரார்


இதன் மூல மந்திரம் 'நமசிவாய'.

இதை விடாது உச்சரிக்க உச்சாடணம் ஏற்படும்.


"நமசிவாயம் லங்க நமசிவாய" என உச்சரிக்க மழை பெய்யுமென்கிறார்.

"அலங்கே நமசிவாய நமோ" என உச்சரிக்க புகழ் உண்டாகுமாம்.

"அங் சிவாய நம" என உச்சரிக்க குழந்தைப் பேறு உண்டாகுமாம்.

"ஊங்கிறியும் நமசிவாய நமா" என உச்சரிக்க மோட்சம் கிட்டுமாம்.

"ஓம் நமசிவாய" என உச்சரித்தால் காலனை வெல்லலாம்.


அகோர மந்திரம்


இதன் மூல மந்திரம் "நமசிவ",


"சங் கங் சிவாயநமா" என உச்சரிக்கஜீவனில் சிவத்தைக் காணலாம்.

"மங் மங் மங்" என உச்சரித்தால் உணவை வெறுத்து பசியை துறக்கலாம்.

"வசாலல சால்ல சிவாய நமா" என உச்சரித்தால் மழையில் நனையாமல் செல்லலாம்.

"சரனையச் சிவாய நம" என உச்சரிக்கவானில் பறக்கலாமாம்.

"கேங் கேங் ஓம் நமசிவாயம்" என உச்சரிக்க எல்லோரும் வசியமாவர்.

"ஓங் சருவ நம சிவாய" என உச்சரிக்க மழை உண்டாகும்


வாமதேவ மந்திரம்


"கங்கங்ணங் நிஷர் சிவிங்கம்" என உச்சரித்தால் காமதேவன் அருள் கிட்டுமாம்.

"வங் வங் சிங் சிவாய நம"என உச்சரிக்க உலகின் எப்பாகத்திற்கும் வழி தெரியுமாம்.

"சதா சிவாய நம" என உச்சரிக்க நான்கு வேதத்தின் பொருள் அறியலாம்.

"ஓம் அங்கிஷ ஊங் சிவாயநம" என உச்சரிக்க நினைத்த இடத்தில் மனதினை விரைவாக செய்யலாம்.


சத்யோசாத மந்திரங்கள்


"சிவாய ஓம்" என உச்சரிக்க திருமாலில் ஆற்றல் கிட்டும்.

"ஓங் உங் சிவாய ஓம்" என உச்சரிக்க குண்டலினியின் சக்தியை காணலாம்.

"கிருட்டிணன் ஓம் சிவாய நம" என உச்சரிக்க இராவணன் மலையைப் பெயர்த்த பலம் கிட்டும்


ஈசான மந்திரங்கள்


"சிமிறியும் ஊங்சிவாய ஊங் அங் நம ஓ" என உச்சரிக்க சிவதத்துவத்தை காணலாம்.

"மங் நங் சிவ சிவாய ஓம்" என உச்சரிக்க நந்தியின் தத்துவத்தை உணரலாம்.

"வங் யங் சிங் ஓம் சிவாய" என உச்சரிக்க எதிரியின் உடல் தனலாகும்.

"சிங் சிங் சிவாய ஓ" என உச்சரிக்க முக்காலத்தையும் உணரலாம்.

"மய நசிவ சுவாக" உச்சரிக்க ஆகாயத்தில் பறந்து செல்லும் சித்தர்களின் ஆசி கிட்டும்.


பஞ்சாட்சரம் என்பது ஐந்து எழுத்துக்களால் ஆனது என்று பொருள். இவை "நமசிவய" என்பதாகும்.


இந்த எழுத்துக்களில், ந - பிருதிவியையும், ம - அப்புவையும், சி -தேயுவையும், வ- வாயுவையும், ய - ஆகாயத்தையும் குறிக்கும்.


மனித உடம்பில் சுவாதிஷ்டானம், மணிபூரகம், அனாகதம், விசுத்தி, ஆக்ஞை என்கின்ற ஆதாரங்கள் இந்த பஞ்சபூதங்களுக்கு உரிய இடமாகும் என்கிறார் திருமூலர்.


