மாற்றுப்பெயர் ; அங்கோலம்.
வளரியல்பு ; முள்ளுள்ள மரம்-புதர் காடுகளிலும்,வேலிகளிலும் தானே வளரும்.
இலைஅமைப்பு ; நீண்ட இலைகள்
பூ,காய் ; கருப்பு,வெள்ளை,சிவப்பு,மஞ்சள் என பூக்களில் வேறுபாடு உண்டு.
மருத்துவ பாகம் ; வேர்பட்டை, இலை, விதை.
குணம்; வியதாபேதகாரி, வமனகாரி, கிருமிநாசினி, பித்தகாரி, சுரஹரகாரி தீர்க்கும் நோய்கள்.
அழிஞ்சிலது மாருதத்தை பையத்தைத் தாழ்ந்து
மொழிஞ்சபித் தத்தையுயர்த்தும் – விழுஞ்சீலாங்
குட்டமெனு நோயகற்றுங் கூறுமருந் தெய்திடில்
திட்டமென வறிந்து சேர்
- அழிஞ்சில் மரமானது வாதகோபம், கபதோஷம், சீழ்வடியும் பெருநோய் (குஷ்டம்) போக்கும்.ஆனாலும் பித்தத்தை உபரி செய்யும்.
பொல்லா விஷக்கடியும் போராடும் பேதிவகை
செல்லாக் கிரந்திரணம் சேர்நோய்க – ளெல்லாமும்
அங்கோலங் காணில் அரந்தைசெய் நோய்களெல்லாம்
பொங்கோல மிட்டோடிப் போம்.
- அங்கோலம் என்று சொல்லப்படுகின்ற அழிஞ்சி கபத்தினால், ஜீவ ஜந்துக்களின் பற்கடியால் நேர்ந்த எல்லாவித தோஷங்களும், பேதி, கிரந்தி, விரணம் ஆகியவையும் போம்.
அழிஞ்சில் வித்து( Alagium Decapetalum Seeds
நிகருமிடை மெல்லியலே இத்தரையில்
அழிஞ்சில் வித்ததனாற் சாறுபல – மென்னவெனில்
மறையு மஞ்சனமா முகும் சனவசியம்
அது செய்திடவே நன்று.
- நாளறிந்து காப்பிட்டு எடுத்த அழிஞ்சில் வித்தினால் அஞ்சன மறைப்பு மையும், உலக வசியமும் உண்டாகும்.
வளரியல்பு ; முள்ளுள்ள மரம்-புதர் காடுகளிலும்,வேலிகளிலும் தானே வளரும்.
இலைஅமைப்பு ; நீண்ட இலைகள்
பூ,காய் ; கருப்பு,வெள்ளை,சிவப்பு,மஞ்சள் என பூக்களில் வேறுபாடு உண்டு.
மருத்துவ பாகம் ; வேர்பட்டை, இலை, விதை.
குணம்; வியதாபேதகாரி, வமனகாரி, கிருமிநாசினி, பித்தகாரி, சுரஹரகாரி தீர்க்கும் நோய்கள்.
அழிஞ்சிலது மாருதத்தை பையத்தைத் தாழ்ந்து
மொழிஞ்சபித் தத்தையுயர்த்தும் – விழுஞ்சீலாங்
குட்டமெனு நோயகற்றுங் கூறுமருந் தெய்திடில்
திட்டமென வறிந்து சேர்
- அழிஞ்சில் மரமானது வாதகோபம், கபதோஷம், சீழ்வடியும் பெருநோய் (குஷ்டம்) போக்கும்.ஆனாலும் பித்தத்தை உபரி செய்யும்.
பொல்லா விஷக்கடியும் போராடும் பேதிவகை
செல்லாக் கிரந்திரணம் சேர்நோய்க – ளெல்லாமும்
அங்கோலங் காணில் அரந்தைசெய் நோய்களெல்லாம்
பொங்கோல மிட்டோடிப் போம்.
- அங்கோலம் என்று சொல்லப்படுகின்ற அழிஞ்சி கபத்தினால், ஜீவ ஜந்துக்களின் பற்கடியால் நேர்ந்த எல்லாவித தோஷங்களும், பேதி, கிரந்தி, விரணம் ஆகியவையும் போம்.
அழிஞ்சில் வித்து( Alagium Decapetalum Seeds
நிகருமிடை மெல்லியலே இத்தரையில்
அழிஞ்சில் வித்ததனாற் சாறுபல – மென்னவெனில்
மறையு மஞ்சனமா முகும் சனவசியம்
அது செய்திடவே நன்று.
- நாளறிந்து காப்பிட்டு எடுத்த அழிஞ்சில் வித்தினால் அஞ்சன மறைப்பு மையும், உலக வசியமும் உண்டாகும்.
- வேர் பட்டைச் சூரணம் 1-2 கிராம் நீரில் கொடுக்க வாந்தியாகும்.அரை கிராம் கொடுக்க வாய் குமட்டும். சுரத்தைப் பரிகரிக்கும்.
- நீடித்து கொடுக்க 1-1/2 குன்றி(100-150மிலி) போதுமானது என்று அனுபவத்தில் கண்டறியப்பட்டுள்ளது.இதனால் பற்கடிகளாலேற்பட்ட விஷங்கள்,குட்டம்,கிரந்தி,விரணம்,பேதி,நீங்கும்.(விஷக்கடிகளுக்கு ஒருமுறை ஆந்திக்குக் கொடுத்தல் நலம்)
- அழிஞ்சில் வேர்,விழுதிவேர் சமனெடுத்து 5-6 நாள் நிழலிலுலர்த்தி, முறைப்படி குழித்தைலம் இறக்கி புறைகண்ட ரணத்தில் செலுத்தி கட்டிவர விரைவில் ஆறும்.
- ஜாதிக்காய், ஜாதிபத்திரி, இலவங்கம் சமன் பொடித்து,சமன் அழிஞ்சில் வேர்பட்டை சூரணம் கலந்து தினமிருவேளை 6-10 கோதுமை எடை கொடுக்க குஷ்டரோகம் குணமாகும்.
- அழிஞ்சில் வித்து தைலத்தை சரும ரோகங்களுக்குப் பூச ஆறும்.
- உள்ளுக்குக் கொடுக்க கபவாதத்தையும்,குட்டத்தையும் நீக்கும்.
- இதில் காய்,இலை,நரம்புகளில் கருப்பு நிறமோடிய கருப்பழிஞ்சில் உண்டு.இது வசியம்,ஜால வித்தைகளுக்கு சிறந்தது.மேலும் விபரங்களுக்கு புலிப்பாணி ஜால காண்டம் காண்க. ஆனாலும் மருத்துவத்திற்கு சிவப்பே சிறந்ததென்று அறிக.
- இலைச் சாறு அல்லது கற்கம் 1-2 கிராம் அளவாக காலைமாலை கொடுத்துவர கிராணி,குன்மம்,கப நோய்கள் தீரும்.


Comments
Post a Comment