Skip to main content

வயிற்றிரைச்சல் பொருமல் GAS TROUBLE ACIDITY


சிசுக்களை திடுக்கிட வைத்தல், உதைத்தல், ஜீவ ஜந்துக்களை காலால் மிதித்தும் கையால் முரித்தல், வறுமையுற்ற முதியோர்களுக்குக் காலினால் ஏவலிடுதல், இவற்றால் வாத சம்பந்த வியாதிகள் அணுகும்.
உயிர்ப் பிரானிகளைகளைக் கட்டியும் தூக்கி ஊஞ்சலாடவிட்டும், அறுத்தல், பசுவை அடித்தல், ஜீவராசிகளின் வயிற்றைக்கீரி குடல் வெளிவரக் காணல் இவற்றால் வாத நோய் 84ல் ஆநந்த வாய்வு என்னும் ரோகம் சம்பவிக்கும்.
குடல்வாதம்/ ஹெர்னியா ( herniyaa); குடல்வாயு அதிகரித்தால் குடல்பை பளுவாகி, குடலுக்குக் கீழுள்ள ஜவ்வில் இலேசான துவாரம் காணும். அதிநடை, மலபந்தம் ஏற்படில் குடல் கீழே இறங்கும். பீஜத்திற்குமேல் வலியும், வீக்கமும் காணும்.
அண்டவாயுக்குணம்; வாயு குடலில் தங்கி நரம்பு வழியாய் விரை ஒன்றிலிறங்கி பொருமி வலிக்கும்,அது மேல்நோக்கி உள் வாங்கும்,அதன் நரம்பு புடைத்துக் காணும்.
மந்தாக்கினிவாயு குணம்; பசி மிக உண்டாகி மந்திக்கும்,சிந்தையில் நினைத்த தெல்லாம் தின்ன விரும்பும், கொள்ள ஒட்டாது(சாப்பிட தங்காது), வயிற்றில் தங்காமல் வாந்தியாகும்; மலங் கருக்கும், கிறுகிறுக்கும், வயிறு வலிக்கும், மலத்தில் சிறு இரத்தமும், மிகுந்த சலமும் விழும், பலங்குறையும், நயனம், முகம் வெளுக்கும்.
வாயுப்பொருமலின்குணம்; வயுப் பொருமி அக்கினி மந்தித்து உண்ட அசனத்தை வாந்திக்கும், புளித்தேப்பமிடும், காற்றுப் பிரியும்.
குண்டலவாயுக்குணம்; வாயு மிகுத்துக் கூப்பிட்டோடித் திரிந்து வயிற்றில்வந்து கல் போல் திரளும்,மறுபடியும் சிதறி உடம்பெங்கும் பரந்து பின்வந்து அடங்கும், தீபனத்தை ஒடுக்கும்.
குடகரிவாயுக்குணம்: வாயு அதிகரித்து குடல் முதுகு நெஞ்சு விலா முதலான இடங்களில் ஓடிபுடைத்து பரண்டு அழன்று வலிக்கும்.உடல் அயரும்.மலங்கருகும்.
அனாகதவாயுக்குணம்:மென்மேல் உணபதனாலும்,நொந்தஅன்னம் ஊசற்கறி புசித்தலாலும் மலங்கட்டினால் வாயு அதிகரித்து வயிறுபொருமி பிராந்தியாகும்.
அக்கினி மந்தித்து சீரணமாகாமல் உண்டவண்ணமாய் பிரவர்த்திக்கும்புளித்தேப்பம் வாந்தி தாகங் காணும் வாயுலரும் காற்று பரிந்து கொண்டே இருக்கும்.
அத்தறாவாயுக்குணம்:வாயு அடிக்கடி உடலில் பரந்து ஓடிச்சிலநேரம் அடங்கியிருக்கும். நாள்தோறும் அதிகரித்து இப்படியே கேட்டையறுக்கச் செய்யும்.
துடிவாயுக்குணம்:குடலில் வாயுபுரண்டு வலித்துக் குமுறி இரையும்.விலா தீபோல் கலக்கும்.மந்திக்கும்.
  1. சீரகத்தை  பொன்வறுவலாய்  வறுத்து,பொடித்து  1தேகரண்டி  சாதத்துடன்  நெய் சேர்த்துப் பிசைந்து  சாப்பிட  பசியின்மை,வயிற்றுபொருமல், சுவையின்மை  தீரும்.
  2. திரிகடுகுசூரணம் அரைதேக்கரண்டி,தேனில் கலந்து தினம்3 வேளை கொள்ள வயிற்றுவலி, வயிற்றுப்பொருமல்  தீரும்.
  3. புதினா துவையல் செய்து சாதத்துடன்  பிசைந்து சாப்பிட்டுவர வயிற்று பொருமல், வயிற்றுவலி, செரியாமை  தீரும்.
  4. 1கிராம்  பொரித்த  பெருங்காயத்தை  சிறிது  பனைவெல்லத்துடன்  சேர்த்து  சாப்பிட்டு வர வயிற்று பொருமல், வயிற்றுவலி  குணமாகும்.
