Skip to main content

ஆடாதொடை Adhatodavasicanees ; Acanthaceae

ஆடாதோடைக்கும் ஐந்து மிளகுக்கும் பாடாத நாவும் பாடும்
- பழமொழி
மாற்றுப்பெயர்கள் ; ஆடாதோடை,ஆடு தொடா மூலி
வளரியல்பு ; ஒன்றிலிருந்து 2 மீட்டர் உயரம் வரை வளரும் குறுஞ்செடி.
இலை    ; நீண்ட முழுமையான ஈட்டி வடிவ இலைகளும்,வெண்ணிறப் பூவும்
மருத்துவ பாகம் ; இலை,பூ,வேர்
செய்கை  ; கபஹரகாரி, கிருமிநாசினி, அங்காகர்ஷணநாசினி
மருத்துவ குணம் ; இலை கப ஆதிக்கம்,வாத தோஷம்,பற்பல சுரம்,சந்நிபாதம், வயிற்றுநோய் நீக்கும்.
வேர் ; இருமல்,அக்கினிமந்தம்,சுவேதபித்தம், கஷ்டசுவாசம்,கபரோகம் நீக்கும்.
                              
"ஆடாதோ டைப்பன்ன மையறுக்கும் வாதமுதற்
கோடாகோ டிச்சுரத்தின் கோதொழிக்குநாடின்
மிகுத் தெழுந்த சன்னிபதின்மூன்றும் விலக்கு
மகத்துநோய் போக்குமறி"
- ஆடாதொடை இலை கப ஆதிக்கம், வாத தோஷம், பற்பல சுரம், சந்நிபாதம், வயிற்றுநோய் ஆகியவற்றை நீக்கும்.

