Skip to main content

ஸ்ரீ சந்திரன் சுப்ரபாதம்

ஸ்ரீ சந்திரன் சுப்ரபாதம்

சூரியனுக்குத் தென்கிழக்கில் சதுரமான ஆசனமிட்டு சுபக்கிரகமாய் அமர்ந்திருக்கும் சுந்தரமுகத்தோனே சந்திரபகவானே எழுந்தருள்வாய்.


வலக்கரத்தில் கதையும் இடக்கரத்தில் வரத முத்திரையும் கொண்டு முத்து விமானத்தில் பவனி வரும் சந்திரபகவானே எழுந்தருள்வாய்


பேரெழிலுக்கு முதன்மையானவனே

புதபகவானைப் புத்ரனாகப் பெற்றவனே

சந்திரபகவானே எழுந்தருள்வாய்


ஒரு முகம் கொண்ட எழில்

திருமுகத்தோனே மஞ்சள் கலந்த

வெள்ளை நிறத்தில்  அமிர்தமாய்

விளங்குபவனே சந்திரபகவானே எழுந்தருள்வாய்


வெண்ணிற ஆடைப் ப்ரியனே

முத்தை ரத்தினமாக கொண்டவனே

சந்திரபகவானே எழுந்தருள்வாய்


வளமான வாழ்வும் சுகபோகமும்

தந்தருளும் சந்திரபகவானே எழுந்தருள்வாய்


இருளில் மிளிர்ந்து இதயத்துள் அமர்ந்து

வளர்ந்தும் தேய்ந்தும் அருள்பவனே

சந்திரபகவானே எழுந்தருள்வாய்


ஆயுள் விருத்தியை தந்து அற்புத

வாழ்வை தந்து அருள்பவனே

சந்திரபகவானே எழுந்தருள்வாய்


ஆயிரம் பிறை கண்டு ஆனந்தமாய்

நான் வாழ அருள்புரியும்

சந்திரபகவானே எழுந்தருள்வாய்


மனிதனின் ஜாதகத்தில் மாத்துர்காரனாக

நின்று அழகும் ஆடையும் ஆபரணமும் தந்து

அருள்பவனே சந்திரபகவானே எழுந்தருள்வாய்


ரோஹினி ஹஸ்தம் திருவோணம்

நட்சத்திரத்துக்கு அதிபதியானவனே

சந்திரபகவானே எழுந்தருள்வாய்


திருப்பதியை ஷேத்திரமாகக் கொண்டு

வெங்கடேசப் பெருமாளை மூர்த்தியாகக்

கொண்டவனே சந்திரபகவானே எழுந்தருள்வாய்


ராஜசூய யாகம் செய்து நாராயணனின்

அருள் பெற்று தேஜோமயமாய்

திகழ்பவனே சந்திரபகவானே எழுந்தருள்வாய்


பத்து குதிரைத் தேரில்

இருசக்கிரங்கள் பூட்டி பவனிவரும்

சந்திரபகவானே எழுந்தருள்வாய்


அத்ரி புத்ரனே ஆத்ரேயனே

அமைதியான பார்வை கொண்டவனே

சந்திரபகவானே எழுந்தருள்வாய்


பிரதி திங்களும் பௌர்ணமி நாளிலும்

விரதமிருந்து வெண் அலரி மலரால்

அர்ச்சித்து வணங்கிட நலம் உண்டாகும்.


பச்சரிசி பால்சாதம் நிவேதனம் செய்து

சந்ர பகவானுக்குரிய தான்யமான

நெல்லை தானம் செய்திட கார்ய சித்தியாகும்.


மூன்றாம் பிறையில் சந்த்ர தரிசனம்

செய்து வந்தால் ஆயுள் விருத்தியாகும்.


சந்திரனுக்கு உகந்த ஷேத்திரமான திருப்பதி

சென்று ஸ்ரீனிவாசப் பெருமாளை

தரிசித்தால் சர்வ ஜெயம் உண்டாகும்.


சரணம் சரணம் சந்ரபகவானே சரணம்

சரணம் சரணம் சோமனே சரணம்

சரணம் சரணம் லக்ஷ்மி சோதரனே சரணம்

சரணம் சரணம் சந்ரனே நின் பத மலரே சரணம்


சரணம் சரணம் சந்ரபகவானே சரணம்

சரணம் சரணம் சோமனே சரணம்

சரணம் சரணம் லக்ஷ்மி சோதரனே சரணம்

சரணம் சரணம் சந்ரனே நின் பத மலரே சரணம்

ஸ்ரீ சந்திரன் காயத்ரி மந்திரம்:

