Skip to main content

பித்தம் மயக்கம் Heat Dizziness


கடன் வாங்கிக் கொடாமையாலும், பெரியோரை மனம் நோகப்பேசி ஏசுவதாலும், தாகபானம் உதவாமையினாலும், பித்தட்சயம், பித்தகாசம், மந்ததாரகாசம், இரத்தகாசம், சுவாசகாசம் உண்டாகும்.மேலும் எலி கடியாலும், மூலத்தில் அனல் அதிகரித்து மூளையில் நீர் கசிந்து நெஞ்சில்சுவரி, கபத்தை உறையச் செய்யும். பெரியோரை நிந்தை செய்தல், தேவ ஸ்தலங்களை அழித்தல், தூஷணை செய்தல், பெண்கள் கர்பநோயில் விந்துவிடல், சிசுவைஅழித்தல், கன்றுக்குப் பால் விடாமல் கரத்தல், இளம்பயிரை அழித்தல், பிஞ்சுகளை பரித்தல் இவைகளால் பித்தம், மயக்க வியாதி, பித்தபயித்தியம், பித்தவாய்வு சேஷ்டைகள் உண்டாகும் என்றறிக. எந்நேரமும் மயக்கமுண்டாகி கபாலத்தைப் பற்றி மூளைகெட்டு நீர் அதிகரித்து 40 வகையான ரோகம் விளைவிப்பது பித்தம்.
பித்தத்தின் அறிகுறிகள்:
கூறிடவே பித்தமது சீறிற்றானால், கொடுங்காந்தல், உடல்வறட்சி நடுக்கமுண்டாம், ஏறிடவே அரோசிகந்தான் நாவறட்சி,மேலான சோபமது விக்கல் மூர்ச்சை, தூறிடவே கிறுகிறுப்பு காதடைப்புத்,தொந்தமாங் கசப்புடனே மண்டைக்குத்து, மாறிடவே நெஞ்செறிவு அக்னிமந்தம் மகத்தான குளிர்சுரமும். 
பித்தவரட்சிக்குணம்; தலைகனக்கும், உடம்பு உலரும், தாது கெடும், தீப்போல் அபான மெரிந்து மலமிறங்கும், புத்தி மடிந்து மறதி உண்டாகும்,மனதில் தோன்றாத தெல்லாம் தோன்றும். இரத்தபித்தக்குணம்;மூக்காலும்,வாயாலும் இரத்தம் விழும்,உடல் தனல் போல் காந்தும்,வெளுக்கும்,கால்கை உதரும்.
  1. மூர்ச்சை  அடைந்தவர்க்கு  குளிர்ந்த நீரை  முகத்திலடிக்க,தலையில்  ஊற்ற  மூர்ச்சை  தெளியும்.
  2. நெடியுள்ள  பொருளை நாசியினருகில்  பிடிக்க  மூர்ச்சை  தெளியும்.
  3. கடுகையரைத்து  உள்ளங்காலில்  தடவ  மூர்ச்சை  தெளியும்.
  4. அரசமர குச்சிகளை சிறு துண்டுகளாக வெட்டி,மண்சட்டியில் வறுத்து, நீர் விட்டரைத்து,அந்த நீருடன் தேன் கலந்து பருகிவர இரத்தத்திலுள்ள பித்தம் தணியும்.
  5. காபிதூளுக்குப் பதிலாக புளியங்கொட்டை  தூளை போட்டு,டிகாஷன் எடுத்து பாலுடன் சேர்த்து சாப்பிட பித்தச்சூடு,சூட்டு நோய்கள் குணமாகும்.வீரியச் செழிப்புண்டாகும்.
  6. சீரகம்10கிராம் லேசாக வறுத்து பொடித்து காலையில் எலுமிச்சை சாறுடன் பருகிவர பித்தம் தணியும்.
  7. செங்கழுநீர்க்கிழங்கை தோல்நீக்கி அரிந்து.பொடித்து,சிறிது சீரகம் சேர்த்து சாப்பிட்டுவர உடற்சூடு  தணிந்து,பித்தம்  தணியும்.
  8. இஞ்சித்துண்டுகளை  தேனில்  கலந்து,வதக்கி நீர்விட்டுக் காய்ச்சி,எலுமிச்சைசாறு கலந்து பருக பித்தமயக்கம் குணமாகும்.
  9. வேப்பம்பூ ரசம், துவையல் செய்து சாப்பிட்டுவர குமட்டல்,மயக்கம், பெருஏப்பம், குணமாகும்.
  10. வேப்பம்பூவை நீரில் ஊறவைத்து,4மணிக்கு1முறை,4வேளை சாப்பிட்டுவர பித்தகுன்மம்  தீரும்.
  11. பப்பாளிபழத்தை அடிக்கடி சாப்பிட்டுவர பித்த நோய்கள் தீரும்.
  12. சிறியவெங்காயத்தை  அரிந்து வெல்லம் சேர்த்து,நெய்யில்  வதக்கி  சாப்பிட்டுவர பித்தம் தணியும்.
