ஆலமரம் Ficus Benghalensis L,; Moraceae
வளரியல்பு; கிளைகளிலிருந்து விழுதுகளுடன் கூடிய பெரு மரம்.
இலை; மாற்றடுக்கில் அகலமானவை
மருத்துவ பாகம் ; இலை,பூ,பழம்,விதை,பட்டை,வேர்,விழுது,பால்.
செய்கை ; விழுது, பட்டை, இலை –சங்கோசனகாரி, பலகாரி, விதை –,காமவிர்த்தினி, பால் – சங்கோசனகாரி, சீதளகாரி, பலகாரி, காமவிர்த்தினி
மருத்துவ குணம் ; பால் – பிரமேகம் நீக்கும், குளிர்ச்சி தரும், பல் இறுக்கும், தாதுபுஷ்டி உண்டாக்கும். கொளுந்து இரத்த அதிசாரம் போக்கும், புல்லுருவி விஷபாக ரோகம் நீக்கும்.
இலை; மாற்றடுக்கில் அகலமானவை
மருத்துவ பாகம் ; இலை,பூ,பழம்,விதை,பட்டை,வேர்,விழுது,பால்.
செய்கை ; விழுது, பட்டை, இலை –சங்கோசனகாரி, பலகாரி, விதை –,காமவிர்த்தினி, பால் – சங்கோசனகாரி, சீதளகாரி, பலகாரி, காமவிர்த்தினி
மருத்துவ குணம் ; பால் – பிரமேகம் நீக்கும், குளிர்ச்சி தரும், பல் இறுக்கும், தாதுபுஷ்டி உண்டாக்கும். கொளுந்து இரத்த அதிசாரம் போக்கும், புல்லுருவி விஷபாக ரோகம் நீக்கும்.
ஆலம்பால்மேக மறுத்தசையும் பல்லிறுக்குங்
கோலமுடிக்குக் குளிர்ச்சிதரும் – ஞாலமதின்
மெத்தவுமே சுக்கிலத்தை விருத்தி செய்யுந்
தப்பாமற் சுத்தமதி சொல்.
- ஆலம்பால் பிரமேகத்தை நீக்கும், ஆடும் பற்களை இறுகச் செய்யும்.சிகைக்குக் குளிர்ச்சியைத் தரும்.தாது புஷ்டியுண்டாக்கும்.
சொல்லுகின்ற மேகத்தைத் துஷ்ட வகக்கடுப்பைப்
கொல்லுகின்ற நீரிழிவைக் கொல்லுங்கா –ணல்லாலின்
பாலும் விழுதும் பழமும் விதையும்பூவும்
மேலுமிலையுமென விள்
- ஆலமரத்தின் பால், விழுது, பட்டை, பழம், விதை, பூ, இலை இவற்றால் பிரமேகம், வயிற்றுக்கடுப்பு, மேகநீர் இவை நீங்கும்.
வடமரவீழ் பல்லிறுக்கு மாமேகம் போக்கு
மடர்கொழுந்தி ரத்தப்போக் காற்றும்-படரதிலாம்
புல்லுருவி யொன்றெய்திற் பொல்லா விடபாக
வல்லுருவி லுண்மை மதி
- ஆல மரத்தின் விழுது தந்தங்களை இறுகச் செய்யும்.பிரமேகத்தை நீக்கும்.இந்த மரத்தில் முளைத்த புல்லுருவியால் விஷபாக ரோகம் நீங்கும்.
- பழத்தை உலர்த்தி பொடி செய்து சர்க்கரை கலந்து காலை, மாலை இரண்டு வேளையும் சாப்பிட்டு வர மூலம் குணமாகும்.
- மரப்பட்டை,வேர்ப்பட்டை,மொட்டு,கொளுந்து,பழம்,விழுது வகைக்கு 40கிராம், 4ல் 1ன்றாய்க் காய்ச்சி,250மிலி காலைமாலை குடித்துவர மேக எரிச்சல், மேகப்புண்,மேக ஒழுக்கு(White discharge)தீரும்.
- பால் 20 துளி சர்க்கரையுடன் காலையில் சாப்பிட்டு புளி,காரம் நீக்க ஒரு மண்டலத்தில் கொறுக்கு தீரும்.
- பாலை காலைமாலை தடவிவர வாய் ரணம், நாக்கு உதடு வெடிப்பு, கைகால் வெடிப்பு, பல் ஆட்டம் தீரும்.
