Skip to main content

ஈரல் நெஞ்செரிச்சல் LIVER

தமனிகளில் (arteries) கழிவுப்பொருட்கள் அடைப்பு காரனமாக இதயம் சற்று அழுத்தமாக தள்ளுவதே இரத்த அழுத்தம்.
அதிக இரத்த அழுத்தம் (high blood pressure); தலைவலி, மண்டையில் இரைச்சல், மனதில் எரிச்சல், ஆழ்ந்து சிந்திக்க முடியாத பலவீனம், மூச்சு வாங்குதல், ஜீரணக்குறைவு, உடல் தளர்ச்சி. குறைந்த இரத்த அழுத்தம் (low pressure); தமனிகளில் அடைப்பின் காரணமாக இரத்தத்தை தள்ளும் ஆற்றல் குறைவு.
குறைவான இரத்த ஓட்டம் (poor circulation);
1.இரத்தத்திலும், இரத்தக் குழாய்களிலும் நச்சுப்பொருட்கள் அதிகம் சேர்வது; இவர்கள் உடல் பருத்தவர்களாக இருப்பார்கள்.
2.உடல் பலவீனம்; இவர்கள் ஒல்லியானவர்களாக இருப்பார்கள்
3.இதயம் நோயுற்றிருப்பது;
இதயம் சுருங்குதல் ; கல்லீரல் வேலை செய்யாது.கால் வீங்கும். வயிறு புடைக்கும். ஆயாசம் கானும்.நீர் இறங்காது.அதிக மது,மாது சேர்க்கையினால் உண்டாகும்.
இதயவீக்கம்; ஜீரணம் குறையும்,கல்லீரல் சரியாக வேலை செய்யாது. சிறுநீர் இறங்குவது குறையும். கால், வயிறு வீங்கும். மார்புதுடிப்பு அதிகம் கானும். அதிக மது, மாதுவினால் உண்டாகும். 
மனித உடலின் இருதயம் ஒரு நிமிடத்திற்கு 72 முறை சுருங்கி விரிகிறது. இந்த சுருங்கி விரியும் தன்மை 120/80 வரை சராசரி மனிதர்களுக்கு இருக்கும்.
இந்த சுருங்கி விரியும் தன்மை அதிகரித்தால் அதிக இரத்த அழுத்த நோயும் , குறைந்தால் குறைந்த இரத்த அழுத்த நோயும் ஏற்படுகிறது.
சில சமயங்களில் மனம் அதிக உணர்ச்சி வசப்படும்போது இரத்தம் வேகமாக உள்வாங்கி வெளியேறுகிறது. இதனால் இரத்த அழுத்தம் ஏற்படுகிறது. இதனை பித்த வாத அழுத்தம் என்பர்.
மனித உடலில் அமைந்துள்ள பித்த நீர் அதிகம் சுரந்து வாத நீருடன் கலந்து பித்த வாத அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. இதுதான் அதிக ரத்த அழுத்தம் என்கிறோம். அதே நிலையில் உடற்கூறுகளுக்குத் தகுந்தவாறு வாத நீர் அதிகம் சுரந்து பித்த நீருடன் சேரும்போது வாத பித்த அழுத்தம் ஏற்படுகிறது. இதுவே குறைந்த இரத்த அழுத்தம் என்கிறோம்,
  1. ரோஜா இதழ்களுடன் 2எடை சீனாகற்கண்டை பொடித்து கலந்து 4நாள் வெயிலில் வைக்க குல்கந்தாகும். காலைமாலை  சாப்பிட்டுவர  கல்லீரல்  பலமாகும்
  2. கீழாநெல்லியுடன் சமன் கரிசாலை சேர்த்தரைத்து பசும்பாலில் மண்டலம் கொள்ள பழுதுற்ற கல்லீரல் (gall bladder), மண்ணீரல் (enlargement of the spleen) வீக்கம் குறையும்
  3. தினசரி பப்பாளிப்பழம் சாப்பிட்டுவர கல்லீரல், மண்ணீரல் வீக்கம் குறையும்
  4. எருக்க இலையை அரைத்து மஞ்சள்தூள் கலந்து சாப்பிட்டுவர மண்ணீரல் நோய்கள் கட்டுப்படும
  5. சின்ன  வெங்காயச்சாறுடன்  மோர் கலந்து  தினம்  பருகிவர  இதயக் கோளாறுகள் கட்டுப்படும்                 
