உலகத்தில் பிறந்த ஒவ்வொருவருக்கும் கர்மா என்பது உண்டு;நம் ஒவ்வொருவருடைய செயல்களையும் அஷ்ட திக் பாலகர்கள் ஒவ்வொரு நொடியும் கண்காணித்து வருகின்றார்கள்;இவர்களுக்கு நவக்கிரகங்கள் துணையாக இருக்கின்றன;பகல் பொழுது சாட்சியாக சூரியனும்,இரவுப் பொழுது சாட்சியாக சந்திரனும்,நட்சத்திரங்களும் இருக்கின்றன;
மனிதர்கள் கணக்கு தப்பும்;கடவுள் கணக்கு கச்சிதமானது;எந்த ஒரு கொம்பனும், ஜின் மந்திரவாதியும் சிறிதும் தப்ப முடியாது;
அசுபதியில் துவங்கி ரேவதி வரை இருக்கும் 27 நட்சத்திரங்களும் நல்ல நட்சத்திரங்களே;ஞாயிற்றுக்கிழமை துவங்கி சனிக்கிழமை வரை இருக்கும் ஏழு கிழமைகளும் நல்ல நாட்களே!
குறிப்பிட்ட நட்சத்திரம்,குறிப்பிட்ட கிழமையில் உதயம் ஆகும் போது அது கூடாத நாளாக மாறிவிடுகின்றது;இதை தவ ஆற்றலால் கண்டுபிடித்தவர் சிலாதர் மகரிஷி;அப்படி கண்டுபிடித்த ஜோதிட+ஆன்மீக உண்மைகளை மனித குல நன்மைக்காக நமக்கு தொகுத்து அளித்தவர் அகத்தீசர்!
ஞாயிற்றுக்கிழமையும் பரணி நட்சத்திரமும்
திங்கட்கிழமையும் சித்திரை நட்சத்திரமும்
செவ்வாய்க்கிழமையும் உத்ராடம் நட்சத்திரமும்
புதன் கிழமையும் அவிட்டம் நட்சத்திரமும்
வியாழக்கிழமையும் கேட்டை நட்சத்திரமும்
வெள்ளிக்கிழமையும் பூராடம் நட்சத்திரமும்
சனிக்கிழமையும் ரேவதி நட்சத்திரமும்
இவைகள் தான் கூடாத நாட்களின் பட்டியல்;இது பற்றி புராணக் கதைகளும் இருக்கின்றன;
இந்த நாட்களில் தம்பதியாக வாழ்ந்து வருபவர்கள் குழந்தைக்காக தாம்பத்யம் செய்யாமல் இருப்பது அவசியம்;இல்லாவிட்டால்,ஆன்மீக சிந்தனை கொண்ட குழந்தை பிறக்காது;வாழ்நாள் முழுவதும் ஒவ்வொரு நாளும் தகாத செயல்களைச் செய்யும் குழந்தை தான் பிறக்கும்;புராண காலத்திலேயே சில ரிஷிகளுக்கு இப்படிப்பட்ட குழந்தைகள் பிறந்திருக்கின்றன;
இந்த நாட்களில் திருமணம் செய்யக் கூடாது;புதுமனை புகுவிழா வைக்கக் கூடாது;கடன் வாங்கக் கூடாது;கடன் கொடுக்கக் கூடாது;வேலையில் சேரக் கூடாது;தொழில் நிறுவனம் ஆரம்பிக்கக் கூடாது;வீடு கட்ட ஆரம்பிக்கக் கூடாது;நகை வாங்கக் கூடாது;கும்பாபிஷேகம் செய்யக் கூடாது;பாலாலயம் செய்யக் கூடாது;
இந்த நாட்களில் கோவிலுக்குச் செல்லலாம்;புதிய வழிபாடு ஆரம்பிக்கலாம்;
இந்த நாட்கள் முழுவதும் இறைவழிபாட்டுக்கு ஒதுக்குவது அவசியம்;
இந்த நாட்களில் பிறந்தவர்கள் முற்பிறவிகளில் தகாத செயல்கள் செய்தவர்களாக இருக்கின்றார்கள்;இப்பிறவியில் ஆன்மீகத்தை முகமூடியாக அணிந்து கொண்டு சமுதாயத்திற்கு தீங்கு செய்துகொன்டு இருக்கின்றார்கள்;வெகு சிலர் மட்டுமே உண்மையான ஆன்மீகத் தேடலுடன் வாழ்ந்து வருகின்றார்கள் என்று சித்தர் பெருமக்கள் தெரிவிக்கின்றார்கள்;இவர்களுக்கு ஒரு பரிகாரம் தெரிவித்துள்ளார்கள்:
தமது வாழ்நாள் முழுவதும் சுயம்பு லிங்கமாக இருக்கும் ஆலயத்தில் திருப்பணிகள்,உழவாரப் பணிகள் செய்து கொண்டே இருக்க வேண்டும்;
இன்றைய காலகட்டத்தில் அடிக்கடி அல்லது சில ஆண்டுகளுக்கு ஒருமுறை வெவ்வேறு ஊர்களுக்குப் பயணிக்கும் சூழ்நிலைதான் பலருக்கு இருக்கின்றது;எந்த ஊருக்குச் செல்கின்றார்களோ,அங்கே இருக்கும் சுயம்பு லிங்கம் கோவிலில் அறப்பணிகள் செய்து வர வேண்டும்;
1940 முதல் 1980 வரை இம்மாதிரியான அமைப்பில் பல கோடி பேர்கள் பிறந்துள்ளார்கள்:பஞ்சாங்கத்தை ஆய்வு செய்து பார்த்ததில் தெரிகின்றது;இவர்கள் பெரும்பாலும் நாத்திக அமைப்புகளில்,அறக்கட்டளைகளில்,கட்சிகளில் இருந்து கொண்டு நமது சனாதன தர்மத்திற்கு மகத்தான தீங்குகள் செய்து கொண்டு இருக்கின்றார்கள்;இதை(பல ஆண்டுகள் போராடி) மிகவும் சிரமப்பட்டு தான் கண்டுபிடிக்க முடிந்தது;இக்கட்டுரையை வாசித்த பின்னராவது தெய்வீக காரியங்களுக்கு தடங்கல் செய்யாமல் பக்திக்கு வரும்படி கேட்டுக் கொள்கின்றோம்;
Comments
Post a Comment