Skip to main content

Posts

Showing posts from November, 2019

ஆகாசகருடன் Corallocarpus epigaeusrattler; cucurbitaceae

மாற்றுப்பெயர்; கொல்லங்கொவை, சாகாமூலி, கருடன்கிழங்கு. வளரியல்பு ; கோவையினத்தைச் சேர்ந்த பெருங் கிழங்குடைய ஏறுகொடி மருத்துவ பாகம் ; கிழங்கு, பூ, காய் குணம் ;  வியதாபேதகாரி, பலகாரி. தீர்க்கும் நோய்கள்; "அரையாப்பு வெள்ளை யகலாக் கொறுக்கை கரையாத கட்டியிவை கானார் – வரையிற் றிருடரெனச்செல்லும் விடஞ்சேர் பாம்புமஞ்சுங் கருடன் கிழங்கதனைக் கண்டு." - கருடன் கிழங்கிற்கு அரையாப்புகட்டி, வெள்ளை, கொறுக்குமாந்தை, அற்புதவிரணம் நீங்கும். விஷத்தையுடைய பாம்பும் இதனைக் கண்டால் நடுங்கும் என்க. "துட்டவிஷம் பாண்டுவெப்பு சூலைவா தங்கிரந்தி குட்டமரிப்பக்கி கோண்குடணோய் – கெட்டகண்ட மாலைபோங் கொல்லன்கோவைக் கிழங்கால் முத்தோஷ வேலைப்போம் பாரில் விளம்பு." - கொல்லன்கோவைக்கிழங்கால் மகாவிஷம், தேகவெளுப்பு, சுரம், வாத சூலை, சிரங்கு, பெருவியாதி, நமைச்சல், வக்கிரநேத்திரம், குடல்வலி, கண்டமாலை, திரிதோஷம் நீங்கும் என்க. 1.   கொட்டைப் பாக்களவு கிழங்கை மென்மையாய் அரைத்து 50மிலி நீரில் கலந்து 3 நாள் காலையில் கொடுத்து மேற்பூச்சாகவும் பூசிவர நாய்,நரி, பூனை,குரங்கு முதலிய விலங்குகளின் கடிநஞ்சு தீரு...

ஆடாதொடை Adhatodavasicanees ; Acanthaceae

ஆடாதோடைக்கும் ஐந்து மிளகுக்கும் பாடாத நாவும் பாடும் - பழமொழி மாற்றுப்பெயர்கள் ; ஆடாதோடை,ஆடு தொடா மூலி வளரியல்பு ; ஒன்றிலிருந்து 2 மீட்டர் உயரம் வரை வளரும் குறுஞ்செடி. இலை    ; நீண்ட முழுமையான ஈட்டி வடிவ இலைகளும்,வெண்ணிறப் பூவும் மருத்துவ பாகம் ; இலை,பூ,வேர் செய்கை  ; கபஹரகாரி, கிருமிநாசினி, அங்காகர்ஷணநாசினி மருத்துவ குணம் ; இலை கப ஆதிக்கம்,வாத தோஷம்,பற்பல சுரம்,சந்நிபாதம், வயிற்றுநோய் நீக்கும். வேர் ; இருமல்,அக்கினிமந்தம்,சுவேதபித்தம், கஷ்டசுவாசம்,கபரோகம் நீக்கும்.                                "ஆடாதோ டைப்பன்ன மையறுக்கும் வாதமுதற் கோடாகோ டிச்சுரத்தின் கோதொழிக்குநாடின் மிகுத் தெழுந்த சன்னிபதின்மூன்றும் விலக்கு மகத்துநோய் போக்குமறி" - ஆடாதொடை இலை கப ஆதிக்கம், வாத தோஷம், பற்பல சுரம், சந்நிபாதம், வயிற்றுநோய் ஆகியவற்றை நீக்கும். "காசமொடு மந்தங் கதித்தபித்தங் கொடுஞ்சு வாசங்கழுத்துவலிமுதனோய் – கூசியே ய...

