குண்டலினியை எப்படி எல்லாம் எழுப்பலாம்!
மூலாதாரத்தில் புதைந்திருக்கும் குண்டலினியை எழுப்பிட பல்வேறு உத்திகள் கூறப் பட்டிருக்கின்றன. பொதுவில் பிராணாயாமம் எனப்படும் மூச்சுப் பயிற்சி, ஆசனங்கள், முத்திரைகள் இவைகளால் குண்டலினியை எழுப்ப முடியுமாம்.
இவற்றை எல்லாம் விட மிக எளிதான ஒரு முறையும் இருக்கிறது. அதாவது குருவினை பார்த்தல்(தரிசனம்),குருவினால் தொடப் படுதல், ஆசீர்வதித்தல் ஆகியவைகளால் சட்டென குண்டலினி எழும்பும். இத்தகைய தகுதி உடைய குருமார்கள் இப்போது மிகவும் குறைவு. மேலும் அத்தகையவர்கள் இதை எல்லோருக்கும் அருளுவதுமில்லை.
ஆக, நம்மில் உறைந்திருக்கும் குண்டலினியை எழுப்பிட இத்தனை வகைகள் இருக்கிறது. எனினும் நமது உடல் மற்றும் மனப் பக்குவத்திற்கு ஏற்ற வகையை தெரிவு செய்ய குருவினால் மட்டுமே முடியும். அவரே நமக்கு சரியான வழி எது என்பதை உணர்த்துவார். ஒரு வகையில் பார்த்தால் குண்டலினியை எழுப்புவது அத்தனை சிரமம் இல்லாத எளிதான காரியம்தான்.
அப்படியானால் இதில் கடினமான பகுதி எது?
எழுப்பிய குண்டலினியை, முன்பு நாம் பார்த்த ஏழு ஆதார மையங்களின் ஊடாக கொண்டு செல்வதே இதில் கடினமான பகுதி. ஒவ்வொரு நிலையாக உயர்த்தி உச்சந்தலையான துரியம் வரை கொண்டு செல்வது அத்தனை எளிதான செயல் இல்லை. மிகுந்த பொறுமை, விடாமுயற்சி, தூய்மை, இடைவிடாத பயிற்சி உள்ளவர்களுக்கு மட்டுமே இது சாத்தியமாகும். அவர்களுக்கே எல்லா சக்திகளும் சித்திக்கும்.
எழும்பிய இந்த குண்டலினியானது ஒவ்வொரு ஆதார மையத்தையும் அடையும் போது அந்த மையம் திறக்கிறது. இது மெல்ல மெல்லவே நிகழுமாம். அப்போது தாமரை வடிவத்தில் உருவகப் படுத்தப் படும் இந்த சக்தி மையம், தலை அல்லது முகம் மேல்நோக்கி நிமிரும். அதைத்தான் சக்கரம் மலர்கிறது என்கிறார்கள். இனிமுதல் இந்த அதார மையங்களை சக்கரம் என்று அழைப்போம்.
எழும்பிய குண்டலினியானது ஒவ்வொரு சக்கரத்தையும் கடந்து செல்லும் போது ஒவ்வொரு நிலையிலும் ஒரு சக்தி வெளிப்படுகிறது. அப்போது ஏற்படும் சக்தியைத்தான் சித்தி என்கிறோம்.
குண்டலினி...சுவாசம்...ஆசனம்!!
நமக்குள் உறைந்திருக்கும் குண்டலினியை விழித்தெழச் செய்ய நான்கு வழி வகைகளை நமது முன்னோர்கள் கூறியிருக்கின்றனர். அவை கரும யோகம், பக்தி யோகம், ஞான யோகம், கிரியா யோகம் எனப்படும். இவை ஒவ்வொன்றும் தனித்துவமான வழிவகைகள். ஒவ்வொருவரின் உடல் மற்றும் மனப் பக்குவத்திற்கு ஏற்ப தெரிந்தெடுத்து பழகலாம். இவை ஒவ்வொன்றையும் விரிவாக விளக்கப் புகுந்தால் பதிவின் நோக்கம் திசை திரும்பிவிடும். ஆகையால் தொடரின் நெடுகே அடிப்படைகளை மட்டும் தொட்டுச் செல்வோம்.
