உடலும், உயிரும் சேர்ந்து ஒத்திசைந்து இயங்கினால்தான் உயிரினம்.இதில்
ஏதேனும் ஒன்று மற்றதைப் பிரிந்து போனால் என்னவாகும் என்பது நம்
அனைவருக்கும் தெரிந்ததுதான். இந்த உடலை காக்கவும்,வளர்க்கவும்தான் நம் வாழ்
நாளைச் செலவு செய்கிறோம். உடலைக் காக்க இத்தனை சிரத்தை எடுக்கும் நாம்,
உடலின் ஆதாரமாய் இருந்து அதை இயக்கும் உயிருக்காக ஏதேனும் செய்தோமா, என்கிற
கேள்வி நியாயமானதுதானே!.
உயிரின் மீது ஆசை இல்லாத மனிதர் நம்மில் யாரேனும் இருக்க முடியுமா?, அப்படி விலை மதிப்பில்லாத இந்த உயிரை போற்றி பாதுகாக்கவும், அதை வளர்த்தெடுக்கவும், அதற்கு தேவையான ஓய்வு தந்து மெருகேற்ற ஏதேனும் வழி இருக்கிறதா என்ன?
நிச்சயமாக இருக்கிறது!, அதுவும் மற்ற எந்த மரபியலையும் விட இந்திய மரபியலில் இதற்கு தெளிவான தீர்வுகள் இருக்கிறது. அதை புரிந்து கொண்டதால்தான் மற்ற நாட்டினர் இந்திய மரபியல் செல்வங்களை நாடி ஓடி வருகின்றனர்.
நமது மரபியல் அளிக்கும் தீர்வுகளை இரண்டு படி நிலைகளாக அணுகலாம். ஒன்று “பக்தி நெறி”, மற்றது “ஞான நெறி”. இதைப் பற்றி நாம் பின்னர் பேசுவோம்.இப்போது உயிரைப் பற்றி மேலும் கொஞ்சம் பார்ப்போம். நமது உடலில் உயிர் எங்கே இருக்கிறது என்கிற கேள்வி நம் எல்லோருக்கும் வருவதுதான். என்னுடைய வாசிப்பனுபவம் மற்றும் புரிதலின் படி உயிரானது நமது உடலின் உள்ளும், உடலுக்கு வெளியிலும் நீக்கமற நிறைந்திருக்கும் ஒர் ஆற்றல் நிலை என்பதாகவே புரிந்திருக்கிறேன்.
ஆற்றல் இரண்டு வகையானது என நவீன அறிவியல் கூறுகிறது. ஒன்று “நிலை ஆற்றல்”, மற்றது “இயக்க ஆற்றல்”. நிலை ஆற்றல் கிளர்ந்து எழும் போது அது இயக்க ஆற்றலாக மாறுகிறது. தொடர்ந்து கிளராவிட்டால் இயக்க ஆற்றல் வலுவிழந்து தேய்ந்து மறைந்து விடும். இது நிரூபிக்கப் பட்ட அறிவியல் தத்துவம்.
நான் சொல்கிறேன்!, நமது உயிர்தான் இயக்க ஆற்றல்.
அப்படியானால் நிலை ஆற்றல் என்பது என்ன?
அதுதான் குண்டலினி!
குண்டலினி - உணர்தல்
குண்டலினி தொடரின் முந்தைய இரண்டு பதிவுகள் சில ஆதார அடிப்படைகள் தொடர்பான புரிதல்களை உருவாக்கியிருக்கும் என நம்புகிறேன். அதன் தொடர்ச்சியாக இன்று மற்றுமொரு தகவலையும் பார்த்து விடுவோம்.
உயிர் என்பது நமது உடலில் நிலை கொண்டிருக்கும் ஓர் ஆற்றல் மையம். அந்த ஆற்றலே நம் உடலை இயக்குகிறது. உயிர் ஆற்றல் ஓங்கும் போது உடல் ஆரோக்கியம் சிறக்கிறது. உயிர் ஆற்றல் மங்கும் போது உடல் தளர்ந்து நோய் வாய்ப் படுகிறது. இதுதான் இதுவரை நாம் பார்த்த நமது வாழ்வியலின் அடிப்படை.
மனித உடலின் அளவுகளில் வேண்டுமானால் வித்தியாசங்கள் இருக்கலாம். ஆனால் நம் எல்லோருக்கும் ஒரே மாதிரியான உயிர்தான் வாய்த்திருக்கிறது. அப்படி இருக்கையில் மனிதர்களில் ஏற்றத் தாழ்வு ஏன் உருவாகிறது. இதற்கு எளிமையான ஒரு பதில், தன்னை உணர்ந்து செயல்படுகிறவன் சிறப்புகளைப் பெறுகிறான். உணராதவன் துன்பத்தில் வீழ்ந்து உழல்கிறான். இந்த இடத்தில் உணர்தல் என்கிற வார்த்தை மிக முக்கியமானது. ஏனெனில் இதைப் பற்றிதான் இன்று பார்க்கப் போகிறோம்.இந்த உணர்தல் என்கிற வார்த்தையின் தத்துவம் மிகப் பெரியது. அதில் நமக்கு தேவையானதை மட்டும் இங்கே பார்ப்போம்.
உணர்தல் என்பது ஒரு தொடர் நிகழ்வு. அநேகமாய் நமது கடைசி மூச்சு இருக்கிற வரையில் ஏதேனும் ஒரு வகையில் இந்த உணர்தல் நடந்து கொண்டேதான் இருக்கிறது. இந்த உணர்தல்கள்தான் நமக்கு உணர்வுகளை கொடுக்கிறது. இப்படி கொண்டு தரும் உண்ர்வுதான் நமக்கு முக்கியம். உணர்தல் ஒரு போதும் நமக்குள் தங்குவதில்லை. ஆனால் அவை தரும் உணர்வு நமக்குள் தங்கிவிடுகிறது.
இப்படி தொடர்ந்து நமக்கும் சேகரம் ஆகிக் கொண்டிருக்கும் உணர்வு ஒரு கட்டத்தில் நமக்கான உணர்தல் என்ன என்பதை தீர்மானித்து விடுகிறது. ஒரு கட்டத்தில் இவையே நம்மை வழி நடத்தவும் ஆரம்பித்து விடுகிறது.
