Skip to main content

நாயுருவி Achyranthes Aspera

மாற்றுப்பெயர் ; நாயுருவி  கடலாடி,அமராரவம், கருதீதனகோரத்தி, கங்கேசரி, காரத்தி, காரம், சிலைகாரம், சிவந்த ஞாயிறு, பரமாரி, பிறத்திய புற்பம், பிப்பீலிகிதநிதுச்சி, உளமணி, கடுடூதி, கரம்பை, மாமுனி, நாயுருஞ்சி.அபமார்கி.
வளரியல்பு: சிறுசெடி
இலைஅமைப்பு ; எதிரடுக்கில் காம்புள்ள முழுமையான இலைகள்
பூ,காய் ; நீண்ட கதிர்களுடன்  கூடிய சிறிய பூக்கள்
மருத்துவ பாகம் ;   சமூலம்.(முழு செடி)
குணம் ; சங்கோசனகாரி,மூத்திரவர்த்தனகாரி,வியதாபேதகாரி.
தீர்க்கும் நோய்கள்:
மலிகாரங் கைப்புள்ள அபமார்கியின் வேரால் வசியமுண்டா
மிலைமூல வுதிரமந்தம் பேதிகபம் வியர்வு தந்தியிறங்குமேகம்
மலையேனும் படிபுரியு முள்ளரிசி பசிமாற்றும் வன்சமூலம்
பலமாதர்க் குள்ளழுக்கை நீக்கும்வங்க செந்தூரம்பண்ணுமாதோ.

"வேலுக்கு பல் இருகும்வேம்புக்கு பல் துலங்கும்
பூலுக்கு போகம் பொழியுமே – ஆலுக்குத்
தண் தாமரையாளும் சார்வளே நாயுருவி
கண்டால் வசீகரமாம் காண்".
"ஓதமுறு சோபை யுயர்பாண்டு வைப்போக்குந்
தீதுறுகா மாலைநோய் தீர்க்குமினார் – சூதகநீர்
பொய்ப்புறுகா லத்ததனைப் பொங்குவிக்குங் காரமொடு
கைப்புறுசெந் நாயுருவி காண்."

கசப்பும் கார்ப்புமுள்ள அபமார்கியின் வேரால் முகவசீகரமாம்.இலை இரத்தமூலம்,அதிசாரம்,கபநோய்,வியர்வை,தந்திப்பிரமேகம் விலக்கும். விதை பசி நீக்கும்.சமூலச் சாம்பல் பிரசவித்த மாதர் உதிரச்சிக்கல் போக்கும்.வங்கத்தைச் செந்தூரமாக்கும்.

