ஆன்மீகம், இந்த ஒரு வார்த்தைக்குத்தான் எத்தனை எத்தனை அர்த்தங்கள்,
ஆளுக்கொரு அர்த்தங்களை பிடித்துக் கொண்டு தங்களுடைய மதம்தான் உயர்வானது
என்று நிரூபிக்க வேண்டி என்னவெல்லாம் சொல்கிறார்கள், செய்கிறார்கள்.
கொஞ்சம் அழுத்தமாய் யோசித்தால் இத்தகைய மதங்களினால் சமூக நல்லிணக்கம்
என்பது எங்காவது சாத்தியமாகி இருக்கிறதா? இதற்கு என்னதான் தீர்வு?
வாருங்கள் இன்று இதைப் பற்றி கொஞ்சம் பேசித் தீர்ப்போம்.
அண்ட பெருவெடிப்பில் துவங்கிய இந்த பூமியில் ஒரு செல் உயிரியாக ஜனித்து
இன்று மனிதனாய் வளர்ந்திருப்பதாக அறிவியல் சொல்கிறது. இதற்கு ஆதாரங்கள்
இல்லை என்றாலும் அறிவியலார் சொல்லும் சாத்தியங்களை ஏற்றுக் கொள்கிற மன
நிலைக்கு அநேகமாய் நம்மில் அனைவரும் வந்து விட்டோம். ஆக ஆதியில் இருந்து
இன்றைய நிலை வரை நம்மை வார்த்தெடுத்தது எது?
அதுதான் காலம். ஆம், கால பரிமாணத்தில் உருவானதுதான் இந்த பூமியும் அதில்
வசிக்கும் அத்தனை உயிரினங்களும். இந்த காலத்திற்கு கடவுள் வேஷம் போட்டால்
எப்படி இருக்கும். ஆனால் யாரும் அப்படி காலத்துக்கு கடவுள் வேஷம் போட்டதாக
தெரியவில்லை. நம்மை போலவே கையும் காலும் உள்ள பிம்பங்களை உருவகித்து அதற்கு
மகா சக்தியை கொடுத்து அதற்காக நம்முடைய காலத்தை கரைத்துக்
கொண்டிருக்கிறோம்.
நண்பர்களே, நாம் பார்க்கப் போகிற ஆன்மீகம் என்பது மிக நிச்சயமாக மதத்தின்
அடையாளம் இல்லை. அது நம் மனதின் அடையாளம். இதை தெளிவாக உணராமல் போனதால்தான்
ஆளுக்கொரு மதச்சாயத்தை அப்பிக் கொண்டு நிற்கிறோம். சர்வ நிச்சயமாக மதச்
சின்னங்களை உடம்பெல்லாம் அணிந்து கொண்டும், மத நூல்களை படித்துக் கொண்டும்,
அதன் விதிகளுக்குள் நம்மை சுருக்கிக் கொண்டு வாழ்வதல்ல ஆன்மீகம்.
எது நம்மை இயக்குகிறதோ அது எதுவென தேடி அறிவதே ஆன்மீகம். இது ஒரு வகையான
அறிவு சார்ந்த தேடல். ஆன்மீகம் என்பது நமது அறிவின் ஓர் இயல்... ஆம்!,
அறிவியலேதான். நன்றாக நினைவில் கொள்ளுங்கள். நிரூபிக்கப் படாத எதையும்
அறிவியல் ஏற்றுக் கொள்வதே இல்லை.
ஆக, எது நம்மை இயக்குகிறது? கொஞ்சம் இப்படி சிந்தித்துப் பார்ப்போமே!,
இரண்டு பேரின் அன்புதான் நம்மை உயிர்விக்கிறது, அவர்களின் அன்பும்,
அக்கறையும் நம்மை வளர்த்தெடுக்கிறது. அனுபவம் நம்மை செதுக்குகிறது, அறிவைத்
தருகிறது. கருணை நம்மை உயர்த்துகிறது. ஆசையோ நம்மை உந்துகிறது. பெருகிய
ஆசைதான் பொறாமையை தருகிறது. பொறாமை நம்முடைய நிதானத்தை இழக்கச் செய்கிறது.
பெருகிய ஆசையும், பொறாமையும் நம்மை அழிவுக்கு இட்டுச் செல்கிறது.
ஒரு வாழ்நாளை இயக்குவது இவைதான். இந்த சக்கர வட்டத்தில் சுழன்று
கொண்டிருப்பதுதான் மனிதம். இதில் நம்மை எது உயர்த்தும் எது அழிவுக்கு
கொண்டு செல்லும் என்பது தெளிவாக இருக்கிறது. இதுதான் நாம் தேடும் ஆன்மீகம்.
இதைத்தான் எல்லா மதங்களும் சொல்கிறது. நாம்தான் இந்த கருத்துக்களை மறந்து
விட்டு மதம் சொல்லும் கதைகளை மட்டும் எடுத்துக் கொண்டு பொய்யான ஒன்றின்
பின்னால் போய்க் கொண்டிருக்கிறோம்.
