Skip to main content

இஸ்லாமும் சித்தர்களும்

சித்தர்கள் குறிப்பிட்ட மதத்துக்கோ, மொழிக்கோ, இனத்திற்கோ சொந்தமானவர்கள் இல்லை. சுருங்கச் சொல்வதாயின் அவர்கள் அரும்பசியை தீர்க்கும் உணவைப் போன்றவர்கள். உணவிற்கு பசியை தீர்க்கத்தான் தெரியும் என்பதைப் போல, தாங்கள் வாழ்ந்த சமூகத்தை நல்வழிப்படுத்த மட்டுமே சித்தர்கள் முயன்றார்கள்.

உயர்ந்த மெய்ஞான தேடலில் ”மெய்யுணர்வு” நிலையான இறை நிலையை உணர்ந்தவர்கள் அனைவருமே சித்தர்கள்தான், இதனை இந்து மதத்தில் முக்தி நிலை என்கின்றனர். இஸ்லாத்தில் இதனை ”தாவ்ஹீத்” என்றழைக்கின்றனர்.

இத்தகைய உயர் நிலையினை எய்தியவர்களே இஸ்லாத்தில் ”நபிமார்கள்” என்று அழைக்கிறார்கள். இவர்கள் உலக மக்களை உய்விக்க பல முயற்சிகளைச் செய்து இன்றும் நம்மிடையே வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். பூவுலகில் மக்களின் மனதில் அன்பும், சகோதரத்துவம் நிலைத்திருக்கவும், நீடிக்கவும் வழி காட்டும் இவர்களை மக்கள் இறை தூதர் என போற்றுகின்றனர்.

இதற்கு ஆதாரமாக யாகோபு சித்தரின் ”யாகோபு சுண்ணகாண்டம்” என்னும் நூலின் கடவுள் வணக்கப் பாடலைப் பார்க்கலாம்...

"ஆனந்தமாய் நிறைந்த அல்லா பாதம்
அடுத்துநின்ற அடுத்துநின்ற சித்தநபிமார்கள்
பாதம்போற்றி தானந்த மகமதுவை தொழுது
போற்றி தாட்டிகமாய் சுண்ணமென்ற காண்டம்
தன்னை வானந்த மாகவே அறுநூறாக
வகயாகப் பாடினேன் வண்மையாகக்
கோனந்த மெய்ப்பொருளா மின்னூல்தன்னை
குறிப்பாகப் பாடினேன் கூர்ந்து பாரே"

- யாகோபுச் சித்தர் -

எங்கும் ஆனந்தமாய் நிறைந்து நிற்கின்ற அல்லாவின் பாதங்களையும், அல்லாவின் வழிநடக்கின்ற சித்தர்களான நபிமார்களின் பாதங்களையும் தானே தானாய் நின்ற முகமதுவின் பாதங்களையும் போற்றி உறுதியுடன் சுண்ணமென்ற இந்தக் காண்டத்தை உண்மையுடன் பாடினேன். உண்மைப் பொருளான இன் நூலை மிகவும் குறிப்புடன் பாடினேன் ஆழ்ந்து கவனித்துப்பார் என்று தனது நூலை தொடங்குகிறார்.

இதன் மூலம் இஸ்லாம் மதத்தில் தெய்வத்தன்மை பொருந்திய சித்த புருசர்களை நபிமார்கள் என்றழைக்கிறார்கள் என்பது புலனாகிறது.


இராமதேவர் என அழைக்கப் பட்டவரே பின்னர் இஸ்லாமிய கோட்பாடுகளில் ஆழ்ந்து தன்னை யாக்கோபு சித்தர் என அழைத்துக் கொண்டதாக தகவல்கள் கூறுகின்றன. இவர் அழகர் கோவிலில் சமாதி அடைந்ததாக தெரிகிறது.

அடுத்த பதிவில் இது தொடர்பான வேறு சில தகவல்களுடன், இஸ்லாத்தில் இரசமணி எவ்வாறு பயன்படுத்தப்பட்டது என்பதையும் பார்ப்போம்.

