Skip to main content

சித்த மருத்துவமும் சகுன சாத்திரமும்


ஆயகலைகள் எனப்படும் அறுபத்தி நாலு கலைகளில் பன்னிரெண்டாவதாய் "சகுன சாஸ்திரம்" குறிப்பிடப் படுகிறது. சகுன சாஸ்திரம் என்பது நம்முடைய சுற்றுச் சூழல், வானிலை, கோள்களின் அமைப்பு, பறவைகளின் ஒலி, விலங்குகளின் செயல்பாடுகள் போன்றவைகளை முன்னிறுத்தி சொல்லப் படுவது.

சகுனம் பார்க்கும் வழக்கம் பழந்தமிழகத்தில் நடைமுறையில் இருந்தற்கான சான்றுகள் பழந்தமிழ் இலக்கியங்களில் காணக் கிடைக்கின்றன. வெளியூர் பயணங்கள், சுப காரியங்களை துவக்குவது, தொழில் துவங்குவது, மருத்துவம் பார்ப்பது, போருக்கு கிளம்புவது என வாழ்வின் பல்வேறு செயல் பாடுகளில் சகுனம் பார்க்கும் வழக்கம் தொன்று தொட்டு இன்றளவும் தொடர்ந்து வருகிறது. 

சித்த மருத்துவத்தைப் பொறுத்த வரை சகுன சாத்திரம் என்பது இருவகைப்படும் ஒன்று நோயாளியை மருத்துவரிடம் அழைத்து வரும் நேரம் மற்றும் அப்போதைய சூழ்நிலை விபரங்களை கொண்டு நோயை அல்லது நோயின் தன்மையை கணிப்பது. மற்றது நோயாளியின் இருப்பிடத்திற்கு மருத்துவரை அழைக்க வருபவரின் நடவடிக்கைகள்,அவர் வந்த சூழ்நிலை போன்றவற்றை வைத்து நோயின் தன்மை மற்றும் நோயாளியின் நிலையை கணிப்பது.

சித்தர் பெருமக்களும் இத்தகைய தகவல்களை அருளியிருக்கின்றனர். அந்த வகையில் புலிப்பாணி சித்தர் அருளிய "புலிப்பாணி வைத்தியசாரம்" என்னும் நூலில் காணக் கிடைக்கும் தகவல்களையே இந்த தொடரில் நாம் பார்க்க இருக்கிறோம். இவை அசுவதி துவங்கி ரேவதி வரையிலான இருபத்தி ஏழு நட்சத்திரங்களும், அவற்றின் பாதங்களும் நடைபெறும் நேரத்தில் ஒருவர் நோய்வாய் பட்டிருந்தால் அந்த நோய் பற்றிய தெளிவும், தீர்வும் அருளப் பட்டிருக்கிறது.

பல நூறு ஆண்டுகளுக்கு முன்னர் அருளப் பட்ட இந்த தகவல்கள் நமக்கு ஆச்சர்யமாகவும், அபத்தமாகவும் தென்படலாம். ஆனால் இவற்றின் பின்னால் இருக்கும் காரண காரியங்கள் நாம் அறியாதவை, ஆய்வுக்குட்பட்டவை.

நமது முன்னோர்கள்  வகுத்த சோதிட இயல் கோள்களின் நகர்வை அடிப்படையாகக் கொண்டது. ஒன்பது கோள்கள், அவற்றுள் பன்னிரெண்டு ராசிகள், அதன் ஊடே 27 நட்சத்திரங்கள், ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் நான்கு பாதங்கள் என பிரிக்கப் பட்டு அதனூடே பலா பலன்கள் கூறப் பட்டிருக்கின்றன. 

"தானென்ற அசுபதிநாள் முதற்காலப்பா 
தயவான ஒன்பதுநாள் சுரமே தீரும்
தேனென்ற ரெண்டாங்கால் கொல்லுமப்பா
திரமான பத்தாநாள் மரணமாவான்
கோனென்ற மூன்றாங்கால் பதினைந்தாகும்
குணமாக நாலாங்கால் மரணஞ் செய்யும்
வானென்ற பரணிதனில் முதற்கால் மூன்று
வளமான ரெண்டாங்கா லேழாமென்னே.
என்னவே மூன்றாங்கால் பதினைந்தாகும்
எளிதில்லா நாலாங்கால் பதினைந்தாகும்"

- புலிப்பாணி சித்தர்.

அசுவினி நட்சத்திரத்தின் முதல் பாதத்தில் ஒருவருக்கு நோய் உண்டாகி இருந்தால் ஒன்பது நாட்களில் அந்த சுரம் நீங்கி விடுமாம்.

அசுவினி நட்சத்திரத்தின் இரண்டாம் பாதத்தில் ஒருவருக்கு நோய் உண்டானால் பத்தாவது நாளில் அவருக்கு மரணம் உண்டாகுமாம்.

அசுவினி நட்சத்திரத்தின் மூன்றாம் பாதத்தில் ஒருவருக்கு நோய் உண்டானால் பதினைந்து நாட்களில் அந்த நோய் குணமாகுமாம்.

நான்காம் பாதத்தில் ஒருவருக்கு நோய் உண்டானால் அவருக்கு மரணம் சம்பவிக்குமாம்.  

பரணி நட்சத்திரத்தின் முதல் பாதத்தில் ஒருவருக்கு நோய் உண்டானால் அது மூன்று நாட்களில் குணமாகுமாம்.

