சித்தர்கள் குறிப்பிட்ட மதத்துக்கோ, மொழிக்கோ, இனத்திற்கோ சொந்தமானவர்கள் இல்லை. சுருங்கச் சொல்வதாயின் அவர்கள் அரும்பசியை தீர்க்கும் உணவைப் போன்றவர்கள். உணவிற்கு பசியை தீர்க்கத்தான் தெரியும் என்பதைப் போல, தாங்கள் வாழ்ந்த சமூகத்தை நல்வழிப்படுத்த மட்டுமே சித்தர்கள் முயன்றார்கள்.
உயர்ந்த மெய்ஞான தேடலில் ”மெய்யுணர்வு” நிலையான இறை நிலையை உணர்ந்தவர்கள் அனைவருமே சித்தர்கள்தான், இதனை இந்து மதத்தில் முக்தி நிலை என்கின்றனர். இஸ்லாத்தில் இதனை ”தாவ்ஹீத்” என்றழைக்கின்றனர்.
இத்தகைய உயர் நிலையினை எய்தியவர்களே இஸ்லாத்தில் ”நபிமார்கள்” என்று அழைக்கிறார்கள். இவர்கள் உலக மக்களை உய்விக்க பல முயற்சிகளைச் செய்து இன்றும் நம்மிடையே வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். பூவுலகில் மக்களின் மனதில் அன்பும், சகோதரத்துவம் நிலைத்திருக்கவும், நீடிக்கவும் வழி காட்டும் இவர்களை மக்கள் இறை தூதர் என போற்றுகின்றனர்.
இதற்கு ஆதாரமாக யாகோபு சித்தரின் ”யாகோபு சுண்ணகாண்டம்” என்னும் நூலின் கடவுள் வணக்கப் பாடலைப் பார்க்கலாம்...
"ஆனந்தமாய் நிறைந்த அல்லா பாதம்
அடுத்துநின்ற அடுத்துநின்ற சித்தநபிமார்கள்
பாதம்போற்றி தானந்த மகமதுவை தொழுது
போற்றி தாட்டிகமாய் சுண்ணமென்ற காண்டம்
தன்னை வானந்த மாகவே அறுநூறாக
வகயாகப் பாடினேன் வண்மையாகக்
கோனந்த மெய்ப்பொருளா மின்னூல்தன்னை
குறிப்பாகப் பாடினேன் கூர்ந்து பாரே"
- யாகோபுச் சித்தர் -
எங்கும் ஆனந்தமாய் நிறைந்து நிற்கின்ற அல்லாவின் பாதங்களையும், அல்லாவின் வழிநடக்கின்ற சித்தர்களான நபிமார்களின் பாதங்களையும் தானே தானாய் நின்ற முகமதுவின் பாதங்களையும் போற்றி உறுதியுடன் சுண்ணமென்ற இந்தக் காண்டத்தை உண்மையுடன் பாடினேன். உண்மைப் பொருளான இன் நூலை மிகவும் குறிப்புடன் பாடினேன் ஆழ்ந்து கவனித்துப்பார் என்று தனது நூலை தொடங்குகிறார்.
இதன் மூலம் இஸ்லாம் மதத்தில் தெய்வத்தன்மை பொருந்திய சித்த புருசர்களை நபிமார்கள் என்றழைக்கிறார்கள் என்பது புலனாகிறது.
உயர்ந்த மெய்ஞான தேடலில் ”மெய்யுணர்வு” நிலையான இறை நிலையை உணர்ந்தவர்கள் அனைவருமே சித்தர்கள்தான், இதனை இந்து மதத்தில் முக்தி நிலை என்கின்றனர். இஸ்லாத்தில் இதனை ”தாவ்ஹீத்” என்றழைக்கின்றனர்.
இத்தகைய உயர் நிலையினை எய்தியவர்களே இஸ்லாத்தில் ”நபிமார்கள்” என்று அழைக்கிறார்கள். இவர்கள் உலக மக்களை உய்விக்க பல முயற்சிகளைச் செய்து இன்றும் நம்மிடையே வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். பூவுலகில் மக்களின் மனதில் அன்பும், சகோதரத்துவம் நிலைத்திருக்கவும், நீடிக்கவும் வழி காட்டும் இவர்களை மக்கள் இறை தூதர் என போற்றுகின்றனர்.
இதற்கு ஆதாரமாக யாகோபு சித்தரின் ”யாகோபு சுண்ணகாண்டம்” என்னும் நூலின் கடவுள் வணக்கப் பாடலைப் பார்க்கலாம்...