பின்குறிப்பு: எனது வாசிப்பனுபவத்தின் தெளிவுகளையே இங்கே பகிர்ந்து கொண்டிருக்கிறேன். பதிவின் கருத்துக்கள் எவரது நம்பிக்கையினையும் புண்படுத்துவதாக இருப்பின் சுட்டிக் காட்டினால் திருத்திக் கொள்ளவும், வருத்தங்களை பகிரவும் தயாராக இருக்கிறேன்.

இஸ்லாமும் ரசமணியும்.!

ஏழாம் நூற்றாண்டு முதலே தமிழகத்தில் இஸ்லாமிய மதம் இருந்ததற்கான சான்றுகள் கிடைத்திருக்கின்றன. “சோனகர்”,”துலுக்கர்” என கல்வெட்டுக்களிலும், மெய்கீர்த்திகளிலும் இஸ்லாமியர்கள் குறித்த பல விவரங்கள் காணக் கிடைக்கின்றன.

யாகோபு சித்தர் தனது நூலில் இரசமணி தயாரிக்கும் விதத்தினையும், அதனை பிரார்த்தனைக்கு பயன் படுத்துவதன் மூலம் கிடைக்கும் பலன்களையும் கூறியிருக்க்றார்.இந்த பதிவில் இரசமணியின் பயன் பாட்டினைப் பற்றி கூறிய விவரங்களை மட்டும் பார்ப்போம்.

"பார்த்தியே சூதமது கட்டிப் போகும்
பதிவான இருபத் தொரு மணிகள் செய்து
வாத்தியே தமரிட்டு நூலில் கோர்த்து
வடிவாக கைதனிலே வைத்துக் கொள்ளே
வைத்துமே பிசுமில்லா ரகுமானென்று
வகையான கலிமாவை ஓதித் தீரு
மைத்துமே நாளொன்றுக் கொன்று தானும்
நாடியே முப்போதும் தொழுது போற்று
பைத்துமே இப்படிக்கு தொழுதாயானால்
பதிவாக நபிமார்போ லிருக்க லாகும்"

- யாகோபுச் சித்தர் -

ரசமானது கட்டியாகும், அதை எடுத்து இருபத்திதோரு மணிகளாக உருட்டி ஓட்டை போட்டு நூலிலே கோர்த்து, கையிலே வைத்துக் கொண்டு "பிஸ்மில்லா ரகுமான்" என்று கலிமாவை ஓதிக்கொண்டிரு, இப்படியே ஒவ்வொரு நாளும் முப்பொழுதும் அதாவது மூன்று வேளையும் தொழுது வணங்கி வந்தால் நபிமார்கள் கூட்டத்தில் நீயும் ஒருவனாவாய்!.....என்கிறார்.

இரசமணியின் மகத்துவத்தை உணர்த்தும் இன்னொரு சான்றாக இதைக் கொள்ளலாம்.

பழந்தமிழ் சித்தர்களில் இஸ்லாமிய மதநெறிகளை பின் பற்றி வாழ்ந்த ஒரு சித்தர் பெருமகனைப் பற்றி பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. யாகோபு சித்தர் என அழைக்கப் படும் இவரைப் பற்றி எனது முந்தைய பதிவில் விவரங்களை பகிர்ந்திருக்கிறேன்.

யாகோபு சித்தர் பிற உயிர்களுக்கு தீங்கு விளைவிக்காத ஜீவ காருண்யத்தை ஒரு தலை சிறந்த வாழ்க்கை முறையாகக் குறிப்பிடுகிறார். மனிதர்கள் உலகிலுள்ள அனைத்து உயிர்களையும் தன்னுயிராக நினைத்து நேசிப்பதையே, எல்லா உயிர்களையும் படைத்த அல்லா விரும்புவதாகக் குறிப்பிடுகிறார்.

அல்லாவை முப்போதுந் தொழுதிறைஞ்ச
அறிவாகப் பலனுண்டு அறிந்துநீயும்
எல்லாமும் படைத்தவரைத் துதித்துப்போற்று
ஏழைமதி போகாம லியல்புகாட்டிச்
சொல்லாலே நினைத்துமே கோழிதன்னைச்
சுகமாக அறுப்பவர்க்குப் பாவமாகும்
கொல்லாமல் எல்லாமும் படைத்தஅல்லா
குணமதனை உயிர்போக்கக் கொடுமையாமே.
கொடுமையாய்த் தம்முயிர்போ லெவ்வுயிர்க்கும்
கொண்டாட்ட மில்லார்க்குக் குறைச்சலுண்டு
அடுமையாய்க் காத்தோர்க்கு இடுக்கஞ்செய்ய
ஆண்மையாய்ச் செய்திடிலோ நரகமுண்டு
படுபாடா யாட்டைத்தா னறுப்பவர்க்குப்
பலனில்லை யேமமென்ற பொருளுமில்லை
இடுகாட்டில் கார்த்திருந்த பிணமும்போல
இருந்தேங்கி மாண்டுமே திரிவார்பாரே.

