சித்தரியலில் சாப நிவர்த்தி என்பதை குறைகளை களைதல் அல்லது தேவைகளுக்கேற்ப முன் தயாரிப்பு என்று அர்த்தப் படுத்தலாம். சித்தர்கள் பார்வையில் குருநாதரைத் தவிர குறையற்றவை என்று எதுவும் இல்லை.எல்லாம் ஏதோ ஒரு வகையில் குறையுடன் இருப்பதாகவே கருதினர். அவற்றை மேம்படுத்தி பயன் படுத்துவதையே சாப நிவர்த்தி என்கிற தனிப் பிரிவாக வகுத்திருந்தனர்.
அகத்தியர் தனது அகதியர் பன்னிரு காண்டம் மற்றும் அகதியர் மாந்திரீக காவியம் ஆகிய நூல்களில் சாப நிவர்த்தி பற்றி விரிவாக கூறியிருக்கிறார். சாப நிவர்த்தி செய்யப் படாத உடலோ, மூலிகையோ, தின்மமோ பயன்பாட்டிற்கு உகந்தவை அல்ல என்கிறார்.
அகத்தியர் –
மனிதர்கள் தங்கள் உடல் சாபத்தை நிவர்த்தி செய்து கொள்வதால் வெற்றிகளைத் தரக்கூடிய அரிய மூலிகைகள் எல்லாம் கண்ணில் தெரியும் என்கிறார்.இதனால் இரசவாதம் பலில்லும், உடல்சாபத்தை நிவர்த்திக்காது எது செய்தாலும் அது கைகூடாது என்கிறார். மேலும்…
அகத்தியர் –
பரிவான மூலிகைகளின் சாபத்தை தீர்க்கவேண்டும், சுண்ணம், செந்தூரம், பற்பம் செய்ய வேண்டும் என்றால் அவற்றின் சாபத்தை நீக்கவேண்டும், இரசவாத வித்தைகள், வைத்தியங்கள் சரியாகச் செய்யவேண்டும் என்றால் அதற்கும் சாபத்தை தீர்க்கவேண்டும், மேலும் தைலங்கள், கற்பங்கள் செய்யவேண்டும் என்றாலும் சாபம் தீர்க்க வேண்டும் என்கிறார்.
அகத்தியர் –
ஜாலங்களும் மாந்திரீகமும் செய்யவேண்டுமாயின் சித்தர்கள், முனிவர்கள் சாபந்தீர்க்க வேண்டும், யோக ஞானங்கள் செய்யவேண்டுமாயினும் சாபங்கள் தீர்க்க வேண்டும். எனவே முதலில் சாபங்களை நிவர்த்தி செய்து கொள் என்கிறார். இதன் மூலம் சாப நிவர்த்தியின் முக்கியத்துவத்தை உணரலாம்.
எனது புரிதலின் படி சித்தரியலில் சாபநிவர்த்தி என்பது மூன்று பெரும் பிரிவுகளில் அடங்குகிறது.
சாதகன் தன்னையே சாபநிவர்த்தி செய்து கொள்வது,
மருந்து,மாந்திரீகம் செய்வதற்கு தேவையான மூலிகைகளை சாப நிவர்த்தி செய்வது,
இரசவாதம் மற்றும் மருந்து தயாரிப்பில் பயன்படுத்தப் படும் தின்மங்களை சாப நிவர்த்தி செய்வது என வகைப் படுத்தலாம்.
உடல் சாப நிவர்த்தி
சித்தரியலில் தேடல் உள்ள ஒவ்வொருவரும் முதலில் செய்து கொள்ள வேண்டிய ஒன்றாக இது கருதப் படுகிறது. அதாவது சாதகர்கள் தங்கள் உடலை தூய்மைப்படுத்திக் கொள்வதாக இதனை கூறுகின்றனர்.
குருவின் அனுமதியோடு, குருவானவர் உபதேசிக்கும் குறிப்பிட்ட ஒரு மந்திரத்தை ஒரு லட்சம் முறை செபித்து மந்திர சித்தி அடைவதே உடல் சாபநிவர்த்தி எனப்படுகிறது.இந்த மந்திரத்தை பொதுவில் வைத்திட எனக்கு அனுமதி இல்லை என்பதால் அதனை இங்கே தவிர்க்கிறேன்.
மூலிகைகளை சாப நிவர்த்தி
இதனை இரண்டு வகையாக கூறுகின்றனர்.
மருத்துவ தேவைகளுக்கு சாப நிவர்த்தி செய்வது, இதில் எல்லா மூலிகைகளுக்கும் பொதுவான சாப நிவர்த்தி முறை கடைபிடிக்கப் படுகிறது. இதற்கென பிரத்யேக மந்திரங்கள் இருக்கிறது.
மற்றொரு வகையில், குறிப்பிட்ட மூலிகையை ஒரு குறித்த செயலை செய்யவதற்கு தயார் செய்யும் சாப நிவர்த்தி முறை ஆகும். இதில் ஒவ்வொரு மூலிகைகளுக்கும், ஒவ்வொரு காரியத்திற்கென தனித் தனி சாப நிவர்த்தி முறைகள் கடைப்பிடிக்கப்படுகிறது. மாந்திரீகத்தில் இத்தகைய சாபநிவர்த்திகள் புழக்கத்தில் இருக்கிறது.