இரண்டாம் பாதத்தில் நோய் உண்டானால் அது ஏழு நாட்களில் குணமாகுமாம். பரணியின்

மூன்றாம் பாதம் நோய் கண்டால் பதினைந்து நாட்களில் குணமாகுமாம்.

நான்காம் பாதமானால் பதினைந்து நாளில் நலமாகுமாம். 

"கார்த்திகைக்கு முதற் காலானால்
நலமான ஒன்பதாம்நாள் தீரும்பாரு
பன்னவே ரண்டாங்கால் பத்தேயாகும்
பண்பான மூன்றாங்கால் பதினைந்தாகும்
அன்னவே நாலாங்கால் நாற்பத்தெட்டு
அடைவாக ரோகணியும் பத்தே.
பத்தான ரெண்டாங்கால் பதினெட்டாகும்
பண்பான மூன்றாங்கால் எண்ணுன்கப்பா
பெத்தான நாலாங்கால் எண்பத்திரண்டு
பேதமில்லை தீர்ந்துவிடு மின்னங்கேளு"

- புலிப்பாணி சித்தர்.

கார்த்திகை நட்சத்திரத்தின் முதற் பாதத்தில் ஒருவருக்கு நோய் கண்டிருந்தால் ஒன்பது நாளில் குணமாகுமாம். 

கார்த்திகை நட்சத்திரத்தின் இரண்டாம் பாதத்தில் ஒருவர் நோயுற்றிருந்தால் பத்து நாட்களில் சரியாகுமாம்.

கார்த்திகை நட்சத்திரத்தின் மூன்றாம் பாதத்தில் ஒருவர் நோயுற்றிருந்தால் பதினைந்து நாட்களில் குணமாகுமாம்.

கார்த்திகை நட்சத்திரத்தின் நான்காம் பாதத்தில் ஒருவர் நோயுற்றிருந்தால் அந்த நோய் நாற்பத்தெட்டு நாட்களிலும் குணமாகுமாம். 

ரோகிணி நட்சத்திரத்தின் முதற்பாதத்தில் ஒருவர் நோயுற்றிருந்தால், அந்த நோய் பத்து நாளில் குணமாகுமாம்.

ரோகிணி நட்சத்திரத்தின் இரண்டாம் பாதத்தில் ஒருவர் நோயுற்றிருந்தால், அந்த நோய் பதினெட்டு நாட்களில் குணமாகும்.

ரோகிணி நட்சத்திரத்தின் மூன்றாம் பாதத்தில் ஒருவர் நோயுற்றிருந்தால், அந்த நோய் முப்பத்திரண்டு நாட்களில் குணமாகும். 

ரோகிணி நட்சத்திரத்தின் நான்காம் பாதத்தில் ஒருவர் நோயுற்றிருந்தால், அந்த நோய் எண்பத்திரண்டு நாட்களில் நலமாகுமாம். 

"முத்தான மான்றலையின் முதற்காலப்பா
முப்பது நாளான பின்பு தீரும்பாரு
சித்தான ரெண்டாங்கா லிருபத்தெட்டு
திரமான மூன்றாங்கால் பதினைந்தாமே.
ஆமேதான் நாலாங்கால் முப்பத்தைந்து
ஆடைவான ஆதிரைநாள் முதற்கா லொன்பான்
தாமேதான் ரெண்டாங்கால் மரணமாகும்
தயவாக மூன்றாங்கால் நாள்தான் பத்து
வாமேதான் நாலாங்கா லிருபத்தைந்து"

- புலிப்பாணி சித்தர்.

மிருகசீரிடம் நட்சத்திரத்தின் முதற்பாதத்தில் நோயுற்றிருந்தால் அந்த நோய் முப்பது நாட்கள் கடந்த பின்னர் நலமாகுமாம். 

மிருகசீரிடம் நட்சத்திரத்தின் இரண்டாம் பாதத்தில் நோயுற்றிருந்தால் அந்த நோய் இருபத்தியெட்டு நாட்களில் நலமாகுமாம். 

மிருகசீரிடம் நட்சத்திரத்தின்மூன்றாவது பாதத்தில் நோயுற்றிருந்தால் அந்த நோய் பதினைந்து நாட்களில் நலமாகுமாம்.

மிருகசீரிடம் நட்சத்திரத்தின்நான்காம் பாதத்தில் நோயுற்றிருந்தால் அந்த நோய் முப்பத்தைந்து நாட்களில் குணமாகுமாம். 

ஆதிரை நட்சத்திரத்தின் முதல் பாதத்தில் நோயுற்றிருந்தால் அந்த நோய் ஒன்பது நாட்களில் குணமாகுமாம். 

ஆதிரை நட்சத்திரத்தின் இரண்டாம் பாத்தில் உண்டானால் மரணமும் சம்பவிக்குமாம். 

ஆதிரை நட்சத்திரத்தின் மூன்றாம் பாதத்தில் நோயுற்றிருந்தால் அந்த நோய் பத்து நாட்களில் நலமாகுமாம். 

ஆதிரை நட்சத்திரத்தின் நான்காம் பாதத்தில் நோயுற்றிருந்தால் அந்த நோய் இருபத்தி ஐந்து  நாட்களிலும் நலமாகுமாம்.

