Skip to main content

ஸ்ரீ சூர்ய பகவான் சுப்ரபாதம் சூர்யாஷ்டகம்

ஸ்ரீ சூர்ய பகவான் சுப்ரபாதம்

கொனார்க் சூரிய கோயில்

அருள்கோடிப் பிரகாசமாய் அவனிக்கு

ஒளிதந்து இருள்நீக்கி அருள் புரியும்

சூர்ய பகவானே உதித்தெழுவாய்

நீ எழுகில் இவ்வுலகெழும் இவ்வுலகுக்கு

நீயே ஒளிமயம் இம் மண்ணுயிர்களை துயிலெழுப்ப

சூர்ய பகவானே உதித்தெழுவாய்

மங்கலக் குடியினில் மங்களமாய்க்

குடிகொண்டு மங்காத ஒளிவீசும்

சூர்ய பகவானே உதித்தெழுவாய்

கிழக்குதிசையில் வெண்தாமரை மலரில்

பத்மாசனமிட்டு அமர்ந்திருப் போனே

சூர்ய பகவானே உதித்தெழுவாய்

சூர்யனார் கோவிலில் சுந்தரமாய்

வீற்றிருக்கும் வீர்யனே ஆதித்யனே

சூர்ய பகவானே உதித்தெழுவாய்

நவகோள்களுக்கு ஆதியாய் விளங்கி சிவபெருமானை

அதி தேவதையாய் கொண்ட ஞாயிறே

சூர்ய பகவானே உதித்தெழுவாய்

கிருத்திகை உத்திரம் உத்திராட நக்ஷ்த்திரத்துக்கு

அதிபதியானவனே சந்திரன் செவ்வாய்

பிரகஸ்பதியை நண்பனாய் கொண்டவனே

சூர்ய பகவானே உதித்தெழுவாய்

சமுக்யாதேவி சாயாதேவி சமேதராய் காட்சிதரும்

சூர்ய பகவானே உதித்தெழுவாய்

சப்தகுதிரைகளைப் பூட்டி ஒரே

 சக்கரத்தில் தேரைஓட்டி பவனிவரும்

சூர்ய பகவானே உதித்தெழுவாய்

அக இருளை நீக்கி சுகமுடன் நான் வாழ

உன்திருமுகம் காட்டி அருள்புரியும்

சூர்ய பகவானே உதித்தெழுவாய்

சனீஸ்வரரையும் தர்மராஜனையும் மகனாய்ப் பெற்றவனே

அஸ்வினிக்கும் யமுனைக்கும் தந்தையாய் நிற்பவனே

சூர்ய பகவானே உதித்தெழுவாய்

தேரும் மயிலும் வாகனமாய்க் கொண்டவனே பாருலகம் போற்றும்

சூர்ய பகவானே உதித்தெழுவாய்

செந்நிற மேனியனே செந்தாமரைப் ப்ரியனே

இச்செகம் போற்றும் கதிரவனே

சூர்ய பகவானே உதித்தெழுவாய்

கண்ணால் காணும் கடவுள் நீ

கதிரொளி வீசும் கிரகமும் நீ

உன்னால் வாழும் உயிர்களைக் காக்க

சூர்ய பகவானே உதித்தெழுவாய்

நாளையும் கோளையும் நம்பி வாழும்

இப்புவியில் நன்மைகள் பல புரியவே

சூர்ய பகவானே உதித்தெழுவாய்

மனித ஜாதகத்தில் பிதுர்காரகனாக விளங்கி

தைரியம் வெற்றி அனுகூலம் யாவும் தந்தருள்பவனே

சூர்ய பகவானே உதித்தெழுவாய்

