Skip to main content

ஆனைநெருஞ்சில் Pedalium murex Pedaliaceae

மாற்றுப்பெயர் ;  ஆனைநெருஞ்சில், காமரசி ,கோகண்டம், திருதண்டம்
வளரியல்பு ;   சிறுசெடி
இலைஅமைப்பு ;  சதைப்பற்றுள்ள வெகுட்டல் மணமுள்ள இலை
பூ,காய் ;  தனித்த மஞ்சள்நிறப் பூக்களையும் முள்ளுள்ள நீண்ட உருளை வடிவக்காய்களையும் உடையது.
மருத்துவ பாகம் ; இலை, தண்டு, விதை
குணம் ; சிறுநீர்ப் பெருக்குதல், வெப்புதணித்தல், குளிர்ச்சிதரல், உடலுரமாக்கல், காமம் பெருக்கல் மாத விலக்குச் சிக்கலறுத்தல்
செய்கை: அந்தர்ஸ்நிக்தகாரி, மூத்திரவர்தினி, காமவிர்தினி, பலகாரி, தாதுக்ஷீணரோதி, ரக்தஸ்தம்பனகாரி
தீர்க்கும் நோய்கள்:
"மேகத்தைப் போக்கிவிடும் வெண்குஷ்டந்தானொழிக்குந்
தேகத்திற் கல்லடைப்பைத்தீர்க்குங்கா – ணாகத்தாந்
தேனையாரும் பாகைத்திருத்துங் கிளிமொழியே
யானை நெருஞ்சி லது
யானை நெருஞ்சி லதுசீ தளமாகும்
மானே யெலும்புருக்கி மாற்றுங்காண் – மேனிதனி
லுள்ள வெரிச்ச லுழலையுட் டாகமொடு
தள்ளுபித்த மும்போக்குந் தான்"
குளிர்ச்சியுடைய யானைநெருஞ்சில் வெள்ளை,வீழல்,வெண்குஷ்டரோகம், அஸ்மரி, அஸ்திசிராவரோகம்,தேகஎரிவு,உழலை,தாகம்,பித்தமயக்கம் ஆகியவற்றைப் போக்கும் என்க
"நல்ல நெருஞ்சிலது நாளுங் கிரிச்சரத்தை
வல்ல சுரமனலை மாற்றுங்காண் – மெல்லியலே
மாநிலத்திற் கல்லடைப்பும் வாங்காத நீர்க்கட்டுங்
கூனுறுமெய் வாதமும் போக்கும்.
மேகவெட்டை நீர்ச்சுருக்கு வீறுதிரிதோஷம்புண்
வேகசுர தாகவெப்பை விட்டோட்டும் – பாகந்
தருஞ்ன் மதலைமொழித் தையலேநல்ல
நெருஞ்சிலதனை நினை"
நல்ல நெருஞ்சில் சொட்டு மூத்திரம்,சுரவெப்பம், அஸ்மரிரோகம், நீரடைப்பு, முடவாதம், பிரமேக வெள்ளை, மூத்திரகிரிச்சரம், திரிதோஷ கோபம், விறணம், சுரதாகம், உஷ்ணம் நீக்கும்.
வகைகள் -: சிறு நெருஞ்சில், பெருநெருஞ்சில்.சிறு நெருஞ்சிலை செப்பு நெருஞ்சில், செம்மநெருஞ்சில் என்றும் கூறுவார்கள். யானை நெருஞ்சிலையே ஆனைத்திப்பிலி என்றும் சிலர் கூறுவர். உடலின் மொத்த எடையையும் தாங்கும் பாதம் மென்மையானது.அதுபோல் யானையின் மென்மையான பாதங்களில் இது பதிந்து புண்ணாக்கி விடுமாதலால் யானை இதனை கண்டு அஞ்சும். எனவே யானை வணங்கி என பெயர் பெற்றது.
தமிழகம் முழுவதும் மணற்பாங்கான இடங்களில் தானே வளர்கிறது.
1.   ஒரு முழுச்செடியை 1 லிட்டர் நீரிலிட்டுக் கலக்க நீர் வழுவழுப்பாக மாறும், இதனைச் சிறிது சர்க்கரைச்சேர்த்து நாள்தோறும் காலையில் பருகி வர நீர்க்கடுப்பு, வெள்ளை, சொட்டு மூத்திரம், மலட்டுத்தன்மை,சொப்பன ஸ்கலிதம் ஆகியவை தீரும்.
2.   மேற்படி சலம் 150மிலி காலை 10 நாட்கள் ப்ருகிவர புதிய வெள்ளை தீரும். நீர்க்கோவைக்குக் கொடுக்க நீர் இறங்கி வீக்கம் வாடும்.
3.   10 கிராம் இலைப்பொடி சர்க்கரையுடன் பாலில் கலந்து பருகி வர வெள்ளை, வெட்டை, மூட்டு அழற்சி ஆகியவை தீரும்.
4.   50 கிராம் இலையை மென்மையாய் அரைத்து எருமைத் தயிரில் கலந்து நாள்தோறும் காலையில் மட்டும் சாப்பிட்டு வரச் சிறுநீர்த்தடை நீரெரிச்சல், வெள்ளை, உடம்பெரிவு ஆகியவை குணமாகும்.
5.   இலையை அரைத்துப் பற்றிட காயங்கள் ஆறும்.
6.   விதையை பொடித்து இளநீரில் கொடுக்க நீர்ச்சுருக்கு தீரும்.பசும் பாலில் கொடுக்க விந்தணுக்கள் பெருகி மலடு நீங்கும்.
7.   கொழுந்து இலையை துவரம்பருப்புடன் துவட்டலாகச் செய்து உண்ண நீர் இறங்கும்,நீர்கடுப்பு, வீக்கம் போம்.
8.   நெருஞ்சில் இலையும், வேரையும் பச்சரிசி கூட்டி கஞ்சி வைத்து சர்க்கரை சேர்த்து அருந்த நாட்பட்ட வெள்ளை நோயுடன் கூடிய நீர் கடுப்பு குணமாகும்.
