Skip to main content

வலிப்பு Epilepticseizures


நரம்பு மண்டலத்தில் இரு வகை உள்ளது.                                    
1. மூளையின் கட்டுப்பாட்டில் இயங்குபவை (Cerebro-spinal system of nerves); பேசுதல், நடத்தல், செயல் புரிதல்.
2. தாமாகவே இயங்குபவை (Autonomic system of nerves); இதயம் துடித்தல், நுரையீரல் விரிந்து சுருங்குதல், குடல்கள் இயக்கம்.

காக்கை வலிப்பு (epilepsy); பித்தம் சரீரமெங்கும் பாய்ந்து சித்தங் கலங்கிப் பிரதிக்ஞையற்று மயங்கி நாக்கை, உதட்டை, நாசியை, விழியை, புருவத்தை சேர்த்திழுத்து வலிப்புக்கண்டு அவயங்களுதறிக் கூலமலக்கிக் கீழே தள்ளும்.வாயில் வெண்ணுரை தள்ளும்.மேற்சுவாசம் வாங்கும்.

குதிரைவலிப்பின் குணம்;கண்ணும் புருவமும் கருத்திருக்கும்,கையும்காலும் ஒருபக்கந் திருத்தி வலிப்புக் காணும்,வாயில் வெண்ணுறை தள்ளும், விழி கண்ணைப் பார்த்து நிற்கும். அவயங்கள் தீப்போல் காந்தும்.உடல் படபடத்து நடுக்கும்.நெஞ்சில் கபம் கட்டும்.

குமரகண்டவலிப்பின் குணம்; கண்ணும் வாயும் கோணும்; காலும் கையும் ஒருபக்கம் விட்டுவிட்டு வலிப்பெடுக்கும்; சுரங் காயும்; தலை வலிக்கும்; எமக் கோட்டாலைப்போல வருத்தப்படுத்தும்; மூர்ச்சை காணும்.

முயல்கண்டவலிப்பின் குணம்;வாயால் மண்ணைக்கவ்வும்;நுரை தள்ளும்;விழிவிட்டுஞ் சேர்ந்து நட்டமாய் நிற்கும்; துள்ளதுள்ள வலிக்கும்; தோள், மார் வலிகூட்டி சுருக்குவிக்கும்; சோக்கம் துயரம் மிகும்.   

நரம்புதளர்ச்சி (nervous debility); தவறான உணவுப் பழக்கங்கள், வாழ்க்கைமுறை, இந்திரிய விரயம், நச்சுப்பொருட்களின் நரம்புமண்டல தாக்கல்.
  1. பேரண்டபற்பம் 100-200மிகி, 5-10மிலி இஞ்சிசாறு, தேன் அல்லது கழுதைப்பாலில் கலந்து தினம் 2 வேளை சாப்பிட வலிப்பு குணமாகும்.                                              
  2. அண்டத்தைலம் 10 துளி தினம்2வேளை நாவில் தடவ வலிப்பு தீரும்.  
  3. பிரமி நெய் 5-10மிலி ,5-10மிலி பாலில் தினம்2வேளை பருகிவர வலிப்பு குணமாகும்
  4. கொய்யா தளிர் இலைச் சாறு பருகிவர காய்ச்சல், காக்கா வலிப்பு குணமாகும். 
  5. கைப்பிடி அருகம்புல் மிளகு25, இடித்து 4ல் 1ன்றாய்க் காய்ச்சி வடித்து, காலைமாலை 250மிலி பருகிவர வலிப்பு குணமாகும் 
  6. இனிப்பு மாம்பழச்சாறு, தேன் சமன் கலந்து சாப்பிட்டுவர நரம்புத்தளர்ச்சி நீங்கும்.
  7. அவுரி, வசம்பு, உள்ளி சமனிடித்து நாசியில் நசியமிட வலிப்பு நோய்கள் மாறும்      
  8. வசம்பு, பெருங்காயம், திரிகடுகு, கடுக்காய்தோல், அதிவிடயம், கருப்பு உப்பு சமன் பொடி செய்துகாலை மாலை 1தேக்கரண்டி கொடுத்துவர காக்கை வலிப்பு தீரும்
  9. அமுக்கிராக் கிழங்கு 500கிராம்,மிளகு 25 கிராம்,சுக்கு 25கிராம்,அதிமதுரம் 25கிராம்,ஏல அரிசி 25கிராம், சாதிக்காய் 25கிராம், தேன் 1கிலோ இடித்து சலித்து நன்கு கலந்து, தேனை சட்டியில் ஊற்றி [ சிறிய தணலில் ] பொடிகளை சிறிது சிறிதாகக் கொட்டி நன்கு கிளறி, காலை, இரவு உணவிற்குப் பின் ஒரு தேகரண்டி உட்கொண்டு பால் அருந்த நரம்புத் தளர்ச்சி நீங்கும் 
பத்தியம் ;  குளிர்ந்த பானங்கள், மீன், கருவாடு போன்ற அசைவ உணவுகளை தவிர்க்கவும்.