தன்னை உணர ஆரம்பிப்பதே இந்த குண்டலினி யோகத்தின் முதல் நிலை. இதை நாம் பலவிதமாக புரிந்து கொண்டிருக்கிறோம். கண்ணாடியில் முகம் பார்த்து, மேனியை பராமரிப்பதையும், நோய் வாய்ப்பட்டால் அதற்கான சிகிச்சைகளை எடுத்துக் கொள்வதையுமே தன்னை உணர்தல் என்பதாக பலரும், தனக்கும், தன் சுற்றத்துக்கும் தேவையானவைகளை சேகரித்து வைப்பது, அதனை பாதுகாப்பது போன்றவைகளையே தன்னை உணர்தல் என நினைத்துக் கொண்டிருக்கிறோம். இவை எல்லாமே உடல் அல்லது புறம் சார்ந்த கவனிப்புகள் அல்லது அறிதல்கள்.
நமது உடலின் அடி நாதமாய் ஓடிடும் மூச்சுக் காற்றை நம்மில் எத்தனை பேர் கவனித்திருப்போம். உண்மையில் தன்னை அறிதல் என்பதே நமக்குள் ஓடிடும் மூச்சினை கவனிக்க ஆரம்பிப்பதில்தான் துவங்குகிறது. தானாய் உள்ளே வருகிறது, அதுவாகவே வெளியே போகிறது என தொடர்ந்து நடக்கிற செயல்தானே என நாம் அலட்சியப் படுத்திவிடுகிறோம். உண்மையில் நமது மகத்துவமே இந்த மூச்சில்தான் அடங்கி இருக்கிறது.
சுவாசம் எனப்படும் இந்த மூச்சு ஒரு சீரான தாளகதியில் நமக்குள் நடந்து கொண்டிருக்கிறது. கவனிக்க ஆரம்பித்தால் மட்டுமே அது புரிய ஆரம்பிக்கும். சாதாரண நிலையில் நடக்கும் சுவாசத்திற்கும், உடல் அல்லது மனம் வருந்த ஒரு செயலை செய்யும் போது விடும் சுவாசத்திற்கும் வித்தியாசம் இருப்பதை நாம் அறிவோம். இந்த தாள கதியை கவனிக்க ஆரம்பித்தலே முதல் நிலை. சுவாசத்தின் இந்த லயத்தை கவனிக்க கவனிக்க நமக்குள் மாற்றங்களை உணர முடியும்.
சித்தர் பெருமக்கள் நான்கு வகையான சுவாச முறைகள் இருப்பதாக கூறுகின்றனர். அவை உயர் சுவாசம், மத்திம சுவாசம், கீழ் சுவாசம், முழுமையான சுவாசம். இது பற்றி விரிவாக தனி பதிவொன்றில் பார்ப்போம். இவற்றுள் நமது சுவாசம் எத்தகையது என்பதை உணர்ந்து அவற்றை முழுமையான சுவாசத்திற்கு உயர்த்திட வேண்டும். இப்போது ப்ராணயாமம் பற்றிய நினைவுகள் உங்களுக்கு வரலாம். வரவேண்டும் என்பதன் பொருட்டே இதனை விளக்கிக் கொண்டிருக்கிறேன்.
