Skip to main content

பித்தம் மயக்கம் Heat Dizziness


கடன் வாங்கிக் கொடாமையாலும், பெரியோரை மனம் நோகப்பேசி ஏசுவதாலும், தாகபானம் உதவாமையினாலும், பித்தட்சயம், பித்தகாசம், மந்ததாரகாசம், இரத்தகாசம், சுவாசகாசம் உண்டாகும்.மேலும் எலி கடியாலும், மூலத்தில் அனல் அதிகரித்து மூளையில் நீர் கசிந்து நெஞ்சில்சுவரி, கபத்தை உறையச் செய்யும். பெரியோரை நிந்தை செய்தல், தேவ ஸ்தலங்களை அழித்தல், தூஷணை செய்தல், பெண்கள் கர்பநோயில் விந்துவிடல், சிசுவைஅழித்தல், கன்றுக்குப் பால் விடாமல் கரத்தல், இளம்பயிரை அழித்தல், பிஞ்சுகளை பரித்தல் இவைகளால் பித்தம், மயக்க வியாதி, பித்தபயித்தியம், பித்தவாய்வு சேஷ்டைகள் உண்டாகும் என்றறிக. எந்நேரமும் மயக்கமுண்டாகி கபாலத்தைப் பற்றி மூளைகெட்டு நீர் அதிகரித்து 40 வகையான ரோகம் விளைவிப்பது பித்தம்.
பித்தத்தின் அறிகுறிகள்:
கூறிடவே பித்தமது சீறிற்றானால், கொடுங்காந்தல், உடல்வறட்சி நடுக்கமுண்டாம், ஏறிடவே அரோசிகந்தான் நாவறட்சி,மேலான சோபமது விக்கல் மூர்ச்சை, தூறிடவே கிறுகிறுப்பு காதடைப்புத்,தொந்தமாங் கசப்புடனே மண்டைக்குத்து, மாறிடவே நெஞ்செறிவு அக்னிமந்தம் மகத்தான குளிர்சுரமும். 
பித்தவரட்சிக்குணம்; தலைகனக்கும், உடம்பு உலரும், தாது கெடும், தீப்போல் அபான மெரிந்து மலமிறங்கும், புத்தி மடிந்து மறதி உண்டாகும்,மனதில் தோன்றாத தெல்லாம் தோன்றும். இரத்தபித்தக்குணம்;மூக்காலும்,வாயாலும் இரத்தம் விழும்,உடல் தனல் போல் காந்தும்,வெளுக்கும்,கால்கை உதரும்.
  1. மூர்ச்சை  அடைந்தவர்க்கு  குளிர்ந்த நீரை  முகத்திலடிக்க,தலையில்  ஊற்ற  மூர்ச்சை  தெளியும்.
  2. நெடியுள்ள  பொருளை நாசியினருகில்  பிடிக்க  மூர்ச்சை  தெளியும்.
  3. கடுகையரைத்து  உள்ளங்காலில்  தடவ  மூர்ச்சை  தெளியும்.
  4. அரசமர குச்சிகளை சிறு துண்டுகளாக வெட்டி,மண்சட்டியில் வறுத்து, நீர் விட்டரைத்து,அந்த நீருடன் தேன் கலந்து பருகிவர இரத்தத்திலுள்ள பித்தம் தணியும்.
  5. காபிதூளுக்குப் பதிலாக புளியங்கொட்டை  தூளை போட்டு,டிகாஷன் எடுத்து பாலுடன் சேர்த்து சாப்பிட பித்தச்சூடு,சூட்டு நோய்கள் குணமாகும்.வீரியச் செழிப்புண்டாகும்.
  6. சீரகம்10கிராம் லேசாக வறுத்து பொடித்து காலையில் எலுமிச்சை சாறுடன் பருகிவர பித்தம் தணியும்.
  7. செங்கழுநீர்க்கிழங்கை தோல்நீக்கி அரிந்து.பொடித்து,சிறிது சீரகம் சேர்த்து சாப்பிட்டுவர உடற்சூடு  தணிந்து,பித்தம்  தணியும்.
  8. இஞ்சித்துண்டுகளை  தேனில்  கலந்து,வதக்கி நீர்விட்டுக் காய்ச்சி,எலுமிச்சைசாறு கலந்து பருக பித்தமயக்கம் குணமாகும்.
  9. வேப்பம்பூ ரசம், துவையல் செய்து சாப்பிட்டுவர குமட்டல்,மயக்கம், பெருஏப்பம், குணமாகும்.
  10. வேப்பம்பூவை நீரில் ஊறவைத்து,4மணிக்கு1முறை,4வேளை சாப்பிட்டுவர பித்தகுன்மம்  தீரும்.
  11. பப்பாளிபழத்தை அடிக்கடி சாப்பிட்டுவர பித்த நோய்கள் தீரும்.
  12. சிறியவெங்காயத்தை  அரிந்து வெல்லம் சேர்த்து,நெய்யில்  வதக்கி  சாப்பிட்டுவர பித்தம் தணியும்.