  6. சின்னவெங்காயச்சாறுடன்  தேன் கலந்து சாப்பிட்டுவர  நுரையீரல் நோய்கள்  தீரும்
  7. முருங்கைப்பூவை  பாலில்  காய்ச்சிப் பருக  நெஞ்செரிச்சல்  குணமாகும
  8. சங்குபற்பம் 400மி.கி, 50மிலி பாலில் தினம் 3வேளை பருகிவர நெஞ்செரிச்சல் குணமாகும்
  9. காவிக்கல் சூரணம் 1-2கிராம், 100மிலி நீரில் கொள்ள நெஞ்செரிச்சல் தீரும்
  10. குங்கிலியபற்பம் 500மி.கி, 50மிலி பாலில் தினம்3 வேளை பருகிவர நெஞ்செரிச்சல் குணமாகும்
  11. சிலாசத்துபறபம் 500மி.கி,தினம்2வேளை கொள்ள நெஞ்செரிச்சல் குணமாகும்
  12. திரிபலாதிசூரணம் 3-5கிராம் தினம்2வேளை வெந்நீரில் கலந்து சாப்பிட நெஞ்செரிச்சல் குணமாகும்.
  13. அதிமதுரச்சூரணம் 1கிராம் தினம்3வேளை 100மிலி நீருடன் கொள்ள நெஞ்செரிச்சல் தீரும்
  14. சீரகக்குடிநீர்,வெந்தயக்கூழ் சாப்பிட நெஞ்செரிச்சல் தீரும்
  15. உலர்ந்த கருப்புதிராட்சை, கடுக்காய், சர்க்கரை சமன் கலந்து உட்கொள்ள வயிறு, நெஞ்செரிச்சல் தீரும்.                                                                         
  16. பிரம்மதண்டு இலைசூரணம் 2கிராம் தேனில் குழைத்துச் சாப்பிட்டுவர நுரையீரல் நோய்கள் நீங்கும்
  17. சாறுவேளை இலையை கீரைபோல் சமைத்து உண்டுவர இதயம், மண்ணீரல், சிறுநீரகம் நன்கு செயல்பட வைக்கும்
  18. நொச்சி இலையை அரைத்துப் பற்றிட மண்ணீரல் வீக்கம் கரையும்
  19. பாகற்காயை வற்றலாக்கி வறுத்து உண்டுவர மூலம்,காமாலை, கல்லீரல், மண்ணீரல் குறைபாடுகள்  நீங்கும்
  20. மருதம்பட்டை தூளுடன் ஆடாதொடை இலைச்சாறு 1தேகரண்டி கலந்து வெள்ளாட்டுப் பாலில் கொள்ள நுரையீரல் புண் ஆறும்
  21. சதகுப்பைச் சூரணம் 1கிராம், சர்க்கரை கலந்து சாப்பிட்டுவர பசியின்மை தீரும். வாதநோயை கட்டுப்படுத்தும்.இரைப்பை,நுரையீரல்  மாசுகளை  அகற்றும்
  22. மருதம்பட்டைசூரணம்,மஞ்சள்கரிசாலைசூரணம்  சமன் கலந்து  திரிகடி, காலை மாலை தேனில் கொள்ள காமாலை,கல்லீரல்மண்ணீரல் வீக்கம் தீரும் .
  23. 20 கிராம் விராலியிலையை 250மிலி நீரில் 1நாள் ஊறவைத்து, வடித்து, 20மிலி பாலில் கலந்து உண்டுவர நுரையீரல் நோய்கள் தீரும்                                                                        
  24. தினம் 8 அத்திபழங்களும்,6 வாதுமைபருப்பும் சாப்பிட்டுவர மண்ணீரல் வீக்கம் தீரும்..                                                                                                                                                            
  25. 500மிலி மாம்பழச்சாறுடன் தேன் சமன் கலந்து சாப்பிட்டுவர மண்ணீரல் வீக்கம் குணமாகும்.                                                                                                                                                   