"ஆமப்பா நாலாங்கால் மரணஞ் செய்யும்
ஆடைவான பூசமப்பா முதற்காலேழு
சேமப்பா ரெண்டாங்கால் பனிரண்டாகும்
சுகமான மூன்றாங்கா லொன்பதாகும்
காமப்பா நாலாங்க லிருபத்தேழு
கனிவான வாயிலிய முதற்கா லொன்பான்
வாமப்பா ரெண்டாங்கால் இருபதாகும்
வளமான மூன்றாங்கால் தொண்ணூறுதானே.
தானான நாலாங்கால் முப்பத்தொன்பான்
தயவான மகமுதற்கால் மரணஞ் செய்யும்
வானான ரெண்டாங்கால் முப்பதாகும்
வளமான மூன்றாங்கால் எண்பத்தைந்து
கூனான நாலாங்கால் நாள் தானைந்து"

- புலிப்ப்பாணிச் சித்தர்.

புனர்பூசம் நட்சத்திரத்தின் முதற்பாதத்தில் நோய் கண்டிருந்தால் அந்த நோயானது ஏழு நாட்களில் குணமாகுமாம். 

புனர்பூசம் நட்சத்திரத்தின் இரண்டாம் பாதத்தில் நோய் கண்டிருந்தால் அந்த நோயானது பத்து நாட்களில் குணமாகுமாம். 

புனர்பூசம் நட்சத்திரத்தின் மூன்றாம் பாதத்தில் நோய் கண்டிருந்தால் அந்த நோயானது பதினெட்டு நாட்களில் குணமாகுமாம்.

புனர்பூசம் நட்சத்திரத்தின் நான்காம் பாதத்தில் நோய் கண்டிருந்தால் மரணம் சம்பவிக்குமாம். 

பூசம் நட்சத்திரத்தின் முதற் பாதத்தில் நோய் உண்டானால் ஏழு நாட்களில் குணமாகுமாம். 

பூசம் நட்சத்திரத்தின் இரண்டாம் பாதத்தில் நோய் உண்டானால் பன்னிரண்டு நாட்களில் குணமாகுமாம். 

பூசம் நட்சத்திரத்தின் மூன்றாம் பாதத்தில் நோய் உண்டானால் எண்பது நாட்களில் குணமாகுமாம். 

பூசம் நட்சத்திரத்தின் நான்காம் பாதத்தில் நோய் உண்டானால் இருபத்தேழு நாட்களிலும் குணமாகுமாம். 

ஆயிலியம் நட்சத்திரத்தின் முதற் பாத்தில் நோய் ஏற்பட்டால் ஒன்பது நாட்களில் நலம் கிடைக்குமாம்.

ஆயிலியம் நட்சத்திரத்தின் இரண்டாம் பாதத்தில் நோய் ஏற்பட்டால் இருபது நாட்களில் நலம் கிடைக்குமாம்.

ஆயிலியம் நட்சத்திரத்தின் மூன்றாம் பாதத்தில் நோய் ஏற்பட்டால் தொண்ணூறு நாட்களில் நலம் கிடைக்குமாம்.

ஆயிலியம் நட்சத்திரத்தின் நான்காம் பாதத்தில் நோய் ஏற்பட்டால் முப்பதொன்பது நாட்களில் குணமாகிவிடுமாம். 

மகம் நட்சத்திரத்தின் முதற் பாதத்தில் நோய் கண்டால் மரணம் உண்டாகுமாம். 

இரண்டாம் பாதத்தில் நோய் கண்டால் முப்பது நாட்களில் குணமாகுமாம். 

மூன்றாம் பாதத்தில் நோய் கண்டால் அது குணமாக எண்பத்தைந்து நாட்கள் ஆகுமாம். 

நாலாம் பாதத்தில் நோய் கண்டால் அந்த நோய் ஐந்து நாட்களிலும் குணமாகுமாம். 

"குணம்பூர முதற்கால்தான் சாவுமாகும்
தேனான ரெண்டாங்கா லிருபத்தைந்தில்
சிறப்பான மூன்றாங்கா லிருபத்தாறே.
ஆறான நாலாங்கா லெண்பத் தொன்றாம்
அடைவான வுத்திரந்தான் முதற்காலெட்டு
வீறான ரெண்டாங்கால் முப்பதாகும்
விதமான மூன்றாங்கா லைம்பத்திரண்டாந்
தீரான நாலாங்கால் மரணமாகும்
திறமான அஸ்தமுதற்கால் தானெட்டு
கூறான ரெண்டாங்கால் பதினைந்தாகும்
குணமாக மூன்றாங்கா லிருபத்தெட்டே
எட்டான நாலாங்கா லெண்பத்தி ரெண்டு
எளிதான சித்திரையு முதற்கா லொன்பால்
நெட்டான ரெண்டாங்கால் பதினைந்தாகும்
நேரான மூன்றாங்கால் பன்னிரெண்டு
கிட்டான நாலாங்கால் நாற்பத்தொன்று
கெதியான சோதி முதற்கா லீராறு
குட்டான ரெண்டாங்கால் மரணஞ் செய்யுஞ்
குணமான மூன்றாங்கா லெண்பத்தெட்டே
எட்டான நாலாங்காற் பன்னி ரண்டு"

- புலிப்பாணி சித்தர்.

பூரம் நட்சத்திரத்தின் முதற்பாத்தில் உண்டானால் மரணம் சம்பவிக்குமாம். 

பூரம் நட்சத்திரத்தின் இரண்டாம் பாதமானால் இருபத்தைந்து நாட்களில் குணமாகுமாம். 

பூரம் நட்சத்திரத்தின் மூன்றாம் பாதமானால் இருபத்தாறு நாட்களில் குணமாகுமாம்.

பூரம் நட்சத்திரத்தின் நான்காம் பாதமானால் எண்பத்தியோரு நாட்களில் நலமாகுமாம். 