பெருமைமிகு அல்லாவை மூன்று வேளையும் பணிந்து தொழுது வேண்டினால் எல்லா நலமும்,வளமும் உனக்கு கிடைக்கும். மேலும் இந்த உண்மையை தொழுகையின் மூலம் நீ அறிந்து கொள்ளலாம் என்று சொல்லும் யாகோபு சித்தர், உலகத்தில் உள்ள எல்லா உயிர்களையும் அல்லாவே படைத்தார். அப்படி தான் படைந்த எந்த உயிரையும் கொல்லும்படி அவர் சொல்லவில்லை என்கிறார்.


எல்லா உயிர்களையும் தன் உயிர் போல நினைக்காதவர்களுக்கு எந்த சுகமும் கிட்டாது என்கிறார். மற்றைய உயிர்களின் மேல் இரக்கமின்றி கொல்பவர்களுக்கு நரகமே கிட்டும் என்றும், அவர்கள் சுடுகாட்டில் அடக்கம் செய்ய காத்திருக்கும் பிணத்துக்கு ஒப்பானவர்கள் என்கிறார் யாகோபு சித்தர்.

எனவே இந்த நல்ல நாளில் பிற உயிர்களுக்கு தொல்லை தராதிருக்கும் மன உறுதியை அருளிடவேண்டி, எல்லாம் வல்ல அருளாளனை வணங்கி நிற்போம்.

இந்த தகவல் யாகோபு சித்தர் அருளிய "யாகோபு காவியம்" என்னும் நூலில் இருந்து சேகரிக்கப் பட்டது.

பின் குறிப்பு : சித்தர்களின் போக்கில், பார்வையில் இஸ்லாமை அணுகியிருக்கிறேன், என்பதைத்தவிர இஸ்லாம் என்கிற மாபெரும் மதத்தின் நீள அகலங்கள் எனக்கு அத்தனை பரிச்சயமில்லாதவை, எனவே மதம் குறித்த எனது தகவல்களில் பிழையிருப்பின் பொருத்தருள்க...

Comments

Popular Posts

அருள்வெளி சித்தர் 108 போற்றி

பரம்பொருள் அருட்பெரும் ஜோதி ஓம் ஸ்ரீ அருள்வெளி சித்தர் பரம்பொருள் அருட்பெரும் ஜோதி ஓம் ஸ்ரீ அருள்வெளி சித்தர் ஓம் ஸ்ரீ அருள்வெளி சித்தர் 108 போற்றி 1. அன்பே உருவான அருள்வேளிக் சித்தனே போற்றி ! 2. அகர முதலாய் அமர்ந்தாய் போற்றி ! 3. அறிவிற் கறிவான ஆதுவிதனே போற்றி ! 4. அறத்தின் வடிவே ஐயனே போற்றி ! 5. அடிமை எமைக் காக்கும் அத்தா போற்றி ! 6. அனாதிப் பரம்பொருள் ஆயினே போற்றி ! 7. அமரர் வணங்கும் அரியே போற்றி ! 8. அண்டினோர்க் காதரவு அளிப்பாய் போற்றி ! 9. அன்பே சிவமேன் றறிந்தாய் போற்றி ! 10. அன்பே சிவமாய் அமர்ந்தாய் போற்றி ! 11. அடக்கம் ஆன  சிவமே போற்றி ! 12. ஆனந்த வடிவச் சித்தனே போற்றி ! 13. ஆகாயம் எல்லாம் அளந்தாய் போற்றி ! 14. ஆதியே போற்றி சோதியே போற்றி ! 15. ஆலத்தை அமுதாய் ஆக்குவை போற்றி ! 16. ஆருரிச் சிவமே அழகா போற்றி ! 17. ஆசை வித்த அரனே போற்றி ! 18. ஆணவ மாயை அழித்தாய் போற்றி ! 19. ஆவியில் உறையும் ஐயா போற்றி ! 20. ஆத்தும தத்துவம் அறிவிப்பாய் போற்றி ! 21. ஆலமர் செல்வ அரசே போற்றி ! 22. இகர மாகி எழுந்தாய் போற்றி ! 23. இறைவி இறைவன் வடிவே போற்றி ! 24. இகபர சுகங்கள் தருவாய் ...