  26. பெரிய இனிப்பு மாதுளம்பழத்தின் மேல்துளையிட்டு வாதுமை எண்ணை 15 மிலி ஊற்றி மூடி,பாத்திரத்தில் வைத்து சூடேற்றி,பழத்தை விதையுடன் மென்று சாப்பிட்டுவர கடுமையான இதயவலி(angina pectoris),நீடித்த இருமல் குணமாகும்.                               
  27. 100கிராம் திராட்சையை பன்னீரில் ஊறவைத்து பிழிந்து,வடித்துப் பருக,இதய படபடப்பு,இதயபலவீனம்,இதயத்தின் விரைவான துடிப்பு  குணமாகும்.                                  
  28. தேன் தொடர்ந்து மாதக்கணக்கில் சாப்பிட்டுவர எவ்வளவு பலவீனமான இதயமும் பலமடையும்.                                                                                                                                  
  29. 5செம்பருத்திப்பூக்களை 500மிலி நீரிலிட்டு பாதியாக காய்ச்சி காலைமாலை பருகிவர எல்லா இதய நோய்களும் நீங்கும்.                                                                           
  30. தக்காளிசாறு30மிலி, எலுமிச்சைச்சாறு15மிலி,தேன்8மிலி  கலந்து காலை மாலை வெறும் வயிற்றில்  சாப்பிட்டு வந்தால் கல்லீரலைப் பற்றிய நோய்கள் அனைத்தும் குணமாகும்.                                                                                                                                               
  31. 200மிலி பசும்பாலில்,அரைமுடிஎலுமிச்சைசாறு,வெல்லம் அல்லது பனை வெல்லம் சேர்த்துக் குடித்துவர கல்லீரல் நோய்கள் குணமாகும்.                                                             
  32. எலுமிச்சைசாற்றை வெந்நீரில் பலமுறை தினம் பருகிவர கல்லீரல் வலுவடையும்.                    
  33. நாவல்பழங்களை அதிகம் சாப்பிட்டுவர கல்லீரல் வலுவடைந்து பசி எடுக்கும்.                                                          
  34. சீந்தில் சர்க்கரை 1கிராம் சாப்பிட்டு வர வயிற்றுக்கடுப்பு, வயிற்றுப்போக்கு நீங்கும். கல்லீரல்,மண்ணீரல் பலப்படும்
  35. பாதாம் பருப்பு - 2,முந்திரி பருப்பு - 2, பேரிச்சை - 2,உலர்ந்த திராட்சை - 4, காலை மாலை சாப்பிட்டு வர குறைந்த இரத்த அழுத்த பாதிப்பிலிருந்து விடுபடலாம்.
  36. நெல்லி வற்றல், பச்சைப்பயிறு வகைக்கு 20 கிராம், ஒரு லிட்டர் தண்ணீரிலிட்டு 200 மில்லியாக சுண்டக்காய்ச்சி காலை,மாலை 100மிலி வீதம் சாப்பிட்டு வர இரத்தக் கொதிப்பு குறையும்.
  37. நெல்லிக்காய், சீரகம், பூண்டு, சின்ன வெங்காயம் அரைத்து உணவுடன் சோ்த்து சாப்பிட்டு வர இரத்தத்தில் கொழுப்பு குறையும்.
  38. அருகம்புல்லை சுத்தம் செய்து கழுவி சாறு எடுத்து, ஐந்து பங்கு சுத்தமான தண்ணீர் சோ்த்து சாப்பிட்டு வர இரத்த அழுத்தம் குறையும்.
  39. அகத்தி கீரை, சுண்டைவற்றல் சமைத்து அடிக்கடி உணவில் சேர்த்து சாப்பிட்டு வர இரத்த அழுத்தம் குறையும்.
