Skip to main content

வலிப்பு Epilepticseizures


நரம்பு மண்டலத்தில் இரு வகை உள்ளது.                                    
1. மூளையின் கட்டுப்பாட்டில் இயங்குபவை (Cerebro-spinal system of nerves); பேசுதல், நடத்தல், செயல் புரிதல்.
2. தாமாகவே இயங்குபவை (Autonomic system of nerves); இதயம் துடித்தல், நுரையீரல் விரிந்து சுருங்குதல், குடல்கள் இயக்கம்.

காக்கை வலிப்பு (epilepsy); பித்தம் சரீரமெங்கும் பாய்ந்து சித்தங் கலங்கிப் பிரதிக்ஞையற்று மயங்கி நாக்கை, உதட்டை, நாசியை, விழியை, புருவத்தை சேர்த்திழுத்து வலிப்புக்கண்டு அவயங்களுதறிக் கூலமலக்கிக் கீழே தள்ளும்.வாயில் வெண்ணுரை தள்ளும்.மேற்சுவாசம் வாங்கும்.

குதிரைவலிப்பின் குணம்;கண்ணும் புருவமும் கருத்திருக்கும்,கையும்காலும் ஒருபக்கந் திருத்தி வலிப்புக் காணும்,வாயில் வெண்ணுறை தள்ளும், விழி கண்ணைப் பார்த்து நிற்கும். அவயங்கள் தீப்போல் காந்தும்.உடல் படபடத்து நடுக்கும்.நெஞ்சில் கபம் கட்டும்.

குமரகண்டவலிப்பின் குணம்; கண்ணும் வாயும் கோணும்; காலும் கையும் ஒருபக்கம் விட்டுவிட்டு வலிப்பெடுக்கும்; சுரங் காயும்; தலை வலிக்கும்; எமக் கோட்டாலைப்போல வருத்தப்படுத்தும்; மூர்ச்சை காணும்.

முயல்கண்டவலிப்பின் குணம்;வாயால் மண்ணைக்கவ்வும்;நுரை தள்ளும்;விழிவிட்டுஞ் சேர்ந்து நட்டமாய் நிற்கும்; துள்ளதுள்ள வலிக்கும்; தோள், மார் வலிகூட்டி சுருக்குவிக்கும்; சோக்கம் துயரம் மிகும்.   

நரம்புதளர்ச்சி (nervous debility); தவறான உணவுப் பழக்கங்கள், வாழ்க்கைமுறை, இந்திரிய விரயம், நச்சுப்பொருட்களின் நரம்புமண்டல தாக்கல்.
  1. பேரண்டபற்பம் 100-200மிகி, 5-10மிலி இஞ்சிசாறு, தேன் அல்லது கழுதைப்பாலில் கலந்து தினம் 2 வேளை சாப்பிட வலிப்பு குணமாகும்.                                              
  2. அண்டத்தைலம் 10 துளி தினம்2வேளை நாவில் தடவ வலிப்பு தீரும்.  
  3. பிரமி நெய் 5-10மிலி ,5-10மிலி பாலில் தினம்2வேளை பருகிவர வலிப்பு குணமாகும்
  4. கொய்யா தளிர் இலைச் சாறு பருகிவர காய்ச்சல், காக்கா வலிப்பு குணமாகும். 
  5. கைப்பிடி அருகம்புல் மிளகு25, இடித்து 4ல் 1ன்றாய்க் காய்ச்சி வடித்து, காலைமாலை 250மிலி பருகிவர வலிப்பு குணமாகும் 
  6. இனிப்பு மாம்பழச்சாறு, தேன் சமன் கலந்து சாப்பிட்டுவர நரம்புத்தளர்ச்சி நீங்கும்.
  7. அவுரி, வசம்பு, உள்ளி சமனிடித்து நாசியில் நசியமிட வலிப்பு நோய்கள் மாறும்      
  8. வசம்பு, பெருங்காயம், திரிகடுகு, கடுக்காய்தோல், அதிவிடயம், கருப்பு உப்பு சமன் பொடி செய்துகாலை மாலை 1தேக்கரண்டி கொடுத்துவர காக்கை வலிப்பு தீரும்
  9. அமுக்கிராக் கிழங்கு 500கிராம்,மிளகு 25 கிராம்,சுக்கு 25கிராம்,அதிமதுரம் 25கிராம்,ஏல அரிசி 25கிராம், சாதிக்காய் 25கிராம், தேன் 1கிலோ இடித்து சலித்து நன்கு கலந்து, தேனை சட்டியில் ஊற்றி [ சிறிய தணலில் ] பொடிகளை சிறிது சிறிதாகக் கொட்டி நன்கு கிளறி, காலை, இரவு உணவிற்குப் பின் ஒரு தேகரண்டி உட்கொண்டு பால் அருந்த நரம்புத் தளர்ச்சி நீங்கும் 
பத்தியம் ;  குளிர்ந்த பானங்கள், மீன், கருவாடு போன்ற அசைவ உணவுகளை தவிர்க்கவும்.