மருந்துகளின்றி ஆரோக்யமாக வாழ

நமது வாழ்க்கை முறையை சரிசெய்வது மூலமாக மட்டுமே ஆரோக்யமாக வாழ்வது சாத்தியமாகும். நம்மிடம் உள்ள ஆரோக்கியத்தை மருத்துவமனையில் தேடினால் கிடைக்காதல்லவா? இதை மக்களுக்கு புரியவைத்து ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்குவதே எனது நோக்கம்.  நம் உடலானது நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் போன்ற பஞ்ச பூதங்களால் தான் இயங்குகின்றது. அவற்றிலுள்ள பிரச்சினைகளை களைந்தாலே நாம் வாழ்நாள் முழுவதும் நோயின்றி ஆரோக்யமாக வாழலாம். உணவு நிலம்  இரைப்பை, மண்ணீரல், கணையம் ஆகிய உறுப்புக்கள் ஒழுங்காக இயங்க கீழே கொடுக்கபட்டுள்ளவற்றை பின்பற்றவும் 1. பசி: பசிக்கும்போது நமக்கு பிடித்த உணவை நிதானமாக உண்ணும்போது நம் உடல் அவற்றை சத்துக்களாக மாற்றிவிடும். உதட்டை பிரிக்காமல் உணவை நன்கு மென்று கூழ் போல் அரைத்துப் பின் விழுங்க வேண்டும். ஏனென்றால் காற்றும் நம் ஜீரணத்திற்கு எதிரி. அப்படி உண்டால் நம் உடலின் அனைத்து உறுப்புக்களும் நன்றாக இயங்கும் அதனால் ஆரோக்கியம் பேணப்படும். பசி இல்லாதபோதோ நமக்கு பிடிக்காத உணவை உண்ணும்போதோ மற்றும் உணவு உண்டவுடன் அதிக நீரை குடிக்கும்போதோ அவை கழிவுகளாக மாறி நமக்கு தொப்பை, வாயு தொந்தரவு, அல்சர், அ...

வர்மம் varmam

வர்மங்களின் வகைகள்..! வர்மக் கலையை அகத்தியர் நான்கு பெரும் பிரிவுகளாய் பிரித்திருக்கிறார். உடலில் உள்ள வர்ம புள்ளிகள் மற்றும், அவற்றை கையாளும் விதத்தினால் இவற்றை வேறு படுத்துகிறார். இவை “படு வர்மம்”, ”தொடு வர்மம்”, ”தட்டு வர்மம்”, ”நோக்கு வர்மம்” படுவர்மம் நான்கு வகை வர்மங்களில் மிகவும் ஆபாயகரமான பிரிவு இதுவேயாகும். உடலிலுள்ள வர்மப் பகுதிகளில் அடியோ அல்லது தாக்குதலோ ஏற்படுமானால் அப்போது ஏற்படும் வர்மமே "படுவர்மம்" என்கிறார். இந்த படுவர்ம தாக்குதலுக்கு உள்ளாகும் நபர்கள் உயிரிழக்கும் வாய்ப்புக்கள் அதிகம் உள்ளதால் இவை மிகவும் ஆபத்தானவை என்று அகத்தியர் குறிப்பிடுகிறார். ஒரு மனிதன் படுவர்மப் புள்ளிகளில் அடிபட்டால் உடனடியாக மயங்கி விழுவான் என்றும், அவன் வாய் பிளந்து நாக்கு வெளியே தள்ளும், வாயில் நுரையும் வெளியேறும் அத்துடன் அந்த அடிபட்ட இடங்களில் கைவைத்து பார்த்தால் அந்த இடம் மிகவும் குளிர்ச்சியாகக் காணப்படும் என்றும் குறிப்பிடுகிறார். எல்லோராலும் இதை செய்திட முடியாது என்றும், மிகுந்த பயிற்சி உள்ள ஒருவரால் மட்டுமே இத்தகைய செயல்களை செய்திட முடியும் என்றும் கூறுகிறார். தொடு...