ஒரு உதாரணம் இதை எளிமையாக விளக்கும். குழந்தையாக இருக்கிறீர்கள்.உங்கள் தாயார் உங்களை விழுந்து விழுந்து கவனிக்கிறார். பாதுகாக்கிறார். தாயாரின் அன்பை நீங்கள் உணர்கிறீர்கள். நன்றாக வளர்கிறீர்கள். இப்போது உங்கள் தாயார் உடல் தளர்ந்து மெலிகிறார். இப்போது உங்களுக்குள் சேகரமாகி இருக்கும் அம்மாவின் உணர்வு விழித்துக் கொள்கிறது. இப்போது நீங்கள் அம்மாவை விழுந்து விழுந்து கவனிக்கிறீர்கள்.பாதுகாக்கிறீர்கள்.
இன்னொரு உதாரணமும் பார்ப்போம். நீங்கள் குழந்தையாக இருக்கிறீர்கள். ஒரு நபர் உங்களை அடித்து துன்புறுத்திக் கொண்டே இருக்கிறார். அவரின் மீது வெறுப்பு உணர்வு வளர்ந்து கொண்டே போகிறது. இப்போது நீங்கள் வளர்ந்துவிட்டீர்கள் அந்த நபருக்கு வயதாகிவிட்டது. வலுவிழந்து விட்டார். இப்போது உங்களுக்குள் இருக்கும் வெறுப்புணர்வு என்ன செய்யும்? எப்படி வெளிப்படும்?
இதுதான் உணர்தலுக்கும், உணர்வுக்குமான தொடர்பு... இதையே சித்தர்கள் அனுபவம் என்கின்றனர்.
உடலைப் பற்றி உணர துவங்குகிறவர்கள் ஆரோக்கிய வாழ்க்கையின் அவசியம் பற்றிய உணர்வினைப் பெருகிறார்கள். அப்படி பெற்ற உண்ர்வு உடல் ஆரோக்கியமாய் இருக்க என்னவெல்லாம் செய்ய வேண்டும் என உங்களைத் தூண்டுகிறது. உடலுக்கு தீங்கு விளைவிக்கும் உணவுகளை தவிர்க்கச் செய்கிறது. உடற்பயிற்சி செய்ய துவங்குகிறீர்கள், உணவுக் கட்டுப்பாடு செய்கிறீர்கள். பலன் உடல் வலிவும் பொலிவும் பெறுகிறது.
ஆக,நல்ல உணவும், நல்ல உடற்பயிற்சி என்கிற இரண்டும் உடலுக்கு வலிவையும்,பொலிவையும் தருகிறது.
உடலுக்கு சரி, உயிருக்கு என்ன செய்வது?
இதற்கான பதில், முந்தைய பதிவில் நாம் பார்த்த இரண்டு நெறிகள் பற்றி நினைவிருக்கிறதா?. ஆம், பக்தி நெறி, ஞான நெறி என்கிற இரண்டும்தான் நம் உயிரை வளர்த்து பாதுகாக்கப் போகிறது.
பக்தி நெறி என்பது கோவிலுக்குப் போய் பூசைகள் செய்து சடங்குகள், சம்பிரதாயங்களின் பின்னால் ஓடுவது என்றே நம்மில் பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறோம். சமுக வாழ்வியலின் கவனச் சிதறல்களில் சிக்கி இருக்கும் நம்மை ஒரு ஒழுங்கமைவுக்குள் கொண்டு வருவதே பக்தி நெறியின் நோக்கம் என்கின்றனர் சித்தர் பெருமக்கள். இது முதல் நிலை. இந்த நிலையை உணர்ந்து கொண்டால் அடுத்து யோக நிலை எளிதாய் கைகூடும்.
எப்படி?
குண்டலினி - மனது
மனதினன் என்கிற பதமே மனிதன் என்றாகியது, என என்னுடைய தமிழாசான் கூறுவார். மனுஷன், மனிஷி என்ற வார்த்தைகளை அன்றாடம் நாம் பயன் படுத்திக் கொண்டுதானிருக்கிறோம். ஆக, மனது என்கிற ஒன்றுதான் நம்முடைய உண்மையான அடையாளமாகிறது. மற்றபடி பிறப்பால் வருகிற சாதி, மதம், இனம், பால் என்கிற அடையாளங்கள் எல்லாம் மாயத் தோற்றமே, அழியக் கூடியது. மனமோ சூக்குமமானது, அழிவில்லாதது.
மனம் என்பதை உயிரின் ஒரு கூறாக சிலர் கூறுகின்றனர். ஆனால் சித்தர் பெருமக்கள் உயிர்வேறு, மனம் வேறு அல்ல,இரண்டும் ஒன்றுதான் என்கின்றனர். உயிரின் படர் நிலைதான் மனம் என்கிறனர். மேலும் மனதிற்கு இரண்டு முகங்கள் இருப்பதாகவும் கூறுகின்றனர்.ஒன்று தெளிவு எனப்படும் “ஞானம்”, மற்றது வலிமை எனப்படும் “உறுதி”. இவை இரண்டும் தனித்துவமானவை. வலிமை இல்லாத ஞானத்தினாலோ அல்லது ஞானம் இல்லாத வலிமையினாலோ பயனில்லை. இவை இரண்டும் ஒன்றோடு ஒன்று இனைந்து செயல்படும் போது மட்டுமே மனம் முழுமையடைகிறது.
இப்படி ஒன்றோடு ஒன்று இனைந்து செயல்படும் மனதில் ஆற்றல் அளப்பறியது. இதன் வேகம் கணக்கிட முடியாதது. இன்னும் சொல்வதானால் இந்த பூமியை ஆண்டு கொண்டிருப்பதே இப்படியான மனங்கள்தான்.
எல்லாம் சரிதான், இந்த மனம் மனிதனுக்கு என்ன செய்கிறது?
எளிமையான பதில், உணர்கிறது... உணர்த்துகிறது.
அவ்வளவுதான்!
எப்படி உணர்கிறது?