"காசமொடு மந்தங் கதித்தபித்தங் கொடுஞ்சு
வாசங்கழுத்துவலிமுதனோய் – கூசியே
யோடாதிராங் கொருநாளு மொண்டொடியே
யாடாதோ டைத்துருக் கஞ்சி."
- ஆடாதொடை வேரினாலிருமல், அக்கினி மந்தம், சுவேதபித்தம், கஷ்டசுவாசம், களரோகம் முதலியவை போம்.
இமயமலை சாரலில், 1400 மீட்டர் உயர மலைச் சூழல் வரை வளருகிறது. இந்திய இனங்கள் ஆடாதோடை என்ற தமிழ்ப் பெயராலேயே குறிப்பிடப்படுகின்றன.
1.   ஆடாதொடை இலை,வேர்,மிளகு சேர்த்துக் காய்ச்சி,வடித்து, தேன் கலந்து பருகக் காய்ச்சல் குணமாகும்
2.   ஆடாதொடை,கோரைக்கிழங்கு,பற்பாடகம்,விஷ்ணுக்கிரந்தி,துளசி,பேய்ப்புடல், கஞ்சாங்கோரை,சீந்தில் வகைக்கு 30கிராம்,இடித்து,1லி.நீரில் 500மிலியாகக் காய்ச்சி,வடித்து(அஷ்டமூலக்குடிநீர்)30-60மிலி,வேளைக்கு பருகிவர எவ்வித சுரமும் தீரும்
3.  சுக்கு,திப்பிலி,கிராம்பு,சிறுகாஞ்சொறிவேர்,அக்கராகாரம்,முள்ளிவேர்,கடுக்காய்தோல், ஆடாதொடை,கற்பூரவல்லி,கோஷ்டம்,சிறுதேக்கு,நிலவேம்பு,வட்டத் திருப்பி முத்தக்காசு வகைக்கு சமன்,3ல்1ன்றாய் காய்ச்சிப் பருக இருமல் சளியுடன் கூடிய சுரம் குணமாகும்
4.   பற்பாடகம்,கண்டங்கத்திரி,ஆடாதொடை,சுக்கு,விஷ்ணுக்கிரந்தி வகைக்கு 40 கிராம், சிதைத்து 4ல்1ன்றாய் காய்ச்சி,25மிலி தினமிகுவேளை,4நாள் கொடுக்க நச்சுச்சுரம் தீரும்.
5.   இலைச்சாறு,தேன் சமன் கலந்து சர்க்கரை சேர்த்து தினம் 4 வேளை கொடுக்க நுரையீரல் இரத்த வாந்தி,கோழை மிகுந்து மூச்சுத்திணறல்,இருமல்,இரத்தம் கலந்து கோழை வருதல், குணமாகும்.
அளவு;
குழந்தைகள் - 5+5 துளிகள்
சிறுவர்       – 10 +10 துளிகள்
பெரியவர்கள் - 15+15 துளிகள்
6.   இலைச்சாறு 2 தேகரண்டி எருமைப்பாலில் காலைமாலை கொடுத்து வர சீதபேதி,இரத்தப்பேதி குணமாகும்.
7.   10 இலைகளை 2ல் 1ன்றாய்க் காய்ச்சி 250மிலி,காலைமாலை தேன் கலந்து 40 நாட்கள் சாப்பிட்டுவர என்புருக்கிக்காசம்(TB), இரத்தக்காசம்,சளிச்சுரம், சீதளவலி, விலாவலி, தீரும்.
8.   வேருடன் சமன் கண்டங்கத்திரி வேர் சமன் சேர்த்துப் பொடித்து ½ - 1 கிராம் தேனில் சாப்பிட்டுவர நரம்பு இழுப்பு,சுவாசகாசம்,சன்னி, ஈளை,இருமல், சளிச்சுரம், என்புருக்கி,குடைச்சல் வலி குணமாகும்.
9.   இலையும்,சங்கன் இலையும் வகைக்கு 1பிடி ½ லி நீரில் போட்டு பாதியாய்க் காய்ச்சி காலைமாலை பருகிவரக் குட்டம்,கரப்பான், கிரந்தி,மேகப்படை, ஊறல், விக்கல்,வாந்தி,வயிற்றுவலி தீரும்.
10.  உலர்ந்த ஆடாதொடை இலைத்தூளை ஊமத்தை சுருட்டிப் புகை பிடிக்க மூச்சுத் திணறல் உடனே தீரும்.(அளவுக்கு அதிகமாக புகைப்பின் மயக்கம் வரலாம்)
11.  700 கிராம் தூய இலைகளை நெய் விட்டு வதக்கி,அக்கரா, சித்தரத்தை, இலவங்கம் வகைக்கு 10 கிராம்,ஏலம்4 பொடித்துப் போட்டு பொன் வறுவலாய் வறுத்து,2லி நீர் விட்டு 1லி ஆக வற்றக் காய்ச்சி வடித்ததில் 1கிலோ சர்க்கரை சேர்த்து தேன் பதமாய்க் காய்ச்சி (ஆடாதொடை மணப்பாகு) வெந்நீரில் 1 கரண்டி கலந்து சாப்பிட்டுவர நீர்க்கோவை தீரும்,தினம் 3 வேளையாக நீடித்து கொடுத்துவர காசம்,என்புருக்கி,மார்ச்சளி, கப இருமல், புளூரசி, நீடித்த ஆஸ்துமா, நிமோனியா குணமாகும். குரல் இனிமை உண்டாகும்.
12. திராட்சை, ஆடாதொடை இலைகள், கடுக்காய் கலந்து செய்த கஷாயத்துடன் இஞ்சி, கருமிளகு மற்றும் தேன் கலந்து குடிக்க சுவாச மண்டல உறுப்புகள் நலம் பெறும். இருமல் போகும். தொண்டைக்கு இதமளிக்கும். கெட்டியான சளி, கோழை, இவற்றை அகற்றும்.
13. வேர்கசாயம் கடைசி மாதத்தில் காலை மாலை சாப்பிட்டுவர சுகப்பிரசவம் ஆகும். (ஆடாதொடையிலிருந்து கிடைக்கும் காரத்தன்மையுடைய வாசிசைன் மெதர்ஜின் போன்ற மருந்துகளுக்கு இணையானது. பழங்காலத்தில் செவிலியர்கள் சுலபமாக பிரசவம் ஏற்பட பயன்படுத்தினர்)