1.   அரைத்துக் கட்ட கொப்புளங்கலில் உள்ள துர்நீரை வெளீயேற்றி ஆற்றும்.
2.   இலைச்சுரசம் 15மிலியுடன் சர்க்கரை கூட்டி 3-5 நாள் காலைமாலை கொடுக்க மூலம்,பழைய இருமல்,அதிசாரம்,வியர்வை,தந்திமேகம் போம்.
3.   சாறுடன் வெள்ளாட்டுக் கொழுப்பு,மருதோன்றிக் குழித்தைலம் கலந்து தேய்க்க கைகால் நரம்பு இசிவு குணமாகும்.
4.   இலையைக் கசக்கி ஊறலெடுத்துப் படருகின்ற தேமலுக்குத் தேய்க்கக் குணமாகும்.
5.   இலை கியாழத்தால் வாய் கொப்புளிக்க பல்வலி,உண்ணாக்குவலி தீரும்.
6.   இலையை ரோஜாப்பூ எண்ணை அல்லது ந.எண்ணையில் காய்ச்சி காதிலிட காதுவலி குணமாகும்.
7.   வேரால் பல் துலக்க முக வசீகரமுண்டாகும்.
8.   இலையைக் கசக்கித் தேய்க்க தேள்கடி விஷமிறங்கும்.
9.   இலையை அரைத்துப் பற்றுப்போட வண்டு,குழவி,தேனீ போன்றவற்றின் கடியால் ஏற்பட்ட கடுப்பு தீரும்.
10. 10 கிராம் இலையை அரைத்து ந,எண்ணையில் கலந்து 10நாள் காலைமாலை சாப்பிட இரத்தமூலம் தீரும்.
11. வேர்ப்பட்டையுடன் சமன் மிளகு பொடித்துக் கால் கிராம் தேனில் குழைத்து காலைமாலை சாப்பிட்டுவர இருமல் தீரும்.
12. 10கிராம் விதயை அரைத்துக் காலைமாலை 2நாள் சாப்பிட பேதி தீரும்.
13. துத்திக்கீரை வதக்கலில் விதைச்சூரணம் 20கிராம் கலந்துண்ண மூலம் அனைத்தும் தீரும்.
14. விதையை சோறுபோல் சமைத்துண்ண பசி இராது.1வாரம் ஆயாசமிண்றி இருக்கலாம்.மிளகு வறுத்துக் குடிநீர் காய்ச்சிப் பருகபசி உண்டாகும்.
15. நாயுருவிச் சாம்பல்,ஆனங்காய்(ஆண் பனை பூ பாளை)சாம்பல்சமன் கரைத்து தெளிவை காய்ச்சி எடுத்த உப்பு(நாயுருவி உப்பு) 2அரிசி எடை தேன்.நெய்,மோர்,வெண்ணை ஏதேனும் ஒன்றில் கொடுக்க என்புருக்கி,நீரேற்றம்,குன்மம்,பித்தப்பாண்டு,ஆஸ்துமா தீரும்.
16. செந்நாயுருவி இலைசாறு 15-25 மிலி தினம் 2வேளை கொடுக்க வயிற்ரு நோயைக் குணப்படுத்தும்.அதிக அளவில் கொடுக்க ஸ்திரீகளுக்குக் கட்டுப்பட்டுள்ள உதிரத்தையும் பிண்டத்தையும் வெளிப்படுத்தும்.
17.  செந்நாயுருவி இலையுடன் மிளகு,பூண்டு சிறிது வெல்லம் சேர்த்து அரத்துத் தூதுவேளைகாய் அளவு மாத்திரை செய்து 3வேளை தினம் கொடுக்க முறைசுரம் குணமாகும்.
18. செந்நாயுருவி வேர்ப்பட்டைச் சூரணம்,மிளகு சூரணம் வகைக்கு 2 குன்றி எடைதேனில் குழைத்து காலைமாலை 3 நாள் கொடுக்க இருமல் குணமாகும்.

Comments

Popular Posts

அருள்வெளி சித்தர் 108 போற்றி

பரம்பொருள் அருட்பெரும் ஜோதி ஓம் ஸ்ரீ அருள்வெளி சித்தர் பரம்பொருள் அருட்பெரும் ஜோதி ஓம் ஸ்ரீ அருள்வெளி சித்தர் ஓம் ஸ்ரீ அருள்வெளி சித்தர் 108 போற்றி 1. அன்பே உருவான அருள்வேளிக் சித்தனே போற்றி ! 2. அகர முதலாய் அமர்ந்தாய் போற்றி ! 3. அறிவிற் கறிவான ஆதுவிதனே போற்றி ! 4. அறத்தின் வடிவே ஐயனே போற்றி ! 5. அடிமை எமைக் காக்கும் அத்தா போற்றி ! 6. அனாதிப் பரம்பொருள் ஆயினே போற்றி ! 7. அமரர் வணங்கும் அரியே போற்றி ! 8. அண்டினோர்க் காதரவு அளிப்பாய் போற்றி ! 9. அன்பே சிவமேன் றறிந்தாய் போற்றி ! 10. அன்பே சிவமாய் அமர்ந்தாய் போற்றி ! 11. அடக்கம் ஆன  சிவமே போற்றி ! 12. ஆனந்த வடிவச் சித்தனே போற்றி ! 13. ஆகாயம் எல்லாம் அளந்தாய் போற்றி ! 14. ஆதியே போற்றி சோதியே போற்றி ! 15. ஆலத்தை அமுதாய் ஆக்குவை போற்றி ! 16. ஆருரிச் சிவமே அழகா போற்றி ! 17. ஆசை வித்த அரனே போற்றி ! 18. ஆணவ மாயை அழித்தாய் போற்றி ! 19. ஆவியில் உறையும் ஐயா போற்றி ! 20. ஆத்தும தத்துவம் அறிவிப்பாய் போற்றி ! 21. ஆலமர் செல்வ அரசே போற்றி ! 22. இகர மாகி எழுந்தாய் போற்றி ! 23. இறைவி இறைவன் வடிவே போற்றி ! 24. இகபர சுகங்கள் தருவாய் ...