தனது புலன்களின் வழியே உணர்கிறது. அதுவும் தனித்துவமான பாதைகளில்... நாவின் சுவையை கண் அறியாது. செவியின் ஓசையை நாக்கு உணராது.இப்படி பன்னிரெண்டு புலன்களின் வழியே தனித்துவமான உணர்தல்கள் நடக்கிறது என்கின்றனர் சித்தர் பெருமக்கள். இது நாள் வரை ஐம்புலன்களைத்தானே கேள்விப் பட்டிருக்கிறோம். ஆனால் சித்தரியல் பன்னிரெண்டு புலன்களைச் சொல்கிறது. அது பற்றி பிரிதொரு சந்தர்ப்பத்தில் பார்ப்போம்.
ஆனால் இப்படி உணரப்படும் தகவல்கள் எல்லாம் மனம் என்கிற ஒன்றில் போய் குவிகிறது. இதை அடங்குகிறது என்றும் சொல்லலாம். நாம் ஏற்கனவே பார்த்த மனதின் இரண்டு முகங்களான ஞானமும், வலிமையும் இவற்றை எப்படி கையாளுகின்றன என்பதில்தான் ஒரு மனிதனின் தனித்துவம், திறமை, முயற்சி, வெற்றி எல்லாம் அமைகிறது.
தான் உணருகின்றவைகளை விழிப்புடன் கவனித்து அதன் மேல் காரியமாற்றும் தன்மை மனதிற்கு மட்டுமே இருக்கிறது. அது இடும் கட்டளைகளை நிறைவேற்றுவதே மற்ற அவயங்கள்.
அப்படியானால், விழிப்பு நிலையில் செயல்பட மனதில் ஞானமும், உறுதியும் தயாராக இருக்க வேண்டுமல்லவா...
அதென்ன விழிப்பு நிலை?, அதை எப்படி அடைவது?
இதற்கு பதில்தான் குண்டலினி...
குண்டலினி - சில தெளிவுகள்!!
குண்டலினி என்பது உயிருடன் இருக்கும் ஒவ்வொரு மனிதருக்குள்ளும் புதைந்து இருக்கும் ஒரு வகையான நிலையான ஆற்றல் என்கின்றனர். முந்தைய பதிவுகளில் நாம் பார்த்த நிலை ஆற்றல், இயக்க ஆற்றல் தத்துவம் இப்போது உங்களுக்கு நினைவுக்கு வரலாம்.
குண்டலினி எங்கே இருக்கிறது?
நமது கருவாய்க்கும், எருவாய்க்கும் இடையே இருப்பதாக கூறியிருக்கின்றனர்.அதாவது நமது பிறப்பு உறுப்பிற்கும், ஆசன வாய்க்கும் இடையே நடுவில் புதைந்து இருப்பதாக கூறப்பட்டிருக்கிறது. இந்த இடத்தையே மூலாதாரம் என்றும் அழைக்கின்றனர்.
ஏன் இந்த பெயர் வந்தது?
குண்டலினி என்பது காரணப் பெயர். குண்டம் என்றால் சேமிக்கப் பெறும் பொருட்களை தாங்கி, அவை எளிதில் வெளியேறிவிடாதபடி பாதுகாக்கும் இடம். இந்த குண்டத்தை நமது உடலுக்கு ஒப்பாக சொல்கின்றனர். அத்தகைய குண்டத்தில் தங்கி லயம் பெறுகிற இந்த ஆற்றலை குண்டலினி என்கின்றனர்.
யாரெல்லாம் இதை கற்கலாம்?, எல்லோருக்கும் இது சாத்தியமாகுமா?
ஆர்வமும், விடா முயற்சியும் உள்ள எவரும் இதை கற்கலாம். தகுந்த குருவின் வழிகாட்டுதலில் கற்றுக் கொள்வதே சிறப்பு.
எத்தனை நாளில் குண்டலினி எழும்பும்?
மிக நிச்சயமாக ஒரே நாளில் எதுவும் சாத்தியமாகாது. நிதானம், பொறுமை, கவனகுவிப்பு ஆகிய இம் மூன்றுமே இதை சாத்தியமாக்கும்.
உயிரின் மீது ஆசை இல்லாத மனிதர் நம்மில் யாரேனும் இருக்க முடியுமா?, அப்படி விலை மதிப்பில்லாத இந்த உயிரை போற்றி பாதுகாக்கவும், அதை வளர்த்தெடுக்கவும், அதற்கு தேவையான ஓய்வு தந்து மெருகேற்ற ஏதேனும் வழி இருக்கிறதா என்ன?
நிச்சயமாக இருக்கிறது!, அதுவும் மற்ற எந்த மரபியலையும் விட இந்திய மரபியலில் இதற்கு தெளிவான தீர்வுகள் இருக்கிறது. அதை புரிந்து கொண்டதால்தான் மற்ற நாட்டினர் இந்திய மரபியல் செல்வங்களை நாடி ஓடி வருகின்றனர்.
நமது மரபியல் அளிக்கும் தீர்வுகளை இரண்டு படி நிலைகளாக அணுகலாம். ஒன்று “பக்தி நெறி”, மற்றது “ஞான நெறி”. இதைப் பற்றி நாம் பின்னர் பேசுவோம்.இப்போது உயிரைப் பற்றி மேலும் கொஞ்சம் பார்ப்போம். நமது உடலில் உயிர் எங்கே இருக்கிறது என்கிற கேள்வி நம் எல்லோருக்கும் வருவதுதான். என்னுடைய வாசிப்பனுபவம் மற்றும் புரிதலின் படி உயிரானது நமது உடலின் உள்ளும், உடலுக்கு வெளியிலும் நீக்கமற நிறைந்திருக்கும் ஒர் ஆற்றல் நிலை என்பதாகவே புரிந்திருக்கிறேன்.
ஆற்றல் இரண்டு வகையானது என நவீன அறிவியல் கூறுகிறது. ஒன்று “நிலை ஆற்றல்”, மற்றது “இயக்க ஆற்றல்”. நிலை ஆற்றல் கிளர்ந்து எழும் போது அது இயக்க ஆற்றலாக மாறுகிறது. தொடர்ந்து கிளராவிட்டால் இயக்க ஆற்றல் வலுவிழந்து தேய்ந்து மறைந்து விடும். இது நிரூபிக்கப் பட்ட அறிவியல் தத்துவம்.
நான் சொல்கிறேன்!, நமது உயிர்தான் இயக்க ஆற்றல்.
