Skip to main content

குண்டலினி ஆற்றல் 3

குண்டலினியை எப்படி எல்லாம் எழுப்பலாம்!

மூலாதாரத்தில் புதைந்திருக்கும் குண்டலினியை எழுப்பிட பல்வேறு உத்திகள் கூறப் பட்டிருக்கின்றன. பொதுவில் பிராணாயாமம் எனப்படும் மூச்சுப் பயிற்சி, ஆசனங்கள், முத்திரைகள் இவைகளால் குண்டலினியை எழுப்ப முடியுமாம்.

  1. இராஜயோகிகள் சலனமற்ற தியானத்தினாலும், மனப் பயிற்சியினாலும் எழுப்புகின்றனர்.
  2. சாமான்யர்கள் பக்தி அதாவது முழுமையான சரணாகதியின் மூலம் எழுப்புகின்றனர்.
  3. ஞானிகளோ பிரித்து அறியும் மன உறுதியினால் எழுப்புகின்றனர். இதை விவேக வைராக்கியம் என்கின்றனர்.
  4. தாந்திரிகர்கள் மந்திர சக்தியால் குண்டலினியை எழுப்புகின்றனர்.

இவற்றை எல்லாம் விட மிக எளிதான ஒரு முறையும் இருக்கிறது. அதாவது குருவினை பார்த்தல்(தரிசனம்),குருவினால் தொடப் படுதல், ஆசீர்வதித்தல் ஆகியவைகளால் சட்டென குண்டலினி எழும்பும். இத்தகைய தகுதி உடைய குருமார்கள் இப்போது மிகவும் குறைவு. மேலும் அத்தகையவர்கள் இதை எல்லோருக்கும் அருளுவதுமில்லை.

ஆக, நம்மில் உறைந்திருக்கும் குண்டலினியை எழுப்பிட இத்தனை வகைகள் இருக்கிறது. எனினும் நமது உடல் மற்றும் மனப் பக்குவத்திற்கு ஏற்ற வகையை தெரிவு செய்ய குருவினால் மட்டுமே முடியும். அவரே நமக்கு சரியான வழி எது என்பதை உணர்த்துவார். ஒரு வகையில் பார்த்தால் குண்டலினியை எழுப்புவது அத்தனை சிரமம் இல்லாத எளிதான காரியம்தான்.

அப்படியானால் இதில் கடினமான பகுதி எது?

எழுப்பிய குண்டலினியை, முன்பு நாம் பார்த்த ஏழு ஆதார மையங்களின் ஊடாக கொண்டு செல்வதே இதில் கடினமான பகுதி. ஒவ்வொரு நிலையாக உயர்த்தி உச்சந்தலையான துரியம் வரை கொண்டு செல்வது அத்தனை எளிதான செயல் இல்லை. மிகுந்த பொறுமை, விடாமுயற்சி, தூய்மை, இடைவிடாத பயிற்சி உள்ளவர்களுக்கு மட்டுமே இது சாத்தியமாகும். அவர்களுக்கே எல்லா சக்திகளும் சித்திக்கும்.

எழும்பிய இந்த குண்டலினியானது ஒவ்வொரு ஆதார மையத்தையும் அடையும் போது அந்த மையம் திறக்கிறது. இது மெல்ல மெல்லவே நிகழுமாம். அப்போது தாமரை வடிவத்தில் உருவகப் படுத்தப் படும் இந்த சக்தி மையம், தலை அல்லது முகம் மேல்நோக்கி நிமிரும். அதைத்தான் சக்கரம் மலர்கிறது என்கிறார்கள். இனிமுதல் இந்த அதார மையங்களை சக்கரம் என்று அழைப்போம்.

எழும்பிய குண்டலினியானது ஒவ்வொரு சக்கரத்தையும் கடந்து செல்லும் போது ஒவ்வொரு நிலையிலும் ஒரு சக்தி வெளிப்படுகிறது. அப்போது ஏற்படும் சக்தியைத்தான் சித்தி என்கிறோம்.

குண்டலினி...சுவாசம்...ஆசனம்!!

நமக்குள் உறைந்திருக்கும் குண்டலினியை விழித்தெழச் செய்ய நான்கு வழி வகைகளை நமது முன்னோர்கள் கூறியிருக்கின்றனர். அவை கரும யோகம், பக்தி யோகம், ஞான யோகம், கிரியா யோகம் எனப்படும். இவை ஒவ்வொன்றும் தனித்துவமான வழிவகைகள். ஒவ்வொருவரின் உடல் மற்றும் மனப் பக்குவத்திற்கு ஏற்ப தெரிந்தெடுத்து பழகலாம். இவை ஒவ்வொன்றையும் விரிவாக விளக்கப் புகுந்தால் பதிவின் நோக்கம் திசை திரும்பிவிடும். ஆகையால் தொடரின் நெடுகே அடிப்படைகளை மட்டும் தொட்டுச் செல்வோம்.