இயற்பியல் பிரபஞ்சமும் தூய ஆற்றல் குண்டலினி

இயற்பியல், பிரபஞ்சமும்  தூய ஆற்றல், உலகளாவிய வெப்பநிலை மாறுபாடுகள், நீராவியின் மாறுபாடுகள், அதிர்வுகளின் அவதானிப்புகள், நமது சித்தாந்த தியான நிலை குண்டலினி ஆற்றல் தொடர்பும்.  ஒரு மின்காந்த புலம் என்பது காந்த மற்றும் மின்சார ஆற்றலால் நிரப்பப்பட்ட இடத்தின் ஒரு பகுதி. மின்காந்த புலங்கள் எல்லா இடங்களிலும் உள்ளன. எக்ஸ்-கதிர்கள் மற்றும் காமா கதிர்கள் போன்ற உயர் அதிர்வெண் மின்காந்த கதிர்வீச்சு “ அயனியாக்கம் ” மற்றும் மக்களுக்கு தீங்கு விளைவிக்கும், அதே நேரத்தில் குறைந்த அதிர்வெண் கொண்ட மின்காந்த கதிர்வீச்சு அல்லது “ அல்லாத அயனியாக்கம்,” மனிதர்களுக்கு பாதுகாப்பானதாகக் கருதப்படுகிறது, அல்லது சில மனித நோய்களுக்கு கூட ஒரு தீர்வாக கருதப்படுகிறது. பூமியைச் சுற்றியுள்ள மின்காந்த புலம் நம் உடலை அடைந்து அதன் உள்ளே இருக்கும் கட்டணங்களை பாதிக்கிறது. நம் உடல்கள் அதன் சொந்த மின்னியல் புலத்தைக் கொண்டுள்ளன. டி.என்.ஏவின் துகள்கள் கூட மின்காந்த புலங்களை உருவாக்க முடியும். அந்த அலைகள் நம் உடலின் உள் கடிகாரத்தை பிரதானமாக்குகின்றன மற்றும் தூக்க முறைகள் மற்றும் ஹார்மோன் சுரப்பை பாதிக்கின்றன. ஆல்பா மூளை அ...

பாவங்களுக்கான வியாதிகள்

பாவங்களுக்கான வியாதிகள் - கருட புராணம் !!! 1    யார் மற்றவர்களை ஏளனம் செய்பவர்கள். சத்தியத்தை தவறவிட்டவர்கள், எதற்காவது காக்க வைத்தவர்.    மன அழுத்த நோயால் துன்புறுவர், மன நோயாளியாக இருப்பார் 2   எலி பொந்துக்களை, பாம்பு பொந்துக்களை அடைப்பவர், மீன்களை பிடிப்பவர்களுக்கு    நுரையீரல் மற்றும் சுவாச கோளாரினால் பாதிக்கப்படுவார். 3    விஷம் கலந்து யாரையும் கொலை செய்தால்    தேள் கடி மற்றும் பாம்பு கடியால் துன்பப்படுவார் 4    கருமியாகவும், அதிக வட்டி வசூலிப்பவர், பிறரது பொருளை அபகரிப்பவர்களுக்கு    சுயரோகத்தால் துன்பப்படுவார் 5    விபச்சாரத்தில் ஈடுபடுபவர்கள், சிறுமிகளை பலாத்காரம் செய்பவர் தொழு நோயால் துன்பப்படுவார் 6    தனது உடம்பைக் காட்டி பயமுறுத்துபவர், வீண் சண்டைக்கு இழுப்பவர்    கால், கை வலிப்பு, இழுப்பு நோயால் துன்பப்படுவார் 7    பெண்ணை கெட்ட எண்ணத்துடன் பார்ப்பவர், மற்றவர் பொருள்களையும் பார்த்து பொறாமைப்படுபவர்    நிரந்தர கண் நோயுடன் அவதிப்படுவார் 8  ...