அப்படியானால் நிலை ஆற்றல் என்பது என்ன?
அதுதான் குண்டலினி!
குண்டலினி - உணர்தல்
குண்டலினி தொடரின் முந்தைய இரண்டு பதிவுகள் சில ஆதார அடிப்படைகள் தொடர்பான புரிதல்களை உருவாக்கியிருக்கும் என நம்புகிறேன். அதன் தொடர்ச்சியாக இன்று மற்றுமொரு தகவலையும் பார்த்து விடுவோம்.
உயிர் என்பது நமது உடலில் நிலை கொண்டிருக்கும் ஓர் ஆற்றல் மையம். அந்த ஆற்றலே நம் உடலை இயக்குகிறது. உயிர் ஆற்றல் ஓங்கும் போது உடல் ஆரோக்கியம் சிறக்கிறது. உயிர் ஆற்றல் மங்கும் போது உடல் தளர்ந்து நோய் வாய்ப் படுகிறது. இதுதான் இதுவரை நாம் பார்த்த நமது வாழ்வியலின் அடிப்படை.
மனித உடலின் அளவுகளில் வேண்டுமானால் வித்தியாசங்கள் இருக்கலாம். ஆனால் நம் எல்லோருக்கும் ஒரே மாதிரியான உயிர்தான் வாய்த்திருக்கிறது. அப்படி இருக்கையில் மனிதர்களில் ஏற்றத் தாழ்வு ஏன் உருவாகிறது. இதற்கு எளிமையான ஒரு பதில், தன்னை உணர்ந்து செயல்படுகிறவன் சிறப்புகளைப் பெறுகிறான். உணராதவன் துன்பத்தில் வீழ்ந்து உழல்கிறான். இந்த இடத்தில் உணர்தல் என்கிற வார்த்தை மிக முக்கியமானது. ஏனெனில் இதைப் பற்றிதான் இன்று பார்க்கப் போகிறோம்.இந்த உணர்தல் என்கிற வார்த்தையின் தத்துவம் மிகப் பெரியது. அதில் நமக்கு தேவையானதை மட்டும் இங்கே பார்ப்போம்.
உணர்தல் என்பது ஒரு தொடர் நிகழ்வு. அநேகமாய் நமது கடைசி மூச்சு இருக்கிற வரையில் ஏதேனும் ஒரு வகையில் இந்த உணர்தல் நடந்து கொண்டேதான் இருக்கிறது. இந்த உணர்தல்கள்தான் நமக்கு உணர்வுகளை கொடுக்கிறது. இப்படி கொண்டு தரும் உண்ர்வுதான் நமக்கு முக்கியம். உணர்தல் ஒரு போதும் நமக்குள் தங்குவதில்லை. ஆனால் அவை தரும் உணர்வு நமக்குள் தங்கிவிடுகிறது.
இப்படி தொடர்ந்து நமக்கும் சேகரம் ஆகிக் கொண்டிருக்கும் உணர்வு ஒரு கட்டத்தில் நமக்கான உணர்தல் என்ன என்பதை தீர்மானித்து விடுகிறது. ஒரு கட்டத்தில் இவையே நம்மை வழி நடத்தவும் ஆரம்பித்து விடுகிறது.
ஒரு உதாரணம் இதை எளிமையாக விளக்கும். குழந்தையாக இருக்கிறீர்கள்.உங்கள் தாயார் உங்களை விழுந்து விழுந்து கவனிக்கிறார். பாதுகாக்கிறார். தாயாரின் அன்பை நீங்கள் உணர்கிறீர்கள். நன்றாக வளர்கிறீர்கள். இப்போது உங்கள் தாயார் உடல் தளர்ந்து மெலிகிறார். இப்போது உங்களுக்குள் சேகரமாகி இருக்கும் அம்மாவின் உணர்வு விழித்துக் கொள்கிறது. இப்போது நீங்கள் அம்மாவை விழுந்து விழுந்து கவனிக்கிறீர்கள்.பாதுகாக்கிறீர்கள்.
இன்னொரு உதாரணமும் பார்ப்போம். நீங்கள் குழந்தையாக இருக்கிறீர்கள். ஒரு நபர் உங்களை அடித்து துன்புறுத்திக் கொண்டே இருக்கிறார். அவரின் மீது வெறுப்பு உணர்வு வளர்ந்து கொண்டே போகிறது. இப்போது நீங்கள் வளர்ந்துவிட்டீர்கள் அந்த நபருக்கு வயதாகிவிட்டது. வலுவிழந்து விட்டார். இப்போது உங்களுக்குள் இருக்கும் வெறுப்புணர்வு என்ன செய்யும்? எப்படி வெளிப்படும்?
இதுதான் உணர்தலுக்கும், உணர்வுக்குமான தொடர்பு... இதையே சித்தர்கள் அனுபவம் என்கின்றனர்.
உடலைப் பற்றி உணர துவங்குகிறவர்கள் ஆரோக்கிய வாழ்க்கையின் அவசியம் பற்றிய உணர்வினைப் பெருகிறார்கள். அப்படி பெற்ற உண்ர்வு உடல் ஆரோக்கியமாய் இருக்க என்னவெல்லாம் செய்ய வேண்டும் என உங்களைத் தூண்டுகிறது. உடலுக்கு தீங்கு விளைவிக்கும் உணவுகளை தவிர்க்கச் செய்கிறது. உடற்பயிற்சி செய்ய துவங்குகிறீர்கள், உணவுக் கட்டுப்பாடு செய்கிறீர்கள். பலன் உடல் வலிவும் பொலிவும் பெறுகிறது.
ஆக,நல்ல உணவும், நல்ல உடற்பயிற்சி என்கிற இரண்டும் உடலுக்கு வலிவையும்,பொலிவையும் தருகிறது.
உடலுக்கு சரி, உயிருக்கு என்ன செய்வது?
இதற்கான பதில், முந்தைய பதிவில் நாம் பார்த்த இரண்டு நெறிகள் பற்றி நினைவிருக்கிறதா?. ஆம், பக்தி நெறி, ஞான நெறி என்கிற இரண்டும்தான் நம் உயிரை வளர்த்து பாதுகாக்கப் போகிறது.
