Skip to main content

வயிற்றிரைச்சல் பொருமல் GAS TROUBLE ACIDITY


சிசுக்களை திடுக்கிட வைத்தல், உதைத்தல், ஜீவ ஜந்துக்களை காலால் மிதித்தும் கையால் முரித்தல், வறுமையுற்ற முதியோர்களுக்குக் காலினால் ஏவலிடுதல், இவற்றால் வாத சம்பந்த வியாதிகள் அணுகும்.
உயிர்ப் பிரானிகளைகளைக் கட்டியும் தூக்கி ஊஞ்சலாடவிட்டும், அறுத்தல், பசுவை அடித்தல், ஜீவராசிகளின் வயிற்றைக்கீரி குடல் வெளிவரக் காணல் இவற்றால் வாத நோய் 84ல் ஆநந்த வாய்வு என்னும் ரோகம் சம்பவிக்கும்.
குடல்வாதம்/ ஹெர்னியா ( herniyaa); குடல்வாயு அதிகரித்தால் குடல்பை பளுவாகி, குடலுக்குக் கீழுள்ள ஜவ்வில் இலேசான துவாரம் காணும். அதிநடை, மலபந்தம் ஏற்படில் குடல் கீழே இறங்கும். பீஜத்திற்குமேல் வலியும், வீக்கமும் காணும்.
அண்டவாயுக்குணம்; வாயு குடலில் தங்கி நரம்பு வழியாய் விரை ஒன்றிலிறங்கி பொருமி வலிக்கும்,அது மேல்நோக்கி உள் வாங்கும்,அதன் நரம்பு புடைத்துக் காணும்.
மந்தாக்கினிவாயு குணம்; பசி மிக உண்டாகி மந்திக்கும்,சிந்தையில் நினைத்த தெல்லாம் தின்ன விரும்பும், கொள்ள ஒட்டாது(சாப்பிட தங்காது), வயிற்றில் தங்காமல் வாந்தியாகும்; மலங் கருக்கும், கிறுகிறுக்கும், வயிறு வலிக்கும், மலத்தில் சிறு இரத்தமும், மிகுந்த சலமும் விழும், பலங்குறையும், நயனம், முகம் வெளுக்கும்.
வாயுப்பொருமலின்குணம்; வயுப் பொருமி அக்கினி மந்தித்து உண்ட அசனத்தை வாந்திக்கும், புளித்தேப்பமிடும், காற்றுப் பிரியும்.
குண்டலவாயுக்குணம்; வாயு மிகுத்துக் கூப்பிட்டோடித் திரிந்து வயிற்றில்வந்து கல் போல் திரளும்,மறுபடியும் சிதறி உடம்பெங்கும் பரந்து பின்வந்து அடங்கும், தீபனத்தை ஒடுக்கும்.
குடகரிவாயுக்குணம்: வாயு அதிகரித்து குடல் முதுகு நெஞ்சு விலா முதலான இடங்களில் ஓடிபுடைத்து பரண்டு அழன்று வலிக்கும்.உடல் அயரும்.மலங்கருகும்.
அனாகதவாயுக்குணம்:மென்மேல் உணபதனாலும்,நொந்தஅன்னம் ஊசற்கறி புசித்தலாலும் மலங்கட்டினால் வாயு அதிகரித்து வயிறுபொருமி பிராந்தியாகும்.
அக்கினி மந்தித்து சீரணமாகாமல் உண்டவண்ணமாய் பிரவர்த்திக்கும்புளித்தேப்பம் வாந்தி தாகங் காணும் வாயுலரும் காற்று பரிந்து கொண்டே இருக்கும்.
அத்தறாவாயுக்குணம்:வாயு அடிக்கடி உடலில் பரந்து ஓடிச்சிலநேரம் அடங்கியிருக்கும். நாள்தோறும் அதிகரித்து இப்படியே கேட்டையறுக்கச் செய்யும்.
துடிவாயுக்குணம்:குடலில் வாயுபுரண்டு வலித்துக் குமுறி இரையும்.விலா தீபோல் கலக்கும்.மந்திக்கும்.
  1. சீரகத்தை  பொன்வறுவலாய்  வறுத்து,பொடித்து  1தேகரண்டி  சாதத்துடன்  நெய் சேர்த்துப் பிசைந்து  சாப்பிட  பசியின்மை,வயிற்றுபொருமல், சுவையின்மை  தீரும்.
  2. திரிகடுகுசூரணம் அரைதேக்கரண்டி,தேனில் கலந்து தினம்3 வேளை கொள்ள வயிற்றுவலி, வயிற்றுப்பொருமல்  தீரும்.
  3. புதினா துவையல் செய்து சாதத்துடன்  பிசைந்து சாப்பிட்டுவர வயிற்று பொருமல், வயிற்றுவலி, செரியாமை  தீரும்.
  4. 1கிராம்  பொரித்த  பெருங்காயத்தை  சிறிது  பனைவெல்லத்துடன்  சேர்த்து  சாப்பிட்டு வர வயிற்று பொருமல், வயிற்றுவலி  குணமாகும்.