  40. கறிவேப்பிலைகளை நீர் விட்டு அரைத்து சாறு எடுத்து சிறிது எலுமிச்சைச்சாறு கலந்து காலையில் குடித்து வர உயர் இரத்த அழுத்தம் கட்டுப்படும்.
  41. சடாமஞ்சில் வேர், கற்பூரம்,இலவங்கப்பட்டை நன்றாக இடித்து போட்டு நீர் விட்டு காய்ச்சி வடிகட்டி குடித்து வர குறைந்த இரத்த அழுத்தம் மாறும்.
  42. காலை வெறும் வயிற்றில் 30 மில்லி அளவு கீழாநெல்லிச் சாறு குடித்து வர கல்லீரல் சம்பந்தப்பட்ட நோய்கள் குணமாகும்.
  43. துளசிச்சாற்றை தினம் குடித்து வர கல்லீரல், மண்ணீரல்நோய்களை தடுக்கும்.
  44. பருப்பு கீரை, கீழா நெல்லி சம அளவில் எடுத்து மஞ்சள் சேர்த்து அரைத்து சாப்பிட கல்லீரல் வீக்கம் வற்றும்.
  45. பொன்னாங்கண்ணிக் கீரையை பருப்புடன் கடைந்து சாப்பிட்டு வர கல்லீரல் நோய் குணமாகும்.
  46. தேனில் ஊறவைத்த நெல்லிக்காய் தினசரி ஒன்று சாப்பிட்டு வர நுரையீரல் பலப்படும்.
  47. பத்துகிராம் இஞ்சி, பூண்டு அரைத்து, ஒரு தம்ளர் வெந்நீரில் கலந்து காலை, மாலை இரண்டு நாட்கள் சாப்பிட மார்பு வலி தீரும்.
  48. சுக்கு, மிளகு, திப்பிலி, தாமரை இதழ், வெல்லம் சேர்த்து தண்ணீரில் விட்டுக் கொதிக்க வைத்து வடிகட்டி இரவில் ஒரு தம்ளர் சாப்பிட்டுவர மாரடைப்பைத் தடுக்கும்.
  49. தூதுவளை சாறு 30 மிலி அளவில் தினம் காலையில் குடித்து வர உடலில் சேரும் அதிகப்படியான கொழுப்பு கரையும்.
  50. பூண்டு, வெங்காயம் அதிகம் உணவில் சேர்த்து வர தேவையற்ற கொழுப்பு குறையும்.
  51. வெண்தாமரை இலை – 4 பங்கு, ஆடுதிண்ணாபாளை வேர் – 1 பங்கு நிழலில் உலர்த்தி இடித்து பொடித்து காலை, இரவு 1 தேகரண்டி தேனில் குழைத்து சாப்பிட(இதய அடைப்பு உள்ளவர்கள் மூன்று வேளையும், 45 வயதுக்கு மேல் உள்ளவர்கள் வாரம் மூன்று நாட்கள்)  இதயநோயே வராது,
  52. உலர் திராட்சைப் பழத்தை வெது வெதுப்பான தண்ணீரில் அரை மணி நேரம் ஊறவைத்து காலையில் அருந்த மாதவிடாய்க் கோளாறுகள், இதய நோய் தீரும்.
  53. செம்பருத்திப் பூ இதழ்களைத் தண்ணீரில் போட்டு நன்றாகக் கொதிக்க வைத்து வடிகட்டி, பால் சேர்த்துச் சாப்பிட ரத்தஅழுத்தம் குறையும்
  54. தினம் தயிர் சாப்பிட்டு வர‌ இரத்தக் குழாய் அடைப்பு நீங்கும்.
  55. கொதிக்க வைத்து ஆறிய நீரில் சீரகப் பொடி 12 நேரம் ஊறவைத்து குடித்து வர‌ இரத்தம் அழுத்தம் சீர்படும்
  56. ஒரு தம்ளர் மோரில் எலுமிச்சம் பழச்சாறு பிழிந்து சாப்பிட இரத்த அழுத்தம் சீர்படும்.
  57. அகத்திக் கீரையை வாரம் 2 முறைசாப்பிட்டு வர‌ இரத்தக் கொதிப்பு குணமாகும்.
  58. உடலை நன்கு சுத்தப்படுத்த பூண்டு ஒரு சிறந்த உணவுப் பொருள். ஏனெனில்  பூண்டு கல்லீரலில் உள்ள நொதிப் பொருளை சரியாக இயக்குகிறது. அதாவது, உணவில் உள்ள ஊட்டச்சத்துக்களை உறிஞ்சி, டாக்ஸின்களை வெளியேற்றுகிறது. மேலும் பூண்டில் இருக்கும் அல்லீசின் மற்றும செலினியம் என்னும் பொருட்கள், கல்லீரலின் இயக்கத்திற்கு உதவுகிறது.