"ஆசை கோபம் களவு கொள்பவன் பேசத்தெரிந்த மிருகம்"
"அன்பு நன்றி கருணை கொண்டவன் மனித வடிவில் தெய்வம்"
இதுதான் ஆன்மீகம், இதுதான் கடவுள்.
வள்ளல் பெருமானின் ஆன்மிகம்
அருட்பா, மருட்பா என ஒரு பக்கம் கடுமையான வாத விவாதங்கள் நடந்து கொண்டிருந்தாலும் மறுபக்கத்தில் வள்ளல் பெருமானார் தனது ஆன்மிக தேடலின் தெளிவு நிலைக்கு வந்திருந்தார். தன் தெளிவுகளுக்கு இறுதி வடிவம் கொடுத்து அதனை உலகத்தாருக்கு உணர்த்தும் வகையில் பாடல்களாய் எழுதிடவும் துவங்கினார்.
தூய்மையான அறிவுதான் தெய்வம். அது பேரன்பும், பெருங் கருனையும் கொண்டது. அது ஓர் உருவமில்லை. தூய சுடரைப் போல தெளிந்த பரிசுத்த நிலை. அந்த நிலையின் முன்னர் அனைவரும் சமம். இத்தகைய அன்பும், கருணையுமான இறை நிலையை நமக்குள் வளர்த்துக் கொள்வதன் மூலம் இறைவனை அடையலாம் என்பதாக அவரின் தெளிவுகள் இருந்தன.
தான் தெளிந்த ஆன்மிக நிலையை அடையத் தடையாக இருக்கும், சாஸ்திரங்கள், சம்பிரதாயங்கள், அவற்றைத் தாங்கிப் பிடித்த மூடநம்பிக்கைகளை முற்றாக நிராகரிக்கக் கூறினார். சாதியின் பெயரால் ஏற்றத் தாழ்வு சொல்லி மக்களை பிரித்து அவர்களை பாகுபடுத்துவதையும் கடுமையாக எதிர்த்தார். மேலும் இவற்றிற்கெல்லாம் ஆதாரமாகவும், அதிகாரமாகவும் செயல்படும் மதத்தையும் நிராகரித்தார்.
வள்ளல் பெருமானின் இத்தகைய நிராகரிப்புகளே பழமை வாதிகளுக்கு எரிச்சலையும், ஆத்திரத்தையும் கிளப்பின. அவரது இத்தகைய நிலைப்பாட்டினை பின் வரும் சில பாக்களின் மூலம் அறியலாம்.
"சாதி சமயச் சழக்கைவிட் டேன்அருட்
சோதியைக் கண்டேன டி - அக்கச்சி
சோதியைக் கண்டேன டி."
(அருட்காட்சி - ஆறாம் திருமுறை)
"சாதியும் மதமும் சமயமும் பொய்என
ஆதியில் உணர்த்திய அருட்பெருஞ்சோதி”
(அருட்பெருஞ்சோதி அகவல் - ஆறாம் திருமுறை)
"ஒத்தாரும் உயர்ந்தாரும் தாழ்ந்தாரும் எவரும்
ஒருமை உளர் ஆகி உலகியல் நடத்தல் வேண்டும்"
(சுத்த சன்மார்க்க வேண்டுகோள் - ஆறாம் திருமுறை)
இது போன்ற கருத்துக்கள் யாவும் அவர் பின்னாளில் அருளிய ஆறாம் திருமுறை தொகுப்பில் காணக் கிடைக்கின்றன.
தன்னுடைய இந்த கருத்துக்களை அவர் ஊர் ஊராய்ப் போய் சொற்பொழிவுகளின் மூலம் பரப்பிக் கொண்டிருந்தார். தனியொரு மனிதனால் இதை சாதித்து விட முடியாது என்பதை புரிந்து கொண்ட போது, தன்னுடைய இந்த நிலைப்பாட்டினை அமைப்பு ரீதியாக செயல்படுகிறவர்கள் மக்களுக்குக் கொண்டு சேர்த்திட விண்ணப்பம் செய்தார். ஆனால் பெருமானாரின் குரலை இத்தகைய அமைப்புகள் அலட்சியம் செய்ததோடு மட்டுமல்லாது அவரை பலவாறாக அவதூறும் செய்தன. வள்ளல் பெருமானோடு இணக்கமாய் இருந்த சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்களும் ஒரு கட்டத்தில் அவரை கடுமையாக எதிர்க்க ஆரம்பித்தனர்.
இத்தகைய சூழலில் கடும் மன உளைச்சலுக்கு ஆளான வள்ளல் பெருமானார் மற்றவர்களை நம்பாது தானே களத்தில் இறங்கிச் செயல்பட தீர்மானித்து 1865 ல் ”சமரச வேத சன்மார்க்க சங்கம்” என்ற அமைப்பினை துவங்கினார். பின்னாளில் இது சமரச சன்மார்க்க சங்கம் என்பதாக பெயர் மாற்றம் கண்டது. அமைப்பு ரீதியாக வள்ளல் பெருமானார் செயல் பட ஆரம்பித்த பின்னரே 1867ல் அவரது நூல்கள் அருட்பா எனும் பெயரில் ஐந்து தொகுதிகளாக அச்சிடப் பட்டன.
