Skip to main content

போகர் அருளிய மூக்குப் பொடி

மூக்குப் பொடி பற்றி தற்போதைய தலைமுறையினருக்கு, அதிலும் குறிப்பாக நகர்ப்புற இளையோருக்கு பெரிதாக தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஒன்றிரண்டு தசாப்தங்களுக்கு முன் வரை மூக்குப் பொடியை ஆண், பெண் வித்தியாசம் இல்லாமல் பெரும்பாலானவர்கள் பழக்கத்தில் வைத்திருந்தனர்.

நமது மூக்கின் உள்ளே அநேக வர்மப் புள்ளிகள் உள்ளன. இவற்றை கண்ணாடி வர்மம் என வர்ம நூல்களில் குறிப்பிடப் பட்டிருக்கிறது. காரத் தன்மை உடைய பொருள்களால் தயாரிக்கப் படும் மூக்குப் பொடியினை உறிஞ்சும் போது இந்த வர்மப் புள்ளிகள் தூண்டப் பட்டு மூளையில் ஒரு விதமான சிலிர்ப்பினை உண்டாக்குகின்றன. இதனால் உண்டாகும் கிறுகிறுப்புக்கு, மூக்குப் பொடியை பயன்படுத்துபவர் நாள் போக்கில் அடிமையாகி விடுவார்கள்.

பலன் என்று பார்த்தால் இந்த சிலிர்ப்பு உணர்வினால் உண்டாகும் தும்மலினால் மூக்கில் சேர்ந்திருக்கும் நீர், நுண்ணியியிரிகள் வெளித் தள்ளப் படுகிறது. புகைப் பிடிப்பது, புகையிலை மெல்லுவதைப் போல உடல் ஆரோக்கியத்தைக் கெடுக்கும் பழக்கவழக்கமாக மருத்துவம் இதை வகைப் படுத்துகிறது. உயிர் கொல்லி நோயான புற்று நோயை வெற்றிலை பாக்கு வைத்து அழைக்கக் கூடியது இந்த பழக்கம்.

ஆனால் போகர் இந்த மூக்குப் பொடியைப் பற்றியும் அதன் பலனைப் பற்றியும் வேறுவிதமாக கூறியிருக்கிறார். தனது “போகர் 7000” என்ற நூலில் உள்ள ஒரு பாடல் பின்வருமாறு...

போடவே மூக்குப் பொடியைக்கேளு
பெரிதான வறட்டிசுண்டி வேரைவாங்கி
நீடவே நிழல்உலர்த்திப் பொடியாய்ப்பண்ணி
நெரிசாய சீலைவடி கட்டிக்கொண்டு
தேடவே குடுக்கைதனில் அடைத்துவைத்துச்
சிறியதாக நுனிவிரலில் பிடித்துகொண்டு
வாடவே வாசியோடு உற்றிவாங்கி
மவுனமாம் சிகரத்தால் ரேசிப்பாயே

ரேசித்தால் நிராகாரத் தடைப்புநீங்கி
நின்மலமாம் அதீதத்தின் ஒளியோமீறும்
தூசித்தால் சுழிமுனைதான் எட்டிட்டுஏறும்
தூசான அழுக்கெல்லாம் சிந்திவீழும்
காசித்த கபாலமது கெட்டியாகும்
கண்ஒளிதான் கேசரத்தில் நின்றுபார்க்கில்
ஆசித்த வடுக்காறு முருவிக்காணும்
அந்தரத்தின் ஒளியெல்லாம் அருகுமாமே.

- போகர்.

வறட்டி சுண்டி வேரைக் கொண்டுவந்து நிழலில் உலர்த்தி பொடியாக்கிக் கொள்ள வேண்டுமாம். பின்னர் அதை சீலை வடி கட்டி குடுக்கையில் அடைத்துக் கொள்ளவேண்டுமாம். இப்படி தயார் செய்த மூக்குப் பொடியினை அவ்வப்போது நுனி விரல்களினால் பிடியளவு எடுத்து சுவாசத்துடன் உறிஞ்சிட வேண்டும் என்கிறார்.

இப்படி உறிஞ்சி வந்தால் நிர்மலமான அதீதத்தின் ஒளிமீறுமாம். மேலும் தூசான அழுக்கெல்லாம் சிந்தி வீழுமாம். கபாலம் இறுகி கெட்டியாகும் என்கிறார். முக்கியமாய் கேசரத்தில் நின்று பார்த்தால் எல்லாம் கண்களுக்கு தோன்ற ஆரம்பிக்குமாம். அந்தரத்தின் ஒளி எல்லாம் கூட உணர முடியும் என்கிறார் போகர்.

