தோலில் ஏற்படும் தொற்று நோய்களில் முதன்மையானது “படர்தாமரை” எனப்படும் ஒரு வகையான தேமல் ஆகும். இது உச்சந்தலை, முகம், பிறப்பு உறுப்புகள் ஆகிய இடங்களில் படர்ந்து பரவும் தன்மையுடைய தொற்று நோயாகும்.
இத்தகைய தேமல் பரவிய இடங்களில் தோல் நிறமாற்றம் அடைந்து அடர் கருப்பு நிறமாகி விடும். தீராத அரிக்கும் தன்மை உடைய இதனை சொறிந்து விட்டால் அதிலிருந்து வெளியாகும் நீர்மத்தினால் இது மேலும் உடலின் மற்ற பாகங்களில் பரவிடும். பெரும்பாலும் உடல் சுத்தம் மற்றும் உடைச் சுத்தம் இல்லாதவர்களுக்கே இத்தகைய தொற்று உண்டாகிறது.
தற்போதைய நவீன மருத்துவம் இந்த பிரச்சினைக்கு நல்ல பல தீர்வுகளை அளிக்கிறது. இருப்பினும் இந்த நோய்க் கிருமிகள் உடலின் உள்ளுறையும் தன்மையுடவை என்பதால் தொடர் சிகிச்சையினால் மட்டுமே முழுமையான தீர்வு கிடைக்கும். இது செலவு பிடிக்கக் கூடியது.
இந்த படர்தாமரை பிரச்சினைக்கு அகத்தியர் அருளிய தீர்வு ஒன்றினை பார்ப்போம். "அகத்தியர் வைத்தியகாவியம்" என்னும் நூலில் இருந்து இந்தக் குறிப்பு எடுக்கப் பட்டது.
"சாகுமாம் படு தாமரைக்குக்கேளு
சாதக மாம்வேரின் பட்டை
காவதிக மதுக்காரை வேரும்வித்தும்
கழஞ்சிரண்டு பழச்சாற்றில் கரையஆட்டே
ஆட்டியே பாக்களவாய் மூன்றுகட்டி
யப்பனே யுள்ளுக்கும் மேலும்பூசு
வாட்டியே யுதிர்ந்துவிடும் பாரே."
- அகத்தியர்.
மாமரத்தின் வேரின் பட்டையும், மதுக்காரை வேரும் அதன் விதையும் ஆகியவற்றை சம அளவில் எடுத்து தூளாக்கிக் கொள்ளவேண்டும். பின்னர் இவற்றில் இரண்டு கழஞ்சு அளவில் எடுத்து பழச்சாறு விட்டு நன்கு அரைத்து பாக்களவு உருண்டைகளாக மூன்று உருண்டைகள் உருட்டி உண்ணவேண்டுமாம். மிகுதியை படர்தாமரை பாதிப்பு உண்டான இடங்களில் பூசிவர குணமாகும் என்கிறார்.
மேலே சொன்ன மூலிகைகள் அனைத்தும் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கிறது. விலையும் மிக மலிவுதான். தேவை உள்ளவர்கள் தகுதியான சித்த மருத்துவரின் ஆலோசனை பெற்று இயற்கையான இந்த மருந்தினை நாம் வீட்டிலேயே தயாரித்து பலன் பெறலாம்.
குறிப்பு : ஒரு கழஞ்சி என்பது சற்றேற 5 கிராம் ஆகும்.
இத்தகைய தேமல் பரவிய இடங்களில் தோல் நிறமாற்றம் அடைந்து அடர் கருப்பு நிறமாகி விடும். தீராத அரிக்கும் தன்மை உடைய இதனை சொறிந்து விட்டால் அதிலிருந்து வெளியாகும் நீர்மத்தினால் இது மேலும் உடலின் மற்ற பாகங்களில் பரவிடும். பெரும்பாலும் உடல் சுத்தம் மற்றும் உடைச் சுத்தம் இல்லாதவர்களுக்கே இத்தகைய தொற்று உண்டாகிறது.
தற்போதைய நவீன மருத்துவம் இந்த பிரச்சினைக்கு நல்ல பல தீர்வுகளை அளிக்கிறது. இருப்பினும் இந்த நோய்க் கிருமிகள் உடலின் உள்ளுறையும் தன்மையுடவை என்பதால் தொடர் சிகிச்சையினால் மட்டுமே முழுமையான தீர்வு கிடைக்கும். இது செலவு பிடிக்கக் கூடியது.
இந்த படர்தாமரை பிரச்சினைக்கு அகத்தியர் அருளிய தீர்வு ஒன்றினை பார்ப்போம். "அகத்தியர் வைத்தியகாவியம்" என்னும் நூலில் இருந்து இந்தக் குறிப்பு எடுக்கப் பட்டது.
"சாகுமாம் படு தாமரைக்குக்கேளு
சாதக மாம்வேரின் பட்டை
காவதிக மதுக்காரை வேரும்வித்தும்
கழஞ்சிரண்டு பழச்சாற்றில் கரையஆட்டே
ஆட்டியே பாக்களவாய் மூன்றுகட்டி
யப்பனே யுள்ளுக்கும் மேலும்பூசு
வாட்டியே யுதிர்ந்துவிடும் பாரே."
- அகத்தியர்.
மாமரத்தின் வேரின் பட்டையும், மதுக்காரை வேரும் அதன் விதையும் ஆகியவற்றை சம அளவில் எடுத்து தூளாக்கிக் கொள்ளவேண்டும். பின்னர் இவற்றில் இரண்டு கழஞ்சு அளவில் எடுத்து பழச்சாறு விட்டு நன்கு அரைத்து பாக்களவு உருண்டைகளாக மூன்று உருண்டைகள் உருட்டி உண்ணவேண்டுமாம். மிகுதியை படர்தாமரை பாதிப்பு உண்டான இடங்களில் பூசிவர குணமாகும் என்கிறார்.
மேலே சொன்ன மூலிகைகள் அனைத்தும் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கிறது. விலையும் மிக மலிவுதான். தேவை உள்ளவர்கள் தகுதியான சித்த மருத்துவரின் ஆலோசனை பெற்று இயற்கையான இந்த மருந்தினை நாம் வீட்டிலேயே தயாரித்து பலன் பெறலாம்.
குறிப்பு : ஒரு கழஞ்சி என்பது சற்றேற 5 கிராம் ஆகும்.

Comments
Post a Comment