  5. உத்தாமணிஇலை  குடிநீருடன்,வசம்பு  சுட்ட  சாம்பல்  கலந்து  30மிலி  தினம்2 வேளை குழந்தைகட்கு  கொடுக்க  வயிற்றுபொருமல், மாந்தம், செரியாமை  தீரும்.
  6. கொத்தமல்லியைக்  குடிநீர்செய்து  சிறிது  பெருங்காயம்  சேர்த்துப் பருக  வயிற்றுபொருமல், வயிற்றுவலி  தீரும்.
  7. வெங்காயச்சாறு  5-10Oமிலி  தினம்  பருகிவர மயக்கம், வயிற்றுபொருமல், வயிற்றுவலி  தீரும்.
  8. ஒரு தேங்காய்பூ மத்தியில் 40கிராம் பூண்டை தோலுரித்து வைத்து பிட்டவித்து பூவை பால் பிழிந்து பூண்டையும்,40கிராம் முருங்கைபட்டையும் மையாயரைத்து சாறுபிழிந்து 3நாள் சாப்பிட்டு காற்றுப்புகாத அறையில் படுக்க அண்டவாயு குணமாகும்.
  9. திருகுகள்ளியை வாட்டி சாறு பிழிந்து சமன் ந.எண்ணை கலந்து தேக திடத்திற் கேற்ப 3நாள் கொடுத்து 6நாள் பத்தியமிருக்க அண்டவாயு தீரும்.
  10. மணித்தக்காளி இலையும், தைவேளை இலையும் வதக்கி ஒத்தனமிட்டுக் கட்ட அண்டவாயு தீரும்.
  11. கருஞ்சீரகம்,சீரகம்,இந்துப்பு,திரிகடுகு,கருவேப்பீர்க்கு வறுத்து பொடித்து அரை தேக்கரண்டி சாதத்தில் முதலில் போட்டு நெய்விட்டு பிசைந்து சாப்பிட மந்தாக்கினி வாயு  நீங்கும்.
  12. ஓமம், சுக்கு, கொடிவேலிவேர்  சமன் பொடித்து, சமஅளவு  கடுக்காய் பொடி கலந்து திரிகடி மோரில் கொள்ள அக்கினிமந்தம்  பொருமல்  தீரும்.
  13. மிளகை வறுத்துப் பொடித்து திரிகடி தேனில் கொள்ள அஜீரண வாயு நீங்கும்.
  14. சுக்கு, திப்பிலி, மிளகு, ஓமம், இந்துப்பு, சீரகம், காயம் சமன் பொடித்து திரிகடி சாதத்தில் நெய்விட்டு பிசைந்து சப்பிட அஜீரணவாயு தீரும்.
  15. சுக்கு, திப்பிலி, மிளகு, ஓமம், இந்துப்பு, சீரகம், காயம், கருஞ்சீரகம் சமன் பொடித்து திரிகடி சாதத்தில் நெய் அல்லது தேனில் சாப்பிட  சகல வாயுவும் தீரும்.
  16. மிளகு, வெந்தயம், தைவேளைவேர்  வறுத்து  பொடித்து  தேனில்  கொள்ள சகல வாயுவும் நீங்கும்.                                                                   
  17. வேப்பிலையை  புதுசட்டியில் போட்டெரித்து நீராக்கி திரிகடி தேனில் 8நாள் கொள்ள சகல குன்மம்,வாயு,வலி தீரும். புளிதள்ளவும்.
  18. மிளகாய், உப்பு, எள் சமன் வறுத்து பொடித்து திரிகடி பசுநெய்யில் கொள்ள சகல குன்மம் வாயுவலி தீரும்.
  19. சுக்கு, வெங்காரம், ஓமம், மிளகு வகைக்கு 2கிராம் வறுத்து பெருந்தும்பை கொழுந்து 1பிடி சேர்த்து எருமைமோரிலரைத்துச் சாப்பிட குன்மவலி நீங்கும்.
  20. சித்திரமூலம், திப்பிலி, ஓமம், மிளகு, சீரகம், பொன்முசுட்டைவேர், பெருங்காயம், சடாமஞ்சில், திப்பிலிவேர், இந்துப்பு சமன் பொடித்து திரிகடி கொள்ள குன்மம், அக்னிமந்தம் தீரும்.
  21. இஞ்சித்தேனூறல்  2துண்டுகள்  உணவிற்குமுன்  சாப்பிட்டுவர பசியின்மை, வயிற்றுப் பொருமல்  தீரும்.                                                                   
  22. சாதிக்காய், சுக்கு  வகைக்கு 20கிராம், சீரகம்50கிராம்  பொடித்து 5கிராம் தூளுடன் 25கிராம் சர்க்கரை  சேர்த்து  உணவுக்குமுன்  சாப்பிட  குடல்வாயு  குணமாகும்.