Comments

Popular Posts

லக்னமும் தொழில் அமைப்பும்

என்ன லக்னம் எந்த தொழில் செய்யலாம் மேஷம் லக்னமும் தொழில் அமைப்பும் மேஷ லக்னத்தில் பிறந்தவர்களுக்கு ஜீவன ஸ்தானாதிபதி சனி பகவானாவார். பொதுவாக, தொழில் காரகன் என வர்ணிக்கப்படக்கூடிய சனி பகவான் இந்த லக்னத்திற்கு 10ம் அதிபதி என்பதால் அவர் சுக்கிரன், புதன், குரு போன்றகிரகங்களின் சேர்க்கை பெற்று பலமாக அமையப் பெற்றால்,சொந்தத் தொழில்  செய்து அதன் மூலம் சம்பாதிக்கக்கூடிய யோகம் உண்டாகும். மேஷ லக்னத்தில் பிறந்தவர்களுக்கு ஜீவனாதிபதி சனியே பாதகாதிபதியாகவும் இருப்பதால், வேலையாட்களிடமும் ஸ்பெகுலேஷன் சார்ந்த தொழில்  விஷயங்களிலும் முதலீடு செய்கின்ற போது முன்னெச்சரிக்கையுடன் இருந்து நிலையான விஷயங்களில் மட்டும் முதலீடு செய்தால், லாபங்களை அடைய முடியும். 10ம் அதிபதி சனி பலமாக அமையப் பெற்று சுபர் பார்வையுடனிருந்தால் இரும்பு, எந்திரங்கள், வண்டி,வாகனங்களில்  மூலம் அனுகூலங்கள், பழைய பொருட்களை விற்பனை செய்யும் தொழில், கடின உடல் உழைப்பு சார்ந்த தொழில்கள் போன்றவற்றை செய்ய நேரிடும். சனி சுக்கிரனுடன் புதனும் இருந்தால் ஒன்றுக்கும் மேற்பட்ட தொழில் யோகம், பலரை நிர்வாகம் செய்து சொந்த தொழில் செய்யக்கூடிய யோகம் உண்டாகும். அ

வர்மம் varmam

வர்மங்களின் வகைகள்..! வர்மக் கலையை அகத்தியர் நான்கு பெரும் பிரிவுகளாய் பிரித்திருக்கிறார். உடலில் உள்ள வர்ம புள்ளிகள் மற்றும், அவற்றை கையாளும் விதத்தினால் இவற்றை வேறு படுத்துகிறார். இவை “படு வர்மம்”, ”தொடு வர்மம்”, ”தட்டு வர்மம்”, ”நோக்கு வர்மம்” படுவர்மம் நான்கு வகை வர்மங்களில் மிகவும் ஆபாயகரமான பிரிவு இதுவேயாகும். உடலிலுள்ள வர்மப் பகுதிகளில் அடியோ அல்லது தாக்குதலோ ஏற்படுமானால் அப்போது ஏற்படும் வர்மமே "படுவர்மம்" என்கிறார். இந்த படுவர்ம தாக்குதலுக்கு உள்ளாகும் நபர்கள் உயிரிழக்கும் வாய்ப்புக்கள் அதிகம் உள்ளதால் இவை மிகவும் ஆபத்தானவை என்று அகத்தியர் குறிப்பிடுகிறார். ஒரு மனிதன் படுவர்மப் புள்ளிகளில் அடிபட்டால் உடனடியாக மயங்கி விழுவான் என்றும், அவன் வாய் பிளந்து நாக்கு வெளியே தள்ளும், வாயில் நுரையும் வெளியேறும் அத்துடன் அந்த அடிபட்ட இடங்களில் கைவைத்து பார்த்தால் அந்த இடம் மிகவும் குளிர்ச்சியாகக் காணப்படும் என்றும் குறிப்பிடுகிறார். எல்லோராலும் இதை செய்திட முடியாது என்றும், மிகுந்த பயிற்சி உள்ள ஒருவரால் மட்டுமே இத்தகைய செயல்களை செய்திட முடியும் என்றும் கூறுகிறார். தொடு

