Skip to main content

சித்தர்கள் அருளிய உடற்கூறியல்

ஆங்கில மருத்துவமான அலோபதி மருத்துவத்தின் பெரியதோர் வெற்றிக்கு அடிப்படைக் காரணம், அந்த துறையில்தான் உடற்கூறு அறிவியல் துறையானது பெரிய அளவில் வளர்ந்திருக்கிறது. இன்றும் கூட மாற்று மருத்துவத் துறையினர் அலோபதி மருத்துவமுறை உருவாக்கியுள்ள உடற்கூறியல் முறைகளின் படியே நோய்களை அணுகுகின்றனர்.

உடற்கூறியல் என்பது மனிதர்கள் மற்றும் விலங்குகளின் உடல் உறுப்புகளின் கட்டமைப்புகளை பற்றி விரிவாக விளக்கிடும் அறிவியல் துறை. இந்த துறை இரண்டு பெரும் பிரிவுகளாய் வகைப் படுத்தப் பட்டிருக்கிறது. வெறும் கண்களால் பார்த்து உணரக் கூடிய உறுப்புகளின் கட்டமைப்பை ஆராய்ந்து அறியும் வகையினை “மாக்ராஸ்கோப்பிக் அனாடமி” என்றும், கண்களால் பார்க்க முடியாத அல்லது நுண்ணோக்கிகளின் வழியே மட்டும் ஆராய்ந்து அறியும் வகையினை “மைக்ராஸ்கோப்பிக் அனாடமி” என்கின்றனர்.

என்னுடைய துறை என்பதால் அறிமுகத்தை கொஞ்சம் நீட்டி முழக்கிவிட்டேன். அலோபதி மருத்துவம் தவிர மற்ற மருத்துவ முறைகளில் உடற்கூறியலை தங்களுக்கே உரிதான வகையில் அணுகியிருக்கின்றனர். அந்த வகையில் நமது சித்தர் பெருமக்களும் மனித உடலின் கட்டமைப்புகளைப் பற்றி அறிவியல் முன்னேற்றம் ஏதும் இல்லாத ஒரு காலத்தில் மிக விரிவாக கூறியிருக்கின்றனர். அந்த வகையில் சித்தர்கள் நமது உடலின் அடிப்படை கட்டமைப்புகளை எவ்வாறு பகுத்துக் கூறியிருக்கின்றனர் என்பதை பார்ப்போம்.

மனித உடலானது தொண்ணூற்றி பொறிகளால் கட்டப் பட்டது என்கின்றனர். ஆம்!, தொண்ணூற்றி ஆறு வகையான கூறுகள் ஒன்றிணைந்ததே ஒரு மனிதனின் உடல் என்று கூறியிருக்கின்றனர்.

அது பற்றி திருமூலர் பின்வருமாறு உரைக்கிறார்.

"பூதங்கள் ஐந்தும் பொறியவை ஐந்துளும்
ஏதம் படஞ்செய்து இருந்து புறநிலை
ஓதும் மலம்குணம் ஆகும்ஆ தாரமொடு
ஆதி அவத்தைக் கருவிதொண் ணூற்றாறே"

- திருமூலர் -

இந்த தொண்ணூற்றி ஆறு பொறிகளை அறிந்து தெளிந்து கொள்வதே சித்த மருத்துவத்தின் அடிப்படையாகிறது. இவை ஒவ்வொன்றின் இயல்பு, குணம், தொழிற்பாடு போன்றவைகளை உணர்ந்து கொண்டு விட்டால், சித்த மருத்துவத்தின் மகிமைகளை புரிந்து கொள்ளமுடியும். அதனை வெற்றிகரமாய் பயன்படுத்திடவும் முடியும். இந்த தொண்ணூற்றி ஆறு பொறிகளையும் இருபது வகைகளாய் பிரித்துக் கூறியிருக்கின்றனர்.

அந்த இருபது வகைகள் பின்வருமாறு...

