Skip to main content

நாயுருவி Achyranthes Aspera

மாற்றுப்பெயர் ; நாயுருவி  கடலாடி,அமராரவம், கருதீதனகோரத்தி, கங்கேசரி, காரத்தி, காரம், சிலைகாரம், சிவந்த ஞாயிறு, பரமாரி, பிறத்திய புற்பம், பிப்பீலிகிதநிதுச்சி, உளமணி, கடுடூதி, கரம்பை, மாமுனி, நாயுருஞ்சி.அபமார்கி.
வளரியல்பு: சிறுசெடி
இலைஅமைப்பு ; எதிரடுக்கில் காம்புள்ள முழுமையான இலைகள்
பூ,காய் ; நீண்ட கதிர்களுடன்  கூடிய சிறிய பூக்கள்
மருத்துவ பாகம் ;   சமூலம்.(முழு செடி)
குணம் ; சங்கோசனகாரி,மூத்திரவர்த்தனகாரி,வியதாபேதகாரி.
தீர்க்கும் நோய்கள்:
மலிகாரங் கைப்புள்ள அபமார்கியின் வேரால் வசியமுண்டா
மிலைமூல வுதிரமந்தம் பேதிகபம் வியர்வு தந்தியிறங்குமேகம்
மலையேனும் படிபுரியு முள்ளரிசி பசிமாற்றும் வன்சமூலம்
பலமாதர்க் குள்ளழுக்கை நீக்கும்வங்க செந்தூரம்பண்ணுமாதோ.

"வேலுக்கு பல் இருகும்வேம்புக்கு பல் துலங்கும்
பூலுக்கு போகம் பொழியுமே – ஆலுக்குத்
தண் தாமரையாளும் சார்வளே நாயுருவி
கண்டால் வசீகரமாம் காண்".
"ஓதமுறு சோபை யுயர்பாண்டு வைப்போக்குந்
தீதுறுகா மாலைநோய் தீர்க்குமினார் – சூதகநீர்
பொய்ப்புறுகா லத்ததனைப் பொங்குவிக்குங் காரமொடு
கைப்புறுசெந் நாயுருவி காண்."

கசப்பும் கார்ப்புமுள்ள அபமார்கியின் வேரால் முகவசீகரமாம்.இலை இரத்தமூலம்,அதிசாரம்,கபநோய்,வியர்வை,தந்திப்பிரமேகம் விலக்கும். விதை பசி நீக்கும்.சமூலச் சாம்பல் பிரசவித்த மாதர் உதிரச்சிக்கல் போக்கும்.வங்கத்தைச் செந்தூரமாக்கும்.