உத்திரம் நட்சத்திரத்தின் முதற் பாதத்தில் நோய் உண்டானால் எட்டு நாட்களில் குணமாகுமாம். 

உத்திரம் நட்சத்திரத்தின் இரண்டாம் பாதமானால் முப்பது நாட்களில் குணமாகுமாம். 

உத்திரம் நட்சத்திரத்தின்மூன்றாம் பாதமானால் ஐம்பத்திரண்டு நாட்களில் குணமாகுமாம். 

உத்திரம் நட்சத்திரத்தின் நான்காம் பாதமானால் மரணம் சம்பவிக்குமாம். 

அஸ்த நட்சத்திரத்தின் முதற் பாதத்தில் நோய் உண்டானால் எட்டு நாட்களில் குணமாகுமாம்.  

அஸ்த நட்சத்திரத்தின் இரண்டாம் பாதமானால் பதினைந்து நாட்களில் குணமாகுமாம்.  

அஸ்த நட்சத்திரத்தின் மூன்றாம் பாதமானால் இருபத்தெட்டு நாட்களிலும் குணமாகுமாம். 

அஸ்த நட்சத்திரத்தின் நான்காம் பாதமானால் எண்பத்திரண்டு நாட்களில் குணமாகுமாம். 

சித்திரை நட்சத்திரத்தின் முதற் பாகத்தில் நோய் கண்டால் ஒன்பது நாட்களில் குணமாகுமாம். 

சித்திரை நட்சத்திரத்தின் இரண்டாம் பாதமானால் பதினைந்து நாட்களில் குணமாகுமாம். 

சித்திரை நட்சத்திரத்தின் மூன்றாம் பாதமானால் பன்னிரண்டு நாட்களில் குணமாகுமாம். 

சித்திரை நட்சத்திரத்தின் நான்காம் பாதமானால் நாற்பத்தியொரு நாட்களில் நலமாகுமாம். 

சுவாதி நட்சத்திரத்தின் முதற் பாதத்தில் நோய் கண்டால் பன்னிரண்டு நாட்களில் குணமாகுமாம். 

சுவாதி நட்சத்திரத்தின் இரண்டாம் பாதமானால் மரணம் சம்பவிக்குமாம்.  

சுவாதி நட்சத்திரத்தின்மூன்றாம் பாதமானால் எண்பத்தி எட்டு நாளில் குணமாகுமாம்.

சுவாதி நட்சத்திரத்தின் நான்காம் பாதமானால் பன்னிரண்டு நாட்களில் நலமாகுமாம்.

"எழிலான விசாக முதற்கால்தா னொன்பான்
தட்டான ரெண்டாங்கால் நாந்தான் மூன்று
தயவான மூன்றாங்கால் நாற்பதாகும்
பட்டான நாலாங்கால் எண்பத்தொன்று
பாங்கான அனுஷமுதற் கால்தான்சாவு
சிட்டான ரெண்டாங்கா லிருபதப்பா
செயலான மூன்றாங்கால் தொண்ணூறுறென்னே
என்னவே நாலாங்கால் நாற்பதாகும்"

"எழிலான கேட்டை முதற்கால்தான் சாவு
நன்னவே ரெண்டாங்கா லிருபதப்பா
நாயகனே மூன்றாங்கால் முப்பத்தொன்று
வன்னவே நாலாங்கா லெண்பத்திரண்டு
வளமான மூல முதற்கால்தான் சாவு
அன்னவே ரண்டாங்கா லொன்பதாகும்"

"அடைவான மூன்றாங்கால் நாள்தான் பத்து
பத்தான நாலாங்கால் பதினெட்டாகும்
பண்பான பூராட முதற்கா லொன்பான்
சித்தான ரெண்டாங்கால் மரணஞ் செய்யுஞ்
செயலான மூன்றாங்கால் நாள்தான் பத்து
வித்தான நாலாங்காலும் பத்துநாலு
விதமான உத்திராட முதற்கா லேழு
நித்தான ரெண்டாங்கா லிருபதாகும்"

"நேரான மூன்றாங்கா லைம்பதாச்சே
ஆச்சப்பா நாலாங்கால் நாற்பதாகும்
அடைவான ஓணமுதற் பதினொன்றப்பா
பேச்சப்பா ரெண்டாங்கால் பத்துநாளாம்
பேதமில்லை மூன்றாங்கால் நாள்தானெட்டு
வீசப்பா நாலாங்கால் மரணம் செய்யும்"

விசாகம் நட்சத்திரத்தின் முதற் பாதத்தில் நோய் உண்டானால் எண்பது நாட்களில் நலமாகும். 

விசாகம் நட்சத்திரத்தின் இரண்டாம் பாதத்தில் நோய் உண்டானால் மூன்று நாட்களில் சுகமாகும். 

விசாகம் நட்சத்திரத்தின் மூன்றாம் பாதத்தில் நோய் உண்டானால் நாற்பது நாட்களில் குணமாகும். 

விசாகம் நட்சத்திரத்தின் நான்காம் பாதத்தில் நோய் உண்டானால் எண்பத்தொரு நாட்களில் அந்த நோய் தீருமாம். 

அனுஷம் நட்சத்திரத்தின் முதற் பாதத்தில் நோய் கண்டால் இறப்பு உண்டாகுமாம். 

அனுஷம் நட்சத்திரத்தின் இரண்டாம் பாதத்தில் நோய் கண்டால் இருபது நாட்களில் நலமாகுமாம். 