Comments

Popular Posts

அருள்வெளி சித்தர் 108 போற்றி

பரம்பொருள் அருட்பெரும் ஜோதி ஓம் ஸ்ரீ அருள்வெளி சித்தர் பரம்பொருள் அருட்பெரும் ஜோதி ஓம் ஸ்ரீ அருள்வெளி சித்தர் ஓம் ஸ்ரீ அருள்வெளி சித்தர் 108 போற்றி 1. அன்பே உருவான அருள்வேளிக் சித்தனே போற்றி ! 2. அகர முதலாய் அமர்ந்தாய் போற்றி ! 3. அறிவிற் கறிவான ஆதுவிதனே போற்றி ! 4. அறத்தின் வடிவே ஐயனே போற்றி ! 5. அடிமை எமைக் காக்கும் அத்தா போற்றி ! 6. அனாதிப் பரம்பொருள் ஆயினே போற்றி ! 7. அமரர் வணங்கும் அரியே போற்றி ! 8. அண்டினோர்க் காதரவு அளிப்பாய் போற்றி ! 9. அன்பே சிவமேன் றறிந்தாய் போற்றி ! 10. அன்பே சிவமாய் அமர்ந்தாய் போற்றி ! 11. அடக்கம் ஆன  சிவமே போற்றி ! 12. ஆனந்த வடிவச் சித்தனே போற்றி ! 13. ஆகாயம் எல்லாம் அளந்தாய் போற்றி ! 14. ஆதியே போற்றி சோதியே போற்றி ! 15. ஆலத்தை அமுதாய் ஆக்குவை போற்றி ! 16. ஆருரிச் சிவமே அழகா போற்றி ! 17. ஆசை வித்த அரனே போற்றி ! 18. ஆணவ மாயை அழித்தாய் போற்றி ! 19. ஆவியில் உறையும் ஐயா போற்றி ! 20. ஆத்தும தத்துவம் அறிவிப்பாய் போற்றி ! 21. ஆலமர் செல்வ அரசே போற்றி ! 22. இகர மாகி எழுந்தாய் போற்றி ! 23. இறைவி இறைவன் வடிவே போற்றி ! 24. இகபர சுகங்கள் தருவாய் ...

அகத்தியர் கூறும் பீஜ மந்திரங்களும் அவற்றின் பலன்களும்

அகத்தியர் கூறும் பீஜ மந்திரங்களும் அவற்றின் பலன்களும்! அகத்தியர் திருமந்திர விளக்கம் 22 என்னும் பாடலில் திருமந்திரமாகிய பஞ்சாக்ஷர மந்திரத்தைப் பற்றி, தத்புருஷம், அகோரம் ஆகிய முகங்கள் ஒவ்வொன்றிற்கும் இருபத்தைந்து வகைகளையும் வாமதேவ முகத்திற்கு ஒன்பது வகைகளையும், ஆக மொத்தம் 59 வகைகள் பற்றி மட்டுமே பாடலில் அகத்தியர் கூறுகிறார். தவிர ஒவ்வொரு வகை மந்திரத்தை உச்சரிப்பதனால் என்ன பலன் என்றும் கூறப்பட்டுள்ளது. தத்புருஷ முகத்தைச் சார்ந்த 25 வகை மந்திரங்களும் அவற்றை ஓதுவதால் உண்டாகும் பயன்கள் பற்றியும் செய்யுள் 5லிருந்து 11வரை அகத்தியர் பார்த்திடவே தற்புருஷம் இருபத் தஞ்சு பாடுகிறேன் நமசிவய அகோர மாகும். (செய்யுள்.5) என்று கூறுகிறார். அவையாவன: மந்திரம் பலன் 1. நங்-சிவயநம - விரும்பிய புத்திர பாக்கியம் கிடைக்கும். 2. அங்-சிவயநம - இயல்பாகத் தேக நோய் தீரும் 3. வங்-சிவயநம - யோகசித்தி காணலாகும். 4. உங்-சிவயநம - ஆயுள் விருத்தி 5. ஓம்-அங்-சிவயநம - ஐம்பூதங்களின் மேல் கட்டுப்பாடு உண்டாகும். 6. கிலி-நமசிவய - உலக வசியம் உண்டாகும். 7. ஹிரீம்-நமசிவய - நினைத்தது நடக்கும். 8. ஐ-உம்-நமசிவய - புத்தி, வித்தை நல்கும். ...

வர்மம் varmam

வர்மங்களின் வகைகள்..! வர்மக் கலையை அகத்தியர் நான்கு பெரும் பிரிவுகளாய் பிரித்திருக்கிறார். உடலில் உள்ள வர்ம புள்ளிகள் மற்றும், அவற்றை கையாளும் விதத்தினால் இவற்றை வேறு படுத்துகிறார். இவை “படு வர்மம்”, ”தொடு வர்மம்”, ”தட்டு வர்மம்”, ”நோக்கு வர்மம்” படுவர்மம் நான்கு வகை வர்மங்களில் மிகவும் ஆபாயகரமான பிரிவு இதுவேயாகும். உடலிலுள்ள வர்மப் பகுதிகளில் அடியோ அல்லது தாக்குதலோ ஏற்படுமானால் அப்போது ஏற்படும் வர்மமே "படுவர்மம்" என்கிறார். இந்த படுவர்ம தாக்குதலுக்கு உள்ளாகும் நபர்கள் உயிரிழக்கும் வாய்ப்புக்கள் அதிகம் உள்ளதால் இவை மிகவும் ஆபத்தானவை என்று அகத்தியர் குறிப்பிடுகிறார். ஒரு மனிதன் படுவர்மப் புள்ளிகளில் அடிபட்டால் உடனடியாக மயங்கி விழுவான் என்றும், அவன் வாய் பிளந்து நாக்கு வெளியே தள்ளும், வாயில் நுரையும் வெளியேறும் அத்துடன் அந்த அடிபட்ட இடங்களில் கைவைத்து பார்த்தால் அந்த இடம் மிகவும் குளிர்ச்சியாகக் காணப்படும் என்றும் குறிப்பிடுகிறார். எல்லோராலும் இதை செய்திட முடியாது என்றும், மிகுந்த பயிற்சி உள்ள ஒருவரால் மட்டுமே இத்தகைய செயல்களை செய்திட முடியும் என்றும் கூறுகிறார். தொடு...