அடிப்படையில் குண்டலினி என்பது மாயமோ மந்திரமோ இல்லை ஒரு வகையான பயிற்சிதான்... முழுமையான சுவாசத்தை அறிந்து தெளிந்து பின் அதனை கவனிக்க அதன் லயம் புலப்படும், அந்த லயத்தினை கவனிக்க மனம் அதில் ஒடுங்கும். கவனச்சிதறலுடன் இருந்த மனம் குவியும். சுவாசத்தில் மனம் ஒடுங்க ஒடுங்க உண்டாகும் மாற்றங்களே குண்டலினி பயிற்சியின் ஆரம்பநிலைக்கு நீங்கள் தயாராகி விட்டதை உணர்த்தும். இதுதான் அடிப்படை, இது சிரமமான வேலையும் இல்லை. ஆர்வமும், உழைப்பும், வழிகாட்டுதலும் உள்ள எவருக்கும் எளிதாக வாய்க்கும்.
குண்டலினி பயிற்சியை செய்ய துவங்கும் சாதகன் முதலில் தனிமையான இடத்தை தெரிவு செய்தல் வேண்டும். தனி அறையாக இருந்தால் அமைதியாக அமர்ந்து செய்ய வசதியாக இருக்கும். தோட்டம், புல்தரை, வனப்பகுதி, நீர் நிலைகளை அண்டிய பகுதிகள், பூஞ்செடிகள் மற்றும் ஜீவசமாதி உள்ள இடங்களும் சிறப்பானதே.
அடுத்து ஆசனங்கள். இந்த பயிற்சியை செய்திட எல்லா வகையான ஆசனங்களை பயிற்சி செய்ய வேண்டும் என்கிற அவசியம் இல்லை. தளர்வாகவும், வசதியாகவும் அமர்ந்து செய்யக் கூடிய ஆசனங்களை தெரிந்து பயன்படுத்துவது அவசியம். சாதாரணமாய் நாம் உட்காரும் முறையான பத்மாசனம் போதுமானது. உட்காருவது கடினமாய் உணர்பவர்கள் சுகாசனத்தில் அமர்ந்து செய்யலாம்.
மூலாதாரத்தில் புதைந்திருக்கும் குண்டலினியை எழுப்பிட பல்வேறு உத்திகள் கூறப் பட்டிருக்கின்றன. பொதுவில் பிராணாயாமம் எனப்படும் மூச்சுப் பயிற்சி, ஆசனங்கள், முத்திரைகள் இவைகளால் குண்டலினியை எழுப்ப முடியுமாம்.
- இராஜயோகிகள் சலனமற்ற தியானத்தினாலும், மனப் பயிற்சியினாலும் எழுப்புகின்றனர்.
- சாமான்யர்கள் பக்தி அதாவது முழுமையான சரணாகதியின் மூலம் எழுப்புகின்றனர்.
- ஞானிகளோ பிரித்து அறியும் மன உறுதியினால் எழுப்புகின்றனர். இதை விவேக வைராக்கியம் என்கின்றனர்.
- தாந்திரிகர்கள் மந்திர சக்தியால் குண்டலினியை எழுப்புகின்றனர்.
இவற்றை எல்லாம் விட மிக எளிதான ஒரு முறையும் இருக்கிறது. அதாவது குருவினை பார்த்தல்(தரிசனம்),குருவினால் தொடப் படுதல், ஆசீர்வதித்தல் ஆகியவைகளால் சட்டென குண்டலினி எழும்பும். இத்தகைய தகுதி உடைய குருமார்கள் இப்போது மிகவும் குறைவு. மேலும் அத்தகையவர்கள் இதை எல்லோருக்கும் அருளுவதுமில்லை.
ஆக, நம்மில் உறைந்திருக்கும் குண்டலினியை எழுப்பிட இத்தனை வகைகள் இருக்கிறது. எனினும் நமது உடல் மற்றும் மனப் பக்குவத்திற்கு ஏற்ற வகையை தெரிவு செய்ய குருவினால் மட்டுமே முடியும். அவரே நமக்கு சரியான வழி எது என்பதை உணர்த்துவார். ஒரு வகையில் பார்த்தால் குண்டலினியை எழுப்புவது அத்தனை சிரமம் இல்லாத எளிதான காரியம்தான்.
அப்படியானால் இதில் கடினமான பகுதி எது?