1.   அரைத்துக் கட்ட கொப்புளங்கலில் உள்ள துர்நீரை வெளீயேற்றி ஆற்றும்.
2.   இலைச்சுரசம் 15மிலியுடன் சர்க்கரை கூட்டி 3-5 நாள் காலைமாலை கொடுக்க மூலம்,பழைய இருமல்,அதிசாரம்,வியர்வை,தந்திமேகம் போம்.
3.   சாறுடன் வெள்ளாட்டுக் கொழுப்பு,மருதோன்றிக் குழித்தைலம் கலந்து தேய்க்க கைகால் நரம்பு இசிவு குணமாகும்.
4.   இலையைக் கசக்கி ஊறலெடுத்துப் படருகின்ற தேமலுக்குத் தேய்க்கக் குணமாகும்.
5.   இலை கியாழத்தால் வாய் கொப்புளிக்க பல்வலி,உண்ணாக்குவலி தீரும்.
6.   இலையை ரோஜாப்பூ எண்ணை அல்லது ந.எண்ணையில் காய்ச்சி காதிலிட காதுவலி குணமாகும்.
7.   வேரால் பல் துலக்க முக வசீகரமுண்டாகும்.
8.   இலையைக் கசக்கித் தேய்க்க தேள்கடி விஷமிறங்கும்.
9.   இலையை அரைத்துப் பற்றுப்போட வண்டு,குழவி,தேனீ போன்றவற்றின் கடியால் ஏற்பட்ட கடுப்பு தீரும்.
10. 10 கிராம் இலையை அரைத்து ந,எண்ணையில் கலந்து 10நாள் காலைமாலை சாப்பிட இரத்தமூலம் தீரும்.
11. வேர்ப்பட்டையுடன் சமன் மிளகு பொடித்துக் கால் கிராம் தேனில் குழைத்து காலைமாலை சாப்பிட்டுவர இருமல் தீரும்.
12. 10கிராம் விதயை அரைத்துக் காலைமாலை 2நாள் சாப்பிட பேதி தீரும்.
13. துத்திக்கீரை வதக்கலில் விதைச்சூரணம் 20கிராம் கலந்துண்ண மூலம் அனைத்தும் தீரும்.
14. விதையை சோறுபோல் சமைத்துண்ண பசி இராது.1வாரம் ஆயாசமிண்றி இருக்கலாம்.மிளகு வறுத்துக் குடிநீர் காய்ச்சிப் பருகபசி உண்டாகும்.
15. நாயுருவிச் சாம்பல்,ஆனங்காய்(ஆண் பனை பூ பாளை)சாம்பல்சமன் கரைத்து தெளிவை காய்ச்சி எடுத்த உப்பு(நாயுருவி உப்பு) 2அரிசி எடை தேன்.நெய்,மோர்,வெண்ணை ஏதேனும் ஒன்றில் கொடுக்க என்புருக்கி,நீரேற்றம்,குன்மம்,பித்தப்பாண்டு,ஆஸ்துமா தீரும்.
16. செந்நாயுருவி இலைசாறு 15-25 மிலி தினம் 2வேளை கொடுக்க வயிற்ரு நோயைக் குணப்படுத்தும்.அதிக அளவில் கொடுக்க ஸ்திரீகளுக்குக் கட்டுப்பட்டுள்ள உதிரத்தையும் பிண்டத்தையும் வெளிப்படுத்தும்.
17.  செந்நாயுருவி இலையுடன் மிளகு,பூண்டு சிறிது வெல்லம் சேர்த்து அரத்துத் தூதுவேளைகாய் அளவு மாத்திரை செய்து 3வேளை தினம் கொடுக்க முறைசுரம் குணமாகும்.
18. செந்நாயுருவி வேர்ப்பட்டைச் சூரணம்,மிளகு சூரணம் வகைக்கு 2 குன்றி எடைதேனில் குழைத்து காலைமாலை 3 நாள் கொடுக்க இருமல் குணமாகும்.

Comments

Popular Posts

அருள்வெளி சித்தர் 108 போற்றி

பரம்பொருள் அருட்பெரும் ஜோதி ஓம் ஸ்ரீ அருள்வெளி சித்தர் பரம்பொருள் அருட்பெரும் ஜோதி ஓம் ஸ்ரீ அருள்வெளி சித்தர் ஓம் ஸ்ரீ அருள்வெளி சித்தர் 108 போற்றி 1. அன்பே உருவான அருள்வேளிக் சித்தனே போற்றி ! 2. அகர முதலாய் அமர்ந்தாய் போற்றி ! 3. அறிவிற் கறிவான ஆதுவிதனே போற்றி ! 4. அறத்தின் வடிவே ஐயனே போற்றி ! 5. அடிமை எமைக் காக்கும் அத்தா போற்றி ! 6. அனாதிப் பரம்பொருள் ஆயினே போற்றி ! 7. அமரர் வணங்கும் அரியே போற்றி ! 8. அண்டினோர்க் காதரவு அளிப்பாய் போற்றி ! 9. அன்பே சிவமேன் றறிந்தாய் போற்றி ! 10. அன்பே சிவமாய் அமர்ந்தாய் போற்றி ! 11. அடக்கம் ஆன  சிவமே போற்றி ! 12. ஆனந்த வடிவச் சித்தனே போற்றி ! 13. ஆகாயம் எல்லாம் அளந்தாய் போற்றி ! 14. ஆதியே போற்றி சோதியே போற்றி ! 15. ஆலத்தை அமுதாய் ஆக்குவை போற்றி ! 16. ஆருரிச் சிவமே அழகா போற்றி ! 17. ஆசை வித்த அரனே போற்றி ! 18. ஆணவ மாயை அழித்தாய் போற்றி ! 19. ஆவியில் உறையும் ஐயா போற்றி ! 20. ஆத்தும தத்துவம் அறிவிப்பாய் போற்றி ! 21. ஆலமர் செல்வ அரசே போற்றி ! 22. இகர மாகி எழுந்தாய் போற்றி ! 23. இறைவி இறைவன் வடிவே போற்றி ! 24. இகபர சுகங்கள் தருவாய் ...