14. இலைகளோடு, வேர் எடுத்து ஒரு லிட்டர் நீரிலிட்டு காய்ச்சி வடிகட்டி ஒரு நாளைக்கு இரு வேளை ஒரு வாரம் குடித்து வர மூச்சிரைப்பு நோய் குறையும்.
15. இலைக்கசாயம் 25 மிலியுடன் சிறிது திப்பிலி சூரணம்,தேன் கலந்து தினம் 2 வேளை கொடுத்து வர இரத்தம் சுத்தியாகும்.கபம் குறையும்.கஷ்டசுவாசம் தீரும்.
16. இலையின் ஈர்க்கு,நிலவேம்பு,சீந்தில்கொடி,பேய்ப்புடல்,வெப்பாலை அரிசி வகைக்கு 20கிராம் இடித்து 2ல்1ன்றாய்க் காய்ச்சி வேளைக்கு 25மிலி தினம் 2-3 வேளை கொடுக்க விஷம்,குளிர்சுரம் குணமாகும்.
17. ஈர்க்கு,திப்பிலி,சுக்கு,சித்தரத்தை,ஓமம்,கண்டங்கத்திரி வகைக்கு 10கிராம் முன் போல் தேன் சேர்த்து கொடுக்க கபசுரம் நீங்கும்.
18. வேர்பட்டை 80கிராம்,பூ கதிர் 160கிராம்,பேரரத்தை,சித்தரத்தை, வாய்விளங்கம், சிறு தேக்கு,கோரைக்கிழங்கு,இச்சிப்பட்டை,கரிமஞ்சள்,மிளகு,கண்டங்கத்திரி வகைக்கு 10 கிராம்,தூதுவேளை உலர்ந்த இலை,காஞ்சொறிவேர் வகைக்கு 80கிராம்,அரிசித்திப்பிலி 120கிராம்,கோஷ்டம், காட்டாத்திப்பூ வகைக்கு 10கிராம் இடித்துப் பொடித்து,20கிராம் சாம்பிராணி பதங்கம்கூட்டிக் கலந்து(ஆடாதொடை சூரணம்) 5கிராம் பாலில் கலக்கி தினம் 2வேளை 10-20 நாள் கொடுத்துவர சீதள சம்பந்தத்தாலுண்டான சுவாசகாசம், இரைப்பிருமல் தீரும்.
19.  ஆடாதொடை இலைகளை நடுநரம்பு நீக்கி,10மிளகு,1பிடிதுளசி,2 வெற்றிலை சேர்த்து,சிதைத்து,4ல்1ன்றாய் காய்ச்சி,கற்கண்டு கலந்து, தினமிருவேளை பருக இருமல்,சளி,தொண்டைக்கட்டு தீரும் வறட்டு இருமல்  குணமாகும்.
20.  ஆடாதொடையை  தேன் விட்டு வதக்கி,தாளிசபத்திரி.அரிசிதிப்பிலி, அதிமதுரம் சமன்  பொடித்துப்  போட்டு, 4ல்1ன்றாய்க்  காய்ச்சி, 50மிலி  அருந்திவர காசநோய், இருமல், இரைப்பு  குணமாகும்                                                                                                                          
21.  .தூதுவேளை,ஆடாதொடை,கண்டங்கத்திரி வேர்,சித்தரத்தை நான்கையும் அரைத்து நீரிலிட்டு காய்ச்சிப் பருக,1தேகரண்டி குழந்தைகளுக்குக் கொடுக்க சளி,மூக்கடைப்பு தீரும்.        
22.  கண்டங்கத்திரி,ஆடாதொடை,வேர் வகைக்கு 50கிராம்,திப்பிலி 5 கிராம் சிதைத்து, 4ல்1ன்றாய் காய்ச்சி,100மிலி,தினம் 4வேளை பருக கப இருமல் தீரும்
23.  ஆடாதொடைஇலையை இடித்து பிட்டவித்து சாறு100மிலியில் திரிகடி திப்பிலி பொடி கலந்து உட்கொள்ள ஈளை இருமல் தீரும்.  
24.  ஆடாதோடை இலையை கசாயமாக செய்து தொடர்ந்து 4 நாட்கள் குடிக்க, சளி, காய்ச்சல் கட்டுக்குள் வரும்.
25.  ஆடாதொடைஇலை5,மிளகு10,துளசிஇலை1பிடி,வெற்றிலை2,சேர்த்திடித்து 4ல்1ன்றாய்க் காய்ச்சி 75மிலி,தினம்2,3வேளை சாப்பிட மூக்கழற்சி குணமாகும்
26.  ஆடாதொடைஇலை,வேர்,மிளகு  சேர்த்துக்  காய்ச்சி,வடித்து,தேன் கலந்து பருக  காய்ச்சல்   குணமாகும்
27.  பற்பாடகம், கண்டங்கத்திரி, ஆடாதொடை,சுக்கு,விஷ்ணுக்கிரந்தி வகைக்கு 40கிராம்,சிதைத்து 4ல்1ன்றாய் காய்ச்சி,25மிலி தினமிருவேளை, 4 நாள் கொடுக்க நச்சுச்சுரம் தீரும்
28.  விஷ்ணுக்கிரந்தி சமூலம், ஆடாதொடைவேர், கண்டங்கத்திரிவேர், தூதுவேளை வகைக்கு 30கிராம் சிதைத்து, 4ல்1ன்றாய் காய்ச்சி, காலை மாலை 50மிலி கொடுக்க என்புருக்கிக்காய்ச்சல் தீரும்
29.  கண்டங்கத்திரி சமூலம், ஆடாதொடை வகைக்கு30கிராம், விஷ்ணு கிரந்தி பற்பாடகம் வகைக்கு 15கிராம்,சீரகம்,சுக்கு வகைக்கு 10கிராம் சிதைத்து, 4ல்1ன்றாய் காய்ச்சி,100மிலி 4-6வேளை  சாப்பிட்டு வர நிமோனியா, ப்ளு (மண்டைநீரேற்றக்காய்ச்சல்) தீரும்
30.  திரிகடுகு,திரிபலை,வெப்பாலையரிசி,கடுகுரோகிணி,ஆடாதொடைவேர், மஞ்சள், மரமஞ்சள் வகைக்கு10கிராம் இடித்து கசாயம் செய்து கொடுக்க கண்டகூச்ச சன்னி தீரும்.