அறிவு
இருவினை
மூவாசை
அந்தகரணங்கள்
பஞ்சபூதங்கள்
பஞ்சஞானேந்திரியங்கள்
பஞ்சகன்மேந்திரியஙக்ள்
பஞ்சதன்மாத்திரைகள்
பஞ்சகோசங்கள்
மூன்று மண்டலஙக்ள்
குணங்கள்
மலங்கள்
பிணிகள்
ஏடனை
ஆதாரங்கள்
அவஸ்தைகள்
தாதுக்கள்
ராகங்கள்
தச நாடிகள்
தசவாயுக்கள்

இந்த இருபது வகைகளில் தொண்ணூற்றி ஆறு பொறிகளும் அடங்கி இருக்கிறது. இவையே நம் உடலை இயக்குகிறது. இவற்றில் ஏதேனும் ஒன்றில் மாற்றங்கள் ஏற்பட்டாலும் கூட அது உடலுக்கு சுகவீனம் ஏற்பட காரணமாய் அமைந்து விடுகிறது.

உடற்கூறியலில் சித்தர் பெருமக்கள் முன் வைக்கும் முதல் ஆச்சர்யமான தெளிவு,எந்த ஒரு மனிதனின் உடம்பும் அவரது கையால் அளக்க எட்டு சாண் உயரமும், நான்கு சாண் பருமனும், தொன்னூற்றி ஆறு விரற்கடை பிரமாணமும் கொண்டதாக இருக்குமாம்.இது வேறெந்த மருத்துவ முறையின் உடற்கூறியலும் சொல்லாத ஒரு செய்தி.

நமது உடற்கூறில் அடங்கியிருக்கும் தொன்னூற்றி ஆறு கூறுகளைப் பற்றி பார்ப்போம்.இவை அனைத்தும் இருபது வகைகளில் அடங்கி இருக்கிறது.

அறிவு (1)

இருவினை(2)
    நல்வினை
    தீவினை

மூவாசைகள்(3)
    மண்
    பொன்
    பெண்

அந்தக் கரணங்கள்(4)
    மனம்
    புத்தி
    சித்தம்
    அகங்காரம்

பஞ்சபூதங்கள்(5)
    பிருதிவி - (பூமி - நிலம் - மண்)
    அப்பு - (ஜலம் - நீர் - புனல்)
    தேயு - (அக்னி - நெருப்பு - அனல்)
    வாயு - (கால் - காற்று - கனல்)
    ஆகாயம் ( வெளி - வானம் - விசும்பு)

பஞ்ச ஞானேந்திரியங்கள்(5)
    மெய்
    வாய்
    கண்
    மூக்கு
    செவி

பஞ்ச கன்மேந்திரியங்கள்(5)
    வாக்கு (வாய்)
    பாணி (கை)
    பாதம் (கால்)
    பாயுரு (மலவாய்)
    உபஸ்தம்(கருவாய்)

பஞ்ச தன் மாத்திரைகள்(5)
    சுவை (ரசம்)
    ஒளி (ரூபம்)
    ஊறு (ஸ்பரிசம்)
    ஓசை (சப்தம்)
    நாற்றம் (கந்தம்)

பஞ்ச கோசங்கள்(5)
    அன்னமய கோசம்
    பிராணமய கோசம்
    மனோமய கோசம்
    விஞ்ஞானமய கோசம்
    ஆனந்தமய கோசம்

மூன்று மண்டலங்கள்(3)
    அக்னி மண்டலம்
    சூரிய மண்டலம்
    சந்திர மண்டலம்
    குணங்கள்(3)
    ராஜஸம்
    தாமசம்
    ஸாத்வீகம்

மலங்கள்(3)
    ஆணவம்
    கன்மம்
    மாயை

பிணிகள்(3)
    வாதம்
    பித்தம்
    சிலேத்துமம்

ஏடனை(3)
    லோக ஏடனை
    அர்த்த ஏடனை
    புத்திர எடனை

ஆதாரங்கள்(6)
    மூலாதாரம்
    சுவாதிஷ்டானம்
    மணிபூரகம்
    அனாகதம்
    விசுத்தி
    ஆஞ்ஞா