Comments

Popular Posts

அருள்வெளி சித்தர் 108 போற்றி

பரம்பொருள் அருட்பெரும் ஜோதி ஓம் ஸ்ரீ அருள்வெளி சித்தர் பரம்பொருள் அருட்பெரும் ஜோதி ஓம் ஸ்ரீ அருள்வெளி சித்தர் ஓம் ஸ்ரீ அருள்வெளி சித்தர் 108 போற்றி 1. அன்பே உருவான அருள்வேளிக் சித்தனே போற்றி ! 2. அகர முதலாய் அமர்ந்தாய் போற்றி ! 3. அறிவிற் கறிவான ஆதுவிதனே போற்றி ! 4. அறத்தின் வடிவே ஐயனே போற்றி ! 5. அடிமை எமைக் காக்கும் அத்தா போற்றி ! 6. அனாதிப் பரம்பொருள் ஆயினே போற்றி ! 7. அமரர் வணங்கும் அரியே போற்றி ! 8. அண்டினோர்க் காதரவு அளிப்பாய் போற்றி ! 9. அன்பே சிவமேன் றறிந்தாய் போற்றி ! 10. அன்பே சிவமாய் அமர்ந்தாய் போற்றி ! 11. அடக்கம் ஆன  சிவமே போற்றி ! 12. ஆனந்த வடிவச் சித்தனே போற்றி ! 13. ஆகாயம் எல்லாம் அளந்தாய் போற்றி ! 14. ஆதியே போற்றி சோதியே போற்றி ! 15. ஆலத்தை அமுதாய் ஆக்குவை போற்றி ! 16. ஆருரிச் சிவமே அழகா போற்றி ! 17. ஆசை வித்த அரனே போற்றி ! 18. ஆணவ மாயை அழித்தாய் போற்றி ! 19. ஆவியில் உறையும் ஐயா போற்றி ! 20. ஆத்தும தத்துவம் அறிவிப்பாய் போற்றி ! 21. ஆலமர் செல்வ அரசே போற்றி ! 22. இகர மாகி எழுந்தாய் போற்றி ! 23. இறைவி இறைவன் வடிவே போற்றி ! 24. இகபர சுகங்கள் தருவாய் ...