9.   நெருஞ்சி விதை சூரணம் 9 பங்கு,வால்மிளகு,சிறுநாகப்பூ,வெடியுப்பு வகைக்கு 3பங்கு பொடித்து கலந்து 500-1000 மிலி கிராம் இளநீரில் கொடுக்க சிறுநீர் தாராளமாகப் போகும்.
10.  நெருஞ்சி முள் தூள் 100 கிராம், கறிவேப்பிலை தூள் 100 கிராம், கஸ்தூரி மஞ்சள் தூள் 100 கிராம், கசகசா தூள் 10 கிராம்  காய்ச்சாத பாலில் குழைத்து இரவு படுக்கப் போவதற்கு முன் தழும்புகளின் மேல் தடவி காலையில் தேய்த்துக் கழுவ சின்னத் தழும்புகள் இருந்த இடம் தெரியாமல் மறையும்.
11.  நெருஞ்சில் விதை 300 கிராம், கோதுமை 500 கிராம், கொத்த மல்லி 100 கிராம், சுக்கு 50 கிராம் ஏலம் 10 கிராம் சேர்த்து இளவறுப்பாக வறுத்து பொடி செய்து,கொதி நீரில் போட்டு காபி போல சர்கரை சேர்த்து அருந்த உடலுக்கு ஊட்டம் தரும். குளிர்ச்சி தரும். எதிர்ப்பாற்றல் பெருகும்.
12.  நெருஞ்சில் காயை அறுபத்தெட்டு கிராம், கொத்துமல்லி விதை எட்டு கிராம் , நீர் 500 மி.லி. சேர்த்து ஒரு சட்டியில் வார்த்து நன்கு காய்ச்சி வடித்து நாற்பது மி.லி. வீதம் அருந்த நீர் அடைப்பு, சதையடைப்பு, கல்லடைப்பு முதலிய நோய்கள் தீரும்.
13.  சமூலத்துடன் கீழாநெல்லிச் சமூலம் சமன் சேர்த்து மையாய் அரைத்து கழற்சிக் காயளவு எருமைத் தயிரில் கலந்து காலை, மாலை 1 வாரம் கொடுக்க நீர்த்தாரை எரிச்சல், வெள்ளை, நீரடைப்பு, மேகக்கிரந்தி, ஊறல் தீரும்.
14.  நெருஞ்சில் சமூலம் பத்து பங்கு, மூங்கிலரிசி ஐந்து, ஏலம் நான்கு, கச்சக்காய் நான்கு, ஜாதிக்காய் மூன்று, இலவங்கம் நான்கு, திரிகடுகு ஐந்து, குங்குமப்பூ சிறிது இவைகளை எடுத்து சட்டியிலிட்டு முறைப்படி குடிநீர்செய்து பணியிரெண்டு முதல் முப்பத்தைந்து மி.லி. அளவு அருந்தி வர, சூட்டைத் தணித்து நீர் எரிச்சலையும் மேக நோயின் தொடர்பாக ஏற்பட்ட ஆண்மைக் குறைவையும் நீக்கி, உடலுக்கு வன்மையை ஏற்படுத்தும்.
15.  சமூலச்சாறு 1 அவுன்ஸ் மோர் அல்லது பாலுடன் கொள்ள சிறுநீருடன் இரத்தம் போதல் குணமடையும்.
16.  பெரு நெருஞ்சில் காய் 250 கிராம், உளுந்து 100 கிராம், கருடன் கிழங்கு பொடி 200 கிராம், வாலுளுவை அரிசி 50 கிராம் சேர்த்து அரைத்து,ஒரு கிலோ பசு நெய்யில் வடையாகத்தட்டி போட்டு எடுக்கவும்,  காட்டுச் சீரகம், மிளகு வகைக்கு 100 கிராம் சேர்த்துச் சூரணித்து காலை, மாலை 5 மி.லி.மேற்படி நெய்யில் 5 கிராம் சேர்த்து சாப்பிட்டு,வடையைப் பாலில் அரைத்து மேல் பூச்சாக பூசி 2 மணி நேரம் கழித்து குளிக்க வெண் குட்டம் குணமாகும். நாட்பட்டதும் மேலும் பரவாமல் குணமாகும்.புகை, புலால், போகம், புளி தவிர்க்கவும்.
17.  சிறு நெருஞ்சில் இலைச் சாறு அரை லிட்டர்,கீழாநெல்லி இலை சாறு அரை லிட்டர் ஒன்றாய்க் கலந்து,கால் கிலோ மஞ்சளை ஊறவைத்து உலர்த்திக் கொள்ளவும். இத்துடன் சம அளவு சிறுபீளை வேர், சீந்தில் இலை, வில்வ இலை, தென்னம்பாளை அரிசி ஆகியவற்றைக் கலந்து அரைத்து கால் ஸ்பூன் வீதம் தேனில் குழைத்துச் சாப்பிட்டு வர, சிறுநீரகங்களைப் பற்றிய நீர்க்கடுப்பு, நீர் எரிச்சல், நீரடைப்பு, சதையடைப்பு, கல்லடைப்பு, சிறுநீரில் ரத்தம் வெளியாகுதல், சிறுநீரில் சீழ் உண்டாகுதல், சிறுநீர் அடிக்கடி கழிதல் சிறுநீரகச் செயற்பாடு குறைவு போன்ற குறைகள் நீங்கி, சிறுநீரகம் செழுமையாய் செயற்படும்.
18.  நெருஞ்சில் செடி இரண்டு, ஒரு பிடி அருகம்புல்லுடன் சட்டியில் போட்டு ஒரு லிட்டர் நீர்விட்டு அரை லிட்டராக காய்ச்சி 50 மி.லி.அளவு இரு வேளை மூன்று நாள் வெறும் வயிற்றில் குடித்து வர உடல் வெப்பம் தணியும், கண் எரிச்சில், நீர் வடிதல், சிறு நீர் சொட்டாக வருதல் குணமாகும்.