திண்ம மற்றும் கனிம பொருள்களின் சாப நிவர்த்தி
இது இரசவாதம், மருந்து தயாரிப்பு மற்றும் இயந்திர தயாரிப்புகள் போன்றவற்றில் பயன்படுத்தப்படும் திண்ம, திரவ, உலோக பொருட்களை தூய்மைப் படுத்தும் வகையில் அமைகிறது.
மூலிகை சாபநிவர்த்தி என்பதை மூலிகையினை நிலத்தில் இருந்து பறிக்கும் பொழுதில் செய்திட வேண்டிய முன் தயாரிப்பாக கருதலாம்.காட்டில் மூலிகைகளை தேடும் பொழுது குறிப்பிட்ட மூலிகையினை சுற்றி வளர்ந்து இருக்கும் பிற செடிகளை கவனிக்க வேண்டுமாம்.பிற் செடிகளின் தன்மை மற்றும் பண்புகளை கருத்தில் கொண்டே தேவையான மூலிகையினை பறிக்க வேண்டும் என்கின்றன்ர்.உடல் சாபநிவர்த்தி பெற்றவர்களுக்கு இத்தகைய பகுத்தறியும் திறமை வாய்க்கும் என்கிறார் அகத்தியர்.
மூலிகை பறிப்பதற்கு முதல் நாளே குறிப்பிட்ட மூலிகையினை சுற்றியுள்ள மற்ற செடிகளை நீக்கிவிட வேண்டுமாம்.பிறகு குறிப்பிட்ட நேரத்தில் அதற்கென உள்ள பூசை முறைகளோடு தனித்துவமான ம்ந்திரத்தை செபித்து விரல் நகம் படாமல் அந்த செடியினை வேரோடு பறித்திடல் வேண்டும் என்கின்றனர்.சாபநிவர்த்தியின் அடிப்படையே குறிப்பிட்ட மூலிகையின் உயிர்த் தன்மையினை தக்க வைப்பதாகும்.
சாப நிவர்த்தி மந்திரங்களுக்கு பொருள் ஏதும் இருப்பதாக தெரியவில்லை. பெரும்பாலான மந்திரங்களை லட்சம் தடவை செபித்து உருவேற்றிட வேண்டும் என குறிப்புகள் கூறுகிறது.இதன் பின்னால் இருக்கும் சூட்சுமம் இன்னமும் அறியப் படவில்லை.
நண்பரொருவர் செடிகளில் இருக்கும்,பூச்சிகள், கிருமிகள் போன்றவற்றை அகற்றிட இம்மந்திரங்கள் உபயோகமாகலாம் என கூறியிருந்தார், இது குறித்து அறிந்தவர்கள் மேலதிக விவரம் கூறினால் அனைவருக்கும் பயனுடையதாக இருக்கும்.
இனி சில மூலிகை சாப நிவர்த்தி மந்திரங்களைப் பார்ப்போம்.
– அகத்தியர் –
கொடியறுகு வேரை வசிய முறைகளுக்கு பயன்படுத்தும் போது “டங் றீங் வங்” என்று லட்சம் உரு செபித்து சாப நிவர்த்தி செய்து பறிக்க வேண்டும் என்கிறார் அகத்தியர்.
– அகத்தியர் –
பெருவாகை மூலிகையை வசிய முறைகளுக்கு பயன்படுத்தும் போது “ஓம் நமசிவய” என்று லட்சம் உரு செபித்து சாப நிவர்த்தி செய்து பறிக்க வேண்டும் என்கிறார் அகத்தியர்.
இரசவாதத்தில் பயன்படுத்தப் படும் சாபநிவர்த்தி மந்திரங்கள்
– அகத்தியர் –
பாசாண சுண்ண செந்தூரங்களை புடமிடும் முன் சாபத்தை நிவர்த்தி செய்து கொள்ள வேண்டும் என்று சொலும் அகதியர்.. மேலும் கிருபையுடன் “ஓம் ஹீம் நசிமசி” என்று ஆயிரத்தி எட்டு உரு செபித்தால் வலிமை உள்ள பாசாணங்களின் சாபங்கள் தீரும் என்கிறார்.
– அகத்தியர் –
உபரசத்தின் சத்துக்களைச் சேர்த்து புகழ்நிறைந்த் இரசவாதம் செய்யும் போது அன்பாக “ஓம் றீம் நசிமசி” என்று ஆயிரத்தி எட்டு உரு செபித்தால் உபரசத்தின் சாபங்கள் நீங்கும் என்கிறார் அகதியர்.
இது வரை இந்த சித்த ரகசியம் தொடரில் சொன்ன மந்திரங்கள் வரிசையாக, உடல் சாப மந்திரங்கள், உடல் கட்டு மந்திரங்கள், தீட்சை மந்திரங்கள் என்ற படிமுறையிலேயே மேற்கொள்ள வேண்டும் என்று அகத்தியர் வலியுறுத்துகிறார்.
.jpeg)
Comments
Post a Comment