அகத்தியர் கூறும் பீஜ மந்திரங்களும் அவற்றின் பலன்களும்

அகத்தியர் கூறும் பீஜ மந்திரங்களும் அவற்றின் பலன்களும்! அகத்தியர் திருமந்திர விளக்கம் 22 என்னும் பாடலில் திருமந்திரமாகிய பஞ்சாக்ஷர மந்திரத்தைப் பற்றி, தத்புருஷம், அகோரம் ஆகிய முகங்கள் ஒவ்வொன்றிற்கும் இருபத்தைந்து வகைகளையும் வாமதேவ முகத்திற்கு ஒன்பது வகைகளையும், ஆக மொத்தம் 59 வகைகள் பற்றி மட்டுமே பாடலில் அகத்தியர் கூறுகிறார். தவிர ஒவ்வொரு வகை மந்திரத்தை உச்சரிப்பதனால் என்ன பலன் என்றும் கூறப்பட்டுள்ளது. தத்புருஷ முகத்தைச் சார்ந்த 25 வகை மந்திரங்களும் அவற்றை ஓதுவதால் உண்டாகும் பயன்கள் பற்றியும் செய்யுள் 5லிருந்து 11வரை அகத்தியர் பார்த்திடவே தற்புருஷம் இருபத் தஞ்சு பாடுகிறேன் நமசிவய அகோர மாகும். (செய்யுள்.5) என்று கூறுகிறார். அவையாவன: மந்திரம் பலன் 1. நங்-சிவயநம - விரும்பிய புத்திர பாக்கியம் கிடைக்கும். 2. அங்-சிவயநம - இயல்பாகத் தேக நோய் தீரும் 3. வங்-சிவயநம - யோகசித்தி காணலாகும். 4. உங்-சிவயநம - ஆயுள் விருத்தி 5. ஓம்-அங்-சிவயநம - ஐம்பூதங்களின் மேல் கட்டுப்பாடு உண்டாகும். 6. கிலி-நமசிவய - உலக வசியம் உண்டாகும். 7. ஹிரீம்-நமசிவய - நினைத்தது நடக்கும். 8. ஐ-உம்-நமசிவய - புத்தி, வித்தை நல்கும். ...

வர்மம் varmam

வர்மங்களின் வகைகள்..! வர்மக் கலையை அகத்தியர் நான்கு பெரும் பிரிவுகளாய் பிரித்திருக்கிறார். உடலில் உள்ள வர்ம புள்ளிகள் மற்றும், அவற்றை கையாளும் விதத்தினால் இவற்றை வேறு படுத்துகிறார். இவை “படு வர்மம்”, ”தொடு வர்மம்”, ”தட்டு வர்மம்”, ”நோக்கு வர்மம்” படுவர்மம் நான்கு வகை வர்மங்களில் மிகவும் ஆபாயகரமான பிரிவு இதுவேயாகும். உடலிலுள்ள வர்மப் பகுதிகளில் அடியோ அல்லது தாக்குதலோ ஏற்படுமானால் அப்போது ஏற்படும் வர்மமே "படுவர்மம்" என்கிறார். இந்த படுவர்ம தாக்குதலுக்கு உள்ளாகும் நபர்கள் உயிரிழக்கும் வாய்ப்புக்கள் அதிகம் உள்ளதால் இவை மிகவும் ஆபத்தானவை என்று அகத்தியர் குறிப்பிடுகிறார். ஒரு மனிதன் படுவர்மப் புள்ளிகளில் அடிபட்டால் உடனடியாக மயங்கி விழுவான் என்றும், அவன் வாய் பிளந்து நாக்கு வெளியே தள்ளும், வாயில் நுரையும் வெளியேறும் அத்துடன் அந்த அடிபட்ட இடங்களில் கைவைத்து பார்த்தால் அந்த இடம் மிகவும் குளிர்ச்சியாகக் காணப்படும் என்றும் குறிப்பிடுகிறார். எல்லோராலும் இதை செய்திட முடியாது என்றும், மிகுந்த பயிற்சி உள்ள ஒருவரால் மட்டுமே இத்தகைய செயல்களை செய்திட முடியும் என்றும் கூறுகிறார். தொடு...