பக்தி நெறி என்பது கோவிலுக்குப் போய் பூசைகள் செய்து சடங்குகள், சம்பிரதாயங்களின் பின்னால் ஓடுவது என்றே நம்மில் பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறோம். சமுக வாழ்வியலின் கவனச் சிதறல்களில் சிக்கி இருக்கும் நம்மை ஒரு ஒழுங்கமைவுக்குள் கொண்டு வருவதே பக்தி நெறியின் நோக்கம் என்கின்றனர் சித்தர் பெருமக்கள். இது முதல் நிலை. இந்த நிலையை உணர்ந்து கொண்டால் அடுத்து யோக நிலை எளிதாய் கைகூடும்.
எப்படி?
குண்டலினி - மனது
மனதினன் என்கிற பதமே மனிதன் என்றாகியது, என என்னுடைய தமிழாசான் கூறுவார். மனுஷன், மனிஷி என்ற வார்த்தைகளை அன்றாடம் நாம் பயன் படுத்திக் கொண்டுதானிருக்கிறோம். ஆக, மனது என்கிற ஒன்றுதான் நம்முடைய உண்மையான அடையாளமாகிறது. மற்றபடி பிறப்பால் வருகிற சாதி, மதம், இனம், பால் என்கிற அடையாளங்கள் எல்லாம் மாயத் தோற்றமே, அழியக் கூடியது. மனமோ சூக்குமமானது, அழிவில்லாதது.
மனம் என்பதை உயிரின் ஒரு கூறாக சிலர் கூறுகின்றனர். ஆனால் சித்தர் பெருமக்கள் உயிர்வேறு, மனம் வேறு அல்ல,இரண்டும் ஒன்றுதான் என்கின்றனர். உயிரின் படர் நிலைதான் மனம் என்கிறனர். மேலும் மனதிற்கு இரண்டு முகங்கள் இருப்பதாகவும் கூறுகின்றனர்.ஒன்று தெளிவு எனப்படும் “ஞானம்”, மற்றது வலிமை எனப்படும் “உறுதி”. இவை இரண்டும் தனித்துவமானவை. வலிமை இல்லாத ஞானத்தினாலோ அல்லது ஞானம் இல்லாத வலிமையினாலோ பயனில்லை. இவை இரண்டும் ஒன்றோடு ஒன்று இனைந்து செயல்படும் போது மட்டுமே மனம் முழுமையடைகிறது.
இப்படி ஒன்றோடு ஒன்று இனைந்து செயல்படும் மனதில் ஆற்றல் அளப்பறியது. இதன் வேகம் கணக்கிட முடியாதது. இன்னும் சொல்வதானால் இந்த பூமியை ஆண்டு கொண்டிருப்பதே இப்படியான மனங்கள்தான்.
எல்லாம் சரிதான், இந்த மனம் மனிதனுக்கு என்ன செய்கிறது?
எளிமையான பதில், உணர்கிறது... உணர்த்துகிறது.
அவ்வளவுதான்!
எப்படி உணர்கிறது?
தனது புலன்களின் வழியே உணர்கிறது. அதுவும் தனித்துவமான பாதைகளில்... நாவின் சுவையை கண் அறியாது. செவியின் ஓசையை நாக்கு உணராது.இப்படி பன்னிரெண்டு புலன்களின் வழியே தனித்துவமான உணர்தல்கள் நடக்கிறது என்கின்றனர் சித்தர் பெருமக்கள். இது நாள் வரை ஐம்புலன்களைத்தானே கேள்விப் பட்டிருக்கிறோம். ஆனால் சித்தரியல் பன்னிரெண்டு புலன்களைச் சொல்கிறது. அது பற்றி பிரிதொரு சந்தர்ப்பத்தில் பார்ப்போம்.
ஆனால் இப்படி உணரப்படும் தகவல்கள் எல்லாம் மனம் என்கிற ஒன்றில் போய் குவிகிறது. இதை அடங்குகிறது என்றும் சொல்லலாம். நாம் ஏற்கனவே பார்த்த மனதின் இரண்டு முகங்களான ஞானமும், வலிமையும் இவற்றை எப்படி கையாளுகின்றன என்பதில்தான் ஒரு மனிதனின் தனித்துவம், திறமை, முயற்சி, வெற்றி எல்லாம் அமைகிறது.
தான் உணருகின்றவைகளை விழிப்புடன் கவனித்து அதன் மேல் காரியமாற்றும் தன்மை மனதிற்கு மட்டுமே இருக்கிறது. அது இடும் கட்டளைகளை நிறைவேற்றுவதே மற்ற அவயங்கள்.
அப்படியானால், விழிப்பு நிலையில் செயல்பட மனதில் ஞானமும், உறுதியும் தயாராக இருக்க வேண்டுமல்லவா...
அதென்ன விழிப்பு நிலை?, அதை எப்படி அடைவது?
இதற்கு பதில்தான் குண்டலினி...
குண்டலினி - சில தெளிவுகள்!!
- பஞ்சபூதங்களின் சேர்க்கையால் ஆனது நம்முடைய இந்த உடல்
- உடலின் உள்ளேயும் வெளியேயும் நின்று இயங்கும் ஆற்றலையே நாம் உயிர் என்கிறோம்.
- உயிரின் படர் நிலைதான் மனம்.
- மனத்திற்கு “ஞானம்”, “உறுதி” என இரண்டு முகங்கள் உள்ளது. இவை தனித்துவமானவை.
- உணர்தல், உணர்த்துதல் என்கிற இரண்டு வேலைகளை மட்டுமே மனம் செய்திறது.
- நம்முடைய உணர்தல் மற்றும் உணர்த்தும் நிலைமை மேம்பட விழிப்புணர்வு தேவைப் படுகிறது.
- குண்டலினியை தூண்டுவதன் மூலம் இந்த விழிப்புணர்வினை உயர் தனித்துவ நிலைக்கு கொண்டு செல்லலாம்.
குண்டலினி என்பது உயிருடன் இருக்கும் ஒவ்வொரு மனிதருக்குள்ளும் புதைந்து இருக்கும் ஒரு வகையான நிலையான ஆற்றல் என்கின்றனர். முந்தைய பதிவுகளில் நாம் பார்த்த நிலை ஆற்றல், இயக்க ஆற்றல் தத்துவம் இப்போது உங்களுக்கு நினைவுக்கு வரலாம்.