  13. கறிவேப்பிலையை  உணவில் அதிகம் சேர்த்து வர பித்தம் கட்டுப்படும்.
  14. சீந்தில் கிழங்கை தட்டி  சிறிது  நீர்விட்டு  காய்ச்சி வடித்து  தினம்2வேளை பருகிவர இரத்தத்திலுள்ள பித்தம் தணியும்.
  15. கற்பூரவல்லி இலைசாறு,ந.எண்ணை,சர்க்கரை கலந்து நெற்றியில் பற்றிட உடல்சூடு தணியும்.
  16. சூட்டின் காரணமாக  நீர் மஞ்சளாக  போனால்  2கிராம் வெடியுப்பை  அரிசி கஞ்சியில்  கலந்து கொடுக்க  மாறும்.
  17. முருங்கைஇலையை  நெய்யில்  வேகவைத்து,சிறுவர்களுக்கும்,குழந்தைகளுக்கும் கொடுக்க பித்தசோகை  நீங்கும்.
  18. மஞ்சள்கிழங்கை  அனலில்போட்டு  புகை பிடிக்க  மயக்கம்,தொடர்விக்கல்  நிற்கும்.
  19. சப்போட்டா பழத்தை  உருக்கிய வெண்ணெயில்  ஓரிரவு  ஊறவைத்து,காலை சாப்பிட பித்தமயக்கம்,காய்ச்சல்  தீரும்.
  20. வேப்பிலையை எலுமிச்சை சாறிலரைத்து,தலையில் தேய்க்க பித்தமயக்கம், குடிவெறி தீரும்.
  21. மாதுளம்பழச்சாறுடன் தேன்கலந்து பருகிவர பித்தம்,பித்தவாந்தி நீங்கும்.
  22. நெய்யில் வறுத்து இடித்த காக்கரட்டான் விதைச்சூரணம் 5-10 அரிசி எடை வெந்நீரில் கொடுக்க மூர்ச்சை தெளியும்.
  23. வேப்பம்பூவை ஊறவைத்துக் குடிக்க பித்தகுன்மம் தீரும்.
  24. மாதுளம் பூச்சாறு 30மிலி,தேன்15மிலி கலந்து பருக பித்தமயக்கம் தீரும்.
  25. சீதாமர இலைச்சாறு 2துளி நசியமிட மூர்ச்சை தெளியும்.
  26. சிறுகீரைவேரை பச்சரிசிக்கழுநீர் மண்டியால் அரைத்து தேனில் குழைத்துக் கொடுக்க இரத்தபித்தம் தீரும்.
  27. முருங்கையிலை,விலாமிச்சுவேர்,வெட்டிவேர்,முத்தக்காசு,மாதுளைபருப்பு, முசுமுசுக்கை இலை சமனாய் கசாயம் செய்து கொடுக்க இரத்தபித்தம் தீரும்.
  28. இலுப்பைஅரைப்பு,சீயக்காய்,வெற்றிலை தட்டி நாசியிலும்,கண்னிலும் பிழிய பித்தவெறி நீங்கும்.
  29. இளநீரும் ஆவின்பாலும் சமனாய் கலந்ததில் பாசிப்பயறு,சீரகம், நெல்பொறி சமனாய்க் கலந்து பொடிசெய்து போட்டு பாகுபோல் காய்ச்சி சீனி கலந்து 10நாள் சாப்பிட பித்தகாங்கை,சத்தி,கிறுகிறுப்பு,தாகம் நீங்கும்.
  30. ஏலம், இலவங்கம், திப்பிலி, நெல்லிவற்றல், அதிமதுரம், விலாமிச்சம்வேர், வெட்டிவேர், இலுப்பைப்பூ சமனாய் பொடித்து திரிகடி கொள்ள பித்தகாங்கை, எரிவு, வறட்சி தீரும்.
  31. சிவதைவேர்,திரிகடுகு சமனாய் பொடித்து சமன் சர்க்கரை கலந்து சாப்பிட பித்த வாய்வு நீங்கும்.                  
  32. அழிஞ்சில் வேர்பட்டை 6கிராம் அரைத்து வெந்நீரில் கொடுத்து,குளிர்ந்த நீரில் குளித்து மிளகு,நீர்மோர் உனவு கொள்ள பித்தம் சாந்தியாகும்.
  33. எலுமிச்சைசாறில் சீனி கலந்து சாப்பிட்டுவர பித்தம் நீங்கும்.
  34. எலுமிச்சைசாறு,துளசிச்சாறு சமனாய் கலந்து சீனி சேர்த்து சாப்பிட பித்தம் நீங்கும்.
  35. சீரகம்,நெல்லிவற்றல்,ஏலம்,இஞ்சி,சுக்கு, விலாமிச்சம்வேர் சமன் பொடித்து சமன் நெற்பொரி, சீரகம் தூள்கலந்து திரிகடி நெய்யில் கொள்ள பித்தம் நீங்கும்.
  36. சீரகம்,நெல்லிவற்றல்,ஏலம் சமன் பொடித்து சமன் சீனி கலந்து தேனில் கொள்ள பித்தம் நீங்கும்.

