Skip to main content

நாயுருவி Achyranthes Aspera

மாற்றுப்பெயர் ; நாயுருவி  கடலாடி,அமராரவம், கருதீதனகோரத்தி, கங்கேசரி, காரத்தி, காரம், சிலைகாரம், சிவந்த ஞாயிறு, பரமாரி, பிறத்திய புற்பம், பிப்பீலிகிதநிதுச்சி, உளமணி, கடுடூதி, கரம்பை, மாமுனி, நாயுருஞ்சி.அபமார்கி.
வளரியல்பு: சிறுசெடி
இலைஅமைப்பு ; எதிரடுக்கில் காம்புள்ள முழுமையான இலைகள்
பூ,காய் ; நீண்ட கதிர்களுடன்  கூடிய சிறிய பூக்கள்
மருத்துவ பாகம் ;   சமூலம்.(முழு செடி)
குணம் ; சங்கோசனகாரி,மூத்திரவர்த்தனகாரி,வியதாபேதகாரி.
தீர்க்கும் நோய்கள்:
மலிகாரங் கைப்புள்ள அபமார்கியின் வேரால் வசியமுண்டா
மிலைமூல வுதிரமந்தம் பேதிகபம் வியர்வு தந்தியிறங்குமேகம்
மலையேனும் படிபுரியு முள்ளரிசி பசிமாற்றும் வன்சமூலம்
பலமாதர்க் குள்ளழுக்கை நீக்கும்வங்க செந்தூரம்பண்ணுமாதோ.

"வேலுக்கு பல் இருகும்வேம்புக்கு பல் துலங்கும்
பூலுக்கு போகம் பொழியுமே – ஆலுக்குத்
தண் தாமரையாளும் சார்வளே நாயுருவி
கண்டால் வசீகரமாம் காண்".
"ஓதமுறு சோபை யுயர்பாண்டு வைப்போக்குந்
தீதுறுகா மாலைநோய் தீர்க்குமினார் – சூதகநீர்
பொய்ப்புறுகா லத்ததனைப் பொங்குவிக்குங் காரமொடு
கைப்புறுசெந் நாயுருவி காண்."

கசப்பும் கார்ப்புமுள்ள அபமார்கியின் வேரால் முகவசீகரமாம்.இலை இரத்தமூலம்,அதிசாரம்,கபநோய்,வியர்வை,தந்திப்பிரமேகம் விலக்கும். விதை பசி நீக்கும்.சமூலச் சாம்பல் பிரசவித்த மாதர் உதிரச்சிக்கல் போக்கும்.வங்கத்தைச் செந்தூரமாக்கும்.