குண்டலினி எங்கே இருக்கிறது?
நமது கருவாய்க்கும், எருவாய்க்கும் இடையே இருப்பதாக கூறியிருக்கின்றனர்.அதாவது நமது பிறப்பு உறுப்பிற்கும், ஆசன வாய்க்கும் இடையே நடுவில் புதைந்து இருப்பதாக கூறப்பட்டிருக்கிறது. இந்த இடத்தையே மூலாதாரம் என்றும் அழைக்கின்றனர்.
ஏன் இந்த பெயர் வந்தது?
குண்டலினி என்பது காரணப் பெயர். குண்டம் என்றால் சேமிக்கப் பெறும் பொருட்களை தாங்கி, அவை எளிதில் வெளியேறிவிடாதபடி பாதுகாக்கும் இடம். இந்த குண்டத்தை நமது உடலுக்கு ஒப்பாக சொல்கின்றனர். அத்தகைய குண்டத்தில் தங்கி லயம் பெறுகிற இந்த ஆற்றலை குண்டலினி என்கின்றனர்.
யாரெல்லாம் இதை கற்கலாம்?, எல்லோருக்கும் இது சாத்தியமாகுமா?
ஆர்வமும், விடா முயற்சியும் உள்ள எவரும் இதை கற்கலாம். தகுந்த குருவின் வழிகாட்டுதலில் கற்றுக் கொள்வதே சிறப்பு.
எத்தனை நாளில் குண்டலினி எழும்பும்?
மிக நிச்சயமாக ஒரே நாளில் எதுவும் சாத்தியமாகாது. நிதானம், பொறுமை, கவனகுவிப்பு ஆகிய இம் மூன்றுமே இதை சாத்தியமாக்கும்.
குண்டலினியும் - சித்தர்களும்
குண்டலினி பற்றிய தொடர் இன்று முதல் துவங்குவதாக கொள்ளலாம். இதுவரை பார்த்த அடி ஆதார புரிதல்கள் இனி உதவியாக இருக்கும்.
சித்தரியலில் குண்டலினி பற்றி பேசாத சித்தர்கள் வெகு குறைவு. அநேகமாய் எல்லோரும் ஏதோ ஒரு வகையில் இந்த குண்டலினியின் மகிமையை கூறியிருக்கின்றனர். இதனை உயர்த்துவதன் மூலம் சாதாரண உணர்வினை, பரபிரம்ம உணர்வாக உயர்த்திடலாம் என்று கூறுகின்றனர்.
சுருள்சுருளாய் நெளிந்த ஒரு காதணியை குண்டலம் என வழங்குகிறோம். இப்படி சுருண்டு வளைந்து பாம்பினைப் போல இந்த நிலை சக்தி மூலாதாரத்தில் இருப்பதால் இதனை குண்டலினி என அழைப்பதாக ஒரு பெயர் காரணம் கூறுகிறது. இதை ஒரு யோக வித்தையின் மூலம் எழுப்பிடலாமாம். இதன் ஆற்றலை ஒருனியை பாம்பினை ஒத்ததாக கூறுகின்றனர்.
குண்டலினியின் இருப்பிடத்தை காகபுசண்டர் பின் வருமாறு விளக்குகிறார்.
குண்டலியைக் கண்டாக்காற் கருக்குமென்பார்
குண்டலியி னிருப்பிடமும் மூலமென்றார்
குண்டலிதா னென்றாக்கால் நரம்போதோலோ
குருந்தண்டோமுள்ளெலும்போ பிடரிமார்போ
குண்டலியே யென்றவர்கள் பெயரார் சொன்னார்
கொத்தளத்தின் பெருமைதனைச் சொல்லினார்கள்
குண்டலியே வாய்திறக்கப் பேசுமென்றார்
குருவென்றார் வாலையென்றார் குமரனென்றாரே.
- காகபுசுண்டர் -
குண்டலினியை சித்தர் பெருமக்கள் வெவ்வேறு பெயர்களில் அழைத்திருக்கின்றனர். அதைச் சொல்லும் கொங்கணவர் பாடல் ஒன்றை பார்ப்போம்.
சிறந்திட்ட குண்டலியின் பேர் செப்பக் கேளு
சிறப்பான சிவயோக மென்றுபேரு
சிறப்பான வாசி யென்று மிதுக்கே பேரு
சீரான இராச யோக மென்றுபேரு
திறப்பான யரசனென்று மிதுக்கே பேரு
சேர்ந்துணர்ந்த சபையென்று மிதற்கே பேரு
வுறப்பாக விதைபார்த்தால் ஞானசித்தி
யுத்தமனே காயசித்தி யுணந்து பாரே.
- கொங்கணவர் -
குண்டலினிக்கு, சிவயோகம் என்றும், வாசி யோகமென்றும், சுழியோகமென்றும், ராஜயோகமென்றும், அரசன் என்றும் சபையென்றும் பெயர் வழங்கப்படுகிறது. இவற்றை முறையாகச் செய்து தேர்ச்சி பெற்றால் காயசித்தியும் ஞானசித்தியும் வாய்க்கும் என்கிறார் கொங்கணவர்.
மனித உடலில் மூலாதாரம் எங்கிருக்கிறது என்பதை நேற்றைய பதிவில் பார்த்தோம். அந்த மூலாதாரத்தில் குண்டலினி எப்படி இருக்கிறது என்பதை திருமூலர் அருளிய திருமந்திரம் என்ற நூல் தெளிவாக விளக்குகிறது. அதாவது, நம் ஒவ்வொருவரின் உடம்பிலும் முதுகு தண்டின் அடியில் மூலாதாரத்தில், மூன்றரைச் சுருள்களாக முடங்கி உறங்கி கிடக்கும் பாம்பு போன்று குண்டலினி இருக்கிறது. அதன் முகம் கீழ் நோக்கி இருக்கிறது. அதன் வாலை அதன் வாய் கவ்விக்கொண்டிருக்கிறது.
இப்படி தூங்கிக் கொண்டிருக்கும் இந்த குண்டலினியை எழுப்புவதுதான் இந்த குண்டலினி யோகத்தின் நோக்கம்.
