Skip to main content

காட்டு எலுமிச்சை

எலுமிச்சையின் மகிமை பற்றி எல்லோருக்குமே தெரிந்திருக்கும். சிட்ரஸ் அமிலம் நிறைந்தது, ஆன்டி ஆக்சிடண்ட் பண்புகள் கொண்டது, எடை குறைப்புக்கு உதவுவது என்று அதன் நன்மைகள் கணக்கிலடங்காதது. இந்த கொரோனா காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க எலுமிச்சையை அடிக்கடி பயன்படுத்தச் சொல்கிறார்கள். இந்த எலுமிச்சையில் காட்டு எலுமிச்சை என ஒன்றும் பலருக்குத் தெரியாத ஒரு வகை இருக்கிறது.

எலுமிச்சையில் நிறைய வகைகள் உள்ளது. எலுமிச்சை எதுவாக இருந்தாலும் உணவில் சேர்த்துக் கொள்கிறோம். ஆனால், காட்டு எலுமிச்சையின் மருத்துவ பண்புகள் தனித்துவமானது.

காட்டு எலுமிச்சைகளில் சாதாரண எலுமிச்சையை விட சிட்ரஸ் அமிலம் அதிகம். அதே நேரத்தில் இது அதிக ஆரோக்கியத்தையும் கொண்டுள்ளது. இந்த காட்டு எலுமிச்சையிலிருந்து எண்ணெய் மற்றும் சுவை கூட்ட கூடிய விஷயங்களில் புளிப்பு சுவையை கொடுப்பது வாசனை திரவியங்கள் மற்றும் மருத்துவ பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. இப்போது, சாதாரணமாக நாம் பயன்படுத்தும் எலுமிச்சைக்கும், காட்டு எலுமிச்சைக்கும் இருக்கும் வித்தியாசத்தைப் பார்ப்போம்.

எலுமிச்சை

எலுமிச்சையை கொதிக்க வைத்து, அதோடு இஞ்சி சேர்த்து குடிக்கும்போது நம் உடலில் நோய் எதிர்ப்பு பண்புகளை உருவாக்கி கொரோனா வைரஸை அழிக்கிறது. இந்த வல்லமை எலுமிச்சைப் பழத்தில் மட்டுமின்றி, எலுமிச்சையின் தோலிலும் நிறைய உள்ளது. எலுமிச்சையின் தோலைக் கொதிக்க வைத்து, அந்த நீரை பருகுவதால் நிறைய பலன்கள் இருக்கிறது. குறிப்பாக, ரத்தக்குழாய்களில் இருக்கக்கூடிய கொழுப்புகளை நீக்க உதவுகிறது. அதேபோல், உடல் முழுவதும் இருக்கும் கொழுப்புக் கட்டிகளை கரைக்கவும் உதவுகிறது. எலுமிச்சைத் தோலை கொதித்து அந்த நீரை பருகுவதால் புற்றுநோய் தடுக்கப்படும் என்றும் பல ஆய்வுகளில் கூறுகின்றனர். அதேபோல் இதன் புளிப்பு சுவை பொதுவாக உடலில் உள்ள கழிவுகளை நீக்க உதவுகிறது. உடல் ஆற்றலையும் அதிகப்படுத்துகிறது.

காட்டு எலுமிச்சை

காட்டு எலுமிச்சைக்கும் சாதாரண எலுமிச்சைக்கும் உள்ள ஒற்றுமை என்னவென்றால், சாதாரண எலுமிச்சைகளில் இருக்கும் வாசனையை விட காட்டு எலுமிச்சையில் வாசனை மிகவும் அதிகமாகவும் அலாதியாகவும் இருக்கும். காட்டு எலுமிச்சையின் சாறு அளவும் அதிகம் உள்ளது. குடல் நோய்கள், சுவாச பிரச்னை உள்ளவர்களுக்கு காட்டு எலுமிச்சை நல்லது. நண்டு, மீன், கருவாடு, இறால் போன்ற கடல் உணவு வகைகளை எடுத்துக் கொள்ளும்போது, சிலருக்கு சருமத்தில் அலர்ஜியை (Sea sickness) ஏற்படுத்தும். அப்படிப்பட்டவர்கள் காட்டு எலுமிச்சையைப் பயன்படுத்தும்போது குணமடைகின்றனர். இதிலிருந்து எடுக்கக்கூடிய எண்ணெயை மருத்துவப் பொருட்கள் தயாரிப்பில் பயன்படுத்துகிறார்கள். காட்டு எலுமிச்சை ஜூஸை குடித்து வந்தால் அவை உடலில் உள்ள ஆன்டிபாடிக்களை அதிகரித்து தொற்று நோய்களை உண்டாக்கும் கிருமிகளை அழித்துவிடும்.