1.   அரைத்துக் கட்ட கொப்புளங்கலில் உள்ள துர்நீரை வெளீயேற்றி ஆற்றும்.
2.   இலைச்சுரசம் 15மிலியுடன் சர்க்கரை கூட்டி 3-5 நாள் காலைமாலை கொடுக்க மூலம்,பழைய இருமல்,அதிசாரம்,வியர்வை,தந்திமேகம் போம்.
3.   சாறுடன் வெள்ளாட்டுக் கொழுப்பு,மருதோன்றிக் குழித்தைலம் கலந்து தேய்க்க கைகால் நரம்பு இசிவு குணமாகும்.
4.   இலையைக் கசக்கி ஊறலெடுத்துப் படருகின்ற தேமலுக்குத் தேய்க்கக் குணமாகும்.
5.   இலை கியாழத்தால் வாய் கொப்புளிக்க பல்வலி,உண்ணாக்குவலி தீரும்.
6.   இலையை ரோஜாப்பூ எண்ணை அல்லது ந.எண்ணையில் காய்ச்சி காதிலிட காதுவலி குணமாகும்.
7.   வேரால் பல் துலக்க முக வசீகரமுண்டாகும்.
8.   இலையைக் கசக்கித் தேய்க்க தேள்கடி விஷமிறங்கும்.
9.   இலையை அரைத்துப் பற்றுப்போட வண்டு,குழவி,தேனீ போன்றவற்றின் கடியால் ஏற்பட்ட கடுப்பு தீரும்.
10. 10 கிராம் இலையை அரைத்து ந,எண்ணையில் கலந்து 10நாள் காலைமாலை சாப்பிட இரத்தமூலம் தீரும்.
11. வேர்ப்பட்டையுடன் சமன் மிளகு பொடித்துக் கால் கிராம் தேனில் குழைத்து காலைமாலை சாப்பிட்டுவர இருமல் தீரும்.
12. 10கிராம் விதயை அரைத்துக் காலைமாலை 2நாள் சாப்பிட பேதி தீரும்.
13. துத்திக்கீரை வதக்கலில் விதைச்சூரணம் 20கிராம் கலந்துண்ண மூலம் அனைத்தும் தீரும்.
14. விதையை சோறுபோல் சமைத்துண்ண பசி இராது.1வாரம் ஆயாசமிண்றி இருக்கலாம்.மிளகு வறுத்துக் குடிநீர் காய்ச்சிப் பருகபசி உண்டாகும்.
15. நாயுருவிச் சாம்பல்,ஆனங்காய்(ஆண் பனை பூ பாளை)சாம்பல்சமன் கரைத்து தெளிவை காய்ச்சி எடுத்த உப்பு(நாயுருவி உப்பு) 2அரிசி எடை தேன்.நெய்,மோர்,வெண்ணை ஏதேனும் ஒன்றில் கொடுக்க என்புருக்கி,நீரேற்றம்,குன்மம்,பித்தப்பாண்டு,ஆஸ்துமா தீரும்.
16. செந்நாயுருவி இலைசாறு 15-25 மிலி தினம் 2வேளை கொடுக்க வயிற்ரு நோயைக் குணப்படுத்தும்.அதிக அளவில் கொடுக்க ஸ்திரீகளுக்குக் கட்டுப்பட்டுள்ள உதிரத்தையும் பிண்டத்தையும் வெளிப்படுத்தும்.
17.  செந்நாயுருவி இலையுடன் மிளகு,பூண்டு சிறிது வெல்லம் சேர்த்து அரத்துத் தூதுவேளைகாய் அளவு மாத்திரை செய்து 3வேளை தினம் கொடுக்க முறைசுரம் குணமாகும்.
18. செந்நாயுருவி வேர்ப்பட்டைச் சூரணம்,மிளகு சூரணம் வகைக்கு 2 குன்றி எடைதேனில் குழைத்து காலைமாலை 3 நாள் கொடுக்க இருமல் குணமாகும்.

Comments

Popular Posts

அருள்வெளி சித்தர் 108 போற்றி

பரம்பொருள் அருட்பெரும் ஜோதி ஓம் ஸ்ரீ அருள்வெளி சித்தர் பரம்பொருள் அருட்பெரும் ஜோதி ஓம் ஸ்ரீ அருள்வெளி சித்தர் ஓம் ஸ்ரீ அருள்வெளி சித்தர் 108 போற்றி 1. அன்பே உருவான அருள்வேளிக் சித்தனே போற்றி ! 2. அகர முதலாய் அமர்ந்தாய் போற்றி ! 3. அறிவிற் கறிவான ஆதுவிதனே போற்றி ! 4. அறத்தின் வடிவே ஐயனே போற்றி ! 5. அடிமை எமைக் காக்கும் அத்தா போற்றி ! 6. அனாதிப் பரம்பொருள் ஆயினே போற்றி ! 7. அமரர் வணங்கும் அரியே போற்றி ! 8. அண்டினோர்க் காதரவு அளிப்பாய் போற்றி ! 9. அன்பே சிவமேன் றறிந்தாய் போற்றி ! 10. அன்பே சிவமாய் அமர்ந்தாய் போற்றி ! 11. அடக்கம் ஆன  சிவமே போற்றி ! 12. ஆனந்த வடிவச் சித்தனே போற்றி ! 13. ஆகாயம் எல்லாம் அளந்தாய் போற்றி ! 14. ஆதியே போற்றி சோதியே போற்றி ! 15. ஆலத்தை அமுதாய் ஆக்குவை போற்றி ! 16. ஆருரிச் சிவமே அழகா போற்றி ! 17. ஆசை வித்த அரனே போற்றி ! 18. ஆணவ மாயை அழித்தாய் போற்றி ! 19. ஆவியில் உறையும் ஐயா போற்றி ! 20. ஆத்தும தத்துவம் அறிவிப்பாய் போற்றி ! 21. ஆலமர் செல்வ அரசே போற்றி ! 22. இகர மாகி எழுந்தாய் போற்றி ! 23. இறைவி இறைவன் வடிவே போற்றி ! 24. இகபர சுகங்கள் தருவாய் ...