அவஸ்தைகள்(5)
    சாக்கிரம் (நனவு)
    சொப்பனம் ( கனவு)
    சுழுத்தி (உறக்கம்)
    துரியம் ( நிஷ்டை)
    துரியாதீதம் (உயிர்ப்படக்கம்)

தாதுக்கள்(7)
    இரசம்
    இரத்தம்
    மாமிசம்
    மேதஸ்
    அஸ்தி
    மச்சை
    சுக்கிலம் அல்லது சுரோணிதம்

ராகங்கள்(8)
    காமம்
    குரோதம்
    லோபம்
    மோகம்
    மதம்
    மாச்சரியம்
    இடம்பம்
    அகங்காரம்

தச நாடிகள்(10)
    இடைகலை - (இடப்பக்க நரம்பு)
    பிங்கலை - (வலப்பக்க நரம்பு)
    சுமுழுனை - (நடுநரம்பு)
    சிகுவை - (உள்நாக்கு நரம்பு)
    புருடன் - (வலக்கண் நரம்பு)
    காந்தாரி - (இடக்கண் நரம்பு)
    அத்தி - ( வலச்செவி நரம்பு)
    அலம்புடை - (இடச்செவி நரம்பு)
    சங்கினி - (கருவாய் நரம்பு)
    குகு - (மலவாய் நரம்பு)

தசவாயுக்கள்(10)
    பிராணன் - உயிர்க்காற்று
    அபாணன் - மலக் காற்று
    வியானன் - தொழிற்காற்று
    உதானன் - ஒலிக்காற்று
    சமானன் - நிரவுக்காற்று
    நாகன் - விழிக்காற்று
    கூர்மன் - இமைக்காற்று
    கிருகரன் - தும்மற் காற்று
    தேவதத்தன் - கொட்டாவிக் காற்று
    தனஞ்செயன் - வீங்கல் காற்று

ஆக மொத்தம் தொண்ணூற்றாறு கூறுகளைக் கொண்டது நமது உடல்.

Comments

Popular Posts

அருள்வெளி சித்தர் 108 போற்றி

பரம்பொருள் அருட்பெரும் ஜோதி ஓம் ஸ்ரீ அருள்வெளி சித்தர் பரம்பொருள் அருட்பெரும் ஜோதி ஓம் ஸ்ரீ அருள்வெளி சித்தர் ஓம் ஸ்ரீ அருள்வெளி சித்தர் 108 போற்றி 1. அன்பே உருவான அருள்வேளிக் சித்தனே போற்றி ! 2. அகர முதலாய் அமர்ந்தாய் போற்றி ! 3. அறிவிற் கறிவான ஆதுவிதனே போற்றி ! 4. அறத்தின் வடிவே ஐயனே போற்றி ! 5. அடிமை எமைக் காக்கும் அத்தா போற்றி ! 6. அனாதிப் பரம்பொருள் ஆயினே போற்றி ! 7. அமரர் வணங்கும் அரியே போற்றி ! 8. அண்டினோர்க் காதரவு அளிப்பாய் போற்றி ! 9. அன்பே சிவமேன் றறிந்தாய் போற்றி ! 10. அன்பே சிவமாய் அமர்ந்தாய் போற்றி ! 11. அடக்கம் ஆன  சிவமே போற்றி ! 12. ஆனந்த வடிவச் சித்தனே போற்றி ! 13. ஆகாயம் எல்லாம் அளந்தாய் போற்றி ! 14. ஆதியே போற்றி சோதியே போற்றி ! 15. ஆலத்தை அமுதாய் ஆக்குவை போற்றி ! 16. ஆருரிச் சிவமே அழகா போற்றி ! 17. ஆசை வித்த அரனே போற்றி ! 18. ஆணவ மாயை அழித்தாய் போற்றி ! 19. ஆவியில் உறையும் ஐயா போற்றி ! 20. ஆத்தும தத்துவம் அறிவிப்பாய் போற்றி ! 21. ஆலமர் செல்வ அரசே போற்றி ! 22. இகர மாகி எழுந்தாய் போற்றி ! 23. இறைவி இறைவன் வடிவே போற்றி ! 24. இகபர சுகங்கள் தருவாய் ...