"ஆனந்தமாய் நிறைந்த அல்லா பாதம்
அடுத்துநின்ற அடுத்துநின்ற சித்தநபிமார்கள்
பாதம்போற்றி தானந்த மகமதுவை தொழுது
போற்றி தாட்டிகமாய் சுண்ணமென்ற காண்டம்
தன்னை வானந்த மாகவே அறுநூறாக
வகயாகப் பாடினேன் வண்மையாகக்
கோனந்த மெய்ப்பொருளா மின்னூல்தன்னை
குறிப்பாகப் பாடினேன் கூர்ந்து பாரே"
- யாகோபுச் சித்தர் -
எங்கும் ஆனந்தமாய் நிறைந்து நிற்கின்ற அல்லாவின் பாதங்களையும், அல்லாவின் வழிநடக்கின்ற சித்தர்களான நபிமார்களின் பாதங்களையும் தானே தானாய் நின்ற முகமதுவின் பாதங்களையும் போற்றி உறுதியுடன் சுண்ணமென்ற இந்தக் காண்டத்தை உண்மையுடன் பாடினேன். உண்மைப் பொருளான இன் நூலை மிகவும் குறிப்புடன் பாடினேன் ஆழ்ந்து கவனித்துப்பார் என்று தனது நூலை தொடங்குகிறார்.
இதன் மூலம் இஸ்லாம் மதத்தில் தெய்வத்தன்மை பொருந்திய சித்த புருசர்களை நபிமார்கள் என்றழைக்கிறார்கள் என்பது புலனாகிறது.
இராமதேவர் என அழைக்கப் பட்டவரே பின்னர் இஸ்லாமிய கோட்பாடுகளில் ஆழ்ந்து தன்னை யாக்கோபு சித்தர் என அழைத்துக் கொண்டதாக தகவல்கள் கூறுகின்றன. இவர் அழகர் கோவிலில் சமாதி அடைந்ததாக தெரிகிறது.
அடுத்த பதிவில் இது தொடர்பான வேறு சில தகவல்களுடன், இஸ்லாத்தில் இரசமணி எவ்வாறு பயன்படுத்தப்பட்டது என்பதையும் பார்ப்போம்.
பின்குறிப்பு: எனது வாசிப்பனுபவத்தின் தெளிவுகளையே இங்கே பகிர்ந்து கொண்டிருக்கிறேன். பதிவின் கருத்துக்கள் எவரது நம்பிக்கையினையும் புண்படுத்துவதாக இருப்பின் சுட்டிக் காட்டினால் திருத்திக் கொள்ளவும், வருத்தங்களை பகிரவும் தயாராக இருக்கிறேன்.
இஸ்லாமும் ரசமணியும்.!
ஏழாம் நூற்றாண்டு முதலே தமிழகத்தில் இஸ்லாமிய மதம் இருந்ததற்கான சான்றுகள் கிடைத்திருக்கின்றன. “சோனகர்”,”துலுக்கர்” என கல்வெட்டுக்களிலும், மெய்கீர்த்திகளிலும் இஸ்லாமியர்கள் குறித்த பல விவரங்கள் காணக் கிடைக்கின்றன.
யாகோபு சித்தர் தனது நூலில் இரசமணி தயாரிக்கும் விதத்தினையும், அதனை பிரார்த்தனைக்கு பயன் படுத்துவதன் மூலம் கிடைக்கும் பலன்களையும் கூறியிருக்க்றார்.இந்த பதிவில் இரசமணியின் பயன் பாட்டினைப் பற்றி கூறிய விவரங்களை மட்டும் பார்ப்போம்.
"பார்த்தியே சூதமது கட்டிப் போகும்
பதிவான இருபத் தொரு மணிகள் செய்து
வாத்தியே தமரிட்டு நூலில் கோர்த்து
வடிவாக கைதனிலே வைத்துக் கொள்ளே
வைத்துமே பிசுமில்லா ரகுமானென்று
வகையான கலிமாவை ஓதித் தீரு
மைத்துமே நாளொன்றுக் கொன்று தானும்
நாடியே முப்போதும் தொழுது போற்று
பைத்துமே இப்படிக்கு தொழுதாயானால்
பதிவாக நபிமார்போ லிருக்க லாகும்"
- யாகோபுச் சித்தர் -
ரசமானது கட்டியாகும், அதை எடுத்து இருபத்திதோரு மணிகளாக உருட்டி ஓட்டை போட்டு நூலிலே கோர்த்து, கையிலே வைத்துக் கொண்டு "பிஸ்மில்லா ரகுமான்" என்று கலிமாவை ஓதிக்கொண்டிரு, இப்படியே ஒவ்வொரு நாளும் முப்பொழுதும் அதாவது மூன்று வேளையும் தொழுது வணங்கி வந்தால் நபிமார்கள் கூட்டத்தில் நீயும் ஒருவனாவாய்!.....என்கிறார்.
இரசமணியின் மகத்துவத்தை உணர்த்தும் இன்னொரு சான்றாக இதைக் கொள்ளலாம்.