மருந்துகளின்றி ஆரோக்யமாக வாழ

நமது வாழ்க்கை முறையை சரிசெய்வது மூலமாக மட்டுமே ஆரோக்யமாக வாழ்வது சாத்தியமாகும். நம்மிடம் உள்ள ஆரோக்கியத்தை மருத்துவமனையில் தேடினால் கிடைக்காதல்லவா? இதை மக்களுக்கு புரியவைத்து ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்குவதே எனது நோக்கம்.  நம் உடலானது நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் போன்ற பஞ்ச பூதங்களால் தான் இயங்குகின்றது. அவற்றிலுள்ள பிரச்சினைகளை களைந்தாலே நாம் வாழ்நாள் முழுவதும் நோயின்றி ஆரோக்யமாக வாழலாம். உணவு நிலம்  இரைப்பை, மண்ணீரல், கணையம் ஆகிய உறுப்புக்கள் ஒழுங்காக இயங்க கீழே கொடுக்கபட்டுள்ளவற்றை பின்பற்றவும் 1. பசி: பசிக்கும்போது நமக்கு பிடித்த உணவை நிதானமாக உண்ணும்போது நம் உடல் அவற்றை சத்துக்களாக மாற்றிவிடும். உதட்டை பிரிக்காமல் உணவை நன்கு மென்று கூழ் போல் அரைத்துப் பின் விழுங்க வேண்டும். ஏனென்றால் காற்றும் நம் ஜீரணத்திற்கு எதிரி. அப்படி உண்டால் நம் உடலின் அனைத்து உறுப்புக்களும் நன்றாக இயங்கும் அதனால் ஆரோக்கியம் பேணப்படும். பசி இல்லாதபோதோ நமக்கு பிடிக்காத உணவை உண்ணும்போதோ மற்றும் உணவு உண்டவுடன் அதிக நீரை குடிக்கும்போதோ அவை கழிவுகளாக மாறி நமக்கு தொப்பை, வாயு தொந்தரவு, அல்சர், அ...

வர்மம் varmam

வர்மங்களின் வகைகள்..! வர்மக் கலையை அகத்தியர் நான்கு பெரும் பிரிவுகளாய் பிரித்திருக்கிறார். உடலில் உள்ள வர்ம புள்ளிகள் மற்றும், அவற்றை கையாளும் விதத்தினால் இவற்றை வேறு படுத்துகிறார். இவை “படு வர்மம்”, ”தொடு வர்மம்”, ”தட்டு வர்மம்”, ”நோக்கு வர்மம்” படுவர்மம் நான்கு வகை வர்மங்களில் மிகவும் ஆபாயகரமான பிரிவு இதுவேயாகும். உடலிலுள்ள வர்மப் பகுதிகளில் அடியோ அல்லது தாக்குதலோ ஏற்படுமானால் அப்போது ஏற்படும் வர்மமே "படுவர்மம்" என்கிறார். இந்த படுவர்ம தாக்குதலுக்கு உள்ளாகும் நபர்கள் உயிரிழக்கும் வாய்ப்புக்கள் அதிகம் உள்ளதால் இவை மிகவும் ஆபத்தானவை என்று அகத்தியர் குறிப்பிடுகிறார். ஒரு மனிதன் படுவர்மப் புள்ளிகளில் அடிபட்டால் உடனடியாக மயங்கி விழுவான் என்றும், அவன் வாய் பிளந்து நாக்கு வெளியே தள்ளும், வாயில் நுரையும் வெளியேறும் அத்துடன் அந்த அடிபட்ட இடங்களில் கைவைத்து பார்த்தால் அந்த இடம் மிகவும் குளிர்ச்சியாகக் காணப்படும் என்றும் குறிப்பிடுகிறார். எல்லோராலும் இதை செய்திட முடியாது என்றும், மிகுந்த பயிற்சி உள்ள ஒருவரால் மட்டுமே இத்தகைய செயல்களை செய்திட முடியும் என்றும் கூறுகிறார். தொடு...

