Skip to main content

வலிப்பு Epilepticseizures


நரம்பு மண்டலத்தில் இரு வகை உள்ளது.                                    
1. மூளையின் கட்டுப்பாட்டில் இயங்குபவை (Cerebro-spinal system of nerves); பேசுதல், நடத்தல், செயல் புரிதல்.
2. தாமாகவே இயங்குபவை (Autonomic system of nerves); இதயம் துடித்தல், நுரையீரல் விரிந்து சுருங்குதல், குடல்கள் இயக்கம்.

காக்கை வலிப்பு (epilepsy); பித்தம் சரீரமெங்கும் பாய்ந்து சித்தங் கலங்கிப் பிரதிக்ஞையற்று மயங்கி நாக்கை, உதட்டை, நாசியை, விழியை, புருவத்தை சேர்த்திழுத்து வலிப்புக்கண்டு அவயங்களுதறிக் கூலமலக்கிக் கீழே தள்ளும்.வாயில் வெண்ணுரை தள்ளும்.மேற்சுவாசம் வாங்கும்.

குதிரைவலிப்பின் குணம்;கண்ணும் புருவமும் கருத்திருக்கும்,கையும்காலும் ஒருபக்கந் திருத்தி வலிப்புக் காணும்,வாயில் வெண்ணுறை தள்ளும், விழி கண்ணைப் பார்த்து நிற்கும். அவயங்கள் தீப்போல் காந்தும்.உடல் படபடத்து நடுக்கும்.நெஞ்சில் கபம் கட்டும்.

குமரகண்டவலிப்பின் குணம்; கண்ணும் வாயும் கோணும்; காலும் கையும் ஒருபக்கம் விட்டுவிட்டு வலிப்பெடுக்கும்; சுரங் காயும்; தலை வலிக்கும்; எமக் கோட்டாலைப்போல வருத்தப்படுத்தும்; மூர்ச்சை காணும்.

முயல்கண்டவலிப்பின் குணம்;வாயால் மண்ணைக்கவ்வும்;நுரை தள்ளும்;விழிவிட்டுஞ் சேர்ந்து நட்டமாய் நிற்கும்; துள்ளதுள்ள வலிக்கும்; தோள், மார் வலிகூட்டி சுருக்குவிக்கும்; சோக்கம் துயரம் மிகும்.   

நரம்புதளர்ச்சி (nervous debility); தவறான உணவுப் பழக்கங்கள், வாழ்க்கைமுறை, இந்திரிய விரயம், நச்சுப்பொருட்களின் நரம்புமண்டல தாக்கல்.
  1. பேரண்டபற்பம் 100-200மிகி, 5-10மிலி இஞ்சிசாறு, தேன் அல்லது கழுதைப்பாலில் கலந்து தினம் 2 வேளை சாப்பிட வலிப்பு குணமாகும்.                                              
  2. அண்டத்தைலம் 10 துளி தினம்2வேளை நாவில் தடவ வலிப்பு தீரும்.  
  3. பிரமி நெய் 5-10மிலி ,5-10மிலி பாலில் தினம்2வேளை பருகிவர வலிப்பு குணமாகும்
  4. கொய்யா தளிர் இலைச் சாறு பருகிவர காய்ச்சல், காக்கா வலிப்பு குணமாகும். 
  5. கைப்பிடி அருகம்புல் மிளகு25, இடித்து 4ல் 1ன்றாய்க் காய்ச்சி வடித்து, காலைமாலை 250மிலி பருகிவர வலிப்பு குணமாகும் 
  6. இனிப்பு மாம்பழச்சாறு, தேன் சமன் கலந்து சாப்பிட்டுவர நரம்புத்தளர்ச்சி நீங்கும்.
  7. அவுரி, வசம்பு, உள்ளி சமனிடித்து நாசியில் நசியமிட வலிப்பு நோய்கள் மாறும்      
  8. வசம்பு, பெருங்காயம், திரிகடுகு, கடுக்காய்தோல், அதிவிடயம், கருப்பு உப்பு சமன் பொடி செய்துகாலை மாலை 1தேக்கரண்டி கொடுத்துவர காக்கை வலிப்பு தீரும்
  9. அமுக்கிராக் கிழங்கு 500கிராம்,மிளகு 25 கிராம்,சுக்கு 25கிராம்,அதிமதுரம் 25கிராம்,ஏல அரிசி 25கிராம், சாதிக்காய் 25கிராம், தேன் 1கிலோ இடித்து சலித்து நன்கு கலந்து, தேனை சட்டியில் ஊற்றி [ சிறிய தணலில் ] பொடிகளை சிறிது சிறிதாகக் கொட்டி நன்கு கிளறி, காலை, இரவு உணவிற்குப் பின் ஒரு தேகரண்டி உட்கொண்டு பால் அருந்த நரம்புத் தளர்ச்சி நீங்கும் 
பத்தியம் ;  குளிர்ந்த பானங்கள், மீன், கருவாடு போன்ற அசைவ உணவுகளை தவிர்க்கவும்.