மருந்துகளின்றி ஆரோக்யமாக வாழ

நமது வாழ்க்கை முறையை சரிசெய்வது மூலமாக மட்டுமே ஆரோக்யமாக வாழ்வது சாத்தியமாகும். நம்மிடம் உள்ள ஆரோக்கியத்தை மருத்துவமனையில் தேடினால் கிடைக்காதல்லவா? இதை மக்களுக்கு புரியவைத்து ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்குவதே எனது நோக்கம்.  நம் உடலானது நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் போன்ற பஞ்ச பூதங்களால் தான் இயங்குகின்றது. அவற்றிலுள்ள பிரச்சினைகளை களைந்தாலே நாம் வாழ்நாள் முழுவதும் நோயின்றி ஆரோக்யமாக வாழலாம். உணவு நிலம்  இரைப்பை, மண்ணீரல், கணையம் ஆகிய உறுப்புக்கள் ஒழுங்காக இயங்க கீழே கொடுக்கபட்டுள்ளவற்றை பின்பற்றவும் 1. பசி: பசிக்கும்போது நமக்கு பிடித்த உணவை நிதானமாக உண்ணும்போது நம் உடல் அவற்றை சத்துக்களாக மாற்றிவிடும். உதட்டை பிரிக்காமல் உணவை நன்கு மென்று கூழ் போல் அரைத்துப் பின் விழுங்க வேண்டும். ஏனென்றால் காற்றும் நம் ஜீரணத்திற்கு எதிரி. அப்படி உண்டால் நம் உடலின் அனைத்து உறுப்புக்களும் நன்றாக இயங்கும் அதனால் ஆரோக்கியம் பேணப்படும். பசி இல்லாதபோதோ நமக்கு பிடிக்காத உணவை உண்ணும்போதோ மற்றும் உணவு உண்டவுடன் அதிக நீரை குடிக்கும்போதோ அவை கழிவுகளாக மாறி நமக்கு தொப்பை, வாயு தொந்தரவு, அல்சர், அ...

வர்மம் varmam

வர்மங்களின் வகைகள்..! வர்மக் கலையை அகத்தியர் நான்கு பெரும் பிரிவுகளாய் பிரித்திருக்கிறார். உடலில் உள்ள வர்ம புள்ளிகள் மற்றும், அவற்றை கையாளும் விதத்தினால் இவற்றை வேறு படுத்துகிறார். இவை “படு வர்மம்”, ”தொடு வர்மம்”, ”தட்டு வர்மம்”, ”நோக்கு வர்மம்” படுவர்மம் நான்கு வகை வர்மங்களில் மிகவும் ஆபாயகரமான பிரிவு இதுவேயாகும். உடலிலுள்ள வர்மப் பகுதிகளில் அடியோ அல்லது தாக்குதலோ ஏற்படுமானால் அப்போது ஏற்படும் வர்மமே "படுவர்மம்" என்கிறார். இந்த படுவர்ம தாக்குதலுக்கு உள்ளாகும் நபர்கள் உயிரிழக்கும் வாய்ப்புக்கள் அதிகம் உள்ளதால் இவை மிகவும் ஆபத்தானவை என்று அகத்தியர் குறிப்பிடுகிறார். ஒரு மனிதன் படுவர்மப் புள்ளிகளில் அடிபட்டால் உடனடியாக மயங்கி விழுவான் என்றும், அவன் வாய் பிளந்து நாக்கு வெளியே தள்ளும், வாயில் நுரையும் வெளியேறும் அத்துடன் அந்த அடிபட்ட இடங்களில் கைவைத்து பார்த்தால் அந்த இடம் மிகவும் குளிர்ச்சியாகக் காணப்படும் என்றும் குறிப்பிடுகிறார். எல்லோராலும் இதை செய்திட முடியாது என்றும், மிகுந்த பயிற்சி உள்ள ஒருவரால் மட்டுமே இத்தகைய செயல்களை செய்திட முடியும் என்றும் கூறுகிறார். தொடு...

