ஆசனவழிக் கனலேறித் தூவாரப்பட்டு 9விதமான மூலத்தையும், பலவிதமான வியாதியையும் பெறுதல். காயத்தில் மூலங் கண்டவிதங் கேளு பாயொத்ததீபனம் பரிந்தே அடக்கிடினும் மாயை அடக்க மலத்தை அடக்கிடினும் ஓயற்ற குண்டலியினுள் புகும் வாயுவே உள்மூலம், பிறமூலம், இரத்தமூலம், சீழ்மூலம், மூலபாண்டு, முளைமூலம், வாத, பித்த, சிலேத்ம மூலம் என 9வகை. மூல நோயின் அறிகுறிகள் : மலச்சிக்கல், அடித்தொடை கணுக்கால் வலி குடைச்சல், உடல் சோர்வு, களைப்பு, ஆசன வாய் எரிச்சல், ஆசனக்கடுப்பு, மலத்தோடு இரத்தம் கழிதல், மார்பு துடிப்பு, முக வாட்டம்,போன்றவை ஏற்படும். மேலும் இரத்தமூலம் ஏற்பட்டு தினமும் இரத்தம் வெளி ஏறிக்கொண்டிருந்தால் உடலில் பலம் குறையும்,மயக்கம் உண்டாகும். உள்மூலக்குணம்;அபானத்துள் தசைபோல் வளர்ந்திருக்கும்;மலத்தை இறுக்கும்; மந்திக்கும்; இரத்தம் மலத்தில் விழும்;இடையில் வயிறு வலிக்கும்;பலங்கெடும்;தேகம் வரளும். பிறமூலக்குணம்;அஸ்தியில் அனலேறி அபானவழியில்கத்திபோல் சதை வளர்ந்து உள்ளும் புறமுமாயிருக்கும்; அபானங் க