அத்தி

1. மூலிகையின் பெயர் :- அத்தி. 2. வேறு பெயர் :- அதவம் மரம் 3. தாவரப்பெயர் :- FICUS GLOMERATA, FICUS AURICULATE. 4. தாவரக்குடும்பம் :- MORACEAE. 5. பயன்தரும் பாகங்கள் :- இலை, பிஞ்சு, காய், பழம், பால், பட்டை ஆகியன. 6. வளரியல்பு :- அத்தி களிமண் நிலம் மற்றும் ஆற்றுப்படுகைகளில் நன்கு வளரும். மாற்றடுக்கில் அமைந்த முழுமையான இலைகளை உடைய பெரு  (FICUS GLOMERATA , ROXB ; MORACEAE ) மர வகையைச் சேர்ந்தது.நாட்டு அத்தி (COUNTRY FIG), வெள்ளை அத்தி (GULAR FIG), நல்ல அத்தி (FICUS GLOMERATA CLUSTER FIG) என பல வகை அத்தி மரங்கள் உண்டு. அத்தி அளவான உயரமுடைய நடுத்தர மரமாகும். இம்மரம் சுமார் 10 மீட்டர் வரை உயரமாக வளர்கிறது. மரத்தின் பட்டை சாம்பல் மற்றும் சிவப்பு நிறத்தில் காணப்படுகிறது. அத்தி இலைகளில் மூன்று நரம்புகள் இருக்கும். காய்கள் சற்று நீளமான முட்டை வடிவில் தண்டிலும், கிளைகளிலும் அடிமரத்திலும் கொத்துக் கொத்தாகத் தோன்றும். பெரிய நெல்லிக்காய் அளவில் உருண்டையாக சிறிது பச்சை நிறத்துடன் இருக்கும். காய் பழுத்த பின்பு கொய்யாப்பழத்தைப் போல் வெளிறிய மஞ்சள் நிறமாக மாறிவிடும். பழங்கள் தானே கீழே உத...

வர்மம் varmam

வர்மங்களின் வகைகள்..! வர்மக் கலையை அகத்தியர் நான்கு பெரும் பிரிவுகளாய் பிரித்திருக்கிறார். உடலில் உள்ள வர்ம புள்ளிகள் மற்றும், அவற்றை கையாளும் விதத்தினால் இவற்றை வேறு படுத்துகிறார். இவை “படு வர்மம்”, ”தொடு வர்மம்”, ”தட்டு வர்மம்”, ”நோக்கு வர்மம்” படுவர்மம் நான்கு வகை வர்மங்களில் மிகவும் ஆபாயகரமான பிரிவு இதுவேயாகும். உடலிலுள்ள வர்மப் பகுதிகளில் அடியோ அல்லது தாக்குதலோ ஏற்படுமானால் அப்போது ஏற்படும் வர்மமே "படுவர்மம்" என்கிறார். இந்த படுவர்ம தாக்குதலுக்கு உள்ளாகும் நபர்கள் உயிரிழக்கும் வாய்ப்புக்கள் அதிகம் உள்ளதால் இவை மிகவும் ஆபத்தானவை என்று அகத்தியர் குறிப்பிடுகிறார். ஒரு மனிதன் படுவர்மப் புள்ளிகளில் அடிபட்டால் உடனடியாக மயங்கி விழுவான் என்றும், அவன் வாய் பிளந்து நாக்கு வெளியே தள்ளும், வாயில் நுரையும் வெளியேறும் அத்துடன் அந்த அடிபட்ட இடங்களில் கைவைத்து பார்த்தால் அந்த இடம் மிகவும் குளிர்ச்சியாகக் காணப்படும் என்றும் குறிப்பிடுகிறார். எல்லோராலும் இதை செய்திட முடியாது என்றும், மிகுந்த பயிற்சி உள்ள ஒருவரால் மட்டுமே இத்தகைய செயல்களை செய்திட முடியும் என்றும் கூறுகிறார். தொடு...

