Skip to main content

ஸ்ரீ சூர்ய பகவான் சுப்ரபாதம் சூர்யாஷ்டகம்

ஸ்ரீ சூர்ய பகவான் சுப்ரபாதம்

கொனார்க் சூரிய கோயில்

அருள்கோடிப் பிரகாசமாய் அவனிக்கு

ஒளிதந்து இருள்நீக்கி அருள் புரியும்

சூர்ய பகவானே உதித்தெழுவாய்

நீ எழுகில் இவ்வுலகெழும் இவ்வுலகுக்கு

நீயே ஒளிமயம் இம் மண்ணுயிர்களை துயிலெழுப்ப

சூர்ய பகவானே உதித்தெழுவாய்

மங்கலக் குடியினில் மங்களமாய்க்

குடிகொண்டு மங்காத ஒளிவீசும்

சூர்ய பகவானே உதித்தெழுவாய்

கிழக்குதிசையில் வெண்தாமரை மலரில்

பத்மாசனமிட்டு அமர்ந்திருப் போனே

சூர்ய பகவானே உதித்தெழுவாய்

சூர்யனார் கோவிலில் சுந்தரமாய்

வீற்றிருக்கும் வீர்யனே ஆதித்யனே

சூர்ய பகவானே உதித்தெழுவாய்

நவகோள்களுக்கு ஆதியாய் விளங்கி சிவபெருமானை

அதி தேவதையாய் கொண்ட ஞாயிறே

சூர்ய பகவானே உதித்தெழுவாய்

கிருத்திகை உத்திரம் உத்திராட நக்ஷ்த்திரத்துக்கு

அதிபதியானவனே சந்திரன் செவ்வாய்

பிரகஸ்பதியை நண்பனாய் கொண்டவனே

சூர்ய பகவானே உதித்தெழுவாய்

சமுக்யாதேவி சாயாதேவி சமேதராய் காட்சிதரும்

சூர்ய பகவானே உதித்தெழுவாய்

சப்தகுதிரைகளைப் பூட்டி ஒரே

 சக்கரத்தில் தேரைஓட்டி பவனிவரும்

சூர்ய பகவானே உதித்தெழுவாய்

அக இருளை நீக்கி சுகமுடன் நான் வாழ

உன்திருமுகம் காட்டி அருள்புரியும்

சூர்ய பகவானே உதித்தெழுவாய்

சனீஸ்வரரையும் தர்மராஜனையும் மகனாய்ப் பெற்றவனே

அஸ்வினிக்கும் யமுனைக்கும் தந்தையாய் நிற்பவனே

சூர்ய பகவானே உதித்தெழுவாய்

தேரும் மயிலும் வாகனமாய்க் கொண்டவனே பாருலகம் போற்றும்

சூர்ய பகவானே உதித்தெழுவாய்

செந்நிற மேனியனே செந்தாமரைப் ப்ரியனே

இச்செகம் போற்றும் கதிரவனே

சூர்ய பகவானே உதித்தெழுவாய்

கண்ணால் காணும் கடவுள் நீ

கதிரொளி வீசும் கிரகமும் நீ

உன்னால் வாழும் உயிர்களைக் காக்க

சூர்ய பகவானே உதித்தெழுவாய்

நாளையும் கோளையும் நம்பி வாழும்

இப்புவியில் நன்மைகள் பல புரியவே

சூர்ய பகவானே உதித்தெழுவாய்

மனித ஜாதகத்தில் பிதுர்காரகனாக விளங்கி

தைரியம் வெற்றி அனுகூலம் யாவும் தந்தருள்பவனே

சூர்ய பகவானே உதித்தெழுவாய்

விழியில் ஒளிதந்து புவியில்

புகழ்தந்து நல்வாழ்வு நல்கிடும்

சூர்ய பகவானே உதித்தெழுவாய்

வான் மழை பொழிந்திட பயிர்கள்

விளைந்திட வையகம் தழைத்திட

சூர்ய பகவானே உதித்தெழுவாய்

சூர்ய நமஸ்காரம் சர்வரோக நாசனம்

சூர்ய பகவானுக்கு ப்ரதி ஞாயிறன்று

விரதமிருந்து செந்தாமரை மலர்களால்

அர்ச்சித்தால் நலம் உண்டாகும்

சூர்யனின் வாகனமான மயிலுக்கு உணவளித்து

சூர்யனுக்கு உவந்த தானியமான கோதுமையை

செப்புப் பாத்திரத்திலிட்டு தானம் செய்து

சிவசூர்யநாராயணன் தாழ்பணிந்தால் கார்யசித்தியாகும்

சூர்யபகவானின் ஷேத்ரமான சூர்யனார் கோவில் சென்று

சிவசூர்யநாராயணனுக்கு செந்நிற ஆடை