மேலும், மனித உடம்பில் நமசிவாய என்பது, ந - சுவாதிஷ்டானதில், ம - மணிபூரகத்தில், சி - அனாகதத்தில், வ - விசுத்தியில், ய - ஆக்ஞையில் இருப்பதாக சொல்கிறார்.


திருஞான சம்பந்தர் நான்கு வேதங்களுக்கும் மெய்பொருளாக விளங்குவது ”நமசிவய” என்றும் இது எல்லாவற்றிற்குமான நாதன் நாமம் என்றும் சொல்கிறார் .


"காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி

ஓதுவார்தமை நன்னெறிக்கு உய்ப்பது வேதம் நான்கினும் மெய்ப்பொருளாவது

நாதன் நாமம் நமசிவயவே "


- திருஞான சம்பந்தர் -


"நானேயோ தவம் செய்தேன் சிவயநம எனப் பெற்றேன் " என்று பஞ்சாட்சர மகிமையை மாணிக்க வாசகரும் கூறுகிறார்.


"அஞ்சுக அஞ்செழுத்து உண்மை அறிந்தபின்

நெஞ்சுகத்து உள்ளே நிலையும் பராபரம்

வஞ்சகம் இல்லை மனைக்கும் அழிவில்லை

தஞ்சம் இதுவென்று சாற்றுகின் றேனே"


- திருமூலர் -


"சிவாயவொடு அவ்வே தெளிந்துஉளத்து ஓதச்

சிவாயவொடு அவ்வே சிவனுரு வாகும்

சிவாயவொடு அவ்வும் தெளியவல் லார்கள்

சிவாயவொடு அவ்வே தெளிந்திருந் தாரே"


- திருமூலர் -


என்று திருமூலர் பஞ்சாட்சர மகிமையை விளக்குகிறார்.


"சிவாய மென்ற அக்கரம் சிவனிருக்கும் அக்கரம்

உபாயம் என்று நம்புதற் குண்மை யான அக்கரம்

கபாடம் அற்ற வாசலைக் கடந்து போன வாயுவை

உபாயம் இல்ல ழைக்கும் சிவய அஞ்செ ழுத்துமே"


- சிவவாக்கியார் -


என்று பஞ்சாட்சர மகிமையை உரைக்கிறார் சிவவாக்கியார்.

Comments

Popular Posts

அருள்வெளி சித்தர் 108 போற்றி

பரம்பொருள் அருட்பெரும் ஜோதி ஓம் ஸ்ரீ அருள்வெளி சித்தர் பரம்பொருள் அருட்பெரும் ஜோதி ஓம் ஸ்ரீ அருள்வெளி சித்தர் ஓம் ஸ்ரீ அருள்வெளி சித்தர் 108 போற்றி 1. அன்பே உருவான அருள்வேளிக் சித்தனே போற்றி ! 2. அகர முதலாய் அமர்ந்தாய் போற்றி ! 3. அறிவிற் கறிவான ஆதுவிதனே போற்றி ! 4. அறத்தின் வடிவே ஐயனே போற்றி ! 5. அடிமை எமைக் காக்கும் அத்தா போற்றி ! 6. அனாதிப் பரம்பொருள் ஆயினே போற்றி ! 7. அமரர் வணங்கும் அரியே போற்றி ! 8. அண்டினோர்க் காதரவு அளிப்பாய் போற்றி ! 9. அன்பே சிவமேன் றறிந்தாய் போற்றி ! 10. அன்பே சிவமாய் அமர்ந்தாய் போற்றி ! 11. அடக்கம் ஆன  சிவமே போற்றி ! 12. ஆனந்த வடிவச் சித்தனே போற்றி ! 13. ஆகாயம் எல்லாம் அளந்தாய் போற்றி ! 14. ஆதியே போற்றி சோதியே போற்றி ! 15. ஆலத்தை அமுதாய் ஆக்குவை போற்றி ! 16. ஆருரிச் சிவமே அழகா போற்றி ! 17. ஆசை வித்த அரனே போற்றி ! 18. ஆணவ மாயை அழித்தாய் போற்றி ! 19. ஆவியில் உறையும் ஐயா போற்றி ! 20. ஆத்தும தத்துவம் அறிவிப்பாய் போற்றி ! 21. ஆலமர் செல்வ அரசே போற்றி ! 22. இகர மாகி எழுந்தாய் போற்றி ! 23. இறைவி இறைவன் வடிவே போற்றி ! 24. இகபர சுகங்கள் தருவாய் ...