  13. கறிவேப்பிலையை  உணவில் அதிகம் சேர்த்து வர பித்தம் கட்டுப்படும்.
  14. சீந்தில் கிழங்கை தட்டி  சிறிது  நீர்விட்டு  காய்ச்சி வடித்து  தினம்2வேளை பருகிவர இரத்தத்திலுள்ள பித்தம் தணியும்.
  15. கற்பூரவல்லி இலைசாறு,ந.எண்ணை,சர்க்கரை கலந்து நெற்றியில் பற்றிட உடல்சூடு தணியும்.
  16. சூட்டின் காரணமாக  நீர் மஞ்சளாக  போனால்  2கிராம் வெடியுப்பை  அரிசி கஞ்சியில்  கலந்து கொடுக்க  மாறும்.
  17. முருங்கைஇலையை  நெய்யில்  வேகவைத்து,சிறுவர்களுக்கும்,குழந்தைகளுக்கும் கொடுக்க பித்தசோகை  நீங்கும்.
  18. மஞ்சள்கிழங்கை  அனலில்போட்டு  புகை பிடிக்க  மயக்கம்,தொடர்விக்கல்  நிற்கும்.
  19. சப்போட்டா பழத்தை  உருக்கிய வெண்ணெயில்  ஓரிரவு  ஊறவைத்து,காலை சாப்பிட பித்தமயக்கம்,காய்ச்சல்  தீரும்.
  20. வேப்பிலையை எலுமிச்சை சாறிலரைத்து,தலையில் தேய்க்க பித்தமயக்கம், குடிவெறி தீரும்.
  21. மாதுளம்பழச்சாறுடன் தேன்கலந்து பருகிவர பித்தம்,பித்தவாந்தி நீங்கும்.
  22. நெய்யில் வறுத்து இடித்த காக்கரட்டான் விதைச்சூரணம் 5-10 அரிசி எடை வெந்நீரில் கொடுக்க மூர்ச்சை தெளியும்.
  23. வேப்பம்பூவை ஊறவைத்துக் குடிக்க பித்தகுன்மம் தீரும்.
  24. மாதுளம் பூச்சாறு 30மிலி,தேன்15மிலி கலந்து பருக பித்தமயக்கம் தீரும்.
  25. சீதாமர இலைச்சாறு 2துளி நசியமிட மூர்ச்சை தெளியும்.
  26. சிறுகீரைவேரை பச்சரிசிக்கழுநீர் மண்டியால் அரைத்து தேனில் குழைத்துக் கொடுக்க இரத்தபித்தம் தீரும்.
  27. முருங்கையிலை,விலாமிச்சுவேர்,வெட்டிவேர்,முத்தக்காசு,மாதுளைபருப்பு, முசுமுசுக்கை இலை சமனாய் கசாயம் செய்து கொடுக்க இரத்தபித்தம் தீரும்.
  28. இலுப்பைஅரைப்பு,சீயக்காய்,வெற்றிலை தட்டி நாசியிலும்,கண்னிலும் பிழிய பித்தவெறி நீங்கும்.
  29. இளநீரும் ஆவின்பாலும் சமனாய் கலந்ததில் பாசிப்பயறு,சீரகம், நெல்பொறி சமனாய்க் கலந்து பொடிசெய்து போட்டு பாகுபோல் காய்ச்சி சீனி கலந்து 10நாள் சாப்பிட பித்தகாங்கை,சத்தி,கிறுகிறுப்பு,தாகம் நீங்கும்.
  30. ஏலம், இலவங்கம், திப்பிலி, நெல்லிவற்றல், அதிமதுரம், விலாமிச்சம்வேர், வெட்டிவேர், இலுப்பைப்பூ சமனாய் பொடித்து திரிகடி கொள்ள பித்தகாங்கை, எரிவு, வறட்சி தீரும்.
  31. சிவதைவேர்,திரிகடுகு சமனாய் பொடித்து சமன் சர்க்கரை கலந்து சாப்பிட பித்த வாய்வு நீங்கும்.                  
  32. அழிஞ்சில் வேர்பட்டை 6கிராம் அரைத்து வெந்நீரில் கொடுத்து,குளிர்ந்த நீரில் குளித்து மிளகு,நீர்மோர் உனவு கொள்ள பித்தம் சாந்தியாகும்.
  33. எலுமிச்சைசாறில் சீனி கலந்து சாப்பிட்டுவர பித்தம் நீங்கும்.
  34. எலுமிச்சைசாறு,துளசிச்சாறு சமனாய் கலந்து சீனி சேர்த்து சாப்பிட பித்தம் நீங்கும்.
  35. சீரகம்,நெல்லிவற்றல்,ஏலம்,இஞ்சி,சுக்கு, விலாமிச்சம்வேர் சமன் பொடித்து சமன் நெற்பொரி, சீரகம் தூள்கலந்து திரிகடி நெய்யில் கொள்ள பித்தம் நீங்கும்.
  36. சீரகம்,நெல்லிவற்றல்,ஏலம் சமன் பொடித்து சமன் சீனி கலந்து தேனில் கொள்ள பித்தம் நீங்கும்.