விழியில் ஒளிதந்து புவியில்

புகழ்தந்து நல்வாழ்வு நல்கிடும்

சூர்ய பகவானே உதித்தெழுவாய்

வான் மழை பொழிந்திட பயிர்கள்

விளைந்திட வையகம் தழைத்திட

சூர்ய பகவானே உதித்தெழுவாய்

சூர்ய நமஸ்காரம் சர்வரோக நாசனம்

சூர்ய பகவானுக்கு ப்ரதி ஞாயிறன்று

விரதமிருந்து செந்தாமரை மலர்களால்

அர்ச்சித்தால் நலம் உண்டாகும்

சூர்யனின் வாகனமான மயிலுக்கு உணவளித்து

சூர்யனுக்கு உவந்த தானியமான கோதுமையை

செப்புப் பாத்திரத்திலிட்டு தானம் செய்து

சிவசூர்யநாராயணன் தாழ்பணிந்தால் கார்யசித்தியாகும்

சூர்யபகவானின் ஷேத்ரமான சூர்யனார் கோவில் சென்று

சிவசூர்யநாராயணனுக்கு செந்நிற ஆடை

அணிவித்து அபிஷேக ஆராதனை செய்து

வழிபட்டால் சர்வ ஜெயம் உண்டாகும்

சரணம் சரணம் சூர்யபகவானே சரணம்

சரணம் சரணம் ஆதித்யனே சரணம்

சரணம் சரணம் சூர்யநாராயணனே சரணம்

சரணம் சரணம் பகலவனே நின்பதமலரடி சரணம்

சரணம் சரணம் சூர்யபகவானே சரணம்

சரணம் சரணம் ஆதித்யனே சரணம்

சரணம் சரணம் சூர்யநாராயணனே சரணம்

சரணம் சரணம் பகலவனே நின்பதமலரடி சரணம்

சூரிய காயத்ரி  மந்திரம் :

ஓம் அஸ்வத்வஜாய வித்மஹே பாச ஹஸ்தாய தீமஹி தந்நோ சூர்யப் ப்ரசோதயாத்

ஸ்ரீ சூர்யாஷ்டகம்:

ஆதிதேவ நமஸ்துப்யம் ப்ரஸீத மம பாஸ்கர.

திவாகர நமஸ்துப்யம் ப்ரபாகர நமோஸ்துதே.

ஸப்தாச்வ ரதமாரூடம் ப்ரசண்டம் கஸ்யபாத்மஜம்.

ஸ்வேத பத்மதரம் தேவம் தம் ஸூர்யம் ப்ரணமாம்யஹம்.

லோஹிதம் ரதமாரூடம் ஸர்வலோக பிதாமஹம்.

மஹாபாப ஹரம் தேவம் தம் ஸூர்யம் ப்ரணமாம்யஹம்.

த்ரைகுண்யம் சமஹாசூரம் ப்ரஹ்ம விஷ்ணு மகேஸ்வரம்.

மஹாபாப ஹரம் தேவம் தம் ஸூர்யம் ப்ரணமாம்யஹம்.

ப்ருஹ்மிதம் தேஜ: புஞ்ஜம் சவாயும் ஆகாசம் ஏவச.

ப்ரபும் சஸர்வ லோகானாம் தம் ஸூர்யம் ப்ரணமாம்யஹம்.

பந்தூக புஷ்ப ஸங்காசம் ஹாரகுண்டல பூஷிதம்

ஏக சக்ரதரம் தேவம் தம் ஸூர்யம் ப்ரணமாம்யஹம்.

தம் ஸூர்யம் ஜகத்கர்த்தாரம் மஹாதேஜ ப்ரதீபனம்

மஹா பாபஹரம் தேவம் தம் ஸூர்யம் ப்ரணமாம்யஹம்.

தம் ஸூர்யம் ஜகதாம்நாதம் ஞான விஞ்ஞான மோக்ஷதம்

மஹா பாபஹரம் தேவம் தம் ஸூர்யம் ப்ரணமாம்யஹம்.

மஹா பாபஹரம் தேவம் தம் ஸூர்யம் ப்ரணமாம்யஹம்.