வர்மம் varmam

வர்மங்களின் வகைகள்..! வர்மக் கலையை அகத்தியர் நான்கு பெரும் பிரிவுகளாய் பிரித்திருக்கிறார். உடலில் உள்ள வர்ம புள்ளிகள் மற்றும், அவற்றை கையாளும் விதத்தினால் இவற்றை வேறு படுத்துகிறார். இவை “படு வர்மம்”, ”தொடு வர்மம்”, ”தட்டு வர்மம்”, ”நோக்கு வர்மம்” படுவர்மம் நான்கு வகை வர்மங்களில் மிகவும் ஆபாயகரமான பிரிவு இதுவேயாகும். உடலிலுள்ள வர்மப் பகுதிகளில் அடியோ அல்லது தாக்குதலோ ஏற்படுமானால் அப்போது ஏற்படும் வர்மமே "படுவர்மம்" என்கிறார். இந்த படுவர்ம தாக்குதலுக்கு உள்ளாகும் நபர்கள் உயிரிழக்கும் வாய்ப்புக்கள் அதிகம் உள்ளதால் இவை மிகவும் ஆபத்தானவை என்று அகத்தியர் குறிப்பிடுகிறார். ஒரு மனிதன் படுவர்மப் புள்ளிகளில் அடிபட்டால் உடனடியாக மயங்கி விழுவான் என்றும், அவன் வாய் பிளந்து நாக்கு வெளியே தள்ளும், வாயில் நுரையும் வெளியேறும் அத்துடன் அந்த அடிபட்ட இடங்களில் கைவைத்து பார்த்தால் அந்த இடம் மிகவும் குளிர்ச்சியாகக் காணப்படும் என்றும் குறிப்பிடுகிறார். எல்லோராலும் இதை செய்திட முடியாது என்றும், மிகுந்த பயிற்சி உள்ள ஒருவரால் மட்டுமே இத்தகைய செயல்களை செய்திட முடியும் என்றும் கூறுகிறார். தொடு...

குண்டலினி ஆற்றல் 9 விசுத்தி

குண்டலினி - விசுத்தி. மூலாதாரத்திலிருந்து ஐந்தாவது சக்கரமான விசுத்தி பற்றி இன்று பார்ப்போம். இதைப் பற்றி அகத்தியர் பின் வருமாறு விளக்குகிறார். ஆச்சப்பா வனாகததி னொடுக்கஞ்சொன்னோம் அறையுகிறேன் விசுத்தியி னடவைக்கேளு மாச்சப்பா வதற்க்குமேல் பன்னிரெண்டங்குலம் பாச்சப்பா பதினாறு யிதழ்தா னாகும் பாலகனே அட்சரந்தான் வகாரமாகும் வதுநடுவில் சதாசிவனும் சாகினியுமாமே. - அகத்தியர். இந்த சக்தி ஆதார மையமானது நமது தொண்டையின் அடிப்பாகத்தில் சுழுமுனை நாடியில் அமைந்து இருப்பதாக குறிப்பிடுகின்றனர். நமது குரல்வளை, மூச்சுக் குழாய், தையராய்டு சுரப்பிகள், நுரையீரல், கைகள் போன்ற உறுப்புகளுடன் விசுத்தி சக்கரம் தொடர்புடையதாக குறிப்பிடப் படுகிறது. பஞ்சாட்சர எழுத்துக்களான "சிவயநம" என்னும் எழுத்துகளில் ஒன்றான "வ" என்னும் எழுத்தையும், அதன் தத்துவத்தையும் விசுத்தி சக்கரம் விளக்குவதாக அமைகின்றது. இச்சக்கரத்தின் அதிதேவன் சதாசிவன், அதி தேவதை சாகினி. பஞ்ச பூதங்களில் ஒன்றான ஆகாசம் இதன் மூலக்கூறு. இதன் மூல மந்திரம் “ஹம்” எனப்படுகிறது. இந்த சக்கரத்திலிருந்து தாமரை இதழ் போன்ற பதினாறு யோக நாடிகள் கிளம்புகின்றன....