Comments

Popular Posts

அருள்வெளி சித்தர் 108 போற்றி

பரம்பொருள் அருட்பெரும் ஜோதி ஓம் ஸ்ரீ அருள்வெளி சித்தர் பரம்பொருள் அருட்பெரும் ஜோதி ஓம் ஸ்ரீ அருள்வெளி சித்தர் ஓம் ஸ்ரீ அருள்வெளி சித்தர் 108 போற்றி 1. அன்பே உருவான அருள்வேளிக் சித்தனே போற்றி ! 2. அகர முதலாய் அமர்ந்தாய் போற்றி ! 3. அறிவிற் கறிவான ஆதுவிதனே போற்றி ! 4. அறத்தின் வடிவே ஐயனே போற்றி ! 5. அடிமை எமைக் காக்கும் அத்தா போற்றி ! 6. அனாதிப் பரம்பொருள் ஆயினே போற்றி ! 7. அமரர் வணங்கும் அரியே போற்றி ! 8. அண்டினோர்க் காதரவு அளிப்பாய் போற்றி ! 9. அன்பே சிவமேன் றறிந்தாய் போற்றி ! 10. அன்பே சிவமாய் அமர்ந்தாய் போற்றி ! 11. அடக்கம் ஆன  சிவமே போற்றி ! 12. ஆனந்த வடிவச் சித்தனே போற்றி ! 13. ஆகாயம் எல்லாம் அளந்தாய் போற்றி ! 14. ஆதியே போற்றி சோதியே போற்றி ! 15. ஆலத்தை அமுதாய் ஆக்குவை போற்றி ! 16. ஆருரிச் சிவமே அழகா போற்றி ! 17. ஆசை வித்த அரனே போற்றி ! 18. ஆணவ மாயை அழித்தாய் போற்றி ! 19. ஆவியில் உறையும் ஐயா போற்றி ! 20. ஆத்தும தத்துவம் அறிவிப்பாய் போற்றி ! 21. ஆலமர் செல்வ அரசே போற்றி ! 22. இகர மாகி எழுந்தாய் போற்றி ! 23. இறைவி இறைவன் வடிவே போற்றி ! 24. இகபர சுகங்கள் தருவாய் ...

மருந்துகளின்றி ஆரோக்யமாக வாழ

நமது வாழ்க்கை முறையை சரிசெய்வது மூலமாக மட்டுமே ஆரோக்யமாக வாழ்வது சாத்தியமாகும். நம்மிடம் உள்ள ஆரோக்கியத்தை மருத்துவமனையில் தேடினால் கிடைக்காதல்லவா? இதை மக்களுக்கு புரியவைத்து ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்குவதே எனது நோக்கம்.  நம் உடலானது நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் போன்ற பஞ்ச பூதங்களால் தான் இயங்குகின்றது. அவற்றிலுள்ள பிரச்சினைகளை களைந்தாலே நாம் வாழ்நாள் முழுவதும் நோயின்றி ஆரோக்யமாக வாழலாம். உணவு நிலம்  இரைப்பை, மண்ணீரல், கணையம் ஆகிய உறுப்புக்கள் ஒழுங்காக இயங்க கீழே கொடுக்கபட்டுள்ளவற்றை பின்பற்றவும் 1. பசி: பசிக்கும்போது நமக்கு பிடித்த உணவை நிதானமாக உண்ணும்போது நம் உடல் அவற்றை சத்துக்களாக மாற்றிவிடும். உதட்டை பிரிக்காமல் உணவை நன்கு மென்று கூழ் போல் அரைத்துப் பின் விழுங்க வேண்டும். ஏனென்றால் காற்றும் நம் ஜீரணத்திற்கு எதிரி. அப்படி உண்டால் நம் உடலின் அனைத்து உறுப்புக்களும் நன்றாக இயங்கும் அதனால் ஆரோக்கியம் பேணப்படும். பசி இல்லாதபோதோ நமக்கு பிடிக்காத உணவை உண்ணும்போதோ மற்றும் உணவு உண்டவுடன் அதிக நீரை குடிக்கும்போதோ அவை கழிவுகளாக மாறி நமக்கு தொப்பை, வாயு தொந்தரவு, அல்சர், அ...

வர்மம் varmam

வர்மங்களின் வகைகள்..! வர்மக் கலையை அகத்தியர் நான்கு பெரும் பிரிவுகளாய் பிரித்திருக்கிறார். உடலில் உள்ள வர்ம புள்ளிகள் மற்றும், அவற்றை கையாளும் விதத்தினால் இவற்றை வேறு படுத்துகிறார். இவை “படு வர்மம்”, ”தொடு வர்மம்”, ”தட்டு வர்மம்”, ”நோக்கு வர்மம்” படுவர்மம் நான்கு வகை வர்மங்களில் மிகவும் ஆபாயகரமான பிரிவு இதுவேயாகும். உடலிலுள்ள வர்மப் பகுதிகளில் அடியோ அல்லது தாக்குதலோ ஏற்படுமானால் அப்போது ஏற்படும் வர்மமே "படுவர்மம்" என்கிறார். இந்த படுவர்ம தாக்குதலுக்கு உள்ளாகும் நபர்கள் உயிரிழக்கும் வாய்ப்புக்கள் அதிகம் உள்ளதால் இவை மிகவும் ஆபத்தானவை என்று அகத்தியர் குறிப்பிடுகிறார். ஒரு மனிதன் படுவர்மப் புள்ளிகளில் அடிபட்டால் உடனடியாக மயங்கி விழுவான் என்றும், அவன் வாய் பிளந்து நாக்கு வெளியே தள்ளும், வாயில் நுரையும் வெளியேறும் அத்துடன் அந்த அடிபட்ட இடங்களில் கைவைத்து பார்த்தால் அந்த இடம் மிகவும் குளிர்ச்சியாகக் காணப்படும் என்றும் குறிப்பிடுகிறார். எல்லோராலும் இதை செய்திட முடியாது என்றும், மிகுந்த பயிற்சி உள்ள ஒருவரால் மட்டுமே இத்தகைய செயல்களை செய்திட முடியும் என்றும் கூறுகிறார். தொடு...

இயற்பியல் பிரபஞ்சமும் தூய ஆற்றல் குண்டலினி

இயற்பியல், பிரபஞ்சமும்  தூய ஆற்றல், உலகளாவிய வெப்பநிலை மாறுபாடுகள், நீராவியின் மாறுபாடுகள், அதிர்வுகளின் அவதானிப்புகள், நமது சித்தாந்த தியான நிலை குண்டலினி ஆற்றல் தொடர்பும்.  ஒரு மின்காந்த புலம் என்பது காந்த மற்றும் மின்சார ஆற்றலால் நிரப்பப்பட்ட இடத்தின் ஒரு பகுதி. மின்காந்த புலங்கள் எல்லா இடங்களிலும் உள்ளன. எக்ஸ்-கதிர்கள் மற்றும் காமா கதிர்கள் போன்ற உயர் அதிர்வெண் மின்காந்த கதிர்வீச்சு “ அயனியாக்கம் ” மற்றும் மக்களுக்கு தீங்கு விளைவிக்கும், அதே நேரத்தில் குறைந்த அதிர்வெண் கொண்ட மின்காந்த கதிர்வீச்சு அல்லது “ அல்லாத அயனியாக்கம்,” மனிதர்களுக்கு பாதுகாப்பானதாகக் கருதப்படுகிறது, அல்லது சில மனித நோய்களுக்கு கூட ஒரு தீர்வாக கருதப்படுகிறது. பூமியைச் சுற்றியுள்ள மின்காந்த புலம் நம் உடலை அடைந்து அதன் உள்ளே இருக்கும் கட்டணங்களை பாதிக்கிறது. நம் உடல்கள் அதன் சொந்த மின்னியல் புலத்தைக் கொண்டுள்ளன. டி.என்.ஏவின் துகள்கள் கூட மின்காந்த புலங்களை உருவாக்க முடியும். அந்த அலைகள் நம் உடலின் உள் கடிகாரத்தை பிரதானமாக்குகின்றன மற்றும் தூக்க முறைகள் மற்றும் ஹார்மோன் சுரப்பை பாதிக்கின்றன. ஆல்பா மூளை அ...

பாவங்களுக்கான வியாதிகள்

பாவங்களுக்கான வியாதிகள் - கருட புராணம் !!! 1    யார் மற்றவர்களை ஏளனம் செய்பவர்கள். சத்தியத்தை தவறவிட்டவர்கள், எதற்காவது காக்க வைத்தவர்.    மன அழுத்த நோயால் துன்புறுவர், மன நோயாளியாக இருப்பார் 2   எலி பொந்துக்களை, பாம்பு பொந்துக்களை அடைப்பவர், மீன்களை பிடிப்பவர்களுக்கு    நுரையீரல் மற்றும் சுவாச கோளாரினால் பாதிக்கப்படுவார். 3    விஷம் கலந்து யாரையும் கொலை செய்தால்    தேள் கடி மற்றும் பாம்பு கடியால் துன்பப்படுவார் 4    கருமியாகவும், அதிக வட்டி வசூலிப்பவர், பிறரது பொருளை அபகரிப்பவர்களுக்கு    சுயரோகத்தால் துன்பப்படுவார் 5    விபச்சாரத்தில் ஈடுபடுபவர்கள், சிறுமிகளை பலாத்காரம் செய்பவர் தொழு நோயால் துன்பப்படுவார் 6    தனது உடம்பைக் காட்டி பயமுறுத்துபவர், வீண் சண்டைக்கு இழுப்பவர்    கால், கை வலிப்பு, இழுப்பு நோயால் துன்பப்படுவார் 7    பெண்ணை கெட்ட எண்ணத்துடன் பார்ப்பவர், மற்றவர் பொருள்களையும் பார்த்து பொறாமைப்படுபவர்    நிரந்தர கண் நோயுடன் அவதிப்படுவார் 8  ...