எழுப்பிய குண்டலினியை, முன்பு நாம் பார்த்த ஏழு ஆதார மையங்களின் ஊடாக கொண்டு செல்வதே இதில் கடினமான பகுதி. ஒவ்வொரு நிலையாக உயர்த்தி உச்சந்தலையான துரியம் வரை கொண்டு செல்வது அத்தனை எளிதான செயல் இல்லை. மிகுந்த பொறுமை, விடாமுயற்சி, தூய்மை, இடைவிடாத பயிற்சி உள்ளவர்களுக்கு மட்டுமே இது சாத்தியமாகும். அவர்களுக்கே எல்லா சக்திகளும் சித்திக்கும்.
எழும்பிய இந்த குண்டலினியானது ஒவ்வொரு ஆதார மையத்தையும் அடையும் போது அந்த மையம் திறக்கிறது. இது மெல்ல மெல்லவே நிகழுமாம். அப்போது தாமரை வடிவத்தில் உருவகப் படுத்தப் படும் இந்த சக்தி மையம், தலை அல்லது முகம் மேல்நோக்கி நிமிரும். அதைத்தான் சக்கரம் மலர்கிறது என்கிறார்கள். இனிமுதல் இந்த அதார மையங்களை சக்கரம் என்று அழைப்போம்.
எழும்பிய குண்டலினியானது ஒவ்வொரு சக்கரத்தையும் கடந்து செல்லும் போது ஒவ்வொரு நிலையிலும் ஒரு சக்தி வெளிப்படுகிறது. அப்போது ஏற்படும் சக்தியைத்தான் சித்தி என்கிறோம்.
குண்டலினி...சுவாசம்...ஆசனம்!!
நமக்குள் உறைந்திருக்கும் குண்டலினியை விழித்தெழச் செய்ய நான்கு வழி வகைகளை நமது முன்னோர்கள் கூறியிருக்கின்றனர். அவை கரும யோகம், பக்தி யோகம், ஞான யோகம், கிரியா யோகம் எனப்படும். இவை ஒவ்வொன்றும் தனித்துவமான வழிவகைகள். ஒவ்வொருவரின் உடல் மற்றும் மனப் பக்குவத்திற்கு ஏற்ப தெரிந்தெடுத்து பழகலாம். இவை ஒவ்வொன்றையும் விரிவாக விளக்கப் புகுந்தால் பதிவின் நோக்கம் திசை திரும்பிவிடும். ஆகையால் தொடரின் நெடுகே அடிப்படைகளை மட்டும் தொட்டுச் செல்வோம்.
தன்னை உணர ஆரம்பிப்பதே இந்த குண்டலினி யோகத்தின் முதல் நிலை. இதை நாம் பலவிதமாக புரிந்து கொண்டிருக்கிறோம். கண்ணாடியில் முகம் பார்த்து, மேனியை பராமரிப்பதையும், நோய் வாய்ப்பட்டால் அதற்கான சிகிச்சைகளை எடுத்துக் கொள்வதையுமே தன்னை உணர்தல் என்பதாக பலரும், தனக்கும், தன் சுற்றத்துக்கும் தேவையானவைகளை சேகரித்து வைப்பது, அதனை பாதுகாப்பது போன்றவைகளையே தன்னை உணர்தல் என நினைத்துக் கொண்டிருக்கிறோம். இவை எல்லாமே உடல் அல்லது புறம் சார்ந்த கவனிப்புகள் அல்லது அறிதல்கள்.
நமது உடலின் அடி நாதமாய் ஓடிடும் மூச்சுக் காற்றை நம்மில் எத்தனை பேர் கவனித்திருப்போம். உண்மையில் தன்னை அறிதல் என்பதே நமக்குள் ஓடிடும் மூச்சினை கவனிக்க ஆரம்பிப்பதில்தான் துவங்குகிறது. தானாய் உள்ளே வருகிறது, அதுவாகவே வெளியே போகிறது என தொடர்ந்து நடக்கிற செயல்தானே என நாம் அலட்சியப் படுத்திவிடுகிறோம். உண்மையில் நமது மகத்துவமே இந்த மூச்சில்தான் அடங்கி இருக்கிறது.