இதி ஸ்ரீ ஸூர்யாஷ்டகம் ஸம்பூர்ணம்

Comments

Popular Posts

லக்னமும் தொழில் அமைப்பும்

என்ன லக்னம் எந்த தொழில் செய்யலாம் மேஷம் லக்னமும் தொழில் அமைப்பும் மேஷ லக்னத்தில் பிறந்தவர்களுக்கு ஜீவன ஸ்தானாதிபதி சனி பகவானாவார். பொதுவாக, தொழில் காரகன் என வர்ணிக்கப்படக்கூடிய சனி பகவான் இந்த லக்னத்திற்கு 10ம் அதிபதி என்பதால் அவர் சுக்கிரன், புதன், குரு போன்றகிரகங்களின் சேர்க்கை பெற்று பலமாக அமையப் பெற்றால்,சொந்தத் தொழில்  செய்து அதன் மூலம் சம்பாதிக்கக்கூடிய யோகம் உண்டாகும். மேஷ லக்னத்தில் பிறந்தவர்களுக்கு ஜீவனாதிபதி சனியே பாதகாதிபதியாகவும் இருப்பதால், வேலையாட்களிடமும் ஸ்பெகுலேஷன் சார்ந்த தொழில்  விஷயங்களிலும் முதலீடு செய்கின்ற போது முன்னெச்சரிக்கையுடன் இருந்து நிலையான விஷயங்களில் மட்டும் முதலீடு செய்தால், லாபங்களை அடைய முடியும். 10ம் அதிபதி சனி பலமாக அமையப் பெற்று சுபர் பார்வையுடனிருந்தால் இரும்பு, எந்திரங்கள், வண்டி,வாகனங்களில்  மூலம் அனுகூலங்கள், பழைய பொருட்களை விற்பனை செய்யும் தொழில், கடின உடல் உழைப்பு சார்ந்த தொழில்கள் போன்றவற்றை செய்ய நேரிடும். சனி சுக்கிரனுடன் புதனும் இருந்தால் ஒன்றுக்கும் மேற்பட்ட தொழில் யோகம், பலரை நிர்வாகம் செய்து சொந்த தொழில் செய்யக்கூடிய யோகம் உண்டாகும். அ

வர்மம் varmam

வர்மங்களின் வகைகள்..! வர்மக் கலையை அகத்தியர் நான்கு பெரும் பிரிவுகளாய் பிரித்திருக்கிறார். உடலில் உள்ள வர்ம புள்ளிகள் மற்றும், அவற்றை கையாளும் விதத்தினால் இவற்றை வேறு படுத்துகிறார். இவை “படு வர்மம்”, ”தொடு வர்மம்”, ”தட்டு வர்மம்”, ”நோக்கு வர்மம்” படுவர்மம் நான்கு வகை வர்மங்களில் மிகவும் ஆபாயகரமான பிரிவு இதுவேயாகும். உடலிலுள்ள வர்மப் பகுதிகளில் அடியோ அல்லது தாக்குதலோ ஏற்படுமானால் அப்போது ஏற்படும் வர்மமே "படுவர்மம்" என்கிறார். இந்த படுவர்ம தாக்குதலுக்கு உள்ளாகும் நபர்கள் உயிரிழக்கும் வாய்ப்புக்கள் அதிகம் உள்ளதால் இவை மிகவும் ஆபத்தானவை என்று அகத்தியர் குறிப்பிடுகிறார். ஒரு மனிதன் படுவர்மப் புள்ளிகளில் அடிபட்டால் உடனடியாக மயங்கி விழுவான் என்றும், அவன் வாய் பிளந்து நாக்கு வெளியே தள்ளும், வாயில் நுரையும் வெளியேறும் அத்துடன் அந்த அடிபட்ட இடங்களில் கைவைத்து பார்த்தால் அந்த இடம் மிகவும் குளிர்ச்சியாகக் காணப்படும் என்றும் குறிப்பிடுகிறார். எல்லோராலும் இதை செய்திட முடியாது என்றும், மிகுந்த பயிற்சி உள்ள ஒருவரால் மட்டுமே இத்தகைய செயல்களை செய்திட முடியும் என்றும் கூறுகிறார். தொடு

அருள்வெளி சித்தர் 108 போற்றி

பரம்பொருள் அருட்பெரும் ஜோதி ஓம் ஸ்ரீ அருள்வெளி சித்தர் பரம்பொருள் அருட்பெரும் ஜோதி ஓம் ஸ்ரீ அருள்வெளி சித்தர் ஓம் ஸ்ரீ அருள்வெளி சித்தர் 108 போற்றி 1. அன்பே உருவான அருள்வேளிக் சித்தனே போற்றி ! 2. அகர முதலாய் அமர்ந்தாய் போற்றி ! 3. அறிவிற் கறிவான ஆதுவிதனே போற்றி ! 4. அறத்தின் வடிவே ஐயனே போற்றி ! 5. அடிமை எமைக் காக்கும் அத்தா போற்றி ! 6. அனாதிப் பரம்பொருள் ஆயினே போற்றி ! 7. அமரர் வணங்கும் அரியே போற்றி ! 8. அண்டினோர்க் காதரவு அளிப்பாய் போற்றி ! 9. அன்பே சிவமேன் றறிந்தாய் போற்றி ! 10. அன்பே சிவமாய் அமர்ந்தாய் போற்றி ! 11. அடக்கம் ஆன  சிவமே போற்றி ! 12. ஆனந்த வடிவச் சித்தனே போற்றி ! 13. ஆகாயம் எல்லாம் அளந்தாய் போற்றி ! 14. ஆதியே போற்றி சோதியே போற்றி ! 15. ஆலத்தை அமுதாய் ஆக்குவை போற்றி ! 16. ஆருரிச் சிவமே அழகா போற்றி ! 17. ஆசை வித்த அரனே போற்றி ! 18. ஆணவ மாயை அழித்தாய் போற்றி ! 19. ஆவியில் உறையும் ஐயா போற்றி ! 20. ஆத்தும தத்துவம் அறிவிப்பாய் போற்றி ! 21. ஆலமர் செல்வ அரசே போற்றி ! 22. இகர மாகி எழுந்தாய் போற்றி ! 23. இறைவி இறைவன் வடிவே போற்றி ! 24. இகபர சுகங்கள் தருவாய் போற்