தன்னை உணர ஆரம்பிப்பதே இந்த குண்டலினி யோகத்தின் முதல் நிலை. இதை நாம் பலவிதமாக புரிந்து கொண்டிருக்கிறோம். கண்ணாடியில் முகம் பார்த்து, மேனியை பராமரிப்பதையும், நோய் வாய்ப்பட்டால் அதற்கான சிகிச்சைகளை எடுத்துக் கொள்வதையுமே தன்னை உணர்தல் என்பதாக பலரும், தனக்கும், தன் சுற்றத்துக்கும் தேவையானவைகளை சேகரித்து வைப்பது, அதனை பாதுகாப்பது போன்றவைகளையே தன்னை உணர்தல் என நினைத்துக் கொண்டிருக்கிறோம். இவை எல்லாமே உடல் அல்லது புறம் சார்ந்த கவனிப்புகள் அல்லது அறிதல்கள்.

நமது உடலின் அடி நாதமாய் ஓடிடும் மூச்சுக் காற்றை நம்மில் எத்தனை பேர் கவனித்திருப்போம். உண்மையில் தன்னை அறிதல் என்பதே நமக்குள் ஓடிடும் மூச்சினை கவனிக்க ஆரம்பிப்பதில்தான் துவங்குகிறது. தானாய் உள்ளே வருகிறது, அதுவாகவே வெளியே போகிறது என தொடர்ந்து நடக்கிற செயல்தானே என நாம் அலட்சியப் படுத்திவிடுகிறோம். உண்மையில் நமது மகத்துவமே இந்த மூச்சில்தான் அடங்கி இருக்கிறது.

சுவாசம் எனப்படும் இந்த மூச்சு ஒரு சீரான தாளகதியில் நமக்குள் நடந்து கொண்டிருக்கிறது. கவனிக்க ஆரம்பித்தால் மட்டுமே அது புரிய ஆரம்பிக்கும். சாதாரண நிலையில் நடக்கும் சுவாசத்திற்கும், உடல் அல்லது மனம் வருந்த ஒரு செயலை செய்யும் போது விடும் சுவாசத்திற்கும் வித்தியாசம் இருப்பதை நாம் அறிவோம். இந்த தாள கதியை கவனிக்க ஆரம்பித்தலே முதல் நிலை. சுவாசத்தின் இந்த லயத்தை கவனிக்க கவனிக்க நமக்குள் மாற்றங்களை உணர முடியும்.

சித்தர் பெருமக்கள் நான்கு வகையான சுவாச முறைகள் இருப்பதாக கூறுகின்றனர். அவை உயர் சுவாசம், மத்திம சுவாசம், கீழ் சுவாசம், முழுமையான சுவாசம். இது பற்றி விரிவாக தனி பதிவொன்றில் பார்ப்போம். இவற்றுள் நமது சுவாசம் எத்தகையது என்பதை உணர்ந்து அவற்றை முழுமையான சுவாசத்திற்கு உயர்த்திட வேண்டும். இப்போது ப்ராணயாமம் பற்றிய நினைவுகள் உங்களுக்கு வரலாம். வரவேண்டும் என்பதன் பொருட்டே இதனை விளக்கிக் கொண்டிருக்கிறேன்.

அடிப்படையில் குண்டலினி என்பது மாயமோ மந்திரமோ இல்லை ஒரு வகையான பயிற்சிதான்... முழுமையான சுவாசத்தை அறிந்து தெளிந்து பின் அதனை கவனிக்க அதன் லயம் புலப்படும், அந்த லயத்தினை கவனிக்க மனம் அதில் ஒடுங்கும். கவனச்சிதறலுடன் இருந்த மனம் குவியும். சுவாசத்தில் மனம் ஒடுங்க ஒடுங்க உண்டாகும் மாற்றங்களே குண்டலினி பயிற்சியின் ஆரம்பநிலைக்கு நீங்கள் தயாராகி விட்டதை உணர்த்தும். இதுதான் அடிப்படை, இது சிரமமான வேலையும் இல்லை. ஆர்வமும், உழைப்பும், வழிகாட்டுதலும் உள்ள எவருக்கும் எளிதாக வாய்க்கும்.