  5. உத்தாமணிஇலை  குடிநீருடன்,வசம்பு  சுட்ட  சாம்பல்  கலந்து  30மிலி  தினம்2 வேளை குழந்தைகட்கு  கொடுக்க  வயிற்றுபொருமல், மாந்தம், செரியாமை  தீரும்.
  6. கொத்தமல்லியைக்  குடிநீர்செய்து  சிறிது  பெருங்காயம்  சேர்த்துப் பருக  வயிற்றுபொருமல், வயிற்றுவலி  தீரும்.
  7. வெங்காயச்சாறு  5-10Oமிலி  தினம்  பருகிவர மயக்கம், வயிற்றுபொருமல், வயிற்றுவலி  தீரும்.
  8. ஒரு தேங்காய்பூ மத்தியில் 40கிராம் பூண்டை தோலுரித்து வைத்து பிட்டவித்து பூவை பால் பிழிந்து பூண்டையும்,40கிராம் முருங்கைபட்டையும் மையாயரைத்து சாறுபிழிந்து 3நாள் சாப்பிட்டு காற்றுப்புகாத அறையில் படுக்க அண்டவாயு குணமாகும்.
  9. திருகுகள்ளியை வாட்டி சாறு பிழிந்து சமன் ந.எண்ணை கலந்து தேக திடத்திற் கேற்ப 3நாள் கொடுத்து 6நாள் பத்தியமிருக்க அண்டவாயு தீரும்.
  10. மணித்தக்காளி இலையும், தைவேளை இலையும் வதக்கி ஒத்தனமிட்டுக் கட்ட அண்டவாயு தீரும்.
  11. கருஞ்சீரகம்,சீரகம்,இந்துப்பு,திரிகடுகு,கருவேப்பீர்க்கு வறுத்து பொடித்து அரை தேக்கரண்டி சாதத்தில் முதலில் போட்டு நெய்விட்டு பிசைந்து சாப்பிட மந்தாக்கினி வாயு  நீங்கும்.
  12. ஓமம், சுக்கு, கொடிவேலிவேர்  சமன் பொடித்து, சமஅளவு  கடுக்காய் பொடி கலந்து திரிகடி மோரில் கொள்ள அக்கினிமந்தம்  பொருமல்  தீரும்.
  13. மிளகை வறுத்துப் பொடித்து திரிகடி தேனில் கொள்ள அஜீரண வாயு நீங்கும்.
  14. சுக்கு, திப்பிலி, மிளகு, ஓமம், இந்துப்பு, சீரகம், காயம் சமன் பொடித்து திரிகடி சாதத்தில் நெய்விட்டு பிசைந்து சப்பிட அஜீரணவாயு தீரும்.
  15. சுக்கு, திப்பிலி, மிளகு, ஓமம், இந்துப்பு, சீரகம், காயம், கருஞ்சீரகம் சமன் பொடித்து திரிகடி சாதத்தில் நெய் அல்லது தேனில் சாப்பிட  சகல வாயுவும் தீரும்.
  16. மிளகு, வெந்தயம், தைவேளைவேர்  வறுத்து  பொடித்து  தேனில்  கொள்ள சகல வாயுவும் நீங்கும்.                                                                   
  17. வேப்பிலையை  புதுசட்டியில் போட்டெரித்து நீராக்கி திரிகடி தேனில் 8நாள் கொள்ள சகல குன்மம்,வாயு,வலி தீரும். புளிதள்ளவும்.
  18. மிளகாய், உப்பு, எள் சமன் வறுத்து பொடித்து திரிகடி பசுநெய்யில் கொள்ள சகல குன்மம் வாயுவலி தீரும்.
  19. சுக்கு, வெங்காரம், ஓமம், மிளகு வகைக்கு 2கிராம் வறுத்து பெருந்தும்பை கொழுந்து 1பிடி சேர்த்து எருமைமோரிலரைத்துச் சாப்பிட குன்மவலி நீங்கும்.
  20. சித்திரமூலம், திப்பிலி, ஓமம், மிளகு, சீரகம், பொன்முசுட்டைவேர், பெருங்காயம், சடாமஞ்சில், திப்பிலிவேர், இந்துப்பு சமன் பொடித்து திரிகடி கொள்ள குன்மம், அக்னிமந்தம் தீரும்.
  21. இஞ்சித்தேனூறல்  2துண்டுகள்  உணவிற்குமுன்  சாப்பிட்டுவர பசியின்மை, வயிற்றுப் பொருமல்  தீரும்.                                                                   
  22. சாதிக்காய், சுக்கு  வகைக்கு 20கிராம், சீரகம்50கிராம்  பொடித்து 5கிராம் தூளுடன் 25கிராம் சர்க்கரை  சேர்த்து  உணவுக்குமுன்  சாப்பிட  குடல்வாயு  குணமாகும்.