அனுஷம் நட்சத்திரத்தின் மூன்றாம் பாதத்தில் நோய் கண்டால் தொண்ணூறு நாட்களில் நலமாகுமாம்.

அனுஷம் நட்சத்திரத்தின் நாலாம் பாதத்தில் நோய் கண்டால் நாற்பது நாட்களில் நலமாகுமாம். 

கேட்டை நட்சத்திரத்தின் முதற் பாதத்தில் நோய் கண்டால் மரணம் சம்பவிக்குமாம். 

கேட்டை நட்சத்திரத்தின் இரண்டாம் பாதத்தில் நோய் கண்டால் இருபது நாட்களில் குணமாகும். 

கேட்டை நட்சத்திரத்தின் மூன்றாம் பாதத்தில் நோய் கண்டால் முப்பத்தி ஒன்று நாட்களில் குணமாகும். 

கேட்டை நட்சத்திரத்தின் நான்காம் பாதத்தில் நோய் கண்டால் எண்பத்திரண்டு நாட்களில் குணமாகுமாம். 

மூல நட்சத்திரத்தின் முதற் பாதத்தில் நோய் கண்டால் மரணம் உண்டாகுமாம். 

மூல நட்சத்திரத்தின் இரண்டாம் பாதத்தில் நோய் கண்டால் எண்பது நாட்களில் குணமாகுமாம். 

மூல நட்சத்திரத்தின் மூன்றாம் பாதத்தில் நோய் கண்டால் பத்து நாட்களிலும் குணமாகுமாம்.

மூல நட்சத்திரத்தின் நான்காவது பாதத்தில் நோய் கண்டால் பதினெட்டு நாட்களிலும் குணமாகுமாம். 

பூராட நட்சத்திரத்தின் முதல் பாதத்தில் நோய் கண்டால் ஒன்பது நாளில் குணமாகுமாம். 

பூராட நட்சத்திரத்தின் இரண்டாம் பாதத்தில் நோய் கண்டால் மரணம் சம்பவிக்குமாம்.

பூராட நட்சத்திரத்தின் மூன்றாம் பாதத்தில் நோய் கண்டால் பத்து நாட்களில் குணமுண்டாகும். 

பூராட நட்சத்திரத்தின் நான்காம் பாதத்தில் நோய் கண்டால் பதினைந்து நாட்களில் நலமாகுமாம். 

உத்திராட நட்சத்திரத்தின் முதற் பாதத்தில் நோய் கண்டால் ஏழு நாட்களில் நலமாகும். 

உத்திராட நட்சத்திரத்தின் இரண்டாம் பாதத்தில் நோய் கண்டால் இருபது நாட்களில் நலமாகும். 

உத்திராட நட்சத்திரத்தின் மூன்றாம் பாதத்தில் நோய் கண்டால் ஐம்பது நாட்களிலும் குணமாகுமாம்.

உத்திராட நட்சத்திரத்தின் நாலாவது பாதத்தில் நோய் கண்டால் முப்பத்தொன்பது நாளில் நலமாகுமாம். 

திருவோண நட்சத்திரத்தின் முதல் பாதத்தில் நோய் கண்டால் பதினோரு நாட்களில் குணமாகும்.

திருவோண நட்சத்திரத்தின் இரண்டாம் பாதத்தில் நோய் கண்டால் பத்து நாட்களில் நலமாகுமாம். 

திருவோண நட்சத்திரத்தின் மூன்றாம் பாதத்தில் நோய் கண்டால் எட்டு நாட்களில் நலமாகுமாம். 

திருவோண நட்சத்திரத்தின் நான்காம் பாதத்தில் நோய் உண்டானால் மரணம் நிகழுமாம். 

"விதமான அவிட்டமுதல் கால்தானொன்பான்
நீச்சப்பா ரெண்டாங்கால் பதினைந்தாகும்
நிசமான மூன்றாங்கால் முப்பத்திரண்டே
இரண்டான நாலாங்கால் முப்பத்தொன்பான்
நிசமான சதய முதற்கால் தானேழு
வண்டான ரெண்டாங்கால் பத்தாம்பாரு
வளமான மூன்றாங்கால் நாள்தானாலு
திண்டான நாலாங்கால் நாள்தா னைந்து
திறமான பூரட்டாதி முதற்கால் சாவு
கொண்டான ரெண்டாங்கால் பதினாறாகும்
குணமான மூன்றாங்கா லெண்பத்தொன்றே
ஒன்றான நாலாங்கால் நாற்பத்தொன்று
ஒளிவுத்திரட்டாதி முதற்கா லேழு
நன்றான விரண்டாங்கால் பதினெட்டாகும்
நலமான மூன்றாங்கா லேழாம்பாரு
குன்றான நாலாங்கா லிருபத்தெட்டாம்
குணமான ரேவியு முதற்கால் சாவு
அண்டான ரெண்டாங்கால் பதினொன்றப்பா
அடைவான மூன்றாங்கால் பதினெட்டாம்
ஆமேதான் நாலாங்கால் லிருபத்தாறு
அடைவான மரணமென்ன நாள்தான் சொல்வேன்"

- புலிப்பாணிச் சித்தர்.

அவிட்டம் நட்சத்திரத்தின் முதற் பாதத்தில் நோய் கண்டால் ஒன்பது நாட்களில் குணமாகும். 

அவிட்டம் நட்சத்திரத்தின் இரண்டாம் பாதத்தில் நோய் கண்டால் பதினைந்து நாட்களில் குணமாகும். 