குண்டலினி பயிற்சியை செய்ய துவங்கும் சாதகன் முதலில் தனிமையான இடத்தை தெரிவு செய்தல் வேண்டும். தனி அறையாக இருந்தால் அமைதியாக அமர்ந்து செய்ய வசதியாக இருக்கும். தோட்டம், புல்தரை, வனப்பகுதி, நீர் நிலைகளை அண்டிய பகுதிகள், பூஞ்செடிகள் மற்றும் ஜீவசமாதி உள்ள இடங்களும் சிறப்பானதே.

அடுத்து ஆசனங்கள். இந்த பயிற்சியை செய்திட எல்லா வகையான ஆசனங்களை பயிற்சி செய்ய வேண்டும் என்கிற அவசியம் இல்லை. தளர்வாகவும், வசதியாகவும் அமர்ந்து செய்யக் கூடிய ஆசனங்களை தெரிந்து பயன்படுத்துவது அவசியம். சாதாரணமாய் நாம் உட்காரும் முறையான பத்மாசனம் போதுமானது. உட்காருவது கடினமாய் உணர்பவர்கள் சுகாசனத்தில் அமர்ந்து செய்யலாம்.

Comments

Popular Posts

அருள்வெளி சித்தர் 108 போற்றி

பரம்பொருள் அருட்பெரும் ஜோதி ஓம் ஸ்ரீ அருள்வெளி சித்தர் பரம்பொருள் அருட்பெரும் ஜோதி ஓம் ஸ்ரீ அருள்வெளி சித்தர் ஓம் ஸ்ரீ அருள்வெளி சித்தர் 108 போற்றி 1. அன்பே உருவான அருள்வேளிக் சித்தனே போற்றி ! 2. அகர முதலாய் அமர்ந்தாய் போற்றி ! 3. அறிவிற் கறிவான ஆதுவிதனே போற்றி ! 4. அறத்தின் வடிவே ஐயனே போற்றி ! 5. அடிமை எமைக் காக்கும் அத்தா போற்றி ! 6. அனாதிப் பரம்பொருள் ஆயினே போற்றி ! 7. அமரர் வணங்கும் அரியே போற்றி ! 8. அண்டினோர்க் காதரவு அளிப்பாய் போற்றி ! 9. அன்பே சிவமேன் றறிந்தாய் போற்றி ! 10. அன்பே சிவமாய் அமர்ந்தாய் போற்றி ! 11. அடக்கம் ஆன  சிவமே போற்றி ! 12. ஆனந்த வடிவச் சித்தனே போற்றி ! 13. ஆகாயம் எல்லாம் அளந்தாய் போற்றி ! 14. ஆதியே போற்றி சோதியே போற்றி ! 15. ஆலத்தை அமுதாய் ஆக்குவை போற்றி ! 16. ஆருரிச் சிவமே அழகா போற்றி ! 17. ஆசை வித்த அரனே போற்றி ! 18. ஆணவ மாயை அழித்தாய் போற்றி ! 19. ஆவியில் உறையும் ஐயா போற்றி ! 20. ஆத்தும தத்துவம் அறிவிப்பாய் போற்றி ! 21. ஆலமர் செல்வ அரசே போற்றி ! 22. இகர மாகி எழுந்தாய் போற்றி ! 23. இறைவி இறைவன் வடிவே போற்றி ! 24. இகபர சுகங்கள் தருவாய் ...

அத்தி

1. மூலிகையின் பெயர் :- அத்தி. 2. வேறு பெயர் :- அதவம் மரம் 3. தாவரப்பெயர் :- FICUS GLOMERATA, FICUS AURICULATE. 4. தாவரக்குடும்பம் :- MORACEAE. 5. பயன்தரும் பாகங்கள் :- இலை, பிஞ்சு, காய், பழம், பால், பட்டை ஆகியன. 6. வளரியல்பு :- அத்தி களிமண் நிலம் மற்றும் ஆற்றுப்படுகைகளில் நன்கு வளரும். மாற்றடுக்கில் அமைந்த முழுமையான இலைகளை உடைய பெரு  (FICUS GLOMERATA , ROXB ; MORACEAE ) மர வகையைச் சேர்ந்தது.நாட்டு அத்தி (COUNTRY FIG), வெள்ளை அத்தி (GULAR FIG), நல்ல அத்தி (FICUS GLOMERATA CLUSTER FIG) என பல வகை அத்தி மரங்கள் உண்டு. அத்தி அளவான உயரமுடைய நடுத்தர மரமாகும். இம்மரம் சுமார் 10 மீட்டர் வரை உயரமாக வளர்கிறது. மரத்தின் பட்டை சாம்பல் மற்றும் சிவப்பு நிறத்தில் காணப்படுகிறது. அத்தி இலைகளில் மூன்று நரம்புகள் இருக்கும். காய்கள் சற்று நீளமான முட்டை வடிவில் தண்டிலும், கிளைகளிலும் அடிமரத்திலும் கொத்துக் கொத்தாகத் தோன்றும். பெரிய நெல்லிக்காய் அளவில் உருண்டையாக சிறிது பச்சை நிறத்துடன் இருக்கும். காய் பழுத்த பின்பு கொய்யாப்பழத்தைப் போல் வெளிறிய மஞ்சள் நிறமாக மாறிவிடும். பழங்கள் தானே கீழே உத...