இயற்பியல் பிரபஞ்சமும் தூய ஆற்றல் குண்டலினி

இயற்பியல், பிரபஞ்சமும்  தூய ஆற்றல், உலகளாவிய வெப்பநிலை மாறுபாடுகள், நீராவியின் மாறுபாடுகள், அதிர்வுகளின் அவதானிப்புகள், நமது சித்தாந்த தியான நிலை குண்டலினி ஆற்றல் தொடர்பும்.  ஒரு மின்காந்த புலம் என்பது காந்த மற்றும் மின்சார ஆற்றலால் நிரப்பப்பட்ட இடத்தின் ஒரு பகுதி. மின்காந்த புலங்கள் எல்லா இடங்களிலும் உள்ளன. எக்ஸ்-கதிர்கள் மற்றும் காமா கதிர்கள் போன்ற உயர் அதிர்வெண் மின்காந்த கதிர்வீச்சு “ அயனியாக்கம் ” மற்றும் மக்களுக்கு தீங்கு விளைவிக்கும், அதே நேரத்தில் குறைந்த அதிர்வெண் கொண்ட மின்காந்த கதிர்வீச்சு அல்லது “ அல்லாத அயனியாக்கம்,” மனிதர்களுக்கு பாதுகாப்பானதாகக் கருதப்படுகிறது, அல்லது சில மனித நோய்களுக்கு கூட ஒரு தீர்வாக கருதப்படுகிறது. பூமியைச் சுற்றியுள்ள மின்காந்த புலம் நம் உடலை அடைந்து அதன் உள்ளே இருக்கும் கட்டணங்களை பாதிக்கிறது. நம் உடல்கள் அதன் சொந்த மின்னியல் புலத்தைக் கொண்டுள்ளன. டி.என்.ஏவின் துகள்கள் கூட மின்காந்த புலங்களை உருவாக்க முடியும். அந்த அலைகள் நம் உடலின் உள் கடிகாரத்தை பிரதானமாக்குகின்றன மற்றும் தூக்க முறைகள் மற்றும் ஹார்மோன் சுரப்பை பாதிக்கின்றன. ஆல்பா மூளை அ...

பாவங்களுக்கான வியாதிகள்

பாவங்களுக்கான வியாதிகள் - கருட புராணம் !!! 1    யார் மற்றவர்களை ஏளனம் செய்பவர்கள். சத்தியத்தை தவறவிட்டவர்கள், எதற்காவது காக்க வைத்தவர்.    மன அழுத்த நோயால் துன்புறுவர், மன நோயாளியாக இருப்பார் 2   எலி பொந்துக்களை, பாம்பு பொந்துக்களை அடைப்பவர், மீன்களை பிடிப்பவர்களுக்கு    நுரையீரல் மற்றும் சுவாச கோளாரினால் பாதிக்கப்படுவார். 3    விஷம் கலந்து யாரையும் கொலை செய்தால்    தேள் கடி மற்றும் பாம்பு கடியால் துன்பப்படுவார் 4    கருமியாகவும், அதிக வட்டி வசூலிப்பவர், பிறரது பொருளை அபகரிப்பவர்களுக்கு    சுயரோகத்தால் துன்பப்படுவார் 5    விபச்சாரத்தில் ஈடுபடுபவர்கள், சிறுமிகளை பலாத்காரம் செய்பவர் தொழு நோயால் துன்பப்படுவார் 6    தனது உடம்பைக் காட்டி பயமுறுத்துபவர், வீண் சண்டைக்கு இழுப்பவர்    கால், கை வலிப்பு, இழுப்பு நோயால் துன்பப்படுவார் 7    பெண்ணை கெட்ட எண்ணத்துடன் பார்ப்பவர், மற்றவர் பொருள்களையும் பார்த்து பொறாமைப்படுபவர்    நிரந்தர கண் நோயுடன் அவதிப்படுவார் 8  ...