Comments

Popular Posts

அருள்வெளி சித்தர் 108 போற்றி

பரம்பொருள் அருட்பெரும் ஜோதி ஓம் ஸ்ரீ அருள்வெளி சித்தர் பரம்பொருள் அருட்பெரும் ஜோதி ஓம் ஸ்ரீ அருள்வெளி சித்தர் ஓம் ஸ்ரீ அருள்வெளி சித்தர் 108 போற்றி 1. அன்பே உருவான அருள்வேளிக் சித்தனே போற்றி ! 2. அகர முதலாய் அமர்ந்தாய் போற்றி ! 3. அறிவிற் கறிவான ஆதுவிதனே போற்றி ! 4. அறத்தின் வடிவே ஐயனே போற்றி ! 5. அடிமை எமைக் காக்கும் அத்தா போற்றி ! 6. அனாதிப் பரம்பொருள் ஆயினே போற்றி ! 7. அமரர் வணங்கும் அரியே போற்றி ! 8. அண்டினோர்க் காதரவு அளிப்பாய் போற்றி ! 9. அன்பே சிவமேன் றறிந்தாய் போற்றி ! 10. அன்பே சிவமாய் அமர்ந்தாய் போற்றி ! 11. அடக்கம் ஆன  சிவமே போற்றி ! 12. ஆனந்த வடிவச் சித்தனே போற்றி ! 13. ஆகாயம் எல்லாம் அளந்தாய் போற்றி ! 14. ஆதியே போற்றி சோதியே போற்றி ! 15. ஆலத்தை அமுதாய் ஆக்குவை போற்றி ! 16. ஆருரிச் சிவமே அழகா போற்றி ! 17. ஆசை வித்த அரனே போற்றி ! 18. ஆணவ மாயை அழித்தாய் போற்றி ! 19. ஆவியில் உறையும் ஐயா போற்றி ! 20. ஆத்தும தத்துவம் அறிவிப்பாய் போற்றி ! 21. ஆலமர் செல்வ அரசே போற்றி ! 22. இகர மாகி எழுந்தாய் போற்றி ! 23. இறைவி இறைவன் வடிவே போற்றி ! 24. இகபர சுகங்கள் தருவாய் ...