வர்மம் varmam

வர்மங்களின் வகைகள்..! வர்மக் கலையை அகத்தியர் நான்கு பெரும் பிரிவுகளாய் பிரித்திருக்கிறார். உடலில் உள்ள வர்ம புள்ளிகள் மற்றும், அவற்றை கையாளும் விதத்தினால் இவற்றை வேறு படுத்துகிறார். இவை “படு வர்மம்”, ”தொடு வர்மம்”, ”தட்டு வர்மம்”, ”நோக்கு வர்மம்” படுவர்மம் நான்கு வகை வர்மங்களில் மிகவும் ஆபாயகரமான பிரிவு இதுவேயாகும். உடலிலுள்ள வர்மப் பகுதிகளில் அடியோ அல்லது தாக்குதலோ ஏற்படுமானால் அப்போது ஏற்படும் வர்மமே "படுவர்மம்" என்கிறார். இந்த படுவர்ம தாக்குதலுக்கு உள்ளாகும் நபர்கள் உயிரிழக்கும் வாய்ப்புக்கள் அதிகம் உள்ளதால் இவை மிகவும் ஆபத்தானவை என்று அகத்தியர் குறிப்பிடுகிறார். ஒரு மனிதன் படுவர்மப் புள்ளிகளில் அடிபட்டால் உடனடியாக மயங்கி விழுவான் என்றும், அவன் வாய் பிளந்து நாக்கு வெளியே தள்ளும், வாயில் நுரையும் வெளியேறும் அத்துடன் அந்த அடிபட்ட இடங்களில் கைவைத்து பார்த்தால் அந்த இடம் மிகவும் குளிர்ச்சியாகக் காணப்படும் என்றும் குறிப்பிடுகிறார். எல்லோராலும் இதை செய்திட முடியாது என்றும், மிகுந்த பயிற்சி உள்ள ஒருவரால் மட்டுமே இத்தகைய செயல்களை செய்திட முடியும் என்றும் கூறுகிறார். தொடு...

குண்டலினி ஆற்றல் 9 விசுத்தி

குண்டலினி - விசுத்தி. மூலாதாரத்திலிருந்து ஐந்தாவது சக்கரமான விசுத்தி பற்றி இன்று பார்ப்போம். இதைப் பற்றி அகத்தியர் பின் வருமாறு விளக்குகிறார். ஆச்சப்பா வனாகததி னொடுக்கஞ்சொன்னோம் அறையுகிறேன் விசுத்தியி னடவைக்கேளு மாச்சப்பா வதற்க்குமேல் பன்னிரெண்டங்குலம் பாச்சப்பா பதினாறு யிதழ்தா னாகும் பாலகனே அட்சரந்தான் வகாரமாகும் வதுநடுவில் சதாசிவனும் சாகினியுமாமே. - அகத்தியர். இந்த சக்தி ஆதார மையமானது நமது தொண்டையின் அடிப்பாகத்தில் சுழுமுனை நாடியில் அமைந்து இருப்பதாக குறிப்பிடுகின்றனர். நமது குரல்வளை, மூச்சுக் குழாய், தையராய்டு சுரப்பிகள், நுரையீரல், கைகள் போன்ற உறுப்புகளுடன் விசுத்தி சக்கரம் தொடர்புடையதாக குறிப்பிடப் படுகிறது. பஞ்சாட்சர எழுத்துக்களான "சிவயநம" என்னும் எழுத்துகளில் ஒன்றான "வ" என்னும் எழுத்தையும், அதன் தத்துவத்தையும் விசுத்தி சக்கரம் விளக்குவதாக அமைகின்றது. இச்சக்கரத்தின் அதிதேவன் சதாசிவன், அதி தேவதை சாகினி. பஞ்ச பூதங்களில் ஒன்றான ஆகாசம் இதன் மூலக்கூறு. இதன் மூல மந்திரம் “ஹம்” எனப்படுகிறது. இந்த சக்கரத்திலிருந்து தாமரை இதழ் போன்ற பதினாறு யோக நாடிகள் கிளம்புகின்றன....