அணிவித்து அபிஷேக ஆராதனை செய்து

வழிபட்டால் சர்வ ஜெயம் உண்டாகும்

சரணம் சரணம் சூர்யபகவானே சரணம்

சரணம் சரணம் ஆதித்யனே சரணம்

சரணம் சரணம் சூர்யநாராயணனே சரணம்

சரணம் சரணம் பகலவனே நின்பதமலரடி சரணம்

சரணம் சரணம் சூர்யபகவானே சரணம்

சரணம் சரணம் ஆதித்யனே சரணம்

சரணம் சரணம் சூர்யநாராயணனே சரணம்

சரணம் சரணம் பகலவனே நின்பதமலரடி சரணம்

சூரிய காயத்ரி  மந்திரம் :

ஓம் அஸ்வத்வஜாய வித்மஹே பாச ஹஸ்தாய தீமஹி தந்நோ சூர்யப் ப்ரசோதயாத்

ஸ்ரீ சூர்யாஷ்டகம்:

ஆதிதேவ நமஸ்துப்யம் ப்ரஸீத மம பாஸ்கர.

திவாகர நமஸ்துப்யம் ப்ரபாகர நமோஸ்துதே.

ஸப்தாச்வ ரதமாரூடம் ப்ரசண்டம் கஸ்யபாத்மஜம்.

ஸ்வேத பத்மதரம் தேவம் தம் ஸூர்யம் ப்ரணமாம்யஹம்.

லோஹிதம் ரதமாரூடம் ஸர்வலோக பிதாமஹம்.

மஹாபாப ஹரம் தேவம் தம் ஸூர்யம் ப்ரணமாம்யஹம்.

த்ரைகுண்யம் சமஹாசூரம் ப்ரஹ்ம விஷ்ணு மகேஸ்வரம்.

மஹாபாப ஹரம் தேவம் தம் ஸூர்யம் ப்ரணமாம்யஹம்.

ப்ருஹ்மிதம் தேஜ: புஞ்ஜம் சவாயும் ஆகாசம் ஏவச.

ப்ரபும் சஸர்வ லோகானாம் தம் ஸூர்யம் ப்ரணமாம்யஹம்.

பந்தூக புஷ்ப ஸங்காசம் ஹாரகுண்டல பூஷிதம்

ஏக சக்ரதரம் தேவம் தம் ஸூர்யம் ப்ரணமாம்யஹம்.

தம் ஸூர்யம் ஜகத்கர்த்தாரம் மஹாதேஜ ப்ரதீபனம்

மஹா பாபஹரம் தேவம் தம் ஸூர்யம் ப்ரணமாம்யஹம்.

தம் ஸூர்யம் ஜகதாம்நாதம் ஞான விஞ்ஞான மோக்ஷதம்

மஹா பாபஹரம் தேவம் தம் ஸூர்யம் ப்ரணமாம்யஹம்.

மஹா பாபஹரம் தேவம் தம் ஸூர்யம் ப்ரணமாம்யஹம்.


இதி ஸ்ரீ ஸூர்யாஷ்டகம் ஸம்பூர்ணம்

Comments

Popular Posts

அருள்வெளி சித்தர் 108 போற்றி

பரம்பொருள் அருட்பெரும் ஜோதி ஓம் ஸ்ரீ அருள்வெளி சித்தர் பரம்பொருள் அருட்பெரும் ஜோதி ஓம் ஸ்ரீ அருள்வெளி சித்தர் ஓம் ஸ்ரீ அருள்வெளி சித்தர் 108 போற்றி 1. அன்பே உருவான அருள்வேளிக் சித்தனே போற்றி ! 2. அகர முதலாய் அமர்ந்தாய் போற்றி ! 3. அறிவிற் கறிவான ஆதுவிதனே போற்றி ! 4. அறத்தின் வடிவே ஐயனே போற்றி ! 5. அடிமை எமைக் காக்கும் அத்தா போற்றி ! 6. அனாதிப் பரம்பொருள் ஆயினே போற்றி ! 7. அமரர் வணங்கும் அரியே போற்றி ! 8. அண்டினோர்க் காதரவு அளிப்பாய் போற்றி ! 9. அன்பே சிவமேன் றறிந்தாய் போற்றி ! 10. அன்பே சிவமாய் அமர்ந்தாய் போற்றி ! 11. அடக்கம் ஆன  சிவமே போற்றி ! 12. ஆனந்த வடிவச் சித்தனே போற்றி ! 13. ஆகாயம் எல்லாம் அளந்தாய் போற்றி ! 14. ஆதியே போற்றி சோதியே போற்றி ! 15. ஆலத்தை அமுதாய் ஆக்குவை போற்றி ! 16. ஆருரிச் சிவமே அழகா போற்றி ! 17. ஆசை வித்த அரனே போற்றி ! 18. ஆணவ மாயை அழித்தாய் போற்றி ! 19. ஆவியில் உறையும் ஐயா போற்றி ! 20. ஆத்தும தத்துவம் அறிவிப்பாய் போற்றி ! 21. ஆலமர் செல்வ அரசே போற்றி ! 22. இகர மாகி எழுந்தாய் போற்றி ! 23. இறைவி இறைவன் வடிவே போற்றி ! 24. இகபர சுகங்கள் தருவாய் ...