இயற்பியல் பிரபஞ்சமும் தூய ஆற்றல் குண்டலினி

இயற்பியல், பிரபஞ்சமும்  தூய ஆற்றல், உலகளாவிய வெப்பநிலை மாறுபாடுகள், நீராவியின் மாறுபாடுகள், அதிர்வுகளின் அவதானிப்புகள், நமது சித்தாந்த தியான நிலை குண்டலினி ஆற்றல் தொடர்பும்.  ஒரு மின்காந்த புலம் என்பது காந்த மற்றும் மின்சார ஆற்றலால் நிரப்பப்பட்ட இடத்தின் ஒரு பகுதி. மின்காந்த புலங்கள் எல்லா இடங்களிலும் உள்ளன. எக்ஸ்-கதிர்கள் மற்றும் காமா கதிர்கள் போன்ற உயர் அதிர்வெண் மின்காந்த கதிர்வீச்சு “ அயனியாக்கம் ” மற்றும் மக்களுக்கு தீங்கு விளைவிக்கும், அதே நேரத்தில் குறைந்த அதிர்வெண் கொண்ட மின்காந்த கதிர்வீச்சு அல்லது “ அல்லாத அயனியாக்கம்,” மனிதர்களுக்கு பாதுகாப்பானதாகக் கருதப்படுகிறது, அல்லது சில மனித நோய்களுக்கு கூட ஒரு தீர்வாக கருதப்படுகிறது. பூமியைச் சுற்றியுள்ள மின்காந்த புலம் நம் உடலை அடைந்து அதன் உள்ளே இருக்கும் கட்டணங்களை பாதிக்கிறது. நம் உடல்கள் அதன் சொந்த மின்னியல் புலத்தைக் கொண்டுள்ளன. டி.என்.ஏவின் துகள்கள் கூட மின்காந்த புலங்களை உருவாக்க முடியும். அந்த அலைகள் நம் உடலின் உள் கடிகாரத்தை பிரதானமாக்குகின்றன மற்றும் தூக்க முறைகள் மற்றும் ஹார்மோன் சுரப்பை பாதிக்கின்றன. ஆல்பா மூளை அ...

தமிழில் உள்ள மயங்கொலிச்சொற்கள்

தமிழில் உள்ள மயங்கொலிச்சொற்கள்  அணல் - தாடி, கழுத்து அனல் - நெருப்பு அணி - அழகு அனி - நெற்பொறி அணு - நுண்மை அனு - தாடை, அற்பம் அணுக்கம் - அண்டை, அண்மை. அனுக்கம் - வருத்தம், அச்சம் அணை - படுக்கை, அணைத்துக் கொள்ளுதல் அனை - அன்னை, மீன் அணைய - சேர, அடைய அனைய - அத்தகைய அண்மை - அருகில் அன்மை - தீமை, அல்ல அங்கண் - அவ்விடம் அங்கன் - மகன் அண்ணம் - மேல்வாய் அன்னம் - சோறு, அன்னப்பறவை அண்ணன் - தமையன் அன்னன் - அத்தகையவன் அவண் - அவ்வாறு அவன் - சேய்மைச் சுட்டு, ஆண்மகன் ஆணகம் - சுரை ஆனகம் - துந்துபி ஆணம் - பற்றுக்கோடு ஆனம் - தெப்பம், கள் ஆணி - எழுத்தாணி, இரும்பாணி ஆனி - தமிழ் மாதங்களுள் ஒன்று ஆணேறு -ஆண்மகன் ஆனேறு - காளை, எருது ஆண் - ஆடவன் ஆன் - பசு ஆணை - கட்டளை, ஆட்சி ஆனை - யானை இணை - துணை, இரட்டை இனை - இன்ன, வருத்தம் இணைத்து - சேர்த்து இனைத்து - இத்தன்மையது இவண் - இவ்வாறு இவன் - ஆடவன், (அண்மைச் சுட்டு) ஈணவள் - ஈன்றவள் ஈனவள் - இழிந்தவள் உண் - உண்பாயாக உன் - உன்னுடைய உண்ணல் - உண்ணுதல் உன்னல் - நினைத்தல் உண்ணி - உண்பவன், ஒருவகைப் பூச்சி உன்னி - நினைத்து, குதிரை ஊண் - உணவு ஊன் - மாமிசம் எண்ண - நினைக்...