இயற்பியல் பிரபஞ்சமும் தூய ஆற்றல் குண்டலினி

இயற்பியல், பிரபஞ்சமும்  தூய ஆற்றல், உலகளாவிய வெப்பநிலை மாறுபாடுகள், நீராவியின் மாறுபாடுகள், அதிர்வுகளின் அவதானிப்புகள், நமது சித்தாந்த தியான நிலை குண்டலினி ஆற்றல் தொடர்பும்.  ஒரு மின்காந்த புலம் என்பது காந்த மற்றும் மின்சார ஆற்றலால் நிரப்பப்பட்ட இடத்தின் ஒரு பகுதி. மின்காந்த புலங்கள் எல்லா இடங்களிலும் உள்ளன. எக்ஸ்-கதிர்கள் மற்றும் காமா கதிர்கள் போன்ற உயர் அதிர்வெண் மின்காந்த கதிர்வீச்சு “ அயனியாக்கம் ” மற்றும் மக்களுக்கு தீங்கு விளைவிக்கும், அதே நேரத்தில் குறைந்த அதிர்வெண் கொண்ட மின்காந்த கதிர்வீச்சு அல்லது “ அல்லாத அயனியாக்கம்,” மனிதர்களுக்கு பாதுகாப்பானதாகக் கருதப்படுகிறது, அல்லது சில மனித நோய்களுக்கு கூட ஒரு தீர்வாக கருதப்படுகிறது. பூமியைச் சுற்றியுள்ள மின்காந்த புலம் நம் உடலை அடைந்து அதன் உள்ளே இருக்கும் கட்டணங்களை பாதிக்கிறது. நம் உடல்கள் அதன் சொந்த மின்னியல் புலத்தைக் கொண்டுள்ளன. டி.என்.ஏவின் துகள்கள் கூட மின்காந்த புலங்களை உருவாக்க முடியும். அந்த அலைகள் நம் உடலின் உள் கடிகாரத்தை பிரதானமாக்குகின்றன மற்றும் தூக்க முறைகள் மற்றும் ஹார்மோன் சுரப்பை பாதிக்கின்றன. ஆல்பா மூளை அ...

பாவங்களுக்கான வியாதிகள்

பாவங்களுக்கான வியாதிகள் - கருட புராணம் !!! 1    யார் மற்றவர்களை ஏளனம் செய்பவர்கள். சத்தியத்தை தவறவிட்டவர்கள், எதற்காவது காக்க வைத்தவர்.    மன அழுத்த நோயால் துன்புறுவர், மன நோயாளியாக இருப்பார் 2   எலி பொந்துக்களை, பாம்பு பொந்துக்களை அடைப்பவர், மீன்களை பிடிப்பவர்களுக்கு    நுரையீரல் மற்றும் சுவாச கோளாரினால் பாதிக்கப்படுவார். 3    விஷம் கலந்து யாரையும் கொலை செய்தால்    தேள் கடி மற்றும் பாம்பு கடியால் துன்பப்படுவார் 4    கருமியாகவும், அதிக வட்டி வசூலிப்பவர், பிறரது பொருளை அபகரிப்பவர்களுக்கு    சுயரோகத்தால் துன்பப்படுவார் 5    விபச்சாரத்தில் ஈடுபடுபவர்கள், சிறுமிகளை பலாத்காரம் செய்பவர் தொழு நோயால் துன்பப்படுவார் 6    தனது உடம்பைக் காட்டி பயமுறுத்துபவர், வீண் சண்டைக்கு இழுப்பவர்    கால், கை வலிப்பு, இழுப்பு நோயால் துன்பப்படுவார் 7    பெண்ணை கெட்ட எண்ணத்துடன் பார்ப்பவர், மற்றவர் பொருள்களையும் பார்த்து பொறாமைப்படுபவர்    நிரந்தர கண் நோயுடன் அவதிப்படுவார் 8  ...