Comments

Popular Posts

அருள்வெளி சித்தர் 108 போற்றி

பரம்பொருள் அருட்பெரும் ஜோதி ஓம் ஸ்ரீ அருள்வெளி சித்தர் பரம்பொருள் அருட்பெரும் ஜோதி ஓம் ஸ்ரீ அருள்வெளி சித்தர் ஓம் ஸ்ரீ அருள்வெளி சித்தர் 108 போற்றி 1. அன்பே உருவான அருள்வேளிக் சித்தனே போற்றி ! 2. அகர முதலாய் அமர்ந்தாய் போற்றி ! 3. அறிவிற் கறிவான ஆதுவிதனே போற்றி ! 4. அறத்தின் வடிவே ஐயனே போற்றி ! 5. அடிமை எமைக் காக்கும் அத்தா போற்றி ! 6. அனாதிப் பரம்பொருள் ஆயினே போற்றி ! 7. அமரர் வணங்கும் அரியே போற்றி ! 8. அண்டினோர்க் காதரவு அளிப்பாய் போற்றி ! 9. அன்பே சிவமேன் றறிந்தாய் போற்றி ! 10. அன்பே சிவமாய் அமர்ந்தாய் போற்றி ! 11. அடக்கம் ஆன  சிவமே போற்றி ! 12. ஆனந்த வடிவச் சித்தனே போற்றி ! 13. ஆகாயம் எல்லாம் அளந்தாய் போற்றி ! 14. ஆதியே போற்றி சோதியே போற்றி ! 15. ஆலத்தை அமுதாய் ஆக்குவை போற்றி ! 16. ஆருரிச் சிவமே அழகா போற்றி ! 17. ஆசை வித்த அரனே போற்றி ! 18. ஆணவ மாயை அழித்தாய் போற்றி ! 19. ஆவியில் உறையும் ஐயா போற்றி ! 20. ஆத்தும தத்துவம் அறிவிப்பாய் போற்றி ! 21. ஆலமர் செல்வ அரசே போற்றி ! 22. இகர மாகி எழுந்தாய் போற்றி ! 23. இறைவி இறைவன் வடிவே போற்றி ! 24. இகபர சுகங்கள் தருவாய் ...