அவிட்டம் நட்சத்திரத்தின் மூன்றாம் பாதத்தில் நோய் கண்டால் முப்பத்தியிரண்டு நாட்களில் குணமாகுமாம்.

அவிட்டம் நட்சத்திரத்தின் நான்காம் பாதத்தில் நோய் கண்டால் முப்பத்தொன்பது நாட்களில் குணமாகுமாம். 

சதயம் நட்சத்திரத்தின் முதற் பாதத்தில் நோய் கண்டால் ஏழு நாட்களில் குணமாகும். 

சதயம் நட்சத்திரத்தின் இரண்டாம் பாதத்தில் நோய் கண்டால் பத்து நாட்களில் குணமாகும். 

சதயம் நட்சத்திரத்தின் மூன்றாம் பாதத்தில் நோய் கண்டால் நான்கு நாட்களில் குணமாகும். 

சதயம் நட்சத்திரத்தின் நாலாம் பாதத்தில் நோய் கண்டால் ஐந்து நாட்களிலும் நலமாகுமாம். 

பூரட்டாதி நட்சத்திரத்தின் முதற் பாதத்தில் நோய் கண்டால் மரணம் சம்பவிக்குமாம். 

பூரட்டாதி நட்சத்திரத்தின் இரண்டாம் பாதத்தில் நோய் கண்டால் பதினாறு நாட்களில் குணமாகும். 

பூரட்டாதி நட்சத்திரத்தின் முண்றாம் பாதத்தில் நோய் கண்டால் எண்பத்தொரு நாட்களிலும் நலமாகுமாம்.

பூரட்டாதி நட்சத்திரத்தின் நான்காம் பாதத்தில் நோய் கண்டால் நாற்பத்தியொரு நாட்களிலும் குணமாகுமாம். 

உத்திரட்டாதி நட்சத்திரத்தின் முதற் பாதத்தில் நோய் கண்டால் ஏழு நாட்களில் குணமாகுமாம். 

உத்திரட்டாதி நட்சத்திரத்தின் இரண்டாம் பாதத்தில் நோய் கண்டால் பதினெட்டு நாட்களில் குணமாகும். 

உத்திரட்டாதி நட்சத்திரத்தின் மூன்றாம் பாதத்தில் நோய் கண்டால் ஏழு நாட்களில் குணமாகும். 

உத்திரட்டாதி நட்சத்திரத்தின் நான்காம் பாதத்தில் நோய் கண்டால் இருபத்தெட்டு நாட்களிலும் குணமாகுமாம். 

ரேவதி நட்சத்திரத்தின் முதற் பாதத்தில் நோய் கண்டால் மரணம் சம்பவிக்குமாம். 

ரேவதி நட்சத்திரத்தின் இரண்டாம் பாதத்தில் நோய் கண்டால் பதினோறு நாட்களில் குணமாகும்.

ரேவதி நட்சத்திரத்தின் மூன்றாம் பாதத்தில் நோய் கண்டால் பதினெட்டு நாட்களில் நலமாகுமாம்.

ரேவதி நட்சத்திரத்தின் நான்காம் பாதத்தில் நோய் கண்டால் இருபத்தி ஆறு நாட்களில் நலமாகுமாம். 

இனி ஒவ்வொரு கிழமைக்கும் ஆகாத நாட்களை பற்றிய புலிப்பாணிச் சித்தரின் தெளிவை பார்ப்போம். 

"வாமேநீ அருக்கனாள் பரணியாகா
வளமான திங்கட் சித்திரையு மாகா
தாமேநீ செவ்வாய்க்கு முத்திராடந்
தயவான புதனுக்கு மஸ்தமாகா
நாமேநீ குருநாள்தான் கேட்டையாகா
நலமான புகர்நாள் பூராடந் தீதே.
தீதான சனிநாள் ரேவதியுமான
தீங்குவரு மிந்நாளில் நோய்கள் கண்டால்
வாதான நமனுக்கே அறுதியாகும்
வந்தநோய் தீராது கொல்லுங் கொல்லுந்
தானான வயித்தியரே நூலைப் பார்த்துத் 
தயவாக வைத்தியங்கள் செய்யவேணும்
கோனான போகருட கடாட்சத்தாலே
கொற்றவனே புலிப்பாணி சொன்னேன் பாரே"

- புலிப்பாணிச் சித்தர்.

ஞாயிற்றுக் கிழமை பரணி நட்சத்திரம் ஆகாது.
திங்கட்கிழமை சித்திரை நட்சத்திரம் ஆகாது.
செவ்வாய்கிழமை உத்திராட நட்சத்திரம் ஆகாது.
புதன்கிழமை அஸ்த நட்சத்திரம் ஆகாது.
வியாழக்கிழமை கேட்டை நட்சத்திரம் ஆகாது.
வெள்ளிக் கிழமை பூராடம் நட்சத்திரமும் ஆகாது.
சனிக்கிழமையில் ரேவதி நட்சத்திரம் ஆகாது.

இந்த கெட்ட நாட்களில் நோய்கள் உண்டானால் எமன் நெருங்கும் நாளாகும் என்கிறார். இந்த தகவல்களை குருநாதர் போகருடைய கடாட்சத்தினால் புலிப்பாணியாகிய தான் கூறுகிறேன் என்கிறார்.
சித்த மருத்துவத்தைப் பொறுத்தவரையில் நோயாளியை மருத்துவரிடம் கொண்டு வரும் நேரம், அல்லது நோயாளியின் இடத்துக்கு மருத்துவரை அழைத்துப் போக ஆட்கள் வரும் நேரத்தை வைத்து நோயின் தன்மையை கணித்து அதற்கு தக்க சிகிச்சையை அளிக்க இந்த சகுன சாத்திரம் உதவியிருக்கிறது.