Comments

Popular Posts

அருள்வெளி சித்தர் 108 போற்றி

பரம்பொருள் அருட்பெரும் ஜோதி ஓம் ஸ்ரீ அருள்வெளி சித்தர் பரம்பொருள் அருட்பெரும் ஜோதி ஓம் ஸ்ரீ அருள்வெளி சித்தர் ஓம் ஸ்ரீ அருள்வெளி சித்தர் 108 போற்றி 1. அன்பே உருவான அருள்வேளிக் சித்தனே போற்றி ! 2. அகர முதலாய் அமர்ந்தாய் போற்றி ! 3. அறிவிற் கறிவான ஆதுவிதனே போற்றி ! 4. அறத்தின் வடிவே ஐயனே போற்றி ! 5. அடிமை எமைக் காக்கும் அத்தா போற்றி ! 6. அனாதிப் பரம்பொருள் ஆயினே போற்றி ! 7. அமரர் வணங்கும் அரியே போற்றி ! 8. அண்டினோர்க் காதரவு அளிப்பாய் போற்றி ! 9. அன்பே சிவமேன் றறிந்தாய் போற்றி ! 10. அன்பே சிவமாய் அமர்ந்தாய் போற்றி ! 11. அடக்கம் ஆன  சிவமே போற்றி ! 12. ஆனந்த வடிவச் சித்தனே போற்றி ! 13. ஆகாயம் எல்லாம் அளந்தாய் போற்றி ! 14. ஆதியே போற்றி சோதியே போற்றி ! 15. ஆலத்தை அமுதாய் ஆக்குவை போற்றி ! 16. ஆருரிச் சிவமே அழகா போற்றி ! 17. ஆசை வித்த அரனே போற்றி ! 18. ஆணவ மாயை அழித்தாய் போற்றி ! 19. ஆவியில் உறையும் ஐயா போற்றி ! 20. ஆத்தும தத்துவம் அறிவிப்பாய் போற்றி ! 21. ஆலமர் செல்வ அரசே போற்றி ! 22. இகர மாகி எழுந்தாய் போற்றி ! 23. இறைவி இறைவன் வடிவே போற்றி ! 24. இகபர சுகங்கள் தருவாய் ...

அத்தி

1. மூலிகையின் பெயர் :- அத்தி. 2. வேறு பெயர் :- அதவம் மரம் 3. தாவரப்பெயர் :- FICUS GLOMERATA, FICUS AURICULATE. 4. தாவரக்குடும்பம் :- MORACEAE. 5. பயன்தரும் பாகங்கள் :- இலை, பிஞ்சு, காய், பழம், பால், பட்டை ஆகியன. 6. வளரியல்பு :- அத்தி களிமண் நிலம் மற்றும் ஆற்றுப்படுகைகளில் நன்கு வளரும். மாற்றடுக்கில் அமைந்த முழுமையான இலைகளை உடைய பெரு  (FICUS GLOMERATA , ROXB ; MORACEAE ) மர வகையைச் சேர்ந்தது.நாட்டு அத்தி (COUNTRY FIG), வெள்ளை அத்தி (GULAR FIG), நல்ல அத்தி (FICUS GLOMERATA CLUSTER FIG) என பல வகை அத்தி மரங்கள் உண்டு. அத்தி அளவான உயரமுடைய நடுத்தர மரமாகும். இம்மரம் சுமார் 10 மீட்டர் வரை உயரமாக வளர்கிறது. மரத்தின் பட்டை சாம்பல் மற்றும் சிவப்பு நிறத்தில் காணப்படுகிறது. அத்தி இலைகளில் மூன்று நரம்புகள் இருக்கும். காய்கள் சற்று நீளமான முட்டை வடிவில் தண்டிலும், கிளைகளிலும் அடிமரத்திலும் கொத்துக் கொத்தாகத் தோன்றும். பெரிய நெல்லிக்காய் அளவில் உருண்டையாக சிறிது பச்சை நிறத்துடன் இருக்கும். காய் பழுத்த பின்பு கொய்யாப்பழத்தைப் போல் வெளிறிய மஞ்சள் நிறமாக மாறிவிடும். பழங்கள் தானே கீழே உத...