Comments

Popular Posts

அருள்வெளி சித்தர் 108 போற்றி

பரம்பொருள் அருட்பெரும் ஜோதி ஓம் ஸ்ரீ அருள்வெளி சித்தர் பரம்பொருள் அருட்பெரும் ஜோதி ஓம் ஸ்ரீ அருள்வெளி சித்தர் ஓம் ஸ்ரீ அருள்வெளி சித்தர் 108 போற்றி 1. அன்பே உருவான அருள்வேளிக் சித்தனே போற்றி ! 2. அகர முதலாய் அமர்ந்தாய் போற்றி ! 3. அறிவிற் கறிவான ஆதுவிதனே போற்றி ! 4. அறத்தின் வடிவே ஐயனே போற்றி ! 5. அடிமை எமைக் காக்கும் அத்தா போற்றி ! 6. அனாதிப் பரம்பொருள் ஆயினே போற்றி ! 7. அமரர் வணங்கும் அரியே போற்றி ! 8. அண்டினோர்க் காதரவு அளிப்பாய் போற்றி ! 9. அன்பே சிவமேன் றறிந்தாய் போற்றி ! 10. அன்பே சிவமாய் அமர்ந்தாய் போற்றி ! 11. அடக்கம் ஆன  சிவமே போற்றி ! 12. ஆனந்த வடிவச் சித்தனே போற்றி ! 13. ஆகாயம் எல்லாம் அளந்தாய் போற்றி ! 14. ஆதியே போற்றி சோதியே போற்றி ! 15. ஆலத்தை அமுதாய் ஆக்குவை போற்றி ! 16. ஆருரிச் சிவமே அழகா போற்றி ! 17. ஆசை வித்த அரனே போற்றி ! 18. ஆணவ மாயை அழித்தாய் போற்றி ! 19. ஆவியில் உறையும் ஐயா போற்றி ! 20. ஆத்தும தத்துவம் அறிவிப்பாய் போற்றி ! 21. ஆலமர் செல்வ அரசே போற்றி ! 22. இகர மாகி எழுந்தாய் போற்றி ! 23. இறைவி இறைவன் வடிவே போற்றி ! 24. இகபர சுகங்கள் தருவாய் ...