குண்டலினி பற்றிய தொடர் இன்று முதல் துவங்குவதாக கொள்ளலாம். இதுவரை பார்த்த அடி ஆதார புரிதல்கள் இனி உதவியாக இருக்கும்.
சித்தரியலில் குண்டலினி பற்றி பேசாத சித்தர்கள் வெகு குறைவு. அநேகமாய் எல்லோரும் ஏதோ ஒரு வகையில் இந்த குண்டலினியின் மகிமையை கூறியிருக்கின்றனர். இதனை உயர்த்துவதன் மூலம் சாதாரண உணர்வினை, பரபிரம்ம உணர்வாக உயர்த்திடலாம் என்று கூறுகின்றனர்.
சுருள்சுருளாய் நெளிந்த ஒரு காதணியை குண்டலம் என வழங்குகிறோம். இப்படி சுருண்டு வளைந்து பாம்பினைப் போல இந்த நிலை சக்தி மூலாதாரத்தில் இருப்பதால் இதனை குண்டலினி என அழைப்பதாக ஒரு பெயர் காரணம் கூறுகிறது. இதை ஒரு யோக வித்தையின் மூலம் எழுப்பிடலாமாம். இதன் ஆற்றலை ஒருனியை பாம்பினை ஒத்ததாக கூறுகின்றனர்.
குண்டலினியின் இருப்பிடத்தை காகபுசண்டர் பின் வருமாறு விளக்குகிறார்.
குண்டலியைக் கண்டாக்காற் கருக்குமென்பார்
குண்டலியி னிருப்பிடமும் மூலமென்றார்
குண்டலிதா னென்றாக்கால் நரம்போதோலோ
குருந்தண்டோமுள்ளெலும்போ பிடரிமார்போ
குண்டலியே யென்றவர்கள் பெயரார் சொன்னார்
கொத்தளத்தின் பெருமைதனைச் சொல்லினார்கள்
குண்டலியே வாய்திறக்கப் பேசுமென்றார்
குருவென்றார் வாலையென்றார் குமரனென்றாரே.
- காகபுசுண்டர் -
குண்டலினியை சித்தர் பெருமக்கள் வெவ்வேறு பெயர்களில் அழைத்திருக்கின்றனர். அதைச் சொல்லும் கொங்கணவர் பாடல் ஒன்றை பார்ப்போம்.
சிறந்திட்ட குண்டலியின் பேர் செப்பக் கேளு
சிறப்பான சிவயோக மென்றுபேரு
சிறப்பான வாசி யென்று மிதுக்கே பேரு
சீரான இராச யோக மென்றுபேரு
திறப்பான யரசனென்று மிதுக்கே பேரு
சேர்ந்துணர்ந்த சபையென்று மிதற்கே பேரு
வுறப்பாக விதைபார்த்தால் ஞானசித்தி
யுத்தமனே காயசித்தி யுணந்து பாரே.
- கொங்கணவர் -
குண்டலினிக்கு, சிவயோகம் என்றும், வாசி யோகமென்றும், சுழியோகமென்றும், ராஜயோகமென்றும், அரசன் என்றும் சபையென்றும் பெயர் வழங்கப்படுகிறது. இவற்றை முறையாகச் செய்து தேர்ச்சி பெற்றால் காயசித்தியும் ஞானசித்தியும் வாய்க்கும் என்கிறார் கொங்கணவர்.
மனித உடலில் மூலாதாரம் எங்கிருக்கிறது என்பதை நேற்றைய பதிவில் பார்த்தோம். அந்த மூலாதாரத்தில் குண்டலினி எப்படி இருக்கிறது என்பதை திருமூலர் அருளிய திருமந்திரம் என்ற நூல் தெளிவாக விளக்குகிறது. அதாவது, நம் ஒவ்வொருவரின் உடம்பிலும் முதுகு தண்டின் அடியில் மூலாதாரத்தில், மூன்றரைச் சுருள்களாக முடங்கி உறங்கி கிடக்கும் பாம்பு போன்று குண்டலினி இருக்கிறது. அதன் முகம் கீழ் நோக்கி இருக்கிறது. அதன் வாலை அதன் வாய் கவ்விக்கொண்டிருக்கிறது.
இப்படி தூங்கிக் கொண்டிருக்கும் இந்த குண்டலினியை எழுப்புவதுதான் இந்த குண்டலினி யோகத்தின் நோக்கம்.
குண்டலினி எழுந்தால் என்னவாகும்
குண்டலினி என்பது நமக்குள் புதைந்திருக்கும் நிலை ஆற்றல் என்றும், அது பாம்பைப் போல மூன்றரை சுருளாக சுருண்டு நமது மூலாதாரத்தில் புதைந்திருக்கிறது என்றும் பார்த்தோம். இந்த குண்டலினி நம் எல்லோரிடமும் இருக்கிறது, இதை அறிந்து உணர்ந்து தூண்டுவதன் மூலம் பேரற்புதம் வாய்ந்த ஒரு அனுபவமாகவும், ஆற்றலாகவும் மாற்றிட முடியும் என்கின்றனர் சித்தர்கள்.
குண்டலினியை தூண்டுவதற்கு முன்னர், நமது உடலைப் பற்றிய சித்தர்களின் தெளிவு ஒன்றினை பார்த்துவிடுவோம். நமது உடலானது எழுபத்தி இரண்டாயிரம் நாடிகளால் பின்னப் பட்டிருக்கிறது என்றும், இந்த நாடிகள் எல்லாம் ஏழு மையங்களில் இனைக்கப் பட்டிருப்பதாகவும் கூறுகின்றனர். இது குறித்து அடுத்து வரும் பதிவுகளில் விரிவாக பார்க்க இருப்பதால் மீண்டும் குண்டலினியை கவனிப்போம்.
குண்டலினி அசைவற்ற பாம்பினை ஒத்த நிலையில் இருப்பதாக பார்த்தோம். பாம்பினை சீண்டினால் என்ன ஆகும் சீறிக் கிளம்பும்தானே!, சீறிக் கிளம்புகிற பாம்பு ஊர்ந்து செல்லவும் வேண்டுமல்லவா!!