குண்டலினி ஆற்றல் 3

குண்டலினியை எப்படி எல்லாம் எழுப்பலாம்! மூலாதாரத்தில் புதைந்திருக்கும் குண்டலினியை எழுப்பிட பல்வேறு உத்திகள் கூறப் பட்டிருக்கின்றன. பொதுவில் பிராணாயாமம் எனப்படும் மூச்சுப் பயிற்சி, ஆசனங்கள், முத்திரைகள் இவைகளால் குண்டலினியை எழுப்ப முடியுமாம். இராஜயோகிகள் சலனமற்ற தியானத்தினாலும், மனப் பயிற்சியினாலும் எழுப்புகின்றனர். சாமான்யர்கள் பக்தி அதாவது முழுமையான சரணாகதியின் மூலம் எழுப்புகின்றனர். ஞானிகளோ பிரித்து அறியும் மன உறுதியினால் எழுப்புகின்றனர். இதை விவேக வைராக்கியம் என்கின்றனர். தாந்திரிகர்கள் மந்திர சக்தியால் குண்டலினியை எழுப்புகின்றனர். இவற்றை எல்லாம் விட மிக எளிதான ஒரு முறையும் இருக்கிறது. அதாவது குருவினை பார்த்தல்(தரிசனம்),குருவினால் தொடப் படுதல், ஆசீர்வதித்தல் ஆகியவைகளால் சட்டென குண்டலினி எழும்பும். இத்தகைய தகுதி உடைய குருமார்கள் இப்போது மிகவும் குறைவு. மேலும் அத்தகையவர்கள் இதை எல்லோருக்கும் அருளுவதுமில்லை. ஆக, நம்மில் உறைந்திருக்கும் குண்டலினியை எழுப்பிட இத்தனை வகைகள் இருக்கிறது. எனினும் நமது உடல் மற்றும் மனப் பக்குவத்திற்கு ஏற்ற வகையை தெரிவு செய்ய குருவினால் மட்டுமே முடியும...

குண்டலினி ஆற்றல் 9 விசுத்தி

குண்டலினி - விசுத்தி. மூலாதாரத்திலிருந்து ஐந்தாவது சக்கரமான விசுத்தி பற்றி இன்று பார்ப்போம். இதைப் பற்றி அகத்தியர் பின் வருமாறு விளக்குகிறார். ஆச்சப்பா வனாகததி னொடுக்கஞ்சொன்னோம் அறையுகிறேன் விசுத்தியி னடவைக்கேளு மாச்சப்பா வதற்க்குமேல் பன்னிரெண்டங்குலம் பாச்சப்பா பதினாறு யிதழ்தா னாகும் பாலகனே அட்சரந்தான் வகாரமாகும் வதுநடுவில் சதாசிவனும் சாகினியுமாமே. - அகத்தியர். இந்த சக்தி ஆதார மையமானது நமது தொண்டையின் அடிப்பாகத்தில் சுழுமுனை நாடியில் அமைந்து இருப்பதாக குறிப்பிடுகின்றனர். நமது குரல்வளை, மூச்சுக் குழாய், தையராய்டு சுரப்பிகள், நுரையீரல், கைகள் போன்ற உறுப்புகளுடன் விசுத்தி சக்கரம் தொடர்புடையதாக குறிப்பிடப் படுகிறது. பஞ்சாட்சர எழுத்துக்களான "சிவயநம" என்னும் எழுத்துகளில் ஒன்றான "வ" என்னும் எழுத்தையும், அதன் தத்துவத்தையும் விசுத்தி சக்கரம் விளக்குவதாக அமைகின்றது. இச்சக்கரத்தின் அதிதேவன் சதாசிவன், அதி தேவதை சாகினி. பஞ்ச பூதங்களில் ஒன்றான ஆகாசம் இதன் மூலக்கூறு. இதன் மூல மந்திரம் “ஹம்” எனப்படுகிறது. இந்த சக்கரத்திலிருந்து தாமரை இதழ் போன்ற பதினாறு யோக நாடிகள் கிளம்புகின்றன....