ஆடுதின்னாப்பாளை Aristolochia bracteolate Aristolochiaceae

மாற்றுப்பெயர் ; ஆடு தீண்டாப் பாளை, கத்திருயம், புழுக்கொல்லி, பங்கம், பங்கம் பாளை, வாத்துப் பூ. வளரியல்பு ;     தரையோடு படர்ந்து வளரும் சிறுசெடி இலைஅமைப்பு ;   மற்றடுக்கில் வெள்ளைப் பூச்சுடைய முட்டைவடிவ சாம்பல் கலந்த நிறத்துடன் மடிப்புச் சுருளுடன், ஓரங்களில் கறுப்பு கலந்த பச்சையாக இருக்கும். கசப்பும், துவர்ப்பும் ஒருங்கே கொண்ட கிருமி நாசினித்தன்மையுடையது.இதன் மலர்களும் இதே நிறத்தை ஒத்து இருக்கும். பூ,காய் ;    முதிர்ந்த நிலையில் வெடித்துச் சிதறும் காய் மருத்துவ பாகம் ;   சமூலம். குணம் ;   கிருமி நாசினி, பிரசவகாரி, முறைவியாதிரோதி, ருதுவர்தனகாரி. தமிழகத்தில் உள்ள எல்லா மாவட்டங்களிலும் கரிசல் நிலத்தில் வளர்கின்றது. மருத்துவக் குணங்கள்: "ஆடுதொடாப்பாளைக் ககக்கிருமி வன்சிலந்தி நீடுகருங் குஷ்டம் நிறைகரப்பான் –ஆடிடச்செய் யெண்பது வாய்வு மிகில்குஷ்ட முந்தீருந் திண்பெறுநற் றாதுவுமாய் செப்பு" (பதார்தகுண சிந்தாமணி) மலாஸயக்கிருமி,சிலந்திப்பூச்சி விஷம்,கருங்குஷ்டம்,கரப்பான்,சர்வ வாத ரோகம், கிடிப குஷ்டம் நீங்கும்,சுக...

ஆனைநெருஞ்சில் Pedalium murex Pedaliaceae

மாற்றுப்பெயர் ;  ஆனைநெருஞ்சில், காமரசி ,கோகண்டம், திருதண்டம் வளரியல்பு ;   சிறுசெடி இலைஅமைப்பு ;  சதைப்பற்றுள்ள வெகுட்டல் மணமுள்ள இலை பூ,காய் ;  தனித்த மஞ்சள்நிறப் பூக்களையும் முள்ளுள்ள நீண்ட உருளை வடிவக்காய்களையும் உடையது. மருத்துவ பாகம் ; இலை, தண்டு, விதை குணம் ; சிறுநீர்ப் பெருக்குதல், வெப்புதணித்தல், குளிர்ச்சிதரல், உடலுரமாக்கல், காமம் பெருக்கல் மாத விலக்குச் சிக்கலறுத்தல் செய்கை: அந்தர்ஸ்நிக்தகாரி, மூத்திரவர்தினி, காமவிர்தினி, பலகாரி, தாதுக்ஷீணரோதி, ரக்தஸ்தம்பனகாரி தீர்க்கும் நோய்கள்: "மேகத்தைப் போக்கிவிடும் வெண்குஷ்டந்தானொழிக்குந் தேகத்திற் கல்லடைப்பைத்தீர்க்குங்கா – ணாகத்தாந் தேனையாரும் பாகைத்திருத்துங் கிளிமொழியே யானை நெருஞ்சி லது யானை நெருஞ்சி லதுசீ தளமாகும் மானே யெலும்புருக்கி மாற்றுங்காண் – மேனிதனி லுள்ள வெரிச்ச லுழலையுட் டாகமொடு தள்ளுபித்த மும்போக்குந் தான்" குளிர்ச்சியுடைய யானைநெருஞ்சில் வெள்ளை,வீழல்,வெண்குஷ்டரோகம், அஸ்மரி, அஸ்திசிராவரோகம்,தேகஎரிவு,உழலை,தாகம்,பித்தமயக்கம் ஆகியவற்றைப் போக்கும் என்க "நல்ல நெருஞ்சிலது நாளுங் கிரி...