மருந்துகளின்றி ஆரோக்யமாக வாழ

நமது வாழ்க்கை முறையை சரிசெய்வது மூலமாக மட்டுமே ஆரோக்யமாக வாழ்வது சாத்தியமாகும். நம்மிடம் உள்ள ஆரோக்கியத்தை மருத்துவமனையில் தேடினால் கிடைக்காதல்லவா? இதை மக்களுக்கு புரியவைத்து ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்குவதே எனது நோக்கம்.  நம் உடலானது நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் போன்ற பஞ்ச பூதங்களால் தான் இயங்குகின்றது. அவற்றிலுள்ள பிரச்சினைகளை களைந்தாலே நாம் வாழ்நாள் முழுவதும் நோயின்றி ஆரோக்யமாக வாழலாம். உணவு நிலம்  இரைப்பை, மண்ணீரல், கணையம் ஆகிய உறுப்புக்கள் ஒழுங்காக இயங்க கீழே கொடுக்கபட்டுள்ளவற்றை பின்பற்றவும் 1. பசி: பசிக்கும்போது நமக்கு பிடித்த உணவை நிதானமாக உண்ணும்போது நம் உடல் அவற்றை சத்துக்களாக மாற்றிவிடும். உதட்டை பிரிக்காமல் உணவை நன்கு மென்று கூழ் போல் அரைத்துப் பின் விழுங்க வேண்டும். ஏனென்றால் காற்றும் நம் ஜீரணத்திற்கு எதிரி. அப்படி உண்டால் நம் உடலின் அனைத்து உறுப்புக்களும் நன்றாக இயங்கும் அதனால் ஆரோக்கியம் பேணப்படும். பசி இல்லாதபோதோ நமக்கு பிடிக்காத உணவை உண்ணும்போதோ மற்றும் உணவு உண்டவுடன் அதிக நீரை குடிக்கும்போதோ அவை கழிவுகளாக மாறி நமக்கு தொப்பை, வாயு தொந்தரவு, அல்சர், அ...

வர்மம் varmam

வர்மங்களின் வகைகள்..! வர்மக் கலையை அகத்தியர் நான்கு பெரும் பிரிவுகளாய் பிரித்திருக்கிறார். உடலில் உள்ள வர்ம புள்ளிகள் மற்றும், அவற்றை கையாளும் விதத்தினால் இவற்றை வேறு படுத்துகிறார். இவை “படு வர்மம்”, ”தொடு வர்மம்”, ”தட்டு வர்மம்”, ”நோக்கு வர்மம்” படுவர்மம் நான்கு வகை வர்மங்களில் மிகவும் ஆபாயகரமான பிரிவு இதுவேயாகும். உடலிலுள்ள வர்மப் பகுதிகளில் அடியோ அல்லது தாக்குதலோ ஏற்படுமானால் அப்போது ஏற்படும் வர்மமே "படுவர்மம்" என்கிறார். இந்த படுவர்ம தாக்குதலுக்கு உள்ளாகும் நபர்கள் உயிரிழக்கும் வாய்ப்புக்கள் அதிகம் உள்ளதால் இவை மிகவும் ஆபத்தானவை என்று அகத்தியர் குறிப்பிடுகிறார். ஒரு மனிதன் படுவர்மப் புள்ளிகளில் அடிபட்டால் உடனடியாக மயங்கி விழுவான் என்றும், அவன் வாய் பிளந்து நாக்கு வெளியே தள்ளும், வாயில் நுரையும் வெளியேறும் அத்துடன் அந்த அடிபட்ட இடங்களில் கைவைத்து பார்த்தால் அந்த இடம் மிகவும் குளிர்ச்சியாகக் காணப்படும் என்றும் குறிப்பிடுகிறார். எல்லோராலும் இதை செய்திட முடியாது என்றும், மிகுந்த பயிற்சி உள்ள ஒருவரால் மட்டுமே இத்தகைய செயல்களை செய்திட முடியும் என்றும் கூறுகிறார். தொடு...