அகத்தியர் கூறும் பீஜ மந்திரங்களும் அவற்றின் பலன்களும்

அகத்தியர் கூறும் பீஜ மந்திரங்களும் அவற்றின் பலன்களும்! அகத்தியர் திருமந்திர விளக்கம் 22 என்னும் பாடலில் திருமந்திரமாகிய பஞ்சாக்ஷர மந்திரத்தைப் பற்றி, தத்புருஷம், அகோரம் ஆகிய முகங்கள் ஒவ்வொன்றிற்கும் இருபத்தைந்து வகைகளையும் வாமதேவ முகத்திற்கு ஒன்பது வகைகளையும், ஆக மொத்தம் 59 வகைகள் பற்றி மட்டுமே பாடலில் அகத்தியர் கூறுகிறார். தவிர ஒவ்வொரு வகை மந்திரத்தை உச்சரிப்பதனால் என்ன பலன் என்றும் கூறப்பட்டுள்ளது. தத்புருஷ முகத்தைச் சார்ந்த 25 வகை மந்திரங்களும் அவற்றை ஓதுவதால் உண்டாகும் பயன்கள் பற்றியும் செய்யுள் 5லிருந்து 11வரை அகத்தியர் பார்த்திடவே தற்புருஷம் இருபத் தஞ்சு பாடுகிறேன் நமசிவய அகோர மாகும். (செய்யுள்.5) என்று கூறுகிறார். அவையாவன: மந்திரம் பலன் 1. நங்-சிவயநம - விரும்பிய புத்திர பாக்கியம் கிடைக்கும். 2. அங்-சிவயநம - இயல்பாகத் தேக நோய் தீரும் 3. வங்-சிவயநம - யோகசித்தி காணலாகும். 4. உங்-சிவயநம - ஆயுள் விருத்தி 5. ஓம்-அங்-சிவயநம - ஐம்பூதங்களின் மேல் கட்டுப்பாடு உண்டாகும். 6. கிலி-நமசிவய - உலக வசியம் உண்டாகும். 7. ஹிரீம்-நமசிவய - நினைத்தது நடக்கும். 8. ஐ-உம்-நமசிவய - புத்தி, வித்தை நல்கும். ...

வர்மம் varmam

வர்மங்களின் வகைகள்..! வர்மக் கலையை அகத்தியர் நான்கு பெரும் பிரிவுகளாய் பிரித்திருக்கிறார். உடலில் உள்ள வர்ம புள்ளிகள் மற்றும், அவற்றை கையாளும் விதத்தினால் இவற்றை வேறு படுத்துகிறார். இவை “படு வர்மம்”, ”தொடு வர்மம்”, ”தட்டு வர்மம்”, ”நோக்கு வர்மம்” படுவர்மம் நான்கு வகை வர்மங்களில் மிகவும் ஆபாயகரமான பிரிவு இதுவேயாகும். உடலிலுள்ள வர்மப் பகுதிகளில் அடியோ அல்லது தாக்குதலோ ஏற்படுமானால் அப்போது ஏற்படும் வர்மமே "படுவர்மம்" என்கிறார். இந்த படுவர்ம தாக்குதலுக்கு உள்ளாகும் நபர்கள் உயிரிழக்கும் வாய்ப்புக்கள் அதிகம் உள்ளதால் இவை மிகவும் ஆபத்தானவை என்று அகத்தியர் குறிப்பிடுகிறார். ஒரு மனிதன் படுவர்மப் புள்ளிகளில் அடிபட்டால் உடனடியாக மயங்கி விழுவான் என்றும், அவன் வாய் பிளந்து நாக்கு வெளியே தள்ளும், வாயில் நுரையும் வெளியேறும் அத்துடன் அந்த அடிபட்ட இடங்களில் கைவைத்து பார்த்தால் அந்த இடம் மிகவும் குளிர்ச்சியாகக் காணப்படும் என்றும் குறிப்பிடுகிறார். எல்லோராலும் இதை செய்திட முடியாது என்றும், மிகுந்த பயிற்சி உள்ள ஒருவரால் மட்டுமே இத்தகைய செயல்களை செய்திட முடியும் என்றும் கூறுகிறார். தொடு...