அளவை முறைகள்

சித்தர்களின் பாடல்களில் குறிப்பிட்டிருக்கும் அளவை முறைகள் குறித்து பலருக்கும் சந்தேகம் இருக்கிறது. சித்தர்களின் பாடல்களில் குறிப்பிட்டிருக்கும் அளவை முறைகளுக்கு ஈடான தற்போதைய அளவைகளை குறித்த சந்தேகங்களுடன் தொடர்ந்து நிறைய மின்னஞ்சல்கள் வந்து கொண்டிருக்கிறது. எனவே அனைவரின் சந்தேகங்களை விளக்கும் பொருட்டும், மற்றவர்கள் அறிந்து கொள்ளவும் இந்த பதிவினை உங்கள் பார்வைக்கு வைக்கிறேன். முகத்தல் அளவைகள் ஒரு ஆழாக்கு = நூற்றி அறுபத்தியெட்டு மில்லி லிட்டர். ஒரு உழக்கு = முன்னூற்று முப்பத்தி ஆறு மில்லி லிட்டர். ஒரு கலம் = அறுபத்து நாலரை லிட்டர். ஒரு தூணி = இருபத்தி ஒன்றரை லிட்டர். ஒரு நெய்க் கரண்டி = தேக்கரண்டி அளவு. ஒரு எண்ணெய்க் கரண்டி = இரு நூற்றி நாற்பது மில்லி லிட்டர். ஒரு பாலாடை = முப்பது மில்லி லிட்டர். ஒரு குப்பி = எழுநூறுமில்லி லிட்டர். ஒரு அவுன்ஸ் = முப்பத்தியொரு கிராம். முன்னூற்று அறுபது நெல் = ஒரு சோடு. ஐந்து சோடு = ஒரு அழாக்கு. இரண்டு ஆழாக்கு = ஒரு உழக்கு. இரண்டு உழக்கு = ஒரு உரி. இரண்டு உரி = ஒரு நாழி. எட்டு நாழி = ஒரு குறுணி. இரண்டு குறுணி = ஒரு பதக்கு. இரண்டு

பிண்ணாக்கீசர்

"கோவணமும் இரவல் கொண்ட தூலம் இரவல் தேவமாதா இரவல் - ஞானம்மா தெரியா அலைவாரே.!" "இட்டர்க்கு உபதேசம் எந்நாளும் சொல்லிடலாம் துட்டர்க்கு உபதேசம் - ஞானம்மா சொன்னால் வருமோசம்.!" - பிண்ணாக்கீசர் - இவருக்கு இரட்டை நாக்கு, அதாவது பிளவு பட்ட நாக்கை உடையவர் இதனால் பிண்ணாக்கர் என அழைக்கப்பட்டார். இடைச்சி வயிற்றில் பிறந்த இவர் சிறந்த தமிழ்ப் புலமை பெற்றவர் என்றும், கர்நாடகத்தில் இருந்தவர் என்றும் போகர் சொல்கிறார். பாம்பாட்டிச் சித்தருக்கு சீடராக இருந்த இவாருக்கு மச்ச முனி சீடராக இருந்ததாக சொல்லப் படுகிறது. இவரது பாடல்களில் ஞானம்மா என விளித்துப் பாடிய பாடல்கள் தான் அதிகம். இவர், பிண்ணாக்கர் மெய்ஞானம் பிண்ணாக்கர் ஞானப்பால் பிண்ணாக்கர் முப்பூச் சுண்ணச் செயநீர் ஆகிய நூல்களை எழுதியதாகச் சொல்லப்படுகின்றது. இவர் கேரளத்திலுள்ள நங்குனாசேரி என்னுமிடத்தில் சமாதியடைந்ததாக சொல்லப் படுகிறது.