மாற்றுப்பெயர் ; சதாப்பு
வளரியல்பு ; மணமுடைய பசுமையான குறுஞ்செடி
மருத்துவ பாகம் ; இலை
குணம் ; உற்சாககாரி, அங்காகர்ஷணநாசினி, ருதுவர்தனகாரி, கிருமிநாசினி, கபஹரகாரி
தீர்க்கும் நோய்கள்;வலி போக்குதல்,வெப்பமுண்டாக்கல்,கோழையகற்றுதல், மாத விலக்கு உண்டாக்குதல்
கணமாந்த ரூட்சை கணக்கழிச்சல் வாந்தி
குணமாம் பசியுங் குலவும் – வணமயிலே
கூடுநிறைகருப்பக் கோதையர்க்காம் வேதகலு
நாடு சதாபலையி னால்
- சதாபலை எனும் சதாப்பு இலையினால் பால்மாந்தம் முதலியவற்றால் விளகின்ற சுரம், கணபேதி, கபவமணம், பிரசவ மாதர்களின் வேதனை நீங்கும். தீபனமுண்டாகும் என்க.
வளரியல்பு ; மணமுடைய பசுமையான குறுஞ்செடி
மருத்துவ பாகம் ; இலை
குணம் ; உற்சாககாரி, அங்காகர்ஷணநாசினி, ருதுவர்தனகாரி, கிருமிநாசினி, கபஹரகாரி
தீர்க்கும் நோய்கள்;வலி போக்குதல்,வெப்பமுண்டாக்கல்,கோழையகற்றுதல், மாத விலக்கு உண்டாக்குதல்
கணமாந்த ரூட்சை கணக்கழிச்சல் வாந்தி
குணமாம் பசியுங் குலவும் – வணமயிலே
கூடுநிறைகருப்பக் கோதையர்க்காம் வேதகலு
நாடு சதாபலையி னால்
- சதாபலை எனும் சதாப்பு இலையினால் பால்மாந்தம் முதலியவற்றால் விளகின்ற சுரம், கணபேதி, கபவமணம், பிரசவ மாதர்களின் வேதனை நீங்கும். தீபனமுண்டாகும் என்க.
- இலைச்சாறு 10 மிலி தாய்ப்பாலுடன் கலந்து சிறு குழந்தைகளுக்குக் கொடுக்க சளியை வெளியேற்றி காய்ச்சல், இசிவு ஆகியவற்றைப் போக்கும்.
- இலையுடன் கால் பங்கு மஞ்சள் சேர்த்து அரைத்துப் பூசி உடலில் தேய்த்துக் குளித்துவர சளி,நீர்க்கோவை முதலிய குளிர்ச்சி நோய்கள் வராமல் தடுக்கும்.
- இலையை பொடித்து வயதிற்கேற்ப ¼-1 தேகரண்டி தேனில் குழைத்துக் கொடுத்துவர வயிற்றுப்பொருமல், வயிற்றுவலி, செரியாமை, நாட்பட்ட மார்புச் சளி, பால்மாந்தம்,மாந்தசுரம்,கணை, வயிற்றுப்போக்கு தீரும்.
- உலர்ந்த இலையை நெருப்பிலிட்டு வரும் புகையை மென்மையாய் சுவாசிக்க இருமல் தணியும்.
- இலையுடன் சிறிதளவு மிளகு சேர்த்து வெண்ணையாய் அரைத்து வேளைக்கு 200-300 மிகி தாய்ப்பாலில் கலந்து சிறு குழந்தைகளுக்குக் கொடுக்க சளியை வெளியேற்றி காய்ச்சல் ,இசிவு ஆகியவற்றைப் போக்கும்
- நிழலில் உலர்த்திய சதாப்பிலை, சீரகம், அதிமதுரம், கருஞ்சீரகம், சன்னலவங்கப்பட்டை, சதகுப்பை வகைக்கு 40 கிராம்,தனியா 250 கிராம்,நன்கு பொடித்து சலித்து,சமன் கற்கண்டு பொடிகலந்து, தினம் 2-3 வேளை கொடுத்துவர வாயுவை கண்டிக்கும்.சீதளத்தை அகற்றும். ஸ்திரீகளுக்குண்டான உதிரச் சிக்கலையும்,வயிற்றில் மரித்துப்போன கருவையும் வெளியாக்கும்.சூதக சன்னி வாயுவினால் கானும் வயிற்றுவலி,இசிவு முதலியவைகளுக்கு சிறந்த அவிழ்தமாகும்.
- இச்செடியிலையை உண்டு பெருத்துவரும் புழுவை, புழு ஒன்றுக்கு 120மிலி ந.எண்ணை வீதம் விட்டு சூரிய புடமிட்டு,வடித்து 3-4 துளி ,5-6 நாள்,தினமிருவேளை நாசியினுள்விட்டுவர மேகத்தினால் நாசியினுட்புறத்தில் தின்றுகொண்டு போகும்படியான விரணங்கள் ஆறும்.
- மேற்படி தைலத்தை காதில் 1-2 துளி விட்டுவர மண்டையின் உட்கரப்பான், சீழ்வடிதல், காதுவலி, மந்தம், கர்ணவாதம் தீரும்.


Comments
Post a Comment