இயற்பியல் பிரபஞ்சமும் தூய ஆற்றல் குண்டலினி

இயற்பியல், பிரபஞ்சமும்  தூய ஆற்றல், உலகளாவிய வெப்பநிலை மாறுபாடுகள், நீராவியின் மாறுபாடுகள், அதிர்வுகளின் அவதானிப்புகள், நமது சித்தாந்த தியான நிலை குண்டலினி ஆற்றல் தொடர்பும்.  ஒரு மின்காந்த புலம் என்பது காந்த மற்றும் மின்சார ஆற்றலால் நிரப்பப்பட்ட இடத்தின் ஒரு பகுதி. மின்காந்த புலங்கள் எல்லா இடங்களிலும் உள்ளன. எக்ஸ்-கதிர்கள் மற்றும் காமா கதிர்கள் போன்ற உயர் அதிர்வெண் மின்காந்த கதிர்வீச்சு “ அயனியாக்கம் ” மற்றும் மக்களுக்கு தீங்கு விளைவிக்கும், அதே நேரத்தில் குறைந்த அதிர்வெண் கொண்ட மின்காந்த கதிர்வீச்சு அல்லது “ அல்லாத அயனியாக்கம்,” மனிதர்களுக்கு பாதுகாப்பானதாகக் கருதப்படுகிறது, அல்லது சில மனித நோய்களுக்கு கூட ஒரு தீர்வாக கருதப்படுகிறது. பூமியைச் சுற்றியுள்ள மின்காந்த புலம் நம் உடலை அடைந்து அதன் உள்ளே இருக்கும் கட்டணங்களை பாதிக்கிறது. நம் உடல்கள் அதன் சொந்த மின்னியல் புலத்தைக் கொண்டுள்ளன. டி.என்.ஏவின் துகள்கள் கூட மின்காந்த புலங்களை உருவாக்க முடியும். அந்த அலைகள் நம் உடலின் உள் கடிகாரத்தை பிரதானமாக்குகின்றன மற்றும் தூக்க முறைகள் மற்றும் ஹார்மோன் சுரப்பை பாதிக்கின்றன. ஆல்பா மூளை அ...

தமிழில் உள்ள மயங்கொலிச்சொற்கள்

தமிழில் உள்ள மயங்கொலிச்சொற்கள்  அணல் - தாடி, கழுத்து அனல் - நெருப்பு அணி - அழகு அனி - நெற்பொறி அணு - நுண்மை அனு - தாடை, அற்பம் அணுக்கம் - அண்டை, அண்மை. அனுக்கம் - வருத்தம், அச்சம் அணை - படுக்கை, அணைத்துக் கொள்ளுதல் அனை - அன்னை, மீன் அணைய - சேர, அடைய அனைய - அத்தகைய அண்மை - அருகில் அன்மை - தீமை, அல்ல அங்கண் - அவ்விடம் அங்கன் - மகன் அண்ணம் - மேல்வாய் அன்னம் - சோறு, அன்னப்பறவை அண்ணன் - தமையன் அன்னன் - அத்தகையவன் அவண் - அவ்வாறு அவன் - சேய்மைச் சுட்டு, ஆண்மகன் ஆணகம் - சுரை ஆனகம் - துந்துபி ஆணம் - பற்றுக்கோடு ஆனம் - தெப்பம், கள் ஆணி - எழுத்தாணி, இரும்பாணி ஆனி - தமிழ் மாதங்களுள் ஒன்று ஆணேறு -ஆண்மகன் ஆனேறு - காளை, எருது ஆண் - ஆடவன் ஆன் - பசு ஆணை - கட்டளை, ஆட்சி ஆனை - யானை இணை - துணை, இரட்டை இனை - இன்ன, வருத்தம் இணைத்து - சேர்த்து இனைத்து - இத்தன்மையது இவண் - இவ்வாறு இவன் - ஆடவன், (அண்மைச் சுட்டு) ஈணவள் - ஈன்றவள் ஈனவள் - இழிந்தவள் உண் - உண்பாயாக உன் - உன்னுடைய உண்ணல் - உண்ணுதல் உன்னல் - நினைத்தல் உண்ணி - உண்பவன், ஒருவகைப் பூச்சி உன்னி - நினைத்து, குதிரை ஊண் - உணவு ஊன் - மாமிசம் எண்ண - நினைக்...