Comments

Popular Posts

அருள்வெளி சித்தர் 108 போற்றி

பரம்பொருள் அருட்பெரும் ஜோதி ஓம் ஸ்ரீ அருள்வெளி சித்தர் பரம்பொருள் அருட்பெரும் ஜோதி ஓம் ஸ்ரீ அருள்வெளி சித்தர் ஓம் ஸ்ரீ அருள்வெளி சித்தர் 108 போற்றி 1. அன்பே உருவான அருள்வேளிக் சித்தனே போற்றி ! 2. அகர முதலாய் அமர்ந்தாய் போற்றி ! 3. அறிவிற் கறிவான ஆதுவிதனே போற்றி ! 4. அறத்தின் வடிவே ஐயனே போற்றி ! 5. அடிமை எமைக் காக்கும் அத்தா போற்றி ! 6. அனாதிப் பரம்பொருள் ஆயினே போற்றி ! 7. அமரர் வணங்கும் அரியே போற்றி ! 8. அண்டினோர்க் காதரவு அளிப்பாய் போற்றி ! 9. அன்பே சிவமேன் றறிந்தாய் போற்றி ! 10. அன்பே சிவமாய் அமர்ந்தாய் போற்றி ! 11. அடக்கம் ஆன  சிவமே போற்றி ! 12. ஆனந்த வடிவச் சித்தனே போற்றி ! 13. ஆகாயம் எல்லாம் அளந்தாய் போற்றி ! 14. ஆதியே போற்றி சோதியே போற்றி ! 15. ஆலத்தை அமுதாய் ஆக்குவை போற்றி ! 16. ஆருரிச் சிவமே அழகா போற்றி ! 17. ஆசை வித்த அரனே போற்றி ! 18. ஆணவ மாயை அழித்தாய் போற்றி ! 19. ஆவியில் உறையும் ஐயா போற்றி ! 20. ஆத்தும தத்துவம் அறிவிப்பாய் போற்றி ! 21. ஆலமர் செல்வ அரசே போற்றி ! 22. இகர மாகி எழுந்தாய் போற்றி ! 23. இறைவி இறைவன் வடிவே போற்றி ! 24. இகபர சுகங்கள் தருவாய் ...