இதன் பிறகே வள்ளல் பெருமானின் சமூக பங்களிப்புகள் வேகம் பெறத் துவங்கின 1865ல் துவங்கி அவரது மறைவு வரையிலான கால கட்டமே அவர் வாழ்வின் முக்கியமான பகுதியாக பார்க்கப் படுகிறது.
தூய்மையான அறிவுதான் தெய்வம். அது பேரன்பும், பெருங் கருனையும் கொண்டது. அது ஓர் உருவமில்லை. தூய சுடரைப் போல தெளிந்த பரிசுத்த நிலை. அந்த நிலையின் முன்னர் அனைவரும் சமம். இத்தகைய அன்பும், கருணையுமான இறை நிலையை நமக்குள் வளர்த்துக் கொள்வதன் மூலம் இறைவனை அடையலாம் என்பதாக அவரின் தெளிவுகள் இருந்தன.
தான் தெளிந்த ஆன்மிக நிலையை அடையத் தடையாக இருக்கும், சாஸ்திரங்கள், சம்பிரதாயங்கள், அவற்றைத் தாங்கிப் பிடித்த மூடநம்பிக்கைகளை முற்றாக நிராகரிக்கக் கூறினார். சாதியின் பெயரால் ஏற்றத் தாழ்வு சொல்லி மக்களை பிரித்து அவர்களை பாகுபடுத்துவதையும் கடுமையாக எதிர்த்தார். மேலும் இவற்றிற்கெல்லாம் ஆதாரமாகவும், அதிகாரமாகவும் செயல்படும் மதத்தையும் நிராகரித்தார்.
வள்ளல் பெருமானின் இத்தகைய நிராகரிப்புகளே பழமை வாதிகளுக்கு எரிச்சலையும், ஆத்திரத்தையும் கிளப்பின. அவரது இத்தகைய நிலைப்பாட்டினை பின் வரும் சில பாக்களின் மூலம் அறியலாம்.
"சாதி சமயச் சழக்கைவிட் டேன்அருட்
சோதியைக் கண்டேன டி - அக்கச்சி
சோதியைக் கண்டேன டி."
(அருட்காட்சி - ஆறாம் திருமுறை)
"சாதியும் மதமும் சமயமும் பொய்என
ஆதியில் உணர்த்திய அருட்பெருஞ்சோதி”
(அருட்பெருஞ்சோதி அகவல் - ஆறாம் திருமுறை)
"ஒத்தாரும் உயர்ந்தாரும் தாழ்ந்தாரும் எவரும்
ஒருமை உளர் ஆகி உலகியல் நடத்தல் வேண்டும்"
(சுத்த சன்மார்க்க வேண்டுகோள் - ஆறாம் திருமுறை)
இது போன்ற கருத்துக்கள் யாவும் அவர் பின்னாளில் அருளிய ஆறாம் திருமுறை தொகுப்பில் காணக் கிடைக்கின்றன.
தன்னுடைய இந்த கருத்துக்களை அவர் ஊர் ஊராய்ப் போய் சொற்பொழிவுகளின் மூலம் பரப்பிக் கொண்டிருந்தார். தனியொரு மனிதனால் இதை சாதித்து விட முடியாது என்பதை புரிந்து கொண்ட போது, தன்னுடைய இந்த நிலைப்பாட்டினை அமைப்பு ரீதியாக செயல்படுகிறவர்கள் மக்களுக்குக் கொண்டு சேர்த்திட விண்ணப்பம் செய்தார். ஆனால் பெருமானாரின் குரலை இத்தகைய அமைப்புகள் அலட்சியம் செய்ததோடு மட்டுமல்லாது அவரை பலவாறாக அவதூறும் செய்தன. வள்ளல் பெருமானோடு இணக்கமாய் இருந்த சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்களும் ஒரு கட்டத்தில் அவரை கடுமையாக எதிர்க்க ஆரம்பித்தனர்.
இத்தகைய சூழலில் கடும் மன உளைச்சலுக்கு ஆளான வள்ளல் பெருமானார் மற்றவர்களை நம்பாது தானே களத்தில் இறங்கிச் செயல்பட தீர்மானித்து 1865 ல் ”சமரச வேத சன்மார்க்க சங்கம்” என்ற அமைப்பினை துவங்கினார். பின்னாளில் இது சமரச சன்மார்க்க சங்கம் என்பதாக பெயர் மாற்றம் கண்டது. அமைப்பு ரீதியாக வள்ளல் பெருமானார் செயல் பட ஆரம்பித்த பின்னரே 1867ல் அவரது நூல்கள் அருட்பா எனும் பெயரில் ஐந்து தொகுதிகளாக அச்சிடப் பட்டன.
இதன் பிறகே வள்ளல் பெருமானின் சமூக பங்களிப்புகள் வேகம் பெறத் துவங்கின 1865ல் துவங்கி அவரது மறைவு வரையிலான கால கட்டமே அவர் வாழ்வின் முக்கியமான பகுதியாக பார்க்கப் படுகிறது.

Comments
Post a Comment