அத்தி

1. மூலிகையின் பெயர் :- அத்தி. 2. வேறு பெயர் :- அதவம் மரம் 3. தாவரப்பெயர் :- FICUS GLOMERATA, FICUS AURICULATE. 4. தாவரக்குடும்பம் :- MORACEAE. 5. பயன்தரும் பாகங்கள் :- இலை, பிஞ்சு, காய், பழம், பால், பட்டை ஆகியன. 6. வளரியல்பு :- அத்தி களிமண் நிலம் மற்றும் ஆற்றுப்படுகைகளில் நன்கு வளரும். மாற்றடுக்கில் அமைந்த முழுமையான இலைகளை உடைய பெரு  (FICUS GLOMERATA , ROXB ; MORACEAE ) மர வகையைச் சேர்ந்தது.நாட்டு அத்தி (COUNTRY FIG), வெள்ளை அத்தி (GULAR FIG), நல்ல அத்தி (FICUS GLOMERATA CLUSTER FIG) என பல வகை அத்தி மரங்கள் உண்டு. அத்தி அளவான உயரமுடைய நடுத்தர மரமாகும். இம்மரம் சுமார் 10 மீட்டர் வரை உயரமாக வளர்கிறது. மரத்தின் பட்டை சாம்பல் மற்றும் சிவப்பு நிறத்தில் காணப்படுகிறது. அத்தி இலைகளில் மூன்று நரம்புகள் இருக்கும். காய்கள் சற்று நீளமான முட்டை வடிவில் தண்டிலும், கிளைகளிலும் அடிமரத்திலும் கொத்துக் கொத்தாகத் தோன்றும். பெரிய நெல்லிக்காய் அளவில் உருண்டையாக சிறிது பச்சை நிறத்துடன் இருக்கும். காய் பழுத்த பின்பு கொய்யாப்பழத்தைப் போல் வெளிறிய மஞ்சள் நிறமாக மாறிவிடும். பழங்கள் தானே கீழே உத...

வர்மம் varmam

வர்மங்களின் வகைகள்..! வர்மக் கலையை அகத்தியர் நான்கு பெரும் பிரிவுகளாய் பிரித்திருக்கிறார். உடலில் உள்ள வர்ம புள்ளிகள் மற்றும், அவற்றை கையாளும் விதத்தினால் இவற்றை வேறு படுத்துகிறார். இவை “படு வர்மம்”, ”தொடு வர்மம்”, ”தட்டு வர்மம்”, ”நோக்கு வர்மம்” படுவர்மம் நான்கு வகை வர்மங்களில் மிகவும் ஆபாயகரமான பிரிவு இதுவேயாகும். உடலிலுள்ள வர்மப் பகுதிகளில் அடியோ அல்லது தாக்குதலோ ஏற்படுமானால் அப்போது ஏற்படும் வர்மமே "படுவர்மம்" என்கிறார். இந்த படுவர்ம தாக்குதலுக்கு உள்ளாகும் நபர்கள் உயிரிழக்கும் வாய்ப்புக்கள் அதிகம் உள்ளதால் இவை மிகவும் ஆபத்தானவை என்று அகத்தியர் குறிப்பிடுகிறார். ஒரு மனிதன் படுவர்மப் புள்ளிகளில் அடிபட்டால் உடனடியாக மயங்கி விழுவான் என்றும், அவன் வாய் பிளந்து நாக்கு வெளியே தள்ளும், வாயில் நுரையும் வெளியேறும் அத்துடன் அந்த அடிபட்ட இடங்களில் கைவைத்து பார்த்தால் அந்த இடம் மிகவும் குளிர்ச்சியாகக் காணப்படும் என்றும் குறிப்பிடுகிறார். எல்லோராலும் இதை செய்திட முடியாது என்றும், மிகுந்த பயிற்சி உள்ள ஒருவரால் மட்டுமே இத்தகைய செயல்களை செய்திட முடியும் என்றும் கூறுகிறார். தொடு...