இயற்பியல் பிரபஞ்சமும் தூய ஆற்றல் குண்டலினி

இயற்பியல், பிரபஞ்சமும்  தூய ஆற்றல், உலகளாவிய வெப்பநிலை மாறுபாடுகள், நீராவியின் மாறுபாடுகள், அதிர்வுகளின் அவதானிப்புகள், நமது சித்தாந்த தியான நிலை குண்டலினி ஆற்றல் தொடர்பும்.  ஒரு மின்காந்த புலம் என்பது காந்த மற்றும் மின்சார ஆற்றலால் நிரப்பப்பட்ட இடத்தின் ஒரு பகுதி. மின்காந்த புலங்கள் எல்லா இடங்களிலும் உள்ளன. எக்ஸ்-கதிர்கள் மற்றும் காமா கதிர்கள் போன்ற உயர் அதிர்வெண் மின்காந்த கதிர்வீச்சு “ அயனியாக்கம் ” மற்றும் மக்களுக்கு தீங்கு விளைவிக்கும், அதே நேரத்தில் குறைந்த அதிர்வெண் கொண்ட மின்காந்த கதிர்வீச்சு அல்லது “ அல்லாத அயனியாக்கம்,” மனிதர்களுக்கு பாதுகாப்பானதாகக் கருதப்படுகிறது, அல்லது சில மனித நோய்களுக்கு கூட ஒரு தீர்வாக கருதப்படுகிறது. பூமியைச் சுற்றியுள்ள மின்காந்த புலம் நம் உடலை அடைந்து அதன் உள்ளே இருக்கும் கட்டணங்களை பாதிக்கிறது. நம் உடல்கள் அதன் சொந்த மின்னியல் புலத்தைக் கொண்டுள்ளன. டி.என்.ஏவின் துகள்கள் கூட மின்காந்த புலங்களை உருவாக்க முடியும். அந்த அலைகள் நம் உடலின் உள் கடிகாரத்தை பிரதானமாக்குகின்றன மற்றும் தூக்க முறைகள் மற்றும் ஹார்மோன் சுரப்பை பாதிக்கின்றன. ஆல்பா மூளை அ...

தமிழில் உள்ள மயங்கொலிச்சொற்கள்

தமிழில் உள்ள மயங்கொலிச்சொற்கள்  அணல் - தாடி, கழுத்து அனல் - நெருப்பு அணி - அழகு அனி - நெற்பொறி அணு - நுண்மை அனு - தாடை, அற்பம் அணுக்கம் - அண்டை, அண்மை. அனுக்கம் - வருத்தம், அச்சம் அணை - படுக்கை, அணைத்துக் கொள்ளுதல் அனை - அன்னை, மீன் அணைய - சேர, அடைய அனைய - அத்தகைய அண்மை - அருகில் அன்மை - தீமை, அல்ல அங்கண் - அவ்விடம் அங்கன் - மகன் அண்ணம் - மேல்வாய் அன்னம் - சோறு, அன்னப்பறவை அண்ணன் - தமையன் அன்னன் - அத்தகையவன் அவண் - அவ்வாறு அவன் - சேய்மைச் சுட்டு, ஆண்மகன் ஆணகம் - சுரை ஆனகம் - துந்துபி ஆணம் - பற்றுக்கோடு ஆனம் - தெப்பம், கள் ஆணி - எழுத்தாணி, இரும்பாணி ஆனி - தமிழ் மாதங்களுள் ஒன்று ஆணேறு -ஆண்மகன் ஆனேறு - காளை, எருது ஆண் - ஆடவன் ஆன் - பசு ஆணை - கட்டளை, ஆட்சி ஆனை - யானை இணை - துணை, இரட்டை இனை - இன்ன, வருத்தம் இணைத்து - சேர்த்து இனைத்து - இத்தன்மையது இவண் - இவ்வாறு இவன் - ஆடவன், (அண்மைச் சுட்டு) ஈணவள் - ஈன்றவள் ஈனவள் - இழிந்தவள் உண் - உண்பாயாக உன் - உன்னுடைய உண்ணல் - உண்ணுதல் உன்னல் - நினைத்தல் உண்ணி - உண்பவன், ஒருவகைப் பூச்சி உன்னி - நினைத்து, குதிரை ஊண் - உணவு ஊன் - மாமிசம் எண்ண - நினைக்...