அத்தி

1. மூலிகையின் பெயர் :- அத்தி. 2. வேறு பெயர் :- அதவம் மரம் 3. தாவரப்பெயர் :- FICUS GLOMERATA, FICUS AURICULATE. 4. தாவரக்குடும்பம் :- MORACEAE. 5. பயன்தரும் பாகங்கள் :- இலை, பிஞ்சு, காய், பழம், பால், பட்டை ஆகியன. 6. வளரியல்பு :- அத்தி களிமண் நிலம் மற்றும் ஆற்றுப்படுகைகளில் நன்கு வளரும். மாற்றடுக்கில் அமைந்த முழுமையான இலைகளை உடைய பெரு  (FICUS GLOMERATA , ROXB ; MORACEAE ) மர வகையைச் சேர்ந்தது.நாட்டு அத்தி (COUNTRY FIG), வெள்ளை அத்தி (GULAR FIG), நல்ல அத்தி (FICUS GLOMERATA CLUSTER FIG) என பல வகை அத்தி மரங்கள் உண்டு. அத்தி அளவான உயரமுடைய நடுத்தர மரமாகும். இம்மரம் சுமார் 10 மீட்டர் வரை உயரமாக வளர்கிறது. மரத்தின் பட்டை சாம்பல் மற்றும் சிவப்பு நிறத்தில் காணப்படுகிறது. அத்தி இலைகளில் மூன்று நரம்புகள் இருக்கும். காய்கள் சற்று நீளமான முட்டை வடிவில் தண்டிலும், கிளைகளிலும் அடிமரத்திலும் கொத்துக் கொத்தாகத் தோன்றும். பெரிய நெல்லிக்காய் அளவில் உருண்டையாக சிறிது பச்சை நிறத்துடன் இருக்கும். காய் பழுத்த பின்பு கொய்யாப்பழத்தைப் போல் வெளிறிய மஞ்சள் நிறமாக மாறிவிடும். பழங்கள் தானே கீழே உத...

வர்மம் varmam

வர்மங்களின் வகைகள்..! வர்மக் கலையை அகத்தியர் நான்கு பெரும் பிரிவுகளாய் பிரித்திருக்கிறார். உடலில் உள்ள வர்ம புள்ளிகள் மற்றும், அவற்றை கையாளும் விதத்தினால் இவற்றை வேறு படுத்துகிறார். இவை “படு வர்மம்”, ”தொடு வர்மம்”, ”தட்டு வர்மம்”, ”நோக்கு வர்மம்” படுவர்மம் நான்கு வகை வர்மங்களில் மிகவும் ஆபாயகரமான பிரிவு இதுவேயாகும். உடலிலுள்ள வர்மப் பகுதிகளில் அடியோ அல்லது தாக்குதலோ ஏற்படுமானால் அப்போது ஏற்படும் வர்மமே "படுவர்மம்" என்கிறார். இந்த படுவர்ம தாக்குதலுக்கு உள்ளாகும் நபர்கள் உயிரிழக்கும் வாய்ப்புக்கள் அதிகம் உள்ளதால் இவை மிகவும் ஆபத்தானவை என்று அகத்தியர் குறிப்பிடுகிறார். ஒரு மனிதன் படுவர்மப் புள்ளிகளில் அடிபட்டால் உடனடியாக மயங்கி விழுவான் என்றும், அவன் வாய் பிளந்து நாக்கு வெளியே தள்ளும், வாயில் நுரையும் வெளியேறும் அத்துடன் அந்த அடிபட்ட இடங்களில் கைவைத்து பார்த்தால் அந்த இடம் மிகவும் குளிர்ச்சியாகக் காணப்படும் என்றும் குறிப்பிடுகிறார். எல்லோராலும் இதை செய்திட முடியாது என்றும், மிகுந்த பயிற்சி உள்ள ஒருவரால் மட்டுமே இத்தகைய செயல்களை செய்திட முடியும் என்றும் கூறுகிறார். தொடு...