Comments

Popular Posts

அருள்வெளி சித்தர் 108 போற்றி

பரம்பொருள் அருட்பெரும் ஜோதி ஓம் ஸ்ரீ அருள்வெளி சித்தர் பரம்பொருள் அருட்பெரும் ஜோதி ஓம் ஸ்ரீ அருள்வெளி சித்தர் ஓம் ஸ்ரீ அருள்வெளி சித்தர் 108 போற்றி 1. அன்பே உருவான அருள்வேளிக் சித்தனே போற்றி ! 2. அகர முதலாய் அமர்ந்தாய் போற்றி ! 3. அறிவிற் கறிவான ஆதுவிதனே போற்றி ! 4. அறத்தின் வடிவே ஐயனே போற்றி ! 5. அடிமை எமைக் காக்கும் அத்தா போற்றி ! 6. அனாதிப் பரம்பொருள் ஆயினே போற்றி ! 7. அமரர் வணங்கும் அரியே போற்றி ! 8. அண்டினோர்க் காதரவு அளிப்பாய் போற்றி ! 9. அன்பே சிவமேன் றறிந்தாய் போற்றி ! 10. அன்பே சிவமாய் அமர்ந்தாய் போற்றி ! 11. அடக்கம் ஆன  சிவமே போற்றி ! 12. ஆனந்த வடிவச் சித்தனே போற்றி ! 13. ஆகாயம் எல்லாம் அளந்தாய் போற்றி ! 14. ஆதியே போற்றி சோதியே போற்றி ! 15. ஆலத்தை அமுதாய் ஆக்குவை போற்றி ! 16. ஆருரிச் சிவமே அழகா போற்றி ! 17. ஆசை வித்த அரனே போற்றி ! 18. ஆணவ மாயை அழித்தாய் போற்றி ! 19. ஆவியில் உறையும் ஐயா போற்றி ! 20. ஆத்தும தத்துவம் அறிவிப்பாய் போற்றி ! 21. ஆலமர் செல்வ அரசே போற்றி ! 22. இகர மாகி எழுந்தாய் போற்றி ! 23. இறைவி இறைவன் வடிவே போற்றி ! 24. இகபர சுகங்கள் தருவாய் ...

மருந்துகளின்றி ஆரோக்யமாக வாழ

நமது வாழ்க்கை முறையை சரிசெய்வது மூலமாக மட்டுமே ஆரோக்யமாக வாழ்வது சாத்தியமாகும். நம்மிடம் உள்ள ஆரோக்கியத்தை மருத்துவமனையில் தேடினால் கிடைக்காதல்லவா? இதை மக்களுக்கு புரியவைத்து ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்குவதே எனது நோக்கம்.  நம் உடலானது நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் போன்ற பஞ்ச பூதங்களால் தான் இயங்குகின்றது. அவற்றிலுள்ள பிரச்சினைகளை களைந்தாலே நாம் வாழ்நாள் முழுவதும் நோயின்றி ஆரோக்யமாக வாழலாம். உணவு நிலம்  இரைப்பை, மண்ணீரல், கணையம் ஆகிய உறுப்புக்கள் ஒழுங்காக இயங்க கீழே கொடுக்கபட்டுள்ளவற்றை பின்பற்றவும் 1. பசி: பசிக்கும்போது நமக்கு பிடித்த உணவை நிதானமாக உண்ணும்போது நம் உடல் அவற்றை சத்துக்களாக மாற்றிவிடும். உதட்டை பிரிக்காமல் உணவை நன்கு மென்று கூழ் போல் அரைத்துப் பின் விழுங்க வேண்டும். ஏனென்றால் காற்றும் நம் ஜீரணத்திற்கு எதிரி. அப்படி உண்டால் நம் உடலின் அனைத்து உறுப்புக்களும் நன்றாக இயங்கும் அதனால் ஆரோக்கியம் பேணப்படும். பசி இல்லாதபோதோ நமக்கு பிடிக்காத உணவை உண்ணும்போதோ மற்றும் உணவு உண்டவுடன் அதிக நீரை குடிக்கும்போதோ அவை கழிவுகளாக மாறி நமக்கு தொப்பை, வாயு தொந்தரவு, அல்சர், அ...