Comments

Popular Posts

அருள்வெளி சித்தர் 108 போற்றி

பரம்பொருள் அருட்பெரும் ஜோதி ஓம் ஸ்ரீ அருள்வெளி சித்தர் பரம்பொருள் அருட்பெரும் ஜோதி ஓம் ஸ்ரீ அருள்வெளி சித்தர் ஓம் ஸ்ரீ அருள்வெளி சித்தர் 108 போற்றி 1. அன்பே உருவான அருள்வேளிக் சித்தனே போற்றி ! 2. அகர முதலாய் அமர்ந்தாய் போற்றி ! 3. அறிவிற் கறிவான ஆதுவிதனே போற்றி ! 4. அறத்தின் வடிவே ஐயனே போற்றி ! 5. அடிமை எமைக் காக்கும் அத்தா போற்றி ! 6. அனாதிப் பரம்பொருள் ஆயினே போற்றி ! 7. அமரர் வணங்கும் அரியே போற்றி ! 8. அண்டினோர்க் காதரவு அளிப்பாய் போற்றி ! 9. அன்பே சிவமேன் றறிந்தாய் போற்றி ! 10. அன்பே சிவமாய் அமர்ந்தாய் போற்றி ! 11. அடக்கம் ஆன  சிவமே போற்றி ! 12. ஆனந்த வடிவச் சித்தனே போற்றி ! 13. ஆகாயம் எல்லாம் அளந்தாய் போற்றி ! 14. ஆதியே போற்றி சோதியே போற்றி ! 15. ஆலத்தை அமுதாய் ஆக்குவை போற்றி ! 16. ஆருரிச் சிவமே அழகா போற்றி ! 17. ஆசை வித்த அரனே போற்றி ! 18. ஆணவ மாயை அழித்தாய் போற்றி ! 19. ஆவியில் உறையும் ஐயா போற்றி ! 20. ஆத்தும தத்துவம் அறிவிப்பாய் போற்றி ! 21. ஆலமர் செல்வ அரசே போற்றி ! 22. இகர மாகி எழுந்தாய் போற்றி ! 23. இறைவி இறைவன் வடிவே போற்றி ! 24. இகபர சுகங்கள் தருவாய் ...