இயற்பியல் பிரபஞ்சமும் தூய ஆற்றல் குண்டலினி

இயற்பியல், பிரபஞ்சமும்  தூய ஆற்றல், உலகளாவிய வெப்பநிலை மாறுபாடுகள், நீராவியின் மாறுபாடுகள், அதிர்வுகளின் அவதானிப்புகள், நமது சித்தாந்த தியான நிலை குண்டலினி ஆற்றல் தொடர்பும்.  ஒரு மின்காந்த புலம் என்பது காந்த மற்றும் மின்சார ஆற்றலால் நிரப்பப்பட்ட இடத்தின் ஒரு பகுதி. மின்காந்த புலங்கள் எல்லா இடங்களிலும் உள்ளன. எக்ஸ்-கதிர்கள் மற்றும் காமா கதிர்கள் போன்ற உயர் அதிர்வெண் மின்காந்த கதிர்வீச்சு “ அயனியாக்கம் ” மற்றும் மக்களுக்கு தீங்கு விளைவிக்கும், அதே நேரத்தில் குறைந்த அதிர்வெண் கொண்ட மின்காந்த கதிர்வீச்சு அல்லது “ அல்லாத அயனியாக்கம்,” மனிதர்களுக்கு பாதுகாப்பானதாகக் கருதப்படுகிறது, அல்லது சில மனித நோய்களுக்கு கூட ஒரு தீர்வாக கருதப்படுகிறது. பூமியைச் சுற்றியுள்ள மின்காந்த புலம் நம் உடலை அடைந்து அதன் உள்ளே இருக்கும் கட்டணங்களை பாதிக்கிறது. நம் உடல்கள் அதன் சொந்த மின்னியல் புலத்தைக் கொண்டுள்ளன. டி.என்.ஏவின் துகள்கள் கூட மின்காந்த புலங்களை உருவாக்க முடியும். அந்த அலைகள் நம் உடலின் உள் கடிகாரத்தை பிரதானமாக்குகின்றன மற்றும் தூக்க முறைகள் மற்றும் ஹார்மோன் சுரப்பை பாதிக்கின்றன. ஆல்பா மூளை அ...

பாவங்களுக்கான வியாதிகள்

பாவங்களுக்கான வியாதிகள் - கருட புராணம் !!! 1    யார் மற்றவர்களை ஏளனம் செய்பவர்கள். சத்தியத்தை தவறவிட்டவர்கள், எதற்காவது காக்க வைத்தவர்.    மன அழுத்த நோயால் துன்புறுவர், மன நோயாளியாக இருப்பார் 2   எலி பொந்துக்களை, பாம்பு பொந்துக்களை அடைப்பவர், மீன்களை பிடிப்பவர்களுக்கு    நுரையீரல் மற்றும் சுவாச கோளாரினால் பாதிக்கப்படுவார். 3    விஷம் கலந்து யாரையும் கொலை செய்தால்    தேள் கடி மற்றும் பாம்பு கடியால் துன்பப்படுவார் 4    கருமியாகவும், அதிக வட்டி வசூலிப்பவர், பிறரது பொருளை அபகரிப்பவர்களுக்கு    சுயரோகத்தால் துன்பப்படுவார் 5    விபச்சாரத்தில் ஈடுபடுபவர்கள், சிறுமிகளை பலாத்காரம் செய்பவர் தொழு நோயால் துன்பப்படுவார் 6    தனது உடம்பைக் காட்டி பயமுறுத்துபவர், வீண் சண்டைக்கு இழுப்பவர்    கால், கை வலிப்பு, இழுப்பு நோயால் துன்பப்படுவார் 7    பெண்ணை கெட்ட எண்ணத்துடன் பார்ப்பவர், மற்றவர் பொருள்களையும் பார்த்து பொறாமைப்படுபவர்    நிரந்தர கண் நோயுடன் அவதிப்படுவார் 8  ...