எலுமிச்சை ரத்த அழுத்தத்தைக் குறைக்கும் தன்மையுடையது. அதுமட்டுமின்றி அவை உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலின் அளவைக் குறைத்து, நல்ல கொலஸ்ட்ராலின் அளவையும் அதிகரிக்கும். எலுமிச்சைச் சாற்றை வழக்கமாகக் குடித்து வந்தால், புற்றுநோயை உண்டாக்கும் கார்சினோஜென் என்கிற வேதிப்பொருளில் இருந்து பாதுகாத்து பெருங்குடல், புரோஸ்ட்ரேட், மார்பகப் புற்றுநோய் ஆகியவை ஏற்படாமல் தடுக்கும். மேலும் எலுமிச்சை ஜூஸ் உடலில் உள்ள டாக்ஸின்களை வெளியேற்றி, சாதாரண சருமத்தையும் பொலிவாக்கும். எனவே எலுமிச்சைச் சாற்றை தினமும் பருகினால், அழகாக சருமத்தைப் பெறலாம். எலுமிச்சை உடல் எடை மற்றும் முகப்பருக்களை குறைப்பதற்கு மிகவும் சிறந்த பழம்தான்.

காட்டு எலுமிச்சையின் நன்மைகள்

* எலுமிச்சை ஜூஸை தினமும் டயட்டில் சேர்த்து வந்தால், உடல் எடை குறையும். ஏனெனில் இதில் உள்ள அமிலமானது, உடலில் உள்ள கொழுப்புகளை கரைத்து உடலுக்கு ஒரு நல்ல வடிவத்தை கொடுக்கும்.

* செரிமானப் பிரச்னை, வாயுப் பிரச்னை போன்றவை உள்ளவர்கள், எலுமிச்சைச் சாற்றை சூடான நீரில் கலந்து குடித்து வந்தால் சரிசெய்துவிடலாம். வேண்டுமெனில் ஒமத்தை எலுமிச்சை சாற்றில் சேர்த்து குடித்தாலும் செரிமானப் பிரச்னையை சரி செய்யலாம்.

* எலுமிச்சை சருமம் மற்றும் கூந்தலுக்கு மிகவும் சிறந்தது. குறிப்பாக சருமத்தில் பருக்கள் இருப்பவர்கள் பயன்படுத்தினால் விரைவில் அதனை நீக்கலாம். மேலும் பொடுகுத் தொல்லை மற்றும் இதர கூந்தல் சம்பந்தமான பிரச்னைகள் உள்ளவர்கள் பயன்படுத்தினாலும், அந்த பிரச்னைகளை தடுக்கலாம்.

* காட்டு எலுமிச்சையானது மலைப்பகுதிகளிலும், கிராமப்பகுதிகளிலும் கிடைக்கும். நாம் பொதுவாகப் பயன்படுத்தப்படும் எலுமிச்சையைக் காட்டிலும் மிகவும் சிறிதாக நெல்லிக்காய் அளவில் இருக்கும். காட்டு எலுமிச்சை மரத்தை குருந்தை மரம் என்றும் கூறுவதுண்டு.