வர்மம் varmam

வர்மங்களின் வகைகள்..! வர்மக் கலையை அகத்தியர் நான்கு பெரும் பிரிவுகளாய் பிரித்திருக்கிறார். உடலில் உள்ள வர்ம புள்ளிகள் மற்றும், அவற்றை கையாளும் விதத்தினால் இவற்றை வேறு படுத்துகிறார். இவை “படு வர்மம்”, ”தொடு வர்மம்”, ”தட்டு வர்மம்”, ”நோக்கு வர்மம்” படுவர்மம் நான்கு வகை வர்மங்களில் மிகவும் ஆபாயகரமான பிரிவு இதுவேயாகும். உடலிலுள்ள வர்மப் பகுதிகளில் அடியோ அல்லது தாக்குதலோ ஏற்படுமானால் அப்போது ஏற்படும் வர்மமே "படுவர்மம்" என்கிறார். இந்த படுவர்ம தாக்குதலுக்கு உள்ளாகும் நபர்கள் உயிரிழக்கும் வாய்ப்புக்கள் அதிகம் உள்ளதால் இவை மிகவும் ஆபத்தானவை என்று அகத்தியர் குறிப்பிடுகிறார். ஒரு மனிதன் படுவர்மப் புள்ளிகளில் அடிபட்டால் உடனடியாக மயங்கி விழுவான் என்றும், அவன் வாய் பிளந்து நாக்கு வெளியே தள்ளும், வாயில் நுரையும் வெளியேறும் அத்துடன் அந்த அடிபட்ட இடங்களில் கைவைத்து பார்த்தால் அந்த இடம் மிகவும் குளிர்ச்சியாகக் காணப்படும் என்றும் குறிப்பிடுகிறார். எல்லோராலும் இதை செய்திட முடியாது என்றும், மிகுந்த பயிற்சி உள்ள ஒருவரால் மட்டுமே இத்தகைய செயல்களை செய்திட முடியும் என்றும் கூறுகிறார். தொடு...

இயற்பியல் பிரபஞ்சமும் தூய ஆற்றல் குண்டலினி

இயற்பியல், பிரபஞ்சமும்  தூய ஆற்றல், உலகளாவிய வெப்பநிலை மாறுபாடுகள், நீராவியின் மாறுபாடுகள், அதிர்வுகளின் அவதானிப்புகள், நமது சித்தாந்த தியான நிலை குண்டலினி ஆற்றல் தொடர்பும்.  ஒரு மின்காந்த புலம் என்பது காந்த மற்றும் மின்சார ஆற்றலால் நிரப்பப்பட்ட இடத்தின் ஒரு பகுதி. மின்காந்த புலங்கள் எல்லா இடங்களிலும் உள்ளன. எக்ஸ்-கதிர்கள் மற்றும் காமா கதிர்கள் போன்ற உயர் அதிர்வெண் மின்காந்த கதிர்வீச்சு “ அயனியாக்கம் ” மற்றும் மக்களுக்கு தீங்கு விளைவிக்கும், அதே நேரத்தில் குறைந்த அதிர்வெண் கொண்ட மின்காந்த கதிர்வீச்சு அல்லது “ அல்லாத அயனியாக்கம்,” மனிதர்களுக்கு பாதுகாப்பானதாகக் கருதப்படுகிறது, அல்லது சில மனித நோய்களுக்கு கூட ஒரு தீர்வாக கருதப்படுகிறது. பூமியைச் சுற்றியுள்ள மின்காந்த புலம் நம் உடலை அடைந்து அதன் உள்ளே இருக்கும் கட்டணங்களை பாதிக்கிறது. நம் உடல்கள் அதன் சொந்த மின்னியல் புலத்தைக் கொண்டுள்ளன. டி.என்.ஏவின் துகள்கள் கூட மின்காந்த புலங்களை உருவாக்க முடியும். அந்த அலைகள் நம் உடலின் உள் கடிகாரத்தை பிரதானமாக்குகின்றன மற்றும் தூக்க முறைகள் மற்றும் ஹார்மோன் சுரப்பை பாதிக்கின்றன. ஆல்பா மூளை அ...

பாவங்களுக்கான வியாதிகள்

பாவங்களுக்கான வியாதிகள் - கருட புராணம் !!! 1    யார் மற்றவர்களை ஏளனம் செய்பவர்கள். சத்தியத்தை தவறவிட்டவர்கள், எதற்காவது காக்க வைத்தவர்.    மன அழுத்த நோயால் துன்புறுவர், மன நோயாளியாக இருப்பார் 2   எலி பொந்துக்களை, பாம்பு பொந்துக்களை அடைப்பவர், மீன்களை பிடிப்பவர்களுக்கு    நுரையீரல் மற்றும் சுவாச கோளாரினால் பாதிக்கப்படுவார். 3    விஷம் கலந்து யாரையும் கொலை செய்தால்    தேள் கடி மற்றும் பாம்பு கடியால் துன்பப்படுவார் 4    கருமியாகவும், அதிக வட்டி வசூலிப்பவர், பிறரது பொருளை அபகரிப்பவர்களுக்கு    சுயரோகத்தால் துன்பப்படுவார் 5    விபச்சாரத்தில் ஈடுபடுபவர்கள், சிறுமிகளை பலாத்காரம் செய்பவர் தொழு நோயால் துன்பப்படுவார் 6    தனது உடம்பைக் காட்டி பயமுறுத்துபவர், வீண் சண்டைக்கு இழுப்பவர்    கால், கை வலிப்பு, இழுப்பு நோயால் துன்பப்படுவார் 7    பெண்ணை கெட்ட எண்ணத்துடன் பார்ப்பவர், மற்றவர் பொருள்களையும் பார்த்து பொறாமைப்படுபவர்    நிரந்தர கண் நோயுடன் அவதிப்படுவார் 8  ...