அத்தி

1. மூலிகையின் பெயர் :- அத்தி. 2. வேறு பெயர் :- அதவம் மரம் 3. தாவரப்பெயர் :- FICUS GLOMERATA, FICUS AURICULATE. 4. தாவரக்குடும்பம் :- MORACEAE. 5. பயன்தரும் பாகங்கள் :- இலை, பிஞ்சு, காய், பழம், பால், பட்டை ஆகியன. 6. வளரியல்பு :- அத்தி களிமண் நிலம் மற்றும் ஆற்றுப்படுகைகளில் நன்கு வளரும். மாற்றடுக்கில் அமைந்த முழுமையான இலைகளை உடைய பெரு  (FICUS GLOMERATA , ROXB ; MORACEAE ) மர வகையைச் சேர்ந்தது.நாட்டு அத்தி (COUNTRY FIG), வெள்ளை அத்தி (GULAR FIG), நல்ல அத்தி (FICUS GLOMERATA CLUSTER FIG) என பல வகை அத்தி மரங்கள் உண்டு. அத்தி அளவான உயரமுடைய நடுத்தர மரமாகும். இம்மரம் சுமார் 10 மீட்டர் வரை உயரமாக வளர்கிறது. மரத்தின் பட்டை சாம்பல் மற்றும் சிவப்பு நிறத்தில் காணப்படுகிறது. அத்தி இலைகளில் மூன்று நரம்புகள் இருக்கும். காய்கள் சற்று நீளமான முட்டை வடிவில் தண்டிலும், கிளைகளிலும் அடிமரத்திலும் கொத்துக் கொத்தாகத் தோன்றும். பெரிய நெல்லிக்காய் அளவில் உருண்டையாக சிறிது பச்சை நிறத்துடன் இருக்கும். காய் பழுத்த பின்பு கொய்யாப்பழத்தைப் போல் வெளிறிய மஞ்சள் நிறமாக மாறிவிடும். பழங்கள் தானே கீழே உத...

வர்மம் varmam

வர்மங்களின் வகைகள்..! வர்மக் கலையை அகத்தியர் நான்கு பெரும் பிரிவுகளாய் பிரித்திருக்கிறார். உடலில் உள்ள வர்ம புள்ளிகள் மற்றும், அவற்றை கையாளும் விதத்தினால் இவற்றை வேறு படுத்துகிறார். இவை “படு வர்மம்”, ”தொடு வர்மம்”, ”தட்டு வர்மம்”, ”நோக்கு வர்மம்” படுவர்மம் நான்கு வகை வர்மங்களில் மிகவும் ஆபாயகரமான பிரிவு இதுவேயாகும். உடலிலுள்ள வர்மப் பகுதிகளில் அடியோ அல்லது தாக்குதலோ ஏற்படுமானால் அப்போது ஏற்படும் வர்மமே "படுவர்மம்" என்கிறார். இந்த படுவர்ம தாக்குதலுக்கு உள்ளாகும் நபர்கள் உயிரிழக்கும் வாய்ப்புக்கள் அதிகம் உள்ளதால் இவை மிகவும் ஆபத்தானவை என்று அகத்தியர் குறிப்பிடுகிறார். ஒரு மனிதன் படுவர்மப் புள்ளிகளில் அடிபட்டால் உடனடியாக மயங்கி விழுவான் என்றும், அவன் வாய் பிளந்து நாக்கு வெளியே தள்ளும், வாயில் நுரையும் வெளியேறும் அத்துடன் அந்த அடிபட்ட இடங்களில் கைவைத்து பார்த்தால் அந்த இடம் மிகவும் குளிர்ச்சியாகக் காணப்படும் என்றும் குறிப்பிடுகிறார். எல்லோராலும் இதை செய்திட முடியாது என்றும், மிகுந்த பயிற்சி உள்ள ஒருவரால் மட்டுமே இத்தகைய செயல்களை செய்திட முடியும் என்றும் கூறுகிறார். தொடு...