அத்தி

1. மூலிகையின் பெயர் :- அத்தி. 2. வேறு பெயர் :- அதவம் மரம் 3. தாவரப்பெயர் :- FICUS GLOMERATA, FICUS AURICULATE. 4. தாவரக்குடும்பம் :- MORACEAE. 5. பயன்தரும் பாகங்கள் :- இலை, பிஞ்சு, காய், பழம், பால், பட்டை ஆகியன. 6. வளரியல்பு :- அத்தி களிமண் நிலம் மற்றும் ஆற்றுப்படுகைகளில் நன்கு வளரும். மாற்றடுக்கில் அமைந்த முழுமையான இலைகளை உடைய பெரு  (FICUS GLOMERATA , ROXB ; MORACEAE ) மர வகையைச் சேர்ந்தது.நாட்டு அத்தி (COUNTRY FIG), வெள்ளை அத்தி (GULAR FIG), நல்ல அத்தி (FICUS GLOMERATA CLUSTER FIG) என பல வகை அத்தி மரங்கள் உண்டு. அத்தி அளவான உயரமுடைய நடுத்தர மரமாகும். இம்மரம் சுமார் 10 மீட்டர் வரை உயரமாக வளர்கிறது. மரத்தின் பட்டை சாம்பல் மற்றும் சிவப்பு நிறத்தில் காணப்படுகிறது. அத்தி இலைகளில் மூன்று நரம்புகள் இருக்கும். காய்கள் சற்று நீளமான முட்டை வடிவில் தண்டிலும், கிளைகளிலும் அடிமரத்திலும் கொத்துக் கொத்தாகத் தோன்றும். பெரிய நெல்லிக்காய் அளவில் உருண்டையாக சிறிது பச்சை நிறத்துடன் இருக்கும். காய் பழுத்த பின்பு கொய்யாப்பழத்தைப் போல் வெளிறிய மஞ்சள் நிறமாக மாறிவிடும். பழங்கள் தானே கீழே உத...

வர்மம் varmam

வர்மங்களின் வகைகள்..! வர்மக் கலையை அகத்தியர் நான்கு பெரும் பிரிவுகளாய் பிரித்திருக்கிறார். உடலில் உள்ள வர்ம புள்ளிகள் மற்றும், அவற்றை கையாளும் விதத்தினால் இவற்றை வேறு படுத்துகிறார். இவை “படு வர்மம்”, ”தொடு வர்மம்”, ”தட்டு வர்மம்”, ”நோக்கு வர்மம்” படுவர்மம் நான்கு வகை வர்மங்களில் மிகவும் ஆபாயகரமான பிரிவு இதுவேயாகும். உடலிலுள்ள வர்மப் பகுதிகளில் அடியோ அல்லது தாக்குதலோ ஏற்படுமானால் அப்போது ஏற்படும் வர்மமே "படுவர்மம்" என்கிறார். இந்த படுவர்ம தாக்குதலுக்கு உள்ளாகும் நபர்கள் உயிரிழக்கும் வாய்ப்புக்கள் அதிகம் உள்ளதால் இவை மிகவும் ஆபத்தானவை என்று அகத்தியர் குறிப்பிடுகிறார். ஒரு மனிதன் படுவர்மப் புள்ளிகளில் அடிபட்டால் உடனடியாக மயங்கி விழுவான் என்றும், அவன் வாய் பிளந்து நாக்கு வெளியே தள்ளும், வாயில் நுரையும் வெளியேறும் அத்துடன் அந்த அடிபட்ட இடங்களில் கைவைத்து பார்த்தால் அந்த இடம் மிகவும் குளிர்ச்சியாகக் காணப்படும் என்றும் குறிப்பிடுகிறார். எல்லோராலும் இதை செய்திட முடியாது என்றும், மிகுந்த பயிற்சி உள்ள ஒருவரால் மட்டுமே இத்தகைய செயல்களை செய்திட முடியும் என்றும் கூறுகிறார். தொடு...