Comments

Popular Posts

அருள்வெளி சித்தர் 108 போற்றி

பரம்பொருள் அருட்பெரும் ஜோதி ஓம் ஸ்ரீ அருள்வெளி சித்தர் பரம்பொருள் அருட்பெரும் ஜோதி ஓம் ஸ்ரீ அருள்வெளி சித்தர் ஓம் ஸ்ரீ அருள்வெளி சித்தர் 108 போற்றி 1. அன்பே உருவான அருள்வேளிக் சித்தனே போற்றி ! 2. அகர முதலாய் அமர்ந்தாய் போற்றி ! 3. அறிவிற் கறிவான ஆதுவிதனே போற்றி ! 4. அறத்தின் வடிவே ஐயனே போற்றி ! 5. அடிமை எமைக் காக்கும் அத்தா போற்றி ! 6. அனாதிப் பரம்பொருள் ஆயினே போற்றி ! 7. அமரர் வணங்கும் அரியே போற்றி ! 8. அண்டினோர்க் காதரவு அளிப்பாய் போற்றி ! 9. அன்பே சிவமேன் றறிந்தாய் போற்றி ! 10. அன்பே சிவமாய் அமர்ந்தாய் போற்றி ! 11. அடக்கம் ஆன  சிவமே போற்றி ! 12. ஆனந்த வடிவச் சித்தனே போற்றி ! 13. ஆகாயம் எல்லாம் அளந்தாய் போற்றி ! 14. ஆதியே போற்றி சோதியே போற்றி ! 15. ஆலத்தை அமுதாய் ஆக்குவை போற்றி ! 16. ஆருரிச் சிவமே அழகா போற்றி ! 17. ஆசை வித்த அரனே போற்றி ! 18. ஆணவ மாயை அழித்தாய் போற்றி ! 19. ஆவியில் உறையும் ஐயா போற்றி ! 20. ஆத்தும தத்துவம் அறிவிப்பாய் போற்றி ! 21. ஆலமர் செல்வ அரசே போற்றி ! 22. இகர மாகி எழுந்தாய் போற்றி ! 23. இறைவி இறைவன் வடிவே போற்றி ! 24. இகபர சுகங்கள் தருவாய் ...

மருந்துகளின்றி ஆரோக்யமாக வாழ

நமது வாழ்க்கை முறையை சரிசெய்வது மூலமாக மட்டுமே ஆரோக்யமாக வாழ்வது சாத்தியமாகும். நம்மிடம் உள்ள ஆரோக்கியத்தை மருத்துவமனையில் தேடினால் கிடைக்காதல்லவா? இதை மக்களுக்கு புரியவைத்து ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்குவதே எனது நோக்கம்.  நம் உடலானது நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் போன்ற பஞ்ச பூதங்களால் தான் இயங்குகின்றது. அவற்றிலுள்ள பிரச்சினைகளை களைந்தாலே நாம் வாழ்நாள் முழுவதும் நோயின்றி ஆரோக்யமாக வாழலாம். உணவு நிலம்  இரைப்பை, மண்ணீரல், கணையம் ஆகிய உறுப்புக்கள் ஒழுங்காக இயங்க கீழே கொடுக்கபட்டுள்ளவற்றை பின்பற்றவும் 1. பசி: பசிக்கும்போது நமக்கு பிடித்த உணவை நிதானமாக உண்ணும்போது நம் உடல் அவற்றை சத்துக்களாக மாற்றிவிடும். உதட்டை பிரிக்காமல் உணவை நன்கு மென்று கூழ் போல் அரைத்துப் பின் விழுங்க வேண்டும். ஏனென்றால் காற்றும் நம் ஜீரணத்திற்கு எதிரி. அப்படி உண்டால் நம் உடலின் அனைத்து உறுப்புக்களும் நன்றாக இயங்கும் அதனால் ஆரோக்கியம் பேணப்படும். பசி இல்லாதபோதோ நமக்கு பிடிக்காத உணவை உண்ணும்போதோ மற்றும் உணவு உண்டவுடன் அதிக நீரை குடிக்கும்போதோ அவை கழிவுகளாக மாறி நமக்கு தொப்பை, வாயு தொந்தரவு, அல்சர், அ...

வர்மம் varmam

வர்மங்களின் வகைகள்..! வர்மக் கலையை அகத்தியர் நான்கு பெரும் பிரிவுகளாய் பிரித்திருக்கிறார். உடலில் உள்ள வர்ம புள்ளிகள் மற்றும், அவற்றை கையாளும் விதத்தினால் இவற்றை வேறு படுத்துகிறார். இவை “படு வர்மம்”, ”தொடு வர்மம்”, ”தட்டு வர்மம்”, ”நோக்கு வர்மம்” படுவர்மம் நான்கு வகை வர்மங்களில் மிகவும் ஆபாயகரமான பிரிவு இதுவேயாகும். உடலிலுள்ள வர்மப் பகுதிகளில் அடியோ அல்லது தாக்குதலோ ஏற்படுமானால் அப்போது ஏற்படும் வர்மமே "படுவர்மம்" என்கிறார். இந்த படுவர்ம தாக்குதலுக்கு உள்ளாகும் நபர்கள் உயிரிழக்கும் வாய்ப்புக்கள் அதிகம் உள்ளதால் இவை மிகவும் ஆபத்தானவை என்று அகத்தியர் குறிப்பிடுகிறார். ஒரு மனிதன் படுவர்மப் புள்ளிகளில் அடிபட்டால் உடனடியாக மயங்கி விழுவான் என்றும், அவன் வாய் பிளந்து நாக்கு வெளியே தள்ளும், வாயில் நுரையும் வெளியேறும் அத்துடன் அந்த அடிபட்ட இடங்களில் கைவைத்து பார்த்தால் அந்த இடம் மிகவும் குளிர்ச்சியாகக் காணப்படும் என்றும் குறிப்பிடுகிறார். எல்லோராலும் இதை செய்திட முடியாது என்றும், மிகுந்த பயிற்சி உள்ள ஒருவரால் மட்டுமே இத்தகைய செயல்களை செய்திட முடியும் என்றும் கூறுகிறார். தொடு...