ஓம் பத்மத்வஜாய வித்மஹே ஹேம ரூபாய தீமஹி தந்நோ சந்திர ப்ரசோதயாத்

Comments

Popular Posts

லக்னமும் தொழில் அமைப்பும்

என்ன லக்னம் எந்த தொழில் செய்யலாம் மேஷம் லக்னமும் தொழில் அமைப்பும் மேஷ லக்னத்தில் பிறந்தவர்களுக்கு ஜீவன ஸ்தானாதிபதி சனி பகவானாவார். பொதுவாக, தொழில் காரகன் என வர்ணிக்கப்படக்கூடிய சனி பகவான் இந்த லக்னத்திற்கு 10ம் அதிபதி என்பதால் அவர் சுக்கிரன், புதன், குரு போன்றகிரகங்களின் சேர்க்கை பெற்று பலமாக அமையப் பெற்றால்,சொந்தத் தொழில்  செய்து அதன் மூலம் சம்பாதிக்கக்கூடிய யோகம் உண்டாகும். மேஷ லக்னத்தில் பிறந்தவர்களுக்கு ஜீவனாதிபதி சனியே பாதகாதிபதியாகவும் இருப்பதால், வேலையாட்களிடமும் ஸ்பெகுலேஷன் சார்ந்த தொழில்  விஷயங்களிலும் முதலீடு செய்கின்ற போது முன்னெச்சரிக்கையுடன் இருந்து நிலையான விஷயங்களில் மட்டும் முதலீடு செய்தால், லாபங்களை அடைய முடியும். 10ம் அதிபதி சனி பலமாக அமையப் பெற்று சுபர் பார்வையுடனிருந்தால் இரும்பு, எந்திரங்கள், வண்டி,வாகனங்களில்  மூலம் அனுகூலங்கள், பழைய பொருட்களை விற்பனை செய்யும் தொழில், கடின உடல் உழைப்பு சார்ந்த தொழில்கள் போன்றவற்றை செய்ய நேரிடும். சனி சுக்கிரனுடன் புதனும் இருந்தால் ஒன்றுக்கும் மேற்பட்ட தொழில் யோகம், பலரை நிர்வாகம் செய்து சொந்த தொழில் செய்யக்கூடிய யோகம் உண்டாகும். அ

வர்மம் varmam

வர்மங்களின் வகைகள்..! வர்மக் கலையை அகத்தியர் நான்கு பெரும் பிரிவுகளாய் பிரித்திருக்கிறார். உடலில் உள்ள வர்ம புள்ளிகள் மற்றும், அவற்றை கையாளும் விதத்தினால் இவற்றை வேறு படுத்துகிறார். இவை “படு வர்மம்”, ”தொடு வர்மம்”, ”தட்டு வர்மம்”, ”நோக்கு வர்மம்” படுவர்மம் நான்கு வகை வர்மங்களில் மிகவும் ஆபாயகரமான பிரிவு இதுவேயாகும். உடலிலுள்ள வர்மப் பகுதிகளில் அடியோ அல்லது தாக்குதலோ ஏற்படுமானால் அப்போது ஏற்படும் வர்மமே "படுவர்மம்" என்கிறார். இந்த படுவர்ம தாக்குதலுக்கு உள்ளாகும் நபர்கள் உயிரிழக்கும் வாய்ப்புக்கள் அதிகம் உள்ளதால் இவை மிகவும் ஆபத்தானவை என்று அகத்தியர் குறிப்பிடுகிறார். ஒரு மனிதன் படுவர்மப் புள்ளிகளில் அடிபட்டால் உடனடியாக மயங்கி விழுவான் என்றும், அவன் வாய் பிளந்து நாக்கு வெளியே தள்ளும், வாயில் நுரையும் வெளியேறும் அத்துடன் அந்த அடிபட்ட இடங்களில் கைவைத்து பார்த்தால் அந்த இடம் மிகவும் குளிர்ச்சியாகக் காணப்படும் என்றும் குறிப்பிடுகிறார். எல்லோராலும் இதை செய்திட முடியாது என்றும், மிகுந்த பயிற்சி உள்ள ஒருவரால் மட்டுமே இத்தகைய செயல்களை செய்திட முடியும் என்றும் கூறுகிறார். தொடு