குண்டலினி ஆற்றல் 3

குண்டலினியை எப்படி எல்லாம் எழுப்பலாம்! மூலாதாரத்தில் புதைந்திருக்கும் குண்டலினியை எழுப்பிட பல்வேறு உத்திகள் கூறப் பட்டிருக்கின்றன. பொதுவில் பிராணாயாமம் எனப்படும் மூச்சுப் பயிற்சி, ஆசனங்கள், முத்திரைகள் இவைகளால் குண்டலினியை எழுப்ப முடியுமாம். இராஜயோகிகள் சலனமற்ற தியானத்தினாலும், மனப் பயிற்சியினாலும் எழுப்புகின்றனர். சாமான்யர்கள் பக்தி அதாவது முழுமையான சரணாகதியின் மூலம் எழுப்புகின்றனர். ஞானிகளோ பிரித்து அறியும் மன உறுதியினால் எழுப்புகின்றனர். இதை விவேக வைராக்கியம் என்கின்றனர். தாந்திரிகர்கள் மந்திர சக்தியால் குண்டலினியை எழுப்புகின்றனர். இவற்றை எல்லாம் விட மிக எளிதான ஒரு முறையும் இருக்கிறது. அதாவது குருவினை பார்த்தல்(தரிசனம்),குருவினால் தொடப் படுதல், ஆசீர்வதித்தல் ஆகியவைகளால் சட்டென குண்டலினி எழும்பும். இத்தகைய தகுதி உடைய குருமார்கள் இப்போது மிகவும் குறைவு. மேலும் அத்தகையவர்கள் இதை எல்லோருக்கும் அருளுவதுமில்லை. ஆக, நம்மில் உறைந்திருக்கும் குண்டலினியை எழுப்பிட இத்தனை வகைகள் இருக்கிறது. எனினும் நமது உடல் மற்றும் மனப் பக்குவத்திற்கு ஏற்ற வகையை தெரிவு செய்ய குருவினால் மட்டுமே முடியும...

குண்டலினி ஆற்றல் 9 விசுத்தி

குண்டலினி - விசுத்தி. மூலாதாரத்திலிருந்து ஐந்தாவது சக்கரமான விசுத்தி பற்றி இன்று பார்ப்போம். இதைப் பற்றி அகத்தியர் பின் வருமாறு விளக்குகிறார். ஆச்சப்பா வனாகததி னொடுக்கஞ்சொன்னோம் அறையுகிறேன் விசுத்தியி னடவைக்கேளு மாச்சப்பா வதற்க்குமேல் பன்னிரெண்டங்குலம் பாச்சப்பா பதினாறு யிதழ்தா னாகும் பாலகனே அட்சரந்தான் வகாரமாகும் வதுநடுவில் சதாசிவனும் சாகினியுமாமே. - அகத்தியர். இந்த சக்தி ஆதார மையமானது நமது தொண்டையின் அடிப்பாகத்தில் சுழுமுனை நாடியில் அமைந்து இருப்பதாக குறிப்பிடுகின்றனர். நமது குரல்வளை, மூச்சுக் குழாய், தையராய்டு சுரப்பிகள், நுரையீரல், கைகள் போன்ற உறுப்புகளுடன் விசுத்தி சக்கரம் தொடர்புடையதாக குறிப்பிடப் படுகிறது. பஞ்சாட்சர எழுத்துக்களான "சிவயநம" என்னும் எழுத்துகளில் ஒன்றான "வ" என்னும் எழுத்தையும், அதன் தத்துவத்தையும் விசுத்தி சக்கரம் விளக்குவதாக அமைகின்றது. இச்சக்கரத்தின் அதிதேவன் சதாசிவன், அதி தேவதை சாகினி. பஞ்ச பூதங்களில் ஒன்றான ஆகாசம் இதன் மூலக்கூறு. இதன் மூல மந்திரம் “ஹம்” எனப்படுகிறது. இந்த சக்கரத்திலிருந்து தாமரை இதழ் போன்ற பதினாறு யோக நாடிகள் கிளம்புகின்றன....