சுவாசம் எனப்படும் இந்த மூச்சு ஒரு சீரான தாளகதியில் நமக்குள் நடந்து கொண்டிருக்கிறது. கவனிக்க ஆரம்பித்தால் மட்டுமே அது புரிய ஆரம்பிக்கும். சாதாரண நிலையில் நடக்கும் சுவாசத்திற்கும், உடல் அல்லது மனம் வருந்த ஒரு செயலை செய்யும் போது விடும் சுவாசத்திற்கும் வித்தியாசம் இருப்பதை நாம் அறிவோம். இந்த தாள கதியை கவனிக்க ஆரம்பித்தலே முதல் நிலை. சுவாசத்தின் இந்த லயத்தை கவனிக்க கவனிக்க நமக்குள் மாற்றங்களை உணர முடியும்.
சித்தர் பெருமக்கள் நான்கு வகையான சுவாச முறைகள் இருப்பதாக கூறுகின்றனர். அவை உயர் சுவாசம், மத்திம சுவாசம், கீழ் சுவாசம், முழுமையான சுவாசம். இது பற்றி விரிவாக தனி பதிவொன்றில் பார்ப்போம். இவற்றுள் நமது சுவாசம் எத்தகையது என்பதை உணர்ந்து அவற்றை முழுமையான சுவாசத்திற்கு உயர்த்திட வேண்டும். இப்போது ப்ராணயாமம் பற்றிய நினைவுகள் உங்களுக்கு வரலாம். வரவேண்டும் என்பதன் பொருட்டே இதனை விளக்கிக் கொண்டிருக்கிறேன்.
அடிப்படையில் குண்டலினி என்பது மாயமோ மந்திரமோ இல்லை ஒரு வகையான பயிற்சிதான்... முழுமையான சுவாசத்தை அறிந்து தெளிந்து பின் அதனை கவனிக்க அதன் லயம் புலப்படும், அந்த லயத்தினை கவனிக்க மனம் அதில் ஒடுங்கும். கவனச்சிதறலுடன் இருந்த மனம் குவியும். சுவாசத்தில் மனம் ஒடுங்க ஒடுங்க உண்டாகும் மாற்றங்களே குண்டலினி பயிற்சியின் ஆரம்பநிலைக்கு நீங்கள் தயாராகி விட்டதை உணர்த்தும். இதுதான் அடிப்படை, இது சிரமமான வேலையும் இல்லை. ஆர்வமும், உழைப்பும், வழிகாட்டுதலும் உள்ள எவருக்கும் எளிதாக வாய்க்கும்.
குண்டலினி பயிற்சியை செய்ய துவங்கும் சாதகன் முதலில் தனிமையான இடத்தை தெரிவு செய்தல் வேண்டும். தனி அறையாக இருந்தால் அமைதியாக அமர்ந்து செய்ய வசதியாக இருக்கும். தோட்டம், புல்தரை, வனப்பகுதி, நீர் நிலைகளை அண்டிய பகுதிகள், பூஞ்செடிகள் மற்றும் ஜீவசமாதி உள்ள இடங்களும் சிறப்பானதே.
அடுத்து ஆசனங்கள். இந்த பயிற்சியை செய்திட எல்லா வகையான ஆசனங்களை பயிற்சி செய்ய வேண்டும் என்கிற அவசியம் இல்லை. தளர்வாகவும், வசதியாகவும் அமர்ந்து செய்யக் கூடிய ஆசனங்களை தெரிந்து பயன்படுத்துவது அவசியம். சாதாரணமாய் நாம் உட்காரும் முறையான பத்மாசனம் போதுமானது. உட்காருவது கடினமாய் உணர்பவர்கள் சுகாசனத்தில் அமர்ந்து செய்யலாம்.

Comments
Post a Comment