அத்தி

1. மூலிகையின் பெயர் :- அத்தி. 2. வேறு பெயர் :- அதவம் மரம் 3. தாவரப்பெயர் :- FICUS GLOMERATA, FICUS AURICULATE. 4. தாவரக்குடும்பம் :- MORACEAE. 5. பயன்தரும் பாகங்கள் :- இலை, பிஞ்சு, காய், பழம், பால், பட்டை ஆகியன. 6. வளரியல்பு :- அத்தி களிமண் நிலம் மற்றும் ஆற்றுப்படுகைகளில் நன்கு வளரும். மாற்றடுக்கில் அமைந்த முழுமையான இலைகளை உடைய பெரு  (FICUS GLOMERATA , ROXB ; MORACEAE ) மர வகையைச் சேர்ந்தது.நாட்டு அத்தி (COUNTRY FIG), வெள்ளை அத்தி (GULAR FIG), நல்ல அத்தி (FICUS GLOMERATA CLUSTER FIG) என பல வகை அத்தி மரங்கள் உண்டு. அத்தி அளவான உயரமுடைய நடுத்தர மரமாகும். இம்மரம் சுமார் 10 மீட்டர் வரை உயரமாக வளர்கிறது. மரத்தின் பட்டை சாம்பல் மற்றும் சிவப்பு நிறத்தில் காணப்படுகிறது. அத்தி இலைகளில் மூன்று நரம்புகள் இருக்கும். காய்கள் சற்று நீளமான முட்டை வடிவில் தண்டிலும், கிளைகளிலும் அடிமரத்திலும் கொத்துக் கொத்தாகத் தோன்றும். பெரிய நெல்லிக்காய் அளவில் உருண்டையாக சிறிது பச்சை நிறத்துடன் இருக்கும். காய் பழுத்த பின்பு கொய்யாப்பழத்தைப் போல் வெளிறிய மஞ்சள் நிறமாக மாறிவிடும். பழங்கள் தானே கீழே உத...

வர்மம் varmam

வர்மங்களின் வகைகள்..! வர்மக் கலையை அகத்தியர் நான்கு பெரும் பிரிவுகளாய் பிரித்திருக்கிறார். உடலில் உள்ள வர்ம புள்ளிகள் மற்றும், அவற்றை கையாளும் விதத்தினால் இவற்றை வேறு படுத்துகிறார். இவை “படு வர்மம்”, ”தொடு வர்மம்”, ”தட்டு வர்மம்”, ”நோக்கு வர்மம்” படுவர்மம் நான்கு வகை வர்மங்களில் மிகவும் ஆபாயகரமான பிரிவு இதுவேயாகும். உடலிலுள்ள வர்மப் பகுதிகளில் அடியோ அல்லது தாக்குதலோ ஏற்படுமானால் அப்போது ஏற்படும் வர்மமே "படுவர்மம்" என்கிறார். இந்த படுவர்ம தாக்குதலுக்கு உள்ளாகும் நபர்கள் உயிரிழக்கும் வாய்ப்புக்கள் அதிகம் உள்ளதால் இவை மிகவும் ஆபத்தானவை என்று அகத்தியர் குறிப்பிடுகிறார். ஒரு மனிதன் படுவர்மப் புள்ளிகளில் அடிபட்டால் உடனடியாக மயங்கி விழுவான் என்றும், அவன் வாய் பிளந்து நாக்கு வெளியே தள்ளும், வாயில் நுரையும் வெளியேறும் அத்துடன் அந்த அடிபட்ட இடங்களில் கைவைத்து பார்த்தால் அந்த இடம் மிகவும் குளிர்ச்சியாகக் காணப்படும் என்றும் குறிப்பிடுகிறார். எல்லோராலும் இதை செய்திட முடியாது என்றும், மிகுந்த பயிற்சி உள்ள ஒருவரால் மட்டுமே இத்தகைய செயல்களை செய்திட முடியும் என்றும் கூறுகிறார். தொடு...