ஆம்!,குண்டலினியை தூண்டும் போது அது மூலாதாரத்தில் இருந்து மேல் நோக்கி கிளம்பிடுமாம்.அப்படி கிளம்புகிற குண்டலினி சக்தியானது மூலாதாரத்திலிருந்து மேலே பயணித்து துரியம் என்கிற உச்சந்தலை வரை கொண்டுவரலாம் என்கின்றனர். இந்த துரியத்திற்கு குண்டலினியை கொண்டு வந்தால் சமாதி சித்திக்கிறதாம். இதை காகபுசுண்டர் “சஞ்சார சமாதி” என்கிறார்.
இப்படி குண்டலினியை மூலாதாரத்தில் இருந்து உச்சந்தலையான துரியத்திற்கு கொண்டு வந்தால் என்னவாகும்?
அந்த அனுபவத்தை கொங்கணவர் பின்வருமாறு விளக்குகிறார்.
உணர்வற்று வுடலற்று யோகமற்று
யோடுவது மாடுவது மிரண்டுமற்று
பணர்வற்று நினைவற்றுப் பாசமற்றுப்
பார்க்கிறதும் பாராது மிரண்டுமற்றுச்
சுணர்வற்று லெச்சையற்றுக் கூச்சமற்று
சொல்வதுவுஞ் சொல்லாது மிரண்டுமற்று
நிணர்வற்ற நிட்களத்தில் நிலைத்துப் போக
நேராக குண்டலியை நிலைத்துப் பாரே.
- கொங்கணவர் -
உணர்வற்று, உடலற்று, யோகமற்று, ஓடுவதற்று, ஆடுவதற்று, நினைவற்று, பாசமற்று, பார்ப்பதும், பார்க்காததுமாகிய இரண்டும் அற்று லெச்சை, கூச்சம், சொல்வது, சொல்லாதது போன்றவை அற்று, நிட்களமாகிய பிரம்மத்திடம் மனமும் புத்தியும் லயித்து போகவேண்டும் என்று எண்ணினால் குண்டலி யோகத்தை செய் என்கிறார் கொங்கணவர்.
இப்போது குண்டலினியை எழுப்பி மேலே கொண்டு போக வேண்டும். ஒரே மூச்சில் மேலேறிவிடுமா? அல்லது ஒவ்வொரு நிலையாக உயர்த்திட வேண்டுமா?
குண்டலினி என்பது நமக்குள் புதைந்திருக்கும் நிலை ஆற்றல் என்றும், அது பாம்பைப் போல மூன்றரை சுருளாக சுருண்டு நமது மூலாதாரத்தில் புதைந்திருக்கிறது என்றும் பார்த்தோம். இந்த குண்டலினி நம் எல்லோரிடமும் இருக்கிறது, இதை அறிந்து உணர்ந்து தூண்டுவதன் மூலம் பேரற்புதம் வாய்ந்த ஒரு அனுபவமாகவும், ஆற்றலாகவும் மாற்றிட முடியும் என்கின்றனர் சித்தர்கள்.
குண்டலினியை தூண்டுவதற்கு முன்னர், நமது உடலைப் பற்றிய சித்தர்களின் தெளிவு ஒன்றினை பார்த்துவிடுவோம். நமது உடலானது எழுபத்தி இரண்டாயிரம் நாடிகளால் பின்னப் பட்டிருக்கிறது என்றும், இந்த நாடிகள் எல்லாம் ஏழு மையங்களில் இனைக்கப் பட்டிருப்பதாகவும் கூறுகின்றனர். இது குறித்து அடுத்து வரும் பதிவுகளில் விரிவாக பார்க்க இருப்பதால் மீண்டும் குண்டலினியை கவனிப்போம்.
குண்டலினி அசைவற்ற பாம்பினை ஒத்த நிலையில் இருப்பதாக பார்த்தோம். பாம்பினை சீண்டினால் என்ன ஆகும் சீறிக் கிளம்பும்தானே!, சீறிக் கிளம்புகிற பாம்பு ஊர்ந்து செல்லவும் வேண்டுமல்லவா!!
ஆம்!,குண்டலினியை தூண்டும் போது அது மூலாதாரத்தில் இருந்து மேல் நோக்கி கிளம்பிடுமாம்.அப்படி கிளம்புகிற குண்டலினி சக்தியானது மூலாதாரத்திலிருந்து மேலே பயணித்து துரியம் என்கிற உச்சந்தலை வரை கொண்டுவரலாம் என்கின்றனர். இந்த துரியத்திற்கு குண்டலினியை கொண்டு வந்தால் சமாதி சித்திக்கிறதாம். இதை காகபுசுண்டர் “சஞ்சார சமாதி” என்கிறார்.
இப்படி குண்டலினியை மூலாதாரத்தில் இருந்து உச்சந்தலையான துரியத்திற்கு கொண்டு வந்தால் என்னவாகும்?
அந்த அனுபவத்தை கொங்கணவர் பின்வருமாறு விளக்குகிறார்.
உணர்வற்று வுடலற்று யோகமற்று
யோடுவது மாடுவது மிரண்டுமற்று
பணர்வற்று நினைவற்றுப் பாசமற்றுப்
பார்க்கிறதும் பாராது மிரண்டுமற்றுச்
சுணர்வற்று லெச்சையற்றுக் கூச்சமற்று
சொல்வதுவுஞ் சொல்லாது மிரண்டுமற்று
நிணர்வற்ற நிட்களத்தில் நிலைத்துப் போக
நேராக குண்டலியை நிலைத்துப் பாரே.
- கொங்கணவர் -
உணர்வற்று, உடலற்று, யோகமற்று, ஓடுவதற்று, ஆடுவதற்று, நினைவற்று, பாசமற்று, பார்ப்பதும், பார்க்காததுமாகிய இரண்டும் அற்று லெச்சை, கூச்சம், சொல்வது, சொல்லாதது போன்றவை அற்று, நிட்களமாகிய பிரம்மத்திடம் மனமும் புத்தியும் லயித்து போகவேண்டும் என்று எண்ணினால் குண்டலி யோகத்தை செய் என்கிறார் கொங்கணவர்.
இப்போது குண்டலினியை எழுப்பி மேலே கொண்டு போக வேண்டும். ஒரே மூச்சில் மேலேறிவிடுமா? அல்லது ஒவ்வொரு நிலையாக உயர்த்திட வேண்டுமா?

Comments
Post a Comment