பழந்தமிழ் சித்தர்களில் இஸ்லாமிய மதநெறிகளை பின் பற்றி வாழ்ந்த ஒரு சித்தர் பெருமகனைப் பற்றி பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. யாகோபு சித்தர் என அழைக்கப் படும் இவரைப் பற்றி எனது முந்தைய பதிவில் விவரங்களை பகிர்ந்திருக்கிறேன்.
யாகோபு சித்தர் பிற உயிர்களுக்கு தீங்கு விளைவிக்காத ஜீவ காருண்யத்தை ஒரு தலை சிறந்த வாழ்க்கை முறையாகக் குறிப்பிடுகிறார். மனிதர்கள் உலகிலுள்ள அனைத்து உயிர்களையும் தன்னுயிராக நினைத்து நேசிப்பதையே, எல்லா உயிர்களையும் படைத்த அல்லா விரும்புவதாகக் குறிப்பிடுகிறார்.
அல்லாவை முப்போதுந் தொழுதிறைஞ்ச
அறிவாகப் பலனுண்டு அறிந்துநீயும்
எல்லாமும் படைத்தவரைத் துதித்துப்போற்று
ஏழைமதி போகாம லியல்புகாட்டிச்
சொல்லாலே நினைத்துமே கோழிதன்னைச்
சுகமாக அறுப்பவர்க்குப் பாவமாகும்
கொல்லாமல் எல்லாமும் படைத்தஅல்லா
குணமதனை உயிர்போக்கக் கொடுமையாமே.
கொடுமையாய்த் தம்முயிர்போ லெவ்வுயிர்க்கும்
கொண்டாட்ட மில்லார்க்குக் குறைச்சலுண்டு
அடுமையாய்க் காத்தோர்க்கு இடுக்கஞ்செய்ய
ஆண்மையாய்ச் செய்திடிலோ நரகமுண்டு
படுபாடா யாட்டைத்தா னறுப்பவர்க்குப்
பலனில்லை யேமமென்ற பொருளுமில்லை
இடுகாட்டில் கார்த்திருந்த பிணமும்போல
இருந்தேங்கி மாண்டுமே திரிவார்பாரே.
பெருமைமிகு அல்லாவை மூன்று வேளையும் பணிந்து தொழுது வேண்டினால் எல்லா நலமும்,வளமும் உனக்கு கிடைக்கும். மேலும் இந்த உண்மையை தொழுகையின் மூலம் நீ அறிந்து கொள்ளலாம் என்று சொல்லும் யாகோபு சித்தர், உலகத்தில் உள்ள எல்லா உயிர்களையும் அல்லாவே படைத்தார். அப்படி தான் படைந்த எந்த உயிரையும் கொல்லும்படி அவர் சொல்லவில்லை என்கிறார்.
எல்லா உயிர்களையும் தன் உயிர் போல நினைக்காதவர்களுக்கு எந்த சுகமும் கிட்டாது என்கிறார். மற்றைய உயிர்களின் மேல் இரக்கமின்றி கொல்பவர்களுக்கு நரகமே கிட்டும் என்றும், அவர்கள் சுடுகாட்டில் அடக்கம் செய்ய காத்திருக்கும் பிணத்துக்கு ஒப்பானவர்கள் என்கிறார் யாகோபு சித்தர்.
எனவே இந்த நல்ல நாளில் பிற உயிர்களுக்கு தொல்லை தராதிருக்கும் மன உறுதியை அருளிடவேண்டி, எல்லாம் வல்ல அருளாளனை வணங்கி நிற்போம்.
இந்த தகவல் யாகோபு சித்தர் அருளிய "யாகோபு காவியம்" என்னும் நூலில் இருந்து சேகரிக்கப் பட்டது.
பின் குறிப்பு : சித்தர்களின் போக்கில், பார்வையில் இஸ்லாமை அணுகியிருக்கிறேன், என்பதைத்தவிர இஸ்லாம் என்கிற மாபெரும் மதத்தின் நீள அகலங்கள் எனக்கு அத்தனை பரிச்சயமில்லாதவை, எனவே மதம் குறித்த எனது தகவல்களில் பிழையிருப்பின் பொருத்தருள்க...
எனவே இந்த நல்ல நாளில் பிற உயிர்களுக்கு தொல்லை தராதிருக்கும் மன உறுதியை அருளிடவேண்டி, எல்லாம் வல்ல அருளாளனை வணங்கி நிற்போம்.
இந்த தகவல் யாகோபு சித்தர் அருளிய "யாகோபு காவியம்" என்னும் நூலில் இருந்து சேகரிக்கப் பட்டது.
பின் குறிப்பு : சித்தர்களின் போக்கில், பார்வையில் இஸ்லாமை அணுகியிருக்கிறேன், என்பதைத்தவிர இஸ்லாம் என்கிற மாபெரும் மதத்தின் நீள அகலங்கள் எனக்கு அத்தனை பரிச்சயமில்லாதவை, எனவே மதம் குறித்த எனது தகவல்களில் பிழையிருப்பின் பொருத்தருள்க...


Comments
Post a Comment