Comments

Popular Posts

அருள்வெளி சித்தர் 108 போற்றி

பரம்பொருள் அருட்பெரும் ஜோதி ஓம் ஸ்ரீ அருள்வெளி சித்தர் பரம்பொருள் அருட்பெரும் ஜோதி ஓம் ஸ்ரீ அருள்வெளி சித்தர் ஓம் ஸ்ரீ அருள்வெளி சித்தர் 108 போற்றி 1. அன்பே உருவான அருள்வேளிக் சித்தனே போற்றி ! 2. அகர முதலாய் அமர்ந்தாய் போற்றி ! 3. அறிவிற் கறிவான ஆதுவிதனே போற்றி ! 4. அறத்தின் வடிவே ஐயனே போற்றி ! 5. அடிமை எமைக் காக்கும் அத்தா போற்றி ! 6. அனாதிப் பரம்பொருள் ஆயினே போற்றி ! 7. அமரர் வணங்கும் அரியே போற்றி ! 8. அண்டினோர்க் காதரவு அளிப்பாய் போற்றி ! 9. அன்பே சிவமேன் றறிந்தாய் போற்றி ! 10. அன்பே சிவமாய் அமர்ந்தாய் போற்றி ! 11. அடக்கம் ஆன  சிவமே போற்றி ! 12. ஆனந்த வடிவச் சித்தனே போற்றி ! 13. ஆகாயம் எல்லாம் அளந்தாய் போற்றி ! 14. ஆதியே போற்றி சோதியே போற்றி ! 15. ஆலத்தை அமுதாய் ஆக்குவை போற்றி ! 16. ஆருரிச் சிவமே அழகா போற்றி ! 17. ஆசை வித்த அரனே போற்றி ! 18. ஆணவ மாயை அழித்தாய் போற்றி ! 19. ஆவியில் உறையும் ஐயா போற்றி ! 20. ஆத்தும தத்துவம் அறிவிப்பாய் போற்றி ! 21. ஆலமர் செல்வ அரசே போற்றி ! 22. இகர மாகி எழுந்தாய் போற்றி ! 23. இறைவி இறைவன் வடிவே போற்றி ! 24. இகபர சுகங்கள் தருவாய் ...

அகத்தியர் கூறும் பீஜ மந்திரங்களும் அவற்றின் பலன்களும்

அகத்தியர் கூறும் பீஜ மந்திரங்களும் அவற்றின் பலன்களும்! அகத்தியர் திருமந்திர விளக்கம் 22 என்னும் பாடலில் திருமந்திரமாகிய பஞ்சாக்ஷர மந்திரத்தைப் பற்றி, தத்புருஷம், அகோரம் ஆகிய முகங்கள் ஒவ்வொன்றிற்கும் இருபத்தைந்து வகைகளையும் வாமதேவ முகத்திற்கு ஒன்பது வகைகளையும், ஆக மொத்தம் 59 வகைகள் பற்றி மட்டுமே பாடலில் அகத்தியர் கூறுகிறார். தவிர ஒவ்வொரு வகை மந்திரத்தை உச்சரிப்பதனால் என்ன பலன் என்றும் கூறப்பட்டுள்ளது. தத்புருஷ முகத்தைச் சார்ந்த 25 வகை மந்திரங்களும் அவற்றை ஓதுவதால் உண்டாகும் பயன்கள் பற்றியும் செய்யுள் 5லிருந்து 11வரை அகத்தியர் பார்த்திடவே தற்புருஷம் இருபத் தஞ்சு பாடுகிறேன் நமசிவய அகோர மாகும். (செய்யுள்.5) என்று கூறுகிறார். அவையாவன: மந்திரம் பலன் 1. நங்-சிவயநம - விரும்பிய புத்திர பாக்கியம் கிடைக்கும். 2. அங்-சிவயநம - இயல்பாகத் தேக நோய் தீரும் 3. வங்-சிவயநம - யோகசித்தி காணலாகும். 4. உங்-சிவயநம - ஆயுள் விருத்தி 5. ஓம்-அங்-சிவயநம - ஐம்பூதங்களின் மேல் கட்டுப்பாடு உண்டாகும். 6. கிலி-நமசிவய - உலக வசியம் உண்டாகும். 7. ஹிரீம்-நமசிவய - நினைத்தது நடக்கும். 8. ஐ-உம்-நமசிவய - புத்தி, வித்தை நல்கும். ...