இயற்பியல் பிரபஞ்சமும் தூய ஆற்றல் குண்டலினி

இயற்பியல், பிரபஞ்சமும்  தூய ஆற்றல், உலகளாவிய வெப்பநிலை மாறுபாடுகள், நீராவியின் மாறுபாடுகள், அதிர்வுகளின் அவதானிப்புகள், நமது சித்தாந்த தியான நிலை குண்டலினி ஆற்றல் தொடர்பும்.  ஒரு மின்காந்த புலம் என்பது காந்த மற்றும் மின்சார ஆற்றலால் நிரப்பப்பட்ட இடத்தின் ஒரு பகுதி. மின்காந்த புலங்கள் எல்லா இடங்களிலும் உள்ளன. எக்ஸ்-கதிர்கள் மற்றும் காமா கதிர்கள் போன்ற உயர் அதிர்வெண் மின்காந்த கதிர்வீச்சு “ அயனியாக்கம் ” மற்றும் மக்களுக்கு தீங்கு விளைவிக்கும், அதே நேரத்தில் குறைந்த அதிர்வெண் கொண்ட மின்காந்த கதிர்வீச்சு அல்லது “ அல்லாத அயனியாக்கம்,” மனிதர்களுக்கு பாதுகாப்பானதாகக் கருதப்படுகிறது, அல்லது சில மனித நோய்களுக்கு கூட ஒரு தீர்வாக கருதப்படுகிறது. பூமியைச் சுற்றியுள்ள மின்காந்த புலம் நம் உடலை அடைந்து அதன் உள்ளே இருக்கும் கட்டணங்களை பாதிக்கிறது. நம் உடல்கள் அதன் சொந்த மின்னியல் புலத்தைக் கொண்டுள்ளன. டி.என்.ஏவின் துகள்கள் கூட மின்காந்த புலங்களை உருவாக்க முடியும். அந்த அலைகள் நம் உடலின் உள் கடிகாரத்தை பிரதானமாக்குகின்றன மற்றும் தூக்க முறைகள் மற்றும் ஹார்மோன் சுரப்பை பாதிக்கின்றன. ஆல்பா மூளை அ...

பாவங்களுக்கான வியாதிகள்

பாவங்களுக்கான வியாதிகள் - கருட புராணம் !!! 1    யார் மற்றவர்களை ஏளனம் செய்பவர்கள். சத்தியத்தை தவறவிட்டவர்கள், எதற்காவது காக்க வைத்தவர்.    மன அழுத்த நோயால் துன்புறுவர், மன நோயாளியாக இருப்பார் 2   எலி பொந்துக்களை, பாம்பு பொந்துக்களை அடைப்பவர், மீன்களை பிடிப்பவர்களுக்கு    நுரையீரல் மற்றும் சுவாச கோளாரினால் பாதிக்கப்படுவார். 3    விஷம் கலந்து யாரையும் கொலை செய்தால்    தேள் கடி மற்றும் பாம்பு கடியால் துன்பப்படுவார் 4    கருமியாகவும், அதிக வட்டி வசூலிப்பவர், பிறரது பொருளை அபகரிப்பவர்களுக்கு    சுயரோகத்தால் துன்பப்படுவார் 5    விபச்சாரத்தில் ஈடுபடுபவர்கள், சிறுமிகளை பலாத்காரம் செய்பவர் தொழு நோயால் துன்பப்படுவார் 6    தனது உடம்பைக் காட்டி பயமுறுத்துபவர், வீண் சண்டைக்கு இழுப்பவர்    கால், கை வலிப்பு, இழுப்பு நோயால் துன்பப்படுவார் 7    பெண்ணை கெட்ட எண்ணத்துடன் பார்ப்பவர், மற்றவர் பொருள்களையும் பார்த்து பொறாமைப்படுபவர்    நிரந்தர கண் நோயுடன் அவதிப்படுவார் 8  ...