அருள்வெளி சித்தர் 108 போற்றி

பரம்பொருள் அருட்பெரும் ஜோதி ஓம் ஸ்ரீ அருள்வெளி சித்தர் பரம்பொருள் அருட்பெரும் ஜோதி ஓம் ஸ்ரீ அருள்வெளி சித்தர் ஓம் ஸ்ரீ அருள்வெளி சித்தர் 108 போற்றி 1. அன்பே உருவான அருள்வேளிக் சித்தனே போற்றி ! 2. அகர முதலாய் அமர்ந்தாய் போற்றி ! 3. அறிவிற் கறிவான ஆதுவிதனே போற்றி ! 4. அறத்தின் வடிவே ஐயனே போற்றி ! 5. அடிமை எமைக் காக்கும் அத்தா போற்றி ! 6. அனாதிப் பரம்பொருள் ஆயினே போற்றி ! 7. அமரர் வணங்கும் அரியே போற்றி ! 8. அண்டினோர்க் காதரவு அளிப்பாய் போற்றி ! 9. அன்பே சிவமேன் றறிந்தாய் போற்றி ! 10. அன்பே சிவமாய் அமர்ந்தாய் போற்றி ! 11. அடக்கம் ஆன  சிவமே போற்றி ! 12. ஆனந்த வடிவச் சித்தனே போற்றி ! 13. ஆகாயம் எல்லாம் அளந்தாய் போற்றி ! 14. ஆதியே போற்றி சோதியே போற்றி ! 15. ஆலத்தை அமுதாய் ஆக்குவை போற்றி ! 16. ஆருரிச் சிவமே அழகா போற்றி ! 17. ஆசை வித்த அரனே போற்றி ! 18. ஆணவ மாயை அழித்தாய் போற்றி ! 19. ஆவியில் உறையும் ஐயா போற்றி ! 20. ஆத்தும தத்துவம் அறிவிப்பாய் போற்றி ! 21. ஆலமர் செல்வ அரசே போற்றி ! 22. இகர மாகி எழுந்தாய் போற்றி ! 23. இறைவி இறைவன் வடிவே போற்றி ! 24. இகபர சுகங்கள் தருவாய் போற்

அளவை முறைகள்

சித்தர்களின் பாடல்களில் குறிப்பிட்டிருக்கும் அளவை முறைகள் குறித்து பலருக்கும் சந்தேகம் இருக்கிறது. சித்தர்களின் பாடல்களில் குறிப்பிட்டிருக்கும் அளவை முறைகளுக்கு ஈடான தற்போதைய அளவைகளை குறித்த சந்தேகங்களுடன் தொடர்ந்து நிறைய மின்னஞ்சல்கள் வந்து கொண்டிருக்கிறது. எனவே அனைவரின் சந்தேகங்களை விளக்கும் பொருட்டும், மற்றவர்கள் அறிந்து கொள்ளவும் இந்த பதிவினை உங்கள் பார்வைக்கு வைக்கிறேன். முகத்தல் அளவைகள் ஒரு ஆழாக்கு = நூற்றி அறுபத்தியெட்டு மில்லி லிட்டர். ஒரு உழக்கு = முன்னூற்று முப்பத்தி ஆறு மில்லி லிட்டர். ஒரு கலம் = அறுபத்து நாலரை லிட்டர். ஒரு தூணி = இருபத்தி ஒன்றரை லிட்டர். ஒரு நெய்க் கரண்டி = தேக்கரண்டி அளவு. ஒரு எண்ணெய்க் கரண்டி = இரு நூற்றி நாற்பது மில்லி லிட்டர். ஒரு பாலாடை = முப்பது மில்லி லிட்டர். ஒரு குப்பி = எழுநூறுமில்லி லிட்டர். ஒரு அவுன்ஸ் = முப்பத்தியொரு கிராம். முன்னூற்று அறுபது நெல் = ஒரு சோடு. ஐந்து சோடு = ஒரு அழாக்கு. இரண்டு ஆழாக்கு = ஒரு உழக்கு. இரண்டு உழக்கு = ஒரு உரி. இரண்டு உரி = ஒரு நாழி. எட்டு நாழி = ஒரு குறுணி. இரண்டு குறுணி = ஒரு பதக்கு. இரண்டு

பிண்ணாக்கீசர்

"கோவணமும் இரவல் கொண்ட தூலம் இரவல் தேவமாதா இரவல் - ஞானம்மா தெரியா அலைவாரே.!" "இட்டர்க்கு உபதேசம் எந்நாளும் சொல்லிடலாம் துட்டர்க்கு உபதேசம் - ஞானம்மா சொன்னால் வருமோசம்.!" - பிண்ணாக்கீசர் - இவருக்கு இரட்டை நாக்கு, அதாவது பிளவு பட்ட நாக்கை உடையவர் இதனால் பிண்ணாக்கர் என அழைக்கப்பட்டார். இடைச்சி வயிற்றில் பிறந்த இவர் சிறந்த தமிழ்ப் புலமை பெற்றவர் என்றும், கர்நாடகத்தில் இருந்தவர் என்றும் போகர் சொல்கிறார். பாம்பாட்டிச் சித்தருக்கு சீடராக இருந்த இவாருக்கு மச்ச முனி சீடராக இருந்ததாக சொல்லப் படுகிறது. இவரது பாடல்களில் ஞானம்மா என விளித்துப் பாடிய பாடல்கள் தான் அதிகம். இவர், பிண்ணாக்கர் மெய்ஞானம் பிண்ணாக்கர் ஞானப்பால் பிண்ணாக்கர் முப்பூச் சுண்ணச் செயநீர் ஆகிய நூல்களை எழுதியதாகச் சொல்லப்படுகின்றது. இவர் கேரளத்திலுள்ள நங்குனாசேரி என்னுமிடத்தில் சமாதியடைந்ததாக சொல்லப் படுகிறது.