வர்மம் varmam

வர்மங்களின் வகைகள்..! வர்மக் கலையை அகத்தியர் நான்கு பெரும் பிரிவுகளாய் பிரித்திருக்கிறார். உடலில் உள்ள வர்ம புள்ளிகள் மற்றும், அவற்றை கையாளும் விதத்தினால் இவற்றை வேறு படுத்துகிறார். இவை “படு வர்மம்”, ”தொடு வர்மம்”, ”தட்டு வர்மம்”, ”நோக்கு வர்மம்” படுவர்மம் நான்கு வகை வர்மங்களில் மிகவும் ஆபாயகரமான பிரிவு இதுவேயாகும். உடலிலுள்ள வர்மப் பகுதிகளில் அடியோ அல்லது தாக்குதலோ ஏற்படுமானால் அப்போது ஏற்படும் வர்மமே "படுவர்மம்" என்கிறார். இந்த படுவர்ம தாக்குதலுக்கு உள்ளாகும் நபர்கள் உயிரிழக்கும் வாய்ப்புக்கள் அதிகம் உள்ளதால் இவை மிகவும் ஆபத்தானவை என்று அகத்தியர் குறிப்பிடுகிறார். ஒரு மனிதன் படுவர்மப் புள்ளிகளில் அடிபட்டால் உடனடியாக மயங்கி விழுவான் என்றும், அவன் வாய் பிளந்து நாக்கு வெளியே தள்ளும், வாயில் நுரையும் வெளியேறும் அத்துடன் அந்த அடிபட்ட இடங்களில் கைவைத்து பார்த்தால் அந்த இடம் மிகவும் குளிர்ச்சியாகக் காணப்படும் என்றும் குறிப்பிடுகிறார். எல்லோராலும் இதை செய்திட முடியாது என்றும், மிகுந்த பயிற்சி உள்ள ஒருவரால் மட்டுமே இத்தகைய செயல்களை செய்திட முடியும் என்றும் கூறுகிறார். தொடு...

இயற்பியல் பிரபஞ்சமும் தூய ஆற்றல் குண்டலினி

இயற்பியல், பிரபஞ்சமும்  தூய ஆற்றல், உலகளாவிய வெப்பநிலை மாறுபாடுகள், நீராவியின் மாறுபாடுகள், அதிர்வுகளின் அவதானிப்புகள், நமது சித்தாந்த தியான நிலை குண்டலினி ஆற்றல் தொடர்பும்.  ஒரு மின்காந்த புலம் என்பது காந்த மற்றும் மின்சார ஆற்றலால் நிரப்பப்பட்ட இடத்தின் ஒரு பகுதி. மின்காந்த புலங்கள் எல்லா இடங்களிலும் உள்ளன. எக்ஸ்-கதிர்கள் மற்றும் காமா கதிர்கள் போன்ற உயர் அதிர்வெண் மின்காந்த கதிர்வீச்சு “ அயனியாக்கம் ” மற்றும் மக்களுக்கு தீங்கு விளைவிக்கும், அதே நேரத்தில் குறைந்த அதிர்வெண் கொண்ட மின்காந்த கதிர்வீச்சு அல்லது “ அல்லாத அயனியாக்கம்,” மனிதர்களுக்கு பாதுகாப்பானதாகக் கருதப்படுகிறது, அல்லது சில மனித நோய்களுக்கு கூட ஒரு தீர்வாக கருதப்படுகிறது. பூமியைச் சுற்றியுள்ள மின்காந்த புலம் நம் உடலை அடைந்து அதன் உள்ளே இருக்கும் கட்டணங்களை பாதிக்கிறது. நம் உடல்கள் அதன் சொந்த மின்னியல் புலத்தைக் கொண்டுள்ளன. டி.என்.ஏவின் துகள்கள் கூட மின்காந்த புலங்களை உருவாக்க முடியும். அந்த அலைகள் நம் உடலின் உள் கடிகாரத்தை பிரதானமாக்குகின்றன மற்றும் தூக்க முறைகள் மற்றும் ஹார்மோன் சுரப்பை பாதிக்கின்றன. ஆல்பா மூளை அ...

தமிழில் உள்ள மயங்கொலிச்சொற்கள்

தமிழில் உள்ள மயங்கொலிச்சொற்கள்  அணல் - தாடி, கழுத்து அனல் - நெருப்பு அணி - அழகு அனி - நெற்பொறி அணு - நுண்மை அனு - தாடை, அற்பம் அணுக்கம் - அண்டை, அண்மை. அனுக்கம் - வருத்தம், அச்சம் அணை - படுக்கை, அணைத்துக் கொள்ளுதல் அனை - அன்னை, மீன் அணைய - சேர, அடைய அனைய - அத்தகைய அண்மை - அருகில் அன்மை - தீமை, அல்ல அங்கண் - அவ்விடம் அங்கன் - மகன் அண்ணம் - மேல்வாய் அன்னம் - சோறு, அன்னப்பறவை அண்ணன் - தமையன் அன்னன் - அத்தகையவன் அவண் - அவ்வாறு அவன் - சேய்மைச் சுட்டு, ஆண்மகன் ஆணகம் - சுரை ஆனகம் - துந்துபி ஆணம் - பற்றுக்கோடு ஆனம் - தெப்பம், கள் ஆணி - எழுத்தாணி, இரும்பாணி ஆனி - தமிழ் மாதங்களுள் ஒன்று ஆணேறு -ஆண்மகன் ஆனேறு - காளை, எருது ஆண் - ஆடவன் ஆன் - பசு ஆணை - கட்டளை, ஆட்சி ஆனை - யானை இணை - துணை, இரட்டை இனை - இன்ன, வருத்தம் இணைத்து - சேர்த்து இனைத்து - இத்தன்மையது இவண் - இவ்வாறு இவன் - ஆடவன், (அண்மைச் சுட்டு) ஈணவள் - ஈன்றவள் ஈனவள் - இழிந்தவள் உண் - உண்பாயாக உன் - உன்னுடைய உண்ணல் - உண்ணுதல் உன்னல் - நினைத்தல் உண்ணி - உண்பவன், ஒருவகைப் பூச்சி உன்னி - நினைத்து, குதிரை ஊண் - உணவு ஊன் - மாமிசம் எண்ண - நினைக்...