நாயுருவி Achyranthes Aspera

மாற்றுப்பெயர் ; நாயுருவி  கடலாடி,அமராரவம், கருதீதனகோரத்தி, கங்கேசரி, காரத்தி, காரம், சிலைகாரம், சிவந்த ஞாயிறு, பரமாரி, பிறத்திய புற்பம், பிப்பீலிகிதநிதுச்சி, உளமணி, கடுடூதி, கரம்பை, மாமுனி, நாயுருஞ்சி.அபமார்கி. வளரியல்பு: சிறுசெடி இலைஅமைப்பு ; எதிரடுக்கில் காம்புள்ள முழுமையான இலைகள் பூ,காய் ; நீண்ட கதிர்களுடன்  கூடிய சிறிய பூக்கள் மருத்துவ பாகம் ;   சமூலம்.(முழு செடி) குணம் ; சங்கோசனகாரி,மூத்திரவர்த்தனகாரி,வியதாபேதகாரி. தீர்க்கும் நோய்கள்: மலிகாரங் கைப்புள்ள அபமார்கியின் வேரால் வசியமுண்டா மிலைமூல வுதிரமந்தம் பேதிகபம் வியர்வு தந்தியிறங்குமேகம் மலையேனும் படிபுரியு முள்ளரிசி பசிமாற்றும் வன்சமூலம் பலமாதர்க் குள்ளழுக்கை நீக்கும்வங்க செந்தூரம்பண்ணுமாதோ. "வேலுக்கு பல் இருகும்வேம்புக்கு பல் துலங்கும் பூலுக்கு போகம் பொழியுமே – ஆலுக்குத் தண் தாமரையாளும் சார்வளே நாயுருவி கண்டால் வசீகரமாம் காண்". "ஓதமுறு சோபை யுயர்பாண்டு வைப்போக்குந் தீதுறுகா மாலைநோய் தீர்க்குமினார் – சூதகநீர் பொய்ப்புறுகா லத்ததனைப் பொங்குவிக்குங் காரமொடு கைப்புறுசெந் நாயுருவி கா...

அசோகு Saraca asoca

மருத்துவ பாகம்  ; பட்டை, பூ தீர்க்கும் நோய்கள் ; சதை ,நரம்பு வீக்கம் அகற்றியாகவும் கருப்பைக் குற்றம் நீக்கியாகவும் செயல்படும். "பாரிலசோ கப்பட்டை  பாலதனிற் கூட்டிநீ   கோரிக் குடிநீராய்க் கொண்டக்கால் – நேரிழையே வாதப் பெரும்பாடு வன்சீத பேதியுடன் காதவழி யோடுங்காண்." அசோகுப் பட்டையை பாலுடன் கியாழமிட்டு அருந்த பெரும்பாட்டையும்,சீதமுடன் கலந்த பேதிகளையும் குணப்படுத்தும் என்க. 1. 100 கிராம் பட்டையை இடித்து பழகிய மண்பானையிலிட்டு 100 மிலி தண்னீரும் அரைலி பசும்பாலும் விட்டுக் சுண்டக் காய்ச்சி 3பாகமாக்கி 4-5 மணிக்கொருமுறை பருகைவர பெண்களுக்குண்டான பெரும்பாடு (அதிக இரத்த்ப் போக்கு) குணமாகும்.(வீட்டு விலக்கான 4ம் நாள் துவங்கி நிற்கும்வரை குடிக்க வேண்டும்) 2. இதனையே இரத்தமூலம், இரத்தபேதிக்கும் சாப்பிட குணமாகும். 3. மரப்பட்டை 40 கிராம்,மாதுளம் வேர்பட்டை 20கிராம், பச்சையாய் சிதைத்து அரை லி நீரில் 1நாள் ஊறவைத்து வடித்து 30மிலி, தினம் 3-4 வேளை சாப்பிட்டுவர நாட்பட்ட பெரும்பாடு 1 வாரத்தில் குணமாகும். காரம்,புளி நீக்கவும். 4. அசோகு பூ,மாம்பருப்பு,சமன் பொடித்து 3 சிட்டிகை...

சதுரகிரி மலையின் அற்புத மூலிகைகள்

முண்டகவிருட்சம் சதுரகிரி மகாலிங்க மூர்த்தியின் சன்னிதிக்கு வடதிசையில் ஒரு நாளிகை தூரம் நடக்க முண்டகவனம் என்னும் ஒரு வனம் இருக்கிறது. அந்த வனத்தின் வட மேற்கு மூலையில் இந்த முண்டக விருட்சங்கள் வளர்ந்திருக்கும். தோற்றத்தில் ஆல விருட்சம் போல் இருந்தாலும், இதன் இலைகள் சிறியதாகவும் காய்கள் கலத்திக்காய் போலவும் இருக்கும். இந்த மரத்தை தட்டினால் பால்வருமாம். அந்தப் பாலை தினமும் அரைக்காற் படியாக முப்பது நாளைக்கு சாப்பிட மூர்ச்சை ஆகுமாம். அப்போது ஒருவர் அருகில் இருந்து பசுப்பலை நன்கு காய்ச்சி தேன்விட்டு கலந்து ஒருகரண்டி வீதம் அடிக்கடி மூர்ச்சையானவருக்கு பருகத் தர வேண்டுமாம் அப்படி தொடர்ந்து பருக மூர்ச்சை தெளியுமாம். மூர்ச்சை தெளிந்து ஒருவாரத்தில் காயசித்தி உண்டாகி விடுமாம்.உடல் தங்கநிறமாகுமாம், மலஜலம் பேதிக்குமாம். அழுகண்ணி மேலே சொன்ன முண்டகவிருட்சத்திற்க்கு பக்கத்தில் வட்டப்பாறை ஒன்று இருக்கிறதாம், அதன் மேற்குப் பகுதியில் கசிவுத்தரையும் அதில் நெரி கற்களும் நிறைந்த ஒரு இடம் இருக்கிறது. அந்த இடத்தில் அழுகண்ணி என்ற மூலிகைகள் வளர்ந்திருக்கும். அதன் இலை பலாச்சுளை போல் இருக்கும். பூமஞ்சள் நிறமாக...