குண்டலினி ஆற்றல் 3

குண்டலினியை எப்படி எல்லாம் எழுப்பலாம்! மூலாதாரத்தில் புதைந்திருக்கும் குண்டலினியை எழுப்பிட பல்வேறு உத்திகள் கூறப் பட்டிருக்கின்றன. பொதுவில் பிராணாயாமம் எனப்படும் மூச்சுப் பயிற்சி, ஆசனங்கள், முத்திரைகள் இவைகளால் குண்டலினியை எழுப்ப முடியுமாம். இராஜயோகிகள் சலனமற்ற தியானத்தினாலும், மனப் பயிற்சியினாலும் எழுப்புகின்றனர். சாமான்யர்கள் பக்தி அதாவது முழுமையான சரணாகதியின் மூலம் எழுப்புகின்றனர். ஞானிகளோ பிரித்து அறியும் மன உறுதியினால் எழுப்புகின்றனர். இதை விவேக வைராக்கியம் என்கின்றனர். தாந்திரிகர்கள் மந்திர சக்தியால் குண்டலினியை எழுப்புகின்றனர். இவற்றை எல்லாம் விட மிக எளிதான ஒரு முறையும் இருக்கிறது. அதாவது குருவினை பார்த்தல்(தரிசனம்),குருவினால் தொடப் படுதல், ஆசீர்வதித்தல் ஆகியவைகளால் சட்டென குண்டலினி எழும்பும். இத்தகைய தகுதி உடைய குருமார்கள் இப்போது மிகவும் குறைவு. மேலும் அத்தகையவர்கள் இதை எல்லோருக்கும் அருளுவதுமில்லை. ஆக, நம்மில் உறைந்திருக்கும் குண்டலினியை எழுப்பிட இத்தனை வகைகள் இருக்கிறது. எனினும் நமது உடல் மற்றும் மனப் பக்குவத்திற்கு ஏற்ற வகையை தெரிவு செய்ய குருவினால் மட்டுமே முடியும...

குண்டலினி ஆற்றல் 9 விசுத்தி

குண்டலினி - விசுத்தி. மூலாதாரத்திலிருந்து ஐந்தாவது சக்கரமான விசுத்தி பற்றி இன்று பார்ப்போம். இதைப் பற்றி அகத்தியர் பின் வருமாறு விளக்குகிறார். ஆச்சப்பா வனாகததி னொடுக்கஞ்சொன்னோம் அறையுகிறேன் விசுத்தியி னடவைக்கேளு மாச்சப்பா வதற்க்குமேல் பன்னிரெண்டங்குலம் பாச்சப்பா பதினாறு யிதழ்தா னாகும் பாலகனே அட்சரந்தான் வகாரமாகும் வதுநடுவில் சதாசிவனும் சாகினியுமாமே. - அகத்தியர். இந்த சக்தி ஆதார மையமானது நமது தொண்டையின் அடிப்பாகத்தில் சுழுமுனை நாடியில் அமைந்து இருப்பதாக குறிப்பிடுகின்றனர். நமது குரல்வளை, மூச்சுக் குழாய், தையராய்டு சுரப்பிகள், நுரையீரல், கைகள் போன்ற உறுப்புகளுடன் விசுத்தி சக்கரம் தொடர்புடையதாக குறிப்பிடப் படுகிறது. பஞ்சாட்சர எழுத்துக்களான "சிவயநம" என்னும் எழுத்துகளில் ஒன்றான "வ" என்னும் எழுத்தையும், அதன் தத்துவத்தையும் விசுத்தி சக்கரம் விளக்குவதாக அமைகின்றது. இச்சக்கரத்தின் அதிதேவன் சதாசிவன், அதி தேவதை சாகினி. பஞ்ச பூதங்களில் ஒன்றான ஆகாசம் இதன் மூலக்கூறு. இதன் மூல மந்திரம் “ஹம்” எனப்படுகிறது. இந்த சக்கரத்திலிருந்து தாமரை இதழ் போன்ற பதினாறு யோக நாடிகள் கிளம்புகின்றன....