குண்டலினி ஆற்றல் 3

குண்டலினியை எப்படி எல்லாம் எழுப்பலாம்! மூலாதாரத்தில் புதைந்திருக்கும் குண்டலினியை எழுப்பிட பல்வேறு உத்திகள் கூறப் பட்டிருக்கின்றன. பொதுவில் பிராணாயாமம் எனப்படும் மூச்சுப் பயிற்சி, ஆசனங்கள், முத்திரைகள் இவைகளால் குண்டலினியை எழுப்ப முடியுமாம். இராஜயோகிகள் சலனமற்ற தியானத்தினாலும், மனப் பயிற்சியினாலும் எழுப்புகின்றனர். சாமான்யர்கள் பக்தி அதாவது முழுமையான சரணாகதியின் மூலம் எழுப்புகின்றனர். ஞானிகளோ பிரித்து அறியும் மன உறுதியினால் எழுப்புகின்றனர். இதை விவேக வைராக்கியம் என்கின்றனர். தாந்திரிகர்கள் மந்திர சக்தியால் குண்டலினியை எழுப்புகின்றனர். இவற்றை எல்லாம் விட மிக எளிதான ஒரு முறையும் இருக்கிறது. அதாவது குருவினை பார்த்தல்(தரிசனம்),குருவினால் தொடப் படுதல், ஆசீர்வதித்தல் ஆகியவைகளால் சட்டென குண்டலினி எழும்பும். இத்தகைய தகுதி உடைய குருமார்கள் இப்போது மிகவும் குறைவு. மேலும் அத்தகையவர்கள் இதை எல்லோருக்கும் அருளுவதுமில்லை. ஆக, நம்மில் உறைந்திருக்கும் குண்டலினியை எழுப்பிட இத்தனை வகைகள் இருக்கிறது. எனினும் நமது உடல் மற்றும் மனப் பக்குவத்திற்கு ஏற்ற வகையை தெரிவு செய்ய குருவினால் மட்டுமே முடியும...

குண்டலினி ஆற்றல் 9 விசுத்தி

குண்டலினி - விசுத்தி. மூலாதாரத்திலிருந்து ஐந்தாவது சக்கரமான விசுத்தி பற்றி இன்று பார்ப்போம். இதைப் பற்றி அகத்தியர் பின் வருமாறு விளக்குகிறார். ஆச்சப்பா வனாகததி னொடுக்கஞ்சொன்னோம் அறையுகிறேன் விசுத்தியி னடவைக்கேளு மாச்சப்பா வதற்க்குமேல் பன்னிரெண்டங்குலம் பாச்சப்பா பதினாறு யிதழ்தா னாகும் பாலகனே அட்சரந்தான் வகாரமாகும் வதுநடுவில் சதாசிவனும் சாகினியுமாமே. - அகத்தியர். இந்த சக்தி ஆதார மையமானது நமது தொண்டையின் அடிப்பாகத்தில் சுழுமுனை நாடியில் அமைந்து இருப்பதாக குறிப்பிடுகின்றனர். நமது குரல்வளை, மூச்சுக் குழாய், தையராய்டு சுரப்பிகள், நுரையீரல், கைகள் போன்ற உறுப்புகளுடன் விசுத்தி சக்கரம் தொடர்புடையதாக குறிப்பிடப் படுகிறது. பஞ்சாட்சர எழுத்துக்களான "சிவயநம" என்னும் எழுத்துகளில் ஒன்றான "வ" என்னும் எழுத்தையும், அதன் தத்துவத்தையும் விசுத்தி சக்கரம் விளக்குவதாக அமைகின்றது. இச்சக்கரத்தின் அதிதேவன் சதாசிவன், அதி தேவதை சாகினி. பஞ்ச பூதங்களில் ஒன்றான ஆகாசம் இதன் மூலக்கூறு. இதன் மூல மந்திரம் “ஹம்” எனப்படுகிறது. இந்த சக்கரத்திலிருந்து தாமரை இதழ் போன்ற பதினாறு யோக நாடிகள் கிளம்புகின்றன....