அருள்வெளி சித்தர் 108 போற்றி

பரம்பொருள் அருட்பெரும் ஜோதி ஓம் ஸ்ரீ அருள்வெளி சித்தர் பரம்பொருள் அருட்பெரும் ஜோதி ஓம் ஸ்ரீ அருள்வெளி சித்தர் ஓம் ஸ்ரீ அருள்வெளி சித்தர் 108 போற்றி 1. அன்பே உருவான அருள்வேளிக் சித்தனே போற்றி ! 2. அகர முதலாய் அமர்ந்தாய் போற்றி ! 3. அறிவிற் கறிவான ஆதுவிதனே போற்றி ! 4. அறத்தின் வடிவே ஐயனே போற்றி ! 5. அடிமை எமைக் காக்கும் அத்தா போற்றி ! 6. அனாதிப் பரம்பொருள் ஆயினே போற்றி ! 7. அமரர் வணங்கும் அரியே போற்றி ! 8. அண்டினோர்க் காதரவு அளிப்பாய் போற்றி ! 9. அன்பே சிவமேன் றறிந்தாய் போற்றி ! 10. அன்பே சிவமாய் அமர்ந்தாய் போற்றி ! 11. அடக்கம் ஆன  சிவமே போற்றி ! 12. ஆனந்த வடிவச் சித்தனே போற்றி ! 13. ஆகாயம் எல்லாம் அளந்தாய் போற்றி ! 14. ஆதியே போற்றி சோதியே போற்றி ! 15. ஆலத்தை அமுதாய் ஆக்குவை போற்றி ! 16. ஆருரிச் சிவமே அழகா போற்றி ! 17. ஆசை வித்த அரனே போற்றி ! 18. ஆணவ மாயை அழித்தாய் போற்றி ! 19. ஆவியில் உறையும் ஐயா போற்றி ! 20. ஆத்தும தத்துவம் அறிவிப்பாய் போற்றி ! 21. ஆலமர் செல்வ அரசே போற்றி ! 22. இகர மாகி எழுந்தாய் போற்றி ! 23. இறைவி இறைவன் வடிவே போற்றி ! 24. இகபர சுகங்கள் தருவாய் போற்

அளவை முறைகள்

சித்தர்களின் பாடல்களில் குறிப்பிட்டிருக்கும் அளவை முறைகள் குறித்து பலருக்கும் சந்தேகம் இருக்கிறது. சித்தர்களின் பாடல்களில் குறிப்பிட்டிருக்கும் அளவை முறைகளுக்கு ஈடான தற்போதைய அளவைகளை குறித்த சந்தேகங்களுடன் தொடர்ந்து நிறைய மின்னஞ்சல்கள் வந்து கொண்டிருக்கிறது. எனவே அனைவரின் சந்தேகங்களை விளக்கும் பொருட்டும், மற்றவர்கள் அறிந்து கொள்ளவும் இந்த பதிவினை உங்கள் பார்வைக்கு வைக்கிறேன். முகத்தல் அளவைகள் ஒரு ஆழாக்கு = நூற்றி அறுபத்தியெட்டு மில்லி லிட்டர். ஒரு உழக்கு = முன்னூற்று முப்பத்தி ஆறு மில்லி லிட்டர். ஒரு கலம் = அறுபத்து நாலரை லிட்டர். ஒரு தூணி = இருபத்தி ஒன்றரை லிட்டர். ஒரு நெய்க் கரண்டி = தேக்கரண்டி அளவு. ஒரு எண்ணெய்க் கரண்டி = இரு நூற்றி நாற்பது மில்லி லிட்டர். ஒரு பாலாடை = முப்பது மில்லி லிட்டர். ஒரு குப்பி = எழுநூறுமில்லி லிட்டர். ஒரு அவுன்ஸ் = முப்பத்தியொரு கிராம். முன்னூற்று அறுபது நெல் = ஒரு சோடு. ஐந்து சோடு = ஒரு அழாக்கு. இரண்டு ஆழாக்கு = ஒரு உழக்கு. இரண்டு உழக்கு = ஒரு உரி. இரண்டு உரி = ஒரு நாழி. எட்டு நாழி = ஒரு குறுணி. இரண்டு குறுணி = ஒரு பதக்கு. இரண்டு

பிண்ணாக்கீசர்

"கோவணமும் இரவல் கொண்ட தூலம் இரவல் தேவமாதா இரவல் - ஞானம்மா தெரியா அலைவாரே.!" "இட்டர்க்கு உபதேசம் எந்நாளும் சொல்லிடலாம் துட்டர்க்கு உபதேசம் - ஞானம்மா சொன்னால் வருமோசம்.!" - பிண்ணாக்கீசர் - இவருக்கு இரட்டை நாக்கு, அதாவது பிளவு பட்ட நாக்கை உடையவர் இதனால் பிண்ணாக்கர் என அழைக்கப்பட்டார். இடைச்சி வயிற்றில் பிறந்த இவர் சிறந்த தமிழ்ப் புலமை பெற்றவர் என்றும், கர்நாடகத்தில் இருந்தவர் என்றும் போகர் சொல்கிறார். பாம்பாட்டிச் சித்தருக்கு சீடராக இருந்த இவாருக்கு மச்ச முனி சீடராக இருந்ததாக சொல்லப் படுகிறது. இவரது பாடல்களில் ஞானம்மா என விளித்துப் பாடிய பாடல்கள் தான் அதிகம். இவர், பிண்ணாக்கர் மெய்ஞானம் பிண்ணாக்கர் ஞானப்பால் பிண்ணாக்கர் முப்பூச் சுண்ணச் செயநீர் ஆகிய நூல்களை எழுதியதாகச் சொல்லப்படுகின்றது. இவர் கேரளத்திலுள்ள நங்குனாசேரி என்னுமிடத்தில் சமாதியடைந்ததாக சொல்லப் படுகிறது.