வர்மம் varmam

வர்மங்களின் வகைகள்..! வர்மக் கலையை அகத்தியர் நான்கு பெரும் பிரிவுகளாய் பிரித்திருக்கிறார். உடலில் உள்ள வர்ம புள்ளிகள் மற்றும், அவற்றை கையாளும் விதத்தினால் இவற்றை வேறு படுத்துகிறார். இவை “படு வர்மம்”, ”தொடு வர்மம்”, ”தட்டு வர்மம்”, ”நோக்கு வர்மம்” படுவர்மம் நான்கு வகை வர்மங்களில் மிகவும் ஆபாயகரமான பிரிவு இதுவேயாகும். உடலிலுள்ள வர்மப் பகுதிகளில் அடியோ அல்லது தாக்குதலோ ஏற்படுமானால் அப்போது ஏற்படும் வர்மமே "படுவர்மம்" என்கிறார். இந்த படுவர்ம தாக்குதலுக்கு உள்ளாகும் நபர்கள் உயிரிழக்கும் வாய்ப்புக்கள் அதிகம் உள்ளதால் இவை மிகவும் ஆபத்தானவை என்று அகத்தியர் குறிப்பிடுகிறார். ஒரு மனிதன் படுவர்மப் புள்ளிகளில் அடிபட்டால் உடனடியாக மயங்கி விழுவான் என்றும், அவன் வாய் பிளந்து நாக்கு வெளியே தள்ளும், வாயில் நுரையும் வெளியேறும் அத்துடன் அந்த அடிபட்ட இடங்களில் கைவைத்து பார்த்தால் அந்த இடம் மிகவும் குளிர்ச்சியாகக் காணப்படும் என்றும் குறிப்பிடுகிறார். எல்லோராலும் இதை செய்திட முடியாது என்றும், மிகுந்த பயிற்சி உள்ள ஒருவரால் மட்டுமே இத்தகைய செயல்களை செய்திட முடியும் என்றும் கூறுகிறார். தொடு...

குண்டலினி ஆற்றல் 3

குண்டலினியை எப்படி எல்லாம் எழுப்பலாம்! மூலாதாரத்தில் புதைந்திருக்கும் குண்டலினியை எழுப்பிட பல்வேறு உத்திகள் கூறப் பட்டிருக்கின்றன. பொதுவில் பிராணாயாமம் எனப்படும் மூச்சுப் பயிற்சி, ஆசனங்கள், முத்திரைகள் இவைகளால் குண்டலினியை எழுப்ப முடியுமாம். இராஜயோகிகள் சலனமற்ற தியானத்தினாலும், மனப் பயிற்சியினாலும் எழுப்புகின்றனர். சாமான்யர்கள் பக்தி அதாவது முழுமையான சரணாகதியின் மூலம் எழுப்புகின்றனர். ஞானிகளோ பிரித்து அறியும் மன உறுதியினால் எழுப்புகின்றனர். இதை விவேக வைராக்கியம் என்கின்றனர். தாந்திரிகர்கள் மந்திர சக்தியால் குண்டலினியை எழுப்புகின்றனர். இவற்றை எல்லாம் விட மிக எளிதான ஒரு முறையும் இருக்கிறது. அதாவது குருவினை பார்த்தல்(தரிசனம்),குருவினால் தொடப் படுதல், ஆசீர்வதித்தல் ஆகியவைகளால் சட்டென குண்டலினி எழும்பும். இத்தகைய தகுதி உடைய குருமார்கள் இப்போது மிகவும் குறைவு. மேலும் அத்தகையவர்கள் இதை எல்லோருக்கும் அருளுவதுமில்லை. ஆக, நம்மில் உறைந்திருக்கும் குண்டலினியை எழுப்பிட இத்தனை வகைகள் இருக்கிறது. எனினும் நமது உடல் மற்றும் மனப் பக்குவத்திற்கு ஏற்ற வகையை தெரிவு செய்ய குருவினால் மட்டுமே முடியும...

குண்டலினி ஆற்றல் 9 விசுத்தி

குண்டலினி - விசுத்தி. மூலாதாரத்திலிருந்து ஐந்தாவது சக்கரமான விசுத்தி பற்றி இன்று பார்ப்போம். இதைப் பற்றி அகத்தியர் பின் வருமாறு விளக்குகிறார். ஆச்சப்பா வனாகததி னொடுக்கஞ்சொன்னோம் அறையுகிறேன் விசுத்தியி னடவைக்கேளு மாச்சப்பா வதற்க்குமேல் பன்னிரெண்டங்குலம் பாச்சப்பா பதினாறு யிதழ்தா னாகும் பாலகனே அட்சரந்தான் வகாரமாகும் வதுநடுவில் சதாசிவனும் சாகினியுமாமே. - அகத்தியர். இந்த சக்தி ஆதார மையமானது நமது தொண்டையின் அடிப்பாகத்தில் சுழுமுனை நாடியில் அமைந்து இருப்பதாக குறிப்பிடுகின்றனர். நமது குரல்வளை, மூச்சுக் குழாய், தையராய்டு சுரப்பிகள், நுரையீரல், கைகள் போன்ற உறுப்புகளுடன் விசுத்தி சக்கரம் தொடர்புடையதாக குறிப்பிடப் படுகிறது. பஞ்சாட்சர எழுத்துக்களான "சிவயநம" என்னும் எழுத்துகளில் ஒன்றான "வ" என்னும் எழுத்தையும், அதன் தத்துவத்தையும் விசுத்தி சக்கரம் விளக்குவதாக அமைகின்றது. இச்சக்கரத்தின் அதிதேவன் சதாசிவன், அதி தேவதை சாகினி. பஞ்ச பூதங்களில் ஒன்றான ஆகாசம் இதன் மூலக்கூறு. இதன் மூல மந்திரம் “ஹம்” எனப்படுகிறது. இந்த சக்கரத்திலிருந்து தாமரை இதழ் போன்ற பதினாறு யோக நாடிகள் கிளம்புகின்றன....