குண்டலினி ஆற்றல் 3

குண்டலினியை எப்படி எல்லாம் எழுப்பலாம்! மூலாதாரத்தில் புதைந்திருக்கும் குண்டலினியை எழுப்பிட பல்வேறு உத்திகள் கூறப் பட்டிருக்கின்றன. பொதுவில் பிராணாயாமம் எனப்படும் மூச்சுப் பயிற்சி, ஆசனங்கள், முத்திரைகள் இவைகளால் குண்டலினியை எழுப்ப முடியுமாம். இராஜயோகிகள் சலனமற்ற தியானத்தினாலும், மனப் பயிற்சியினாலும் எழுப்புகின்றனர். சாமான்யர்கள் பக்தி அதாவது முழுமையான சரணாகதியின் மூலம் எழுப்புகின்றனர். ஞானிகளோ பிரித்து அறியும் மன உறுதியினால் எழுப்புகின்றனர். இதை விவேக வைராக்கியம் என்கின்றனர். தாந்திரிகர்கள் மந்திர சக்தியால் குண்டலினியை எழுப்புகின்றனர். இவற்றை எல்லாம் விட மிக எளிதான ஒரு முறையும் இருக்கிறது. அதாவது குருவினை பார்த்தல்(தரிசனம்),குருவினால் தொடப் படுதல், ஆசீர்வதித்தல் ஆகியவைகளால் சட்டென குண்டலினி எழும்பும். இத்தகைய தகுதி உடைய குருமார்கள் இப்போது மிகவும் குறைவு. மேலும் அத்தகையவர்கள் இதை எல்லோருக்கும் அருளுவதுமில்லை. ஆக, நம்மில் உறைந்திருக்கும் குண்டலினியை எழுப்பிட இத்தனை வகைகள் இருக்கிறது. எனினும் நமது உடல் மற்றும் மனப் பக்குவத்திற்கு ஏற்ற வகையை தெரிவு செய்ய குருவினால் மட்டுமே முடியும...

குண்டலினி ஆற்றல் 9 விசுத்தி

குண்டலினி - விசுத்தி. மூலாதாரத்திலிருந்து ஐந்தாவது சக்கரமான விசுத்தி பற்றி இன்று பார்ப்போம். இதைப் பற்றி அகத்தியர் பின் வருமாறு விளக்குகிறார். ஆச்சப்பா வனாகததி னொடுக்கஞ்சொன்னோம் அறையுகிறேன் விசுத்தியி னடவைக்கேளு மாச்சப்பா வதற்க்குமேல் பன்னிரெண்டங்குலம் பாச்சப்பா பதினாறு யிதழ்தா னாகும் பாலகனே அட்சரந்தான் வகாரமாகும் வதுநடுவில் சதாசிவனும் சாகினியுமாமே. - அகத்தியர். இந்த சக்தி ஆதார மையமானது நமது தொண்டையின் அடிப்பாகத்தில் சுழுமுனை நாடியில் அமைந்து இருப்பதாக குறிப்பிடுகின்றனர். நமது குரல்வளை, மூச்சுக் குழாய், தையராய்டு சுரப்பிகள், நுரையீரல், கைகள் போன்ற உறுப்புகளுடன் விசுத்தி சக்கரம் தொடர்புடையதாக குறிப்பிடப் படுகிறது. பஞ்சாட்சர எழுத்துக்களான "சிவயநம" என்னும் எழுத்துகளில் ஒன்றான "வ" என்னும் எழுத்தையும், அதன் தத்துவத்தையும் விசுத்தி சக்கரம் விளக்குவதாக அமைகின்றது. இச்சக்கரத்தின் அதிதேவன் சதாசிவன், அதி தேவதை சாகினி. பஞ்ச பூதங்களில் ஒன்றான ஆகாசம் இதன் மூலக்கூறு. இதன் மூல மந்திரம் “ஹம்” எனப்படுகிறது. இந்த சக்கரத்திலிருந்து தாமரை இதழ் போன்ற பதினாறு யோக நாடிகள் கிளம்புகின்றன....