- ஆலம்பட்டை, அத்திப்பட்டை, அவுரி வேர்பட்டை வகைக்கு 40கிராம்,10 மிளகுடன் இடித்து , 8லி நீரில் 2லி ஆகக் காய்ச்சி, வேளைக்கு250மிலி தினம் 3வேளை குடித்துவர ரச பாஷாணவீறு தணியும்.
- மரபட்டை, வேர்பட்டை வகைக்கு 200கிராம் சிதைத்து 4லி நீரிலிட்டு காய்ச்சி தினம் காலை ஒருகுவளை 1-4 மண்டலம் குடித்துவர மதுமேகம் (Diabaties) குணமாகும். (4 நாட்களுக்கு ஒருமுறை தயார் செய்து கொள்ளலாம்)
- பழம், விழுது, கொளுந்து சம அளவு அரைத்து 30கிராம் காலை மட்டும் வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர 120 நாளில் விந்து அணுக்கள் உற்பத்தி ஆகும்.
- விழுது துளிர், விதை அரைத்து 5கிராம் பாலில் 5-7நாள் சாப்பிட்டுவர தாய்ப்பால் பெருகும்.வெட்டை, மேகம், உடல் எரிவு,காங்கை தீரும்.
- துளிர் இலை அரைத்து 5கிராம் தயிரில்கலந்து கொடுக்க இரத்தபேதி, இரத்த அதிசாரம் நிற்கும்.
- விழுதைக் கொண்டு பல் துலக்க பற்கள் உறுதிப்படும்.
- விழுதுநுனி கொளுந்துச் சாற்றில் ஜவ்வரியை ஊறவிட்டுலர்த்தி கஞ்சி அல்லது அல்வா செய்து சாப்பிட தாது பலப்படும்.
- பல் வலிக்கும் நேரத்தில் ஆலம் மொட்டினை வாயில் அடக்கிக் கொள்ள பல்வலி தீரும்.
- அத்தி, ஆலம், அரசு, விதைகளை சம அளவில் பொடித்து அல்லது பாலில் அரைத்து 5 கிராம் காலை மட்டும் உட்கொள்ள நோயிலிருந்து பாதிக்கப்பட்ட உடலை உரமாக்குகிறது.தாது விருத்தியாகும்.
- விதையுடன் அரசம்விதை சேர்த்து பால் விட்டரைத்து 5 கிராம் 5-7 நாள் கொடுக்க இரத்தக்கக்கல் நீங்கும்.தாது பலப்படும்.
- பட்டை 40-60கிராம் 500மிலி நீரிலிட்டு 150மிலியாக்கி வடித்து பனங்கற்கண்டு சேர்த்து காலைமாலை பருகிவர பிரமேகம்,இரத்தப்பிரமேகம்,நீர்கடுப்பு நீங்கும்.
- மரத்தின் புல்லுருவியை ஞாயிற்றுக்கிழமை சூரியன், சந்திரன், புதன் ஒரே ராசியில் இருக்கும்போது காப்புகட்டி எடுத்துவந்து தேள் முதலிய விஷம் தீண்டிய இடத்தில் சுத்தமான நீரில் உரைத்துப்போட விஷமிறங்கும்.
- பாலை வாயிலிட்டு கொப்புளித்து சிறிதுநேரம் அடக்கிவைத்து துப்ப நா ரணம் ஆறும்.
- பாலுடன் சர்க்கரை சேர்த்துக் கொடுக்க பிரமேகம்,தாதுக் குறைவு நீங்கும்.
- விழுது துளிரை அரைத்து கொட்டைப்பாக்களவு,தயிரில் கலந்து கொடுக்க இரத்த அதிசாரம் நீங்கும்.
- ஆல்,அரசு,இச்சி வித்து சூரணித்து இலேகியம் கிளரி சாப்பிட தாது விருத்தியாகும்.
- விழுது துளிர், விதை பாலில் அரைத்துக்ழற்சிக்காய் அளவு தினம் 1வேளை 5-7 நாள் பாலில் கொடுக்கப் பால் சுரப்புண்டாகும். வெட்டை, மேகம், உடல் எரிவு, காங்கை முதலியவை தீரும்.
- பாலை கால் வெடிப்புகளுக்குப் போட்டுவர வேதனை தணிந்து ஆறும்.

Comments
Post a Comment