பஞ்ச பட்சி சாஸ்திரம்

இறையருள் இல்லாமல் பஞ்ச பட்சி சாஸ்திரம் மட்டுமல்ல. வேறு எந்த சாஸ்திரமும் நமக்கு கைவராது. ஆகையால் இறைவனை வணங்கித் தொழுது விட்டு இதை ஆரம்பிக்கிறேன். பட்சி தெரிந்தவனிடம் பகை கொள்ளாதே என்பது முதுமொழி. இந்த சாஸ்திரம் தெரிந்தவரை பகைத்துக் கொண்டால் தன் மீது பகை கொண்டவரை வீழ்த்தும் வல்லமை  அவர்களுக்கு இருக்கும். அவ்வளவு சக்தி வாய்ந்தது. இதைப் படிப்பவர்கள் யாரும் தீய காரியத்திற்கு பயன்படுத்த வேண்டாம் என மிகத் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். அதே நேரத்தில் அரைகுறையாகப் புரிந்துக் கொண்டு  சோதனை செய்து தனக்குத் தானே பிரச்சினையைத் தேடிக்கொள்ளாதீர்கள். பட்சிகள் மொத்தம் ஐந்து. அவை முறையே வல்லூறு ஆந்தை காகம் கோழி மயில் முதலில் யாருக்கு என்ன பட்சி என்று பார்ப்போம். ஒருவரின் நட்சத்திரத்தின் மூலம் பட்சியை நிர்ணயிக்கலாம். இது நட்சத்திரப் பட்சி எனப்படும். அவை கீழ் கண்டவாறு:- வல்லூறு அஷ்வினி,பரணி,கார்த்திகை,ரோகிணி,மிருகசீரிஷம்    ஆந்தை திருவாதிரை,புனர்பூசம்,பூசம்,ஆயில்யம்,மகம்,பூரம்    காகம் உ...

வாஸ்து சாஸ்திரம்

ஆக்கல்  மேஷம்,கடகம் ,துலாம், மகரம்  காத்தல்  ரிஷபம்,சிம்மம்,விருச்சிகம், கும்பம். அழித்தல்  மிதுனம்,கன்னிதனுசு ,மீனம்  அழித்தல் மாதமான  மிதுன மாதம் =ஆனி  கன்னி மாதம் =புரட்டாசி  தனுசு மாதம் =மார்கழி  மீன மாதம் =பங்குனி  மேற்கண்ட நான்கு மாதத்தில் சுபகாரியங்கள் நம் முன்னோர்கள் செய்ய கூடாது என்று கூறியதன்  சூட்சமம் இது தான். மேற்கண்ட அழித்தல் மாதத்தில் செய்யும் சுபங்கள் விருத்தி அடையாது மாறாக அழிவை நோக்கி செல்லும் என்பதால் தான் மேற்கண்ட மாதத்தில்  சுபம் செய்ய கூடாது என்பதை  நம் முன்னோர்கள் உணர்த்தி சென்றுள்ளனர். ஆக்கலை குறிக்கும்  ராசி மாதமான சித்திரை, ஆடி, ஐப்பசி, தை மாதத்தில் உத்யோக முயற்சி, புதிய தொழில் தொடங்குதல், புதியதாக உற்பத்தி செய்யும் அனைத்து காரியங்களும் செய்யுங்கள்.அந்த காரியம் மிக வேகமான வளர்ச்சி  நிலையை நிச்சயம் அடையும். காத்தல் ராசி மாதமான வைகாசி, ஆவணி, கார்த்திகை மாசி போன்ற மாதங்களில் இல்வாழ்க்கை சிறப்பு அடைய செய்யும் சுபா சுபங்கள் ஆன திருமணம்,...