அத்தி

1. மூலிகையின் பெயர் :- அத்தி. 2. வேறு பெயர் :- அதவம் மரம் 3. தாவரப்பெயர் :- FICUS GLOMERATA, FICUS AURICULATE. 4. தாவரக்குடும்பம் :- MORACEAE. 5. பயன்தரும் பாகங்கள் :- இலை, பிஞ்சு, காய், பழம், பால், பட்டை ஆகியன. 6. வளரியல்பு :- அத்தி களிமண் நிலம் மற்றும் ஆற்றுப்படுகைகளில் நன்கு வளரும். மாற்றடுக்கில் அமைந்த முழுமையான இலைகளை உடைய பெரு  (FICUS GLOMERATA , ROXB ; MORACEAE ) மர வகையைச் சேர்ந்தது.நாட்டு அத்தி (COUNTRY FIG), வெள்ளை அத்தி (GULAR FIG), நல்ல அத்தி (FICUS GLOMERATA CLUSTER FIG) என பல வகை அத்தி மரங்கள் உண்டு. அத்தி அளவான உயரமுடைய நடுத்தர மரமாகும். இம்மரம் சுமார் 10 மீட்டர் வரை உயரமாக வளர்கிறது. மரத்தின் பட்டை சாம்பல் மற்றும் சிவப்பு நிறத்தில் காணப்படுகிறது. அத்தி இலைகளில் மூன்று நரம்புகள் இருக்கும். காய்கள் சற்று நீளமான முட்டை வடிவில் தண்டிலும், கிளைகளிலும் அடிமரத்திலும் கொத்துக் கொத்தாகத் தோன்றும். பெரிய நெல்லிக்காய் அளவில் உருண்டையாக சிறிது பச்சை நிறத்துடன் இருக்கும். காய் பழுத்த பின்பு கொய்யாப்பழத்தைப் போல் வெளிறிய மஞ்சள் நிறமாக மாறிவிடும். பழங்கள் தானே கீழே உத...

குண்டலினி ஆற்றல் 3

குண்டலினியை எப்படி எல்லாம் எழுப்பலாம்! மூலாதாரத்தில் புதைந்திருக்கும் குண்டலினியை எழுப்பிட பல்வேறு உத்திகள் கூறப் பட்டிருக்கின்றன. பொதுவில் பிராணாயாமம் எனப்படும் மூச்சுப் பயிற்சி, ஆசனங்கள், முத்திரைகள் இவைகளால் குண்டலினியை எழுப்ப முடியுமாம். இராஜயோகிகள் சலனமற்ற தியானத்தினாலும், மனப் பயிற்சியினாலும் எழுப்புகின்றனர். சாமான்யர்கள் பக்தி அதாவது முழுமையான சரணாகதியின் மூலம் எழுப்புகின்றனர். ஞானிகளோ பிரித்து அறியும் மன உறுதியினால் எழுப்புகின்றனர். இதை விவேக வைராக்கியம் என்கின்றனர். தாந்திரிகர்கள் மந்திர சக்தியால் குண்டலினியை எழுப்புகின்றனர். இவற்றை எல்லாம் விட மிக எளிதான ஒரு முறையும் இருக்கிறது. அதாவது குருவினை பார்த்தல்(தரிசனம்),குருவினால் தொடப் படுதல், ஆசீர்வதித்தல் ஆகியவைகளால் சட்டென குண்டலினி எழும்பும். இத்தகைய தகுதி உடைய குருமார்கள் இப்போது மிகவும் குறைவு. மேலும் அத்தகையவர்கள் இதை எல்லோருக்கும் அருளுவதுமில்லை. ஆக, நம்மில் உறைந்திருக்கும் குண்டலினியை எழுப்பிட இத்தனை வகைகள் இருக்கிறது. எனினும் நமது உடல் மற்றும் மனப் பக்குவத்திற்கு ஏற்ற வகையை தெரிவு செய்ய குருவினால் மட்டுமே முடியும...