குண்டலினி ஆற்றல் 3

குண்டலினியை எப்படி எல்லாம் எழுப்பலாம்! மூலாதாரத்தில் புதைந்திருக்கும் குண்டலினியை எழுப்பிட பல்வேறு உத்திகள் கூறப் பட்டிருக்கின்றன. பொதுவில் பிராணாயாமம் எனப்படும் மூச்சுப் பயிற்சி, ஆசனங்கள், முத்திரைகள் இவைகளால் குண்டலினியை எழுப்ப முடியுமாம். இராஜயோகிகள் சலனமற்ற தியானத்தினாலும், மனப் பயிற்சியினாலும் எழுப்புகின்றனர். சாமான்யர்கள் பக்தி அதாவது முழுமையான சரணாகதியின் மூலம் எழுப்புகின்றனர். ஞானிகளோ பிரித்து அறியும் மன உறுதியினால் எழுப்புகின்றனர். இதை விவேக வைராக்கியம் என்கின்றனர். தாந்திரிகர்கள் மந்திர சக்தியால் குண்டலினியை எழுப்புகின்றனர். இவற்றை எல்லாம் விட மிக எளிதான ஒரு முறையும் இருக்கிறது. அதாவது குருவினை பார்த்தல்(தரிசனம்),குருவினால் தொடப் படுதல், ஆசீர்வதித்தல் ஆகியவைகளால் சட்டென குண்டலினி எழும்பும். இத்தகைய தகுதி உடைய குருமார்கள் இப்போது மிகவும் குறைவு. மேலும் அத்தகையவர்கள் இதை எல்லோருக்கும் அருளுவதுமில்லை. ஆக, நம்மில் உறைந்திருக்கும் குண்டலினியை எழுப்பிட இத்தனை வகைகள் இருக்கிறது. எனினும் நமது உடல் மற்றும் மனப் பக்குவத்திற்கு ஏற்ற வகையை தெரிவு செய்ய குருவினால் மட்டுமே முடியும...

குண்டலினி ஆற்றல் 9 விசுத்தி

குண்டலினி - விசுத்தி. மூலாதாரத்திலிருந்து ஐந்தாவது சக்கரமான விசுத்தி பற்றி இன்று பார்ப்போம். இதைப் பற்றி அகத்தியர் பின் வருமாறு விளக்குகிறார். ஆச்சப்பா வனாகததி னொடுக்கஞ்சொன்னோம் அறையுகிறேன் விசுத்தியி னடவைக்கேளு மாச்சப்பா வதற்க்குமேல் பன்னிரெண்டங்குலம் பாச்சப்பா பதினாறு யிதழ்தா னாகும் பாலகனே அட்சரந்தான் வகாரமாகும் வதுநடுவில் சதாசிவனும் சாகினியுமாமே. - அகத்தியர். இந்த சக்தி ஆதார மையமானது நமது தொண்டையின் அடிப்பாகத்தில் சுழுமுனை நாடியில் அமைந்து இருப்பதாக குறிப்பிடுகின்றனர். நமது குரல்வளை, மூச்சுக் குழாய், தையராய்டு சுரப்பிகள், நுரையீரல், கைகள் போன்ற உறுப்புகளுடன் விசுத்தி சக்கரம் தொடர்புடையதாக குறிப்பிடப் படுகிறது. பஞ்சாட்சர எழுத்துக்களான "சிவயநம" என்னும் எழுத்துகளில் ஒன்றான "வ" என்னும் எழுத்தையும், அதன் தத்துவத்தையும் விசுத்தி சக்கரம் விளக்குவதாக அமைகின்றது. இச்சக்கரத்தின் அதிதேவன் சதாசிவன், அதி தேவதை சாகினி. பஞ்ச பூதங்களில் ஒன்றான ஆகாசம் இதன் மூலக்கூறு. இதன் மூல மந்திரம் “ஹம்” எனப்படுகிறது. இந்த சக்கரத்திலிருந்து தாமரை இதழ் போன